Online TestTamil
11th Std Tamil Notes Part 6 Online Test
பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 6
Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நமது மனதில் கீழ்க்கண்டவற்றில் எந்த ஆசையை பெறவேண்டும் என்று இயற்கையாகவே வேரூன்றி நிற்கின்றது எது மறைமலையடிகள் கூறுகிறார்?
அழியாச் கல்வி | |
அழியாச் செல்வம் | |
அழியா வீரம் | |
அழியா எண்ணம் |
Question 2 |
நாம் எல்லோரும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டு காலத்தை கழித்து வருகிறோம் என்பதை மறைமலையடிகள் கூறிய ஊதாரணங்கள் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
முத்துச்சிப்பியில் உள்ள முத்தின் ஒளி | |
பாசி மூடிய பவளத்தின் நிறம் | |
சூரிய ஒளி கண்டு பனித்துளி | |
மாசியில் மறைந்த மதியின் துலக்கம் |
Question 3 |
கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது மேற்கு திசையில் உள்ள சிறந்த நகரமாகிய மெசினாப் பட்டினமானது நில அதிரிச்சியினால் அழிந்து நீருக்கும் நெருப்பக்கும் இரையானது
1907 | |
1906 | |
1909 | |
1908 |
Question 4 |
தெய்வச் சிதம்பரத் தேவாஉன் சித்தந் திரும்பி விட்டாற் - என்ற பாடலை பாடியவர் யார்?
பட்டினத்துப் பிள்ளை | |
திருஞானசம்பந்தர் | |
திருநாவுக்கரசர் | |
மாணிக்கவாசர் |
Question 5 |
மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் – என்ற பாடல் மூலம் கல்வியின் சிறப்பை கூறியவர் யார்?
திருவள்ளுவர் | |
ஔவையார் | |
கம்பர் | |
கபிலர் |
Question 6 |
மக்கள், விலங்குகளை விட உயர்ந்தவர்கள் என கீழ்க்கண்ட எந்த காரணத்தினால் கூறப்படுகிறது
உணவை தேடுதல் | |
உறங்கல் தொழில் | |
அறிய பலநூல்கள் கற்றல் | |
இன்புறுதல் |
Question 7 |
இந்த உலகத்தில் கல்வி அறிவு உடையவர்களே கண்ணுடையவர்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் முத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் என்று கூறியவர் யார்?
வள்ளுவனார் | |
வள்ளலார் | |
பாரதிதாசன் | |
ஔவையார் |
Question 8 |
முதற்காலத்தில் கல்வியில் சிறந்த பெண்மணிகளில் கீழ்க்கண்டவற்றில் யார் தவறானவர்கள்
ஔவையார் | |
அமராவதி | |
பெருந்தேவியார் | |
காரைக்காலம்மையார் |
Question 9 |
பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்’ – என்று யார் பாடியபாடல் மூலம் முற்காலத்தில் இருந்த பெண்மக்கள் எல்லாருங் கல்வியில் வல்லவர்களாய் இருந்தார்கள் என்பதை விளக்குகிறது?
ஔவையார் | |
காரைக்காலம்மையார் | |
கம்பர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 10 |
வெள்ளத்தால் அழியாது வெந் தழலால் வேகாது – எனத் தொடங்கும் பாடல் மூலம் கல்வியின் சிறப்பைக் கூறும் பாடல் இடம்பொற்றுள்ள நூல்?
திருக்குறள் | |
புறநானூறு | |
பதிற்றுப்பத்து | |
விவேகசிந்தாமணி |
Question 11 |
மறையடிகள் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் ‘கல்வியே அழியாச் செல்வம்’ – என்ற தலைப்பில் உரைநடை எழுதி கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார் ?
அறிவுரைக் கொத்து | |
அறிவுரைக் கோவை | |
உரைமணிக் கோவை | |
தமிழர் மதம் |
Question 12 |
இந்த உலகில் கீழ்க்கண்ட யாருக்கு மிகுந்த பொறுமையும் ஆழ்ந்த நுண்ணறிவும் வேண்டியதற்காக கல்வியறிவு மிகவும் தேவை என்று மறைமலையடிகள் கூறுகிறார்?
ஆண்கள் | |
ஆசிரியர்கள் | |
குழந்தைகள் | |
பெண்கள் |
Question 13 |
ரஸம் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மொழிச் சொல்?
தழிழ்ச் சொல் | |
வடச் சொல் | |
பிரெஞ்சு சொல் | |
இலத்தீன் சொல் |
Question 14 |
நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும் ?
நான்கு வகை | |
ஐந்து வகை | |
ஆறு வகை | |
எட்டு வகை |
Question 15 |
சொற்சுவைகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகை | |
மூன்று வகை | |
நான்கு வகை | |
ஒரு வகை |
Question 16 |
பொருட்சுவைகள் எத்தனை வகைப்படும்?
ஏழு வகை | |
ஆறு வகை | |
எட்டு வகை | |
ஒன்பது வகை |
Question 17 |
செவியால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்?
ஒன்பது வகை | |
பதினொரு வகை | |
பத்து வகை | |
பன்னிரண்டு வகை |
Question 18 |
கீழ்க்கண்ட எந்த சுவையானது உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்று இன்பம் பயக்கும் என்று கவிஞர் கூறுகிறார் ?
நாவினால் நுகரப்படும் சுவை | |
பொருட்களினால் ஏற்படும் சுவை | |
செவியால் நுகரப்படும் சுவை | |
சொல்லால் எற்படும் சுவை |
Question 19 |
பொருட்சுவையானது செவியால் மட்டும் இன்றி கீழ்க்கண்ட எந்த உறுப்பின் வாயிலாகவும் நிகழாநிற்கும் என்று கூறப்படுகிறது ?
கண் | |
மனம் | |
நாக்கு | |
மூக்கு |
Question 20 |
நாடக அரங்கில் ஒருவன் பித்தனாக நடிக்கும் போதும் அவனது நடிப்புச் சொற்களைக் கேட்டுகும் போதும் கீழ்க்கண்ட எந்த பொருட்சுவை நிகழும் என்று கவிஞர் கூறுகிறார் ?
அவலம் | |
வெகுளி | |
வியப்பு | |
நகை |
Question 21 |
செவியால் உணரப்படும் சுவையானது திட்பமுற உணரும் நுட்பவுணர்வுடையார்க்கன்றி ஏனையோர்க்கு அந்த சுவைகள் உணர்தற்கரியன என்று கூறியவர் யார் ?
தொல்காப்பியர் | |
கம்பர் | |
மறோக்கத்து நப்பல்சையார் | |
வீரமாமுனிவர் |
Question 22 |
ஒன்பது பொருட்சுவைகளில் சமனிலை என்னும் சுவையின் பொருள் யாது ?
சந்தம் | |
சாந்தம் | |
பந்தம் | |
நிகரானது |
Question 23 |
கீழ்க்கண்ட பொருட்சுவைகளில் ஐம்பொறியும் அடங்கப்பெற்றுப் பிறர்வையினும் வாழ்த்தினும் வாளாற்போழியினும் தாளில் வணங்கினும் மனந்தறியாது அவற்றைச் சமமாக கொண்டு நிற்கும் நிலைமை கொண்ட சுவை எது ?
நகை | |
சமனிலை | |
வெகுளி | |
வெகுளி |
Question 24 |
ஒன்பது பொருட்சுகைகளில் காப்பியங்களில் பயின்று வராத ஒரே ஒரு சுவை எது ?
வியப்பு | |
அவலம் | |
அச்சம் | |
சமனிலை |
Question 25 |
சுவை என்பதன் வேறு பெயர் யாது ?
சாந்தம் | |
மணமானது | |
மெய்பாடு | |
நடுநிலை |
Question 26 |
மெய்ப்பாடு என்பது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றால் வெளிப்படுதல் – என்று கூறியவர் யார் ?
தொல்காப்பியனார் | |
பேராசிரியர் | |
இறையனார் | |
இலக்குவனார் |
Question 27 |
ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ்க்கண்ட எந்த நூலில் மெய்ப்பாடு செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாக குறிக்கப்படுவதோடு, தனியாக ஓர் இயல் விரித்துரைக்கப் பெற்று உள்ளது ?
தொல்காப்பியம் | |
சங்க இலக்கியம் | |
பேரிலக்கிய நூல்கள் | |
சிற்றிலக்கிய நூல்கள் |
Question 28 |
தொல்காப்பியர் ஒவ்வொரு சுவையும் தோன்றுவதற்கு மூலமான பொருள்களாக எத்தனை பொருள்களை கூறுகிறார் ?
இரண்டு | |
நான்கு | |
ஆறு
| |
ஒன்பது |
Question 29 |
தொல்காப்பியர் அவர்கள் வீரம் என்ற சொல்லை கீழ்க்கண்ட எந்த சொல்லால் குறிப்பிடுகிறார் ?
சாந்தம் | |
மெய்ப்பாடு | |
பெருமிதம் | |
நடுகல் |
Question 30 |
கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கும் பற்றி கீழ்க்கண்ட எந்த சுவை பிறக்கும் என்று தொல்காப்பியனார் கூறுகிறார் ?
அவலம் | |
இழிப்பு | |
நகை | |
பெருமிதம் |
Question 31 |
மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி – எனத் தொடங்கும் பாடல் மூலம் தன் போர்வீரர்களுக்கு வீரத்தை ஊட்டிய மன்னன் யார் ?
நலங்கிள்ளி | |
பாரி | |
நெடுங்கிள்ளி | |
அதியமான் |
Question 32 |
போர் தொடங்குமுன் போர் வீரர்களுக்கு நலங்கிள்ளி மன்னன் வீரஉரை வழங்கிய ‘மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி’ – என்ற பாடலானது இடம்பெற்றுள்ள நூல் எது ?
அகநானூறு | |
புறநானூறு | |
பரிபாடல் | |
கலித்தொகை |
Question 33 |
கீழ்க்கண்டவற்றில் ஒரு காலத்தில் பாரி என்னும் வள்ளலை பறம்பு அரண்மனையில் முற்றுகையிடாதவர் யார் ?
சேரர் | |
சோழர் | |
பல்லவர் | |
பாண்டயர் |
Question 34 |
பறம்பு நாடானது மொத்தம் எத்தனை ஊர்களை கொண்டு இருந்ததாக கவிஞர் கூறுகிறார் ?
இருநூறு | |
ஐந்நூறு | |
நானூறு | |
முந்நூறு |
Question 35 |
பறம்பு நாட்டிலுள்ள முந்நூறு ஊர்களையும் ஏற்கனவே கீழ்க்கண்ட யார் பெற்றதாக கவிஞர் யார் ?
மருத்துவர்கள் | |
பேரரசர்கள் | |
பரிசிலர் | |
அமைச்சர்கள் |
Question 36 |
பறம்பு நாட்டையும் , பாரி வள்ளலின் பெருமையும், அவரின் வீரத்தை பற்றி பறம்பு அரணை முற்றுகையிடத் தொடங்கியவர்களிடம் கூறிய புலவர் யார் ?
பரணர் | |
கபிலர் | |
கம்பர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 37 |
கீழ்க்கண்ட எந்த இரண்டும் தமிழரின் தலை சிறந்த பண்பு என கூறப்படுகிறது ?
காதல், வீரம் | |
கல்வி, செல்வம் | |
செல்வம், காதல் | |
வீரம், செல்வம் |
Question 38 |
பகைவரை வெகுண்டு நோக்கிய கண் அவர் வேல்கொண்டு எறியுமிடத்து இமைத்து விடுமாயினும் வீரருக்கு அதுவே தோல்வி – என்று வீரத்தின் சிறப்பைக் கூறியவர் யார் ?
கபிலர் | |
வள்ளுவர் | |
தொல்காப்பியர் | |
இறையனார் |
Question 39 |
சோழன் கரிகாலனோடு போர் புரிந்த போது தன் மாரிபிலே தைத்து உருவின புண்ணும் புறப்புண்ணாகும் என நாணி வாளோடு வடக்கிருந்து உயிர் நீத்த மன்னன் யார் ?
செங்குட்டுவன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
பெருஞ்சேரலாதன் | |
நெடுஞ்செழியன் |
Question 40 |
பெருஞ்சேரலாதன் என்ற மன்னன் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்த மன்னன் ஆவான் ?
சோழன் | |
பாண்டியன் | |
பல்லவன் | |
சேரன் |
Question 41 |
சோழன் கரிகால மன்னனுக்கும் சேர மன்னம் பெருஞ்சேரலாதனுக்கு கீழ்க்கண்ட எந்த இடத்தில் போர் நடைபெற்றது ?
வெண்ணிப் பறந்தலை | |
திருச்சி மலைக்கோட்டை | |
வெண்ணிப்போர் | |
வந்தவாசி |
Question 42 |
என் மகன் போரிற் புறங்காட்டியதும் உண்மையாயின் அவன் பாலுண்ட என் அங்கத்தைச் சிதைத்திடுவேன் என்று போர்க்களம் அடைந்ததும், மற்றொரு வீரமகள் முதல் இரு நாள்கள் போரிலும் தன் கணவன், தமயனையும் இறந்த பிறகும் அடுத்த நாள் தன் மகனை போருக்கு அனுப்பிய செய்தியும் ஆகிய இரு செய்திகள் கீழ்க்கண்ட எந்த நூலில் கூறப்படுள்ளன ?
குறுந்தொகை | |
புறநானூறு | |
கலித்தொகை | |
பரிபாடல் |
Question 43 |
பகைவர்மேற் செய்யும் வன்கண்மையை கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு அழைப்பர் ?
பொருளாண்மை | |
திறன்மின்மை | |
பேராண்மை | |
கொடைத்தன்மை |
Question 44 |
ஒருவர்க்கு ஒரு தாழ்வு வந்தாயின் அது தீர்த்துக் கொள்ளுதற் பொருட்டுக் கண்ணோட்டமுடன் உதவி செய்தலை அவ்வாண்மைக்கு கூர்மை என்று கூறியவர் யார் ?
வள்ளலார் | |
பேராசிரியர் | |
தொல்காப்பியார் | |
வள்ளுவனார் |
Question 45 |
அறத்தி னாலன்றி அமரர்க்கும் அரும்பகை கடத்தல் – என்ற பாடலை பாடிய புலவர் யார் ?
கம்பர் | |
பரணர் | |
இளங்கோவடிகள் | |
சீத்தலைச்சாத்தனார் |
Question 46 |
கண்ணகிக்கு சிலை கொணர்தற் பொருட்டு வஞ்சிப்பூவை சூடி வடதிசைக்குப் புறப்பட்ட மன்னன் யார் ?
செங்கோடன் | |
செங்குட்டுவன் | |
இராஜாராஜன் | |
கரிகால மன்னன் |
Question 47 |
கண்ணகிக்கு சிலை எடுக்க புறப்படுவதற்கு முன் ‘கங்கைப்பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம்’ – எனத் தொடங்கும் பாடல் மூலம் வீரர்களுக்கு வீரஉரை நிகழ்த்தியவர் யார் ?
செங்குட்டுவன் | |
நெடுஞ்செழியன் | |
வில்லவன் கோதை | |
ஆதித்த சோழன் |
Question 48 |
வில்லவன் கோதை என்பவர் சேர மன்னன் செங்குட்டுவன் அவையில் கீழ்க்கண்ட எந்த பதவியை வகித்து வந்தார் ?
நிமித்திரிகர் | |
கணிகர் | |
அரசவைக் கவிஞர் | |
அமைச்சர் |
Question 49 |
கேளிது நீயுங் காணக் கிளர்ந்தகோ ளரியின் கேழில்’ – என்று இரணியன் பிரகாலதை பார்த்து கூறியதாக கூறும் இப்பாடலை இயற்றியவர் யார் ?
கபிலர் | |
கம்பர் | |
செங்கண்ணார் | |
இடைக்காடனார் |
Question 50 |
இராமனது சேவையில் அமர்புரிந்து இறக்கவும் ஒருப்படாதத் தனது குறையை நினைந்து வருந்தியவன் யார் ?
விபிஷ்ணன் | |
பரதன் | |
சுக்ரீவன் | |
இராவணன் |
Question 51 |
தமிழரின் படைமாட்சி பற்றியும் போர் நெறிகளையும் விளக்கும் நூர் எது ?
தொல்காப்பியம் | |
நாலடியார் | |
பத்துப்பாட்டு | |
திருக்குறள் |
Question 52 |
குண, அலங்காரம் ஆகிய இரசுவைகளும் கீழ்க்கண்ட எந்த சுவைவகையைச் சார்ந்தது ?
சொல்லால் நுகரப்படும் சுவை | |
பொருளாள் நுகரப்படும் சுவை | |
நாவினால் நுகரப்படும் சுவை | |
செவியால் நுகரப்படும் சுவை |
Question 53 |
தழிழ்நாட்டு காளத்தி மலையிலே பிறந்த காளத்தி வேடனின் பெயர் யாது ?
கண்ணப்பன் | |
குகன் | |
பரதன் | |
கண்ணன் |
Question 54 |
வடநாட்டுக் கங்கைக் கரையிலே பிறந்த கங்கை வேடனின் பெயர் யாது ?
கண்ணப்பர் | |
குகன் | |
அருகன் | |
சிவன் |
Question 55 |
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் – எனத் தொடங்கும் பாடல் மூலம் கண்ணப்பனது பெருமை பாடியவர் யார் ?
குலசேகரயாழ்வார் | |
சேரமான் பெருமாள் நாயனார் | |
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் |
Question 56 |
வண்டை நோக்கிப் பாடும் பான்மையில் கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை விளக்கி பாடியவர் யார் ?
நாவுக்கரசர் | |
சேக்கிழார் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 57 |
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை – என்ற பாடல் மூலம் கண்ணப்பரது பெருமை மாணிக்கவாசகர் கீழ்க்கண்ட எந்த நூலில் பாடியுள்ளார் ?
திருவாசகம் | |
திருக்கோவை | |
திருமந்திரம் | |
திருவருட்பா |
Question 58 |
காளத்தி வேடன் கண்ணப்பனது பெருமையை மாணிக்கவாசகர் திருவாசக நூலில் கீழ்க்கண்ட எந்த பதிகத்தில் பாடியுள்ளார் ?
திருச்சதகம் | |
திருக்கோத்தும்பி | |
திருப்பொற்சுண்ணம் | |
உருத்திரசன்மார் |
Question 59 |
கீழ்க்கண்ட எந்த இரு நூல்களில் கண்ணப்பனது பெருமை பேசப்படுவதால் சைவ சமயத்தை நிலை நிறுத்திய நால்வருக்கும் முந்தியவன் என்பது நன்கு விளங்குகின்றது ?
திருமந்திரம், திருவாசகம் | |
தேவாரம், பெருமாள் திருமொழி | |
திருவாசகம், தேவாரம் | |
திருக்கோவை, திருவாசகம் |
Question 60 |
காளத்தி நாதனை வணங்கிய திருஞானசம்பந்தர் கும்பிட்ட பயன் காண்பார் போல் வேடர் பெருமானரிகிய கண்ணப்பனைக் கை தொழுதாரென்று என்று அழகாக எழுதிப் பாடியவர் யார் ?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
பரஞ்சோதி முனிவர் | |
சேக்கிழார் |
Question 61 |
கீழ்க்கண்ட எந்த புலவர் குகன் இராமனைக் காணப் புறப்படும் கோலமானது ஓர் அரசன் மற்றோர் அரசனைக் காண செல்வது போல் தன் கவிதையில் எழுதியுள்ளார் ?
வால்மீகி | |
கம்பர் | |
அடியார்க்கு நல்லார் | |
உருத்திரசன்மார் |
Question 62 |
குகன் இராமனைக் காணப் புறப்படும் கோலமானது ஓர் அரசன் ஆண்டவனைக் காண செல்வது போல் தன் கவிதைநூலில் எழுதிய புலவர் யார் ?
வால்மீகி | |
கம்பர் | |
அரும்பத உரைகாரர் | |
அடியார்க்கு நல்லார் |
Question 63 |
குகன் இராமனை பார்க்க சென்ற போது கீழ்க்கண்ட எந்த பொருள்களை தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்றார் ?
கனிகளும், காய்களும் | |
இறைசியும், தேனும் | |
தேனும், மீனும் | |
பாலும், தேனும் |
Question 64 |
அரியதாம் உவப்பு உள்ளது அன்பினால் அமைந்த காதல் – என்ற வரிகள் மூலம் இராமன் கீழ்க்கண்ட யாரை குறிப்பிடுகிறார் ?
இலக்குவணன் | |
மாதவர் | |
சீதை | |
குகன் |
Question 65 |
காளத்திநாதனை கீழ்க்கண்ட எந்த வேதியர் முறைப்படி பூசை செய்து வந்தார் ?
சிவகோசரியார் | |
சிவகோசரியார் | |
பட்டினத்தடிகள் | |
சிவனடியார் |
Question 66 |
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்’ – எனத் தொடங்கும் பாடல் மூலம் கண்ணப்பரது பெருமையை கூறியவர் யார் ?
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் | |
பரஞ்சோதி முனிவர் | |
திருமூலர் |
Question 67 |
முற்றத் துறந்தவர் என்று தமிழகம் போற்றிப் புகழ்பவர் யார் ?
இளங்கோவடிகள் | |
நாமக்கல் கவிஞர் | |
பட்டினத்துப்பிள்ளை | |
இராமலிங்கனார் |
Question 68 |
வாளால் மகவரிந்து ஊட்டவல்ல லேனல்லேன் மாது சொன்ன ’ – எனத் தொடங்கும் பாடல் மூலம் பட்டினத்தடிகள் கீழ்க்கண்ட யாருடைய பெருமையை கூறுகிறார் ?
குகன் | |
சிவபெருமானை | |
சிறு தொண்டர் | |
கண்ணப்பர் |
Question 69 |
அந்தோ! காட்டில் வாழும் கழுகின் வேந்தனும் நாட்டில் வாழும் நல் வேடனும் காட்டிய அன்பை நான் காட்ட இயலாதவ நாயினேன் – என்று இராமனிடம் கூறியவர் யார் ?
சுக்ரீவன் | |
குகன் | |
அனுமன் | |
பரதன் |
Question 70 |
சீதையை இராவணன் கடித்தி சென்றதை இராமனிடம் முதன் முதலில் கூறியவர் யார் ?
அனுமன் | |
சடாயு | |
சுக்ரீவன் | |
பறவைகள் |
Question 71 |
கானகத்தில் இருந்த தையலை இலங்கை வேந்தன் வஞ்வனையாற் கவர்ந்து மனோ வேனமாகச் செல்லும் பொழுது, ஆதரவற்று அரற்றிய மங்கையின் அழுகுரல் கேட்டு காற்றினுங் கடுகி வந்த காவலன் யார் ?
இலட்சுமணன் | |
கழுகின் தலைவன் | |
சடாயு | |
அனுமன் |
Question 72 |
தன்னுயிர் புகழ்க்கு விற்றசடாயு ’ – என்ற சடாயுவௌ புகழ்ந்துரைத்தவர் யார் ?
சுக்ரீவன் | |
இலட்சுமணன் | |
விபிஷ்ணன் | |
அனுமன் |
Question 73 |
வேழ நெடும்படை கண்டுவி லங்கிடும் வில்லாளோ – என்ற வரியில் கீழ்க்கண்ட யாருடைய படையைக் குகன் குறிப்பிடுகிறான் ?
பரதன் படை | |
இராவணன் படை | |
சுக்ரீவன் படை | |
இராமன் படை |
Question 74 |
ஆழநெ டுந்திரை யாறுக டந்திவர் போவாரோ – என்ற வரி மூலம் குகன் வேடன் கீழ்க்கண்ட யாருக்கு தடையாக நின்றான் ?
இராமன் | |
பரதன் | |
எதிரி மன்னர்கள் | |
அந்தணர்கள் |
Question 75 |
கடந்தோர்க்கும் கடத்தலரிதாய மக்கட் பாசம் நீத்த ஒரு தொண்டர் கீழ்க்கண்டவற்றில் யார் ?
திருநீலகண்டர் | |
இயற்பகை நாயனார் | |
பரஞ்சோதி முனிவர் | |
திருநாவுக்கரசர் |
Question 76 |
மனையாள் மீது பாசம் துறந்த சிவதொண்டர் கீழ்க்கண்டவற்றில் யார் ?
இயற்பகை நாயனார் | |
திருஞதனசம்பந்தர் | |
பரஞ்சோதி முனிவர் | |
திருநீலகண்ட தொண்டர் |
Question 77 |
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை என்றறிந்ததும், ஈசன்பால் வைத்த அன்பினால், இரு கண்களையும் ஈத்தளிக்க இசைந்த சிவதொண்டர் யார் ?
திருநீலகண்டர் | |
கண்ணப்பர் | |
இயற்பகைநாயனார் | |
சிறுதொண்டர் |
Question 78 |
கீழ்க்கண்டவற்றில் பட்டினத்து அடிகள் போற்றியவர்களில் தவறானவர் யார் ?
திருநீலகண்டர் | |
கண்ணப்பர் | |
இயற்பகைநாயனார் | |
சிறுதொண்டர் |
Question 79 |
வடமொழியில் ஆதிகாவியம் என்று புகழப்பெறும் காவியம் எது ?
இராமாயணம் | |
இராமனவதாரம் | |
கம்பராமாயணம் | |
இரதமபுராணம் |
Question 80 |
கிரேக்கர்களின் பழங்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது ?
ஒடிஸி | |
இலியட் | |
ஈனிட் | |
வர்ஜிஸ் |
Question 81 |
கிரேக்கர்களின் பழங்காப்பியமான இலியட் என்ற நூலை எழுதியவர் யார் ?
வர்ஜிஸ் | |
வால்மீகி | |
ஹோமர் | |
ஹெலன் |
Question 82 |
இலிய நாட்டு அரசன் கீழ்க்கண்ட எந்த அரசர் பெருமானின் அழகிய மனைவியான ஹெலன் பெருமாட்டியை சிறை எடுத்தான் ?
வர்ஜீஸ் | |
பாரிஸ் | |
ஹோமர் | |
மெலனஸ் |
Question 83 |
ஹெலன் பெருமாட்டியை சிறை எடுத்த இலிய நாட்டு அரசன் யார் ?
பாரிஸ் | |
ஹோமர் | |
ஹெலன் | |
வர்ஜிஸ் |
Question 84 |
இலத்தீன் மொழியின் பழங்காப்பியம் எது ?
இலியட் | |
ஈனிட் | |
ஒடிஸி | |
பானிஸ் |
Question 85 |
உரோமப் பேரரசினைத் தோற்றுவித்த மன்னர் யார் ?
ஹெலன் | |
பாரிஸ் | |
ஈனியஸ் | |
வர்ஜிஸ் |
Question 86 |
தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புறத் தோன்றிய நூல் எது ?
மகாபாரதம் | |
இராமாயணம் | |
சங்க இலக்கியம் | |
சிலப்பதிகாரம் |
Question 87 |
கோவலன் அவர்கள் சிலப்பதிகார நூலில் கீழ்க்கண்டவற்றில் எவற்றின் ஒன்றாக மீனாட்சி சுந்தரம் பிள்ளை பார்வையில் பார்க்கப்படுகிறான் ?
குடிமக்கள் | |
வணிகர்கள் | |
மன்னர்கள் | |
புலவர்கள் |
Question 88 |
தெ.போ. மீனாட்சி சுந்தரனார் பார்வையில் மாதவி கீழ்க்கண்ட யாரில் ஒருத்தராக பார்க்கப்படுகிறார் ?
பெண் புலவர்கள் | |
பரத்தையர் | |
அரசியர்கள் | |
பணிவிடை பெண்கள் |
Question 89 |
மூவரசர் பேராசையால், முப்பெருந் துண்டாய் வெட்டுண்டு கிடக்கும் தழிழன்னை, கீழ்க்கண்ட யாருடைய வாழ்க்கை வழியே ஓர் உருவமாள் உயிர்பெற்று விளங்குகிறாள் ?
கோவலன் | |
மாதவி | |
கண்ணகி | |
ஆதிரை |
Question 90 |
கீழ்க்கண்டவற்றில் காப்பியச் பெருஞ்சுவைகள் – எனக் கூறப்படும் கூற்றுகளில் தவறானது எது ?
காதல் | |
அழுகை | |
வீரம் | |
புகழ் |
Question 91 |
மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலமாக வாழ்கின்ற காதல் வாழ்வானது சிலப்பதிகாரத்தில் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது ?
புகார் காண்டம் | |
மதுரைக் காண்டம் | |
வஞ்சிக் காண்டம் | |
மாந்தர் காண்டம் |
Question 92 |
அவலச் சுவையின் ஆழத்தைக் காட்டும் கண்ணகியானவள் கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் தன் கணவனை இழந்தாள் என்று கூறப்படுகிறது ?
புகார் காண்டம் | |
மதுரைக் காண்டம் | |
வஞ்சிக் காண்டம் | |
மாந்தர் காண்டம் |
Question 93 |
கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் கண்ணகிக்காக எடுத்த கல்லினை வடவரசர் தலைமீது ஏற்றிவந்த செங்குட்டுவனது வீரத்தை பாடும் காண்டம் எது ?
புகார் காண்டம் | |
மதுரைக் காண்டம் | |
வஞ்சிக் காண்டம் | |
சேரக் காண்டம் |
Question 94 |
கீழ்க்கண்டவற்றில் யார் துறவறத்தின் முடிமணியாக திகழ்கிறாள் என்று கவிஞர் கூறுகிறார் ?
கண்ணகி | |
தேவந்தி | |
மணிமேகலை | |
மாதவி |
Question 95 |
திருவள்ளுவர் தனது நூலில் உள்ள எந்த பிரிவில் குடிகளது சிறப்பினை பற்றிக் கூறியுள்ளார் ?
பொருட்பால் | |
அறத்துப்பால் | |
இன்பத்துப்பால் | |
காமத்துப்பால் |
Question 96 |
திருவள்ளுவர் தனது நூலின் பொருட்பாலில் குடிகளது சிறப்பினை கீழ்க்கண்ட எத்தனை அதிகாரங்களில் கூறியுள்ளார் ?
முதல் பதிமூன்று அதிகாரங்கள் | |
கடைசி பதிமூன்று அதிகாரங்கள் | |
முதல் பத்து அதிகாரங்கள் | |
கடைசி பத்து அதிகாரங்கள் |
Question 97 |
திருக்குறளின் இரண்டாவது பிரிவான பொருட்பாலின் முடிமணியாக விளங்கும் இயல் எது ?
அங்கவியல் | |
அரசியல் | |
ஒழிபியல் | |
துறவறவியல் |
Question 98 |
கோவலனுக்கு தவறான தண்டனை அளித்த மன்னன் யார் ?
பாண்டியன் நெடுந்சேரலாதன் | |
வரகுணப் பாண்டியன் | |
அப்ராஜித்த பாண்டியன் | |
பாண்டிய நெடுஞ்செழியன் |
Question 99 |
ஈனிட் – எனும் இலத்தீன் மொழியின் பழங்காப்பியத்தை பாடியவர் யார் ?
வர்ஜீஸ் | |
ஷேக்ஸ்பியர் | |
இரசூல் கம்சதேவ் | |
ஹோமர் |
Question 100 |
குடிமக்கள் இலக்கியம் என்ற தலைப்பின் மூலம் சிலப்பதிகார நூலின் பெருமையை உரைநடையாக எழுதியவர் யார் ?
மீனாட்சி சுந்தரனார் உரைநடை | |
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் உரைநடை | |
பெரியார் உரைநடை | |
அறிஞர் அண்ணா உரைநடை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.