நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் Online Test 6th Science Lesson 3 Questions in Tamil
நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் Online Test 6th Science Lesson 3 Questions in Tamil
Quiz-summary
0 of 28 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 28 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- Answered
- Review
- 
                        Question 1 of 281. Question1) பருப்பொருள் எத்தனை நிலைகளில் காணப்படுகிறது? Correct
 விளக்கம்: பருப்பொருள் நம்மை சுற்றி உள்ள எல்லா இடங்களிலும் உள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றும் ஒரு பருப்பொருள் ஆகும். பருப்பொருள் என்பது எடை உள்ளதும் இடத்தை அடைத்துக்கொள்வதும் ஆகும். பருப்பொருட்கள் மூன்று நிலைகளில் அறியப்படுகிறது. அவை திண்மம், நீர்மம், வாயு ஆகும். Incorrect
 விளக்கம்: பருப்பொருள் நம்மை சுற்றி உள்ள எல்லா இடங்களிலும் உள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றும் ஒரு பருப்பொருள் ஆகும். பருப்பொருள் என்பது எடை உள்ளதும் இடத்தை அடைத்துக்கொள்வதும் ஆகும். பருப்பொருட்கள் மூன்று நிலைகளில் அறியப்படுகிறது. அவை திண்மம், நீர்மம், வாயு ஆகும். 
- 
                        Question 2 of 282. Question2) பருப்பொருளின் மிகச்சிறிய துகள் எது? Correct
 விளக்கம்: எல்லா பருப்பொருளும் அணுக்களால் ஆனது ஆகும். அணுக்கள் பருப்பொருளின் மிகச்சிறிய துகள் ஆகும். அணுக்கள் மிகச்சிறியவை. நம்முடைய கண்கள் மற்றும் உருப்பெருக்கியினால் கூட பார்க்க முடியாது. Incorrect
 விளக்கம்: எல்லா பருப்பொருளும் அணுக்களால் ஆனது ஆகும். அணுக்கள் பருப்பொருளின் மிகச்சிறிய துகள் ஆகும். அணுக்கள் மிகச்சிறியவை. நம்முடைய கண்கள் மற்றும் உருப்பெருக்கியினால் கூட பார்க்க முடியாது. 
- 
                        Question 3 of 283. Question3) அணுக்களின் அமைப்பைக்கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி எது? Correct
 விளக்கம்: அணுக்களின் அமைப்பைக்கண்டறிய அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்சாரத்தின் மூலம் இயங்கும் எலெக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி, ஊடுபுழை நுட்ப எலெக்ட்ரான் கருவி போன்றவை அணுக்களின் அமைப்பை கண்டறிய பயன்படுகிறது. Incorrect
 விளக்கம்: அணுக்களின் அமைப்பைக்கண்டறிய அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்சாரத்தின் மூலம் இயங்கும் எலெக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி, ஊடுபுழை நுட்ப எலெக்ட்ரான் கருவி போன்றவை அணுக்களின் அமைப்பை கண்டறிய பயன்படுகிறது. 
- 
                        Question 4 of 284. Question4) சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? Correct
 விளக்கம்: திண்ம, திரவ, வாயு நிலைகளை தவிர்த்து மேலும் இரண்டு நிலைகள் உள்ளன. அவை பிளாஸ்மா மற்றும் போஸ்- ஐன்ஸ்டீன் சுருக்கம் ஆகும். பிளாஸ்மா நிலை என்பது பூமியில் உள்ள பருப்பொருளின் பொதுவான நிலை அல்ல. ஆனால் அது அண்டத்தில் கூடுதலாக காணப்படும் ஒரு பொதுவான நிலை ஆகும். எடுத்துக்காட்டாக சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு பிளாஸ்மா நிலை எனப்படுகிறது. Incorrect
 விளக்கம்: திண்ம, திரவ, வாயு நிலைகளை தவிர்த்து மேலும் இரண்டு நிலைகள் உள்ளன. அவை பிளாஸ்மா மற்றும் போஸ்- ஐன்ஸ்டீன் சுருக்கம் ஆகும். பிளாஸ்மா நிலை என்பது பூமியில் உள்ள பருப்பொருளின் பொதுவான நிலை அல்ல. ஆனால் அது அண்டத்தில் கூடுதலாக காணப்படும் ஒரு பொதுவான நிலை ஆகும். எடுத்துக்காட்டாக சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு பிளாஸ்மா நிலை எனப்படுகிறது. 
- 
                        Question 5 of 285. Question5) கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுத்தப்படுவது எது? Correct
 விளக்கம்: போஸ்-ஐன்ஸ்டீன் சுருக்கம் என்பது மிகக்குறைவான தட்ப வெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருளின் நிலை ஆகும். இது 1925 இல் கணிக்கப்பட்டு 1995 இல் உறுதி செய்யப்பட்டது. இவ்வகை கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுகிறது. Incorrect
 விளக்கம்: போஸ்-ஐன்ஸ்டீன் சுருக்கம் என்பது மிகக்குறைவான தட்ப வெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருளின் நிலை ஆகும். இது 1925 இல் கணிக்கப்பட்டு 1995 இல் உறுதி செய்யப்பட்டது. இவ்வகை கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுகிறது. 
- 
                        Question 6 of 286. Question6) பருப்பொருள் பற்றிய கருத்துக்களை கூறியவர் யார்? Correct
 விளக்கம்: இந்தியாவின் கானடா என்ற தத்துவ மேதையும் கிரேக்க தத்துவ மேதை டெமாக்ரட்டிசும் பருப்பொருள் பற்றிய ஒத்த கருத்துக்களை கூறினர். 
 பருப்பொருளில் உள்ள மிகச்சிறிய துகள்களே அணுக்கள் ஆகும். அவை சக்தி வாய்ந்த நுண்ணோக்கியால் கூட பார்க்க இயலாதவை ஆகும். நாம் எதை காண்கிறோமோ அவை துகள்களின் தொகுப்பு ஆகும்.Incorrect
 விளக்கம்: இந்தியாவின் கானடா என்ற தத்துவ மேதையும் கிரேக்க தத்துவ மேதை டெமாக்ரட்டிசும் பருப்பொருள் பற்றிய ஒத்த கருத்துக்களை கூறினர். 
 பருப்பொருளில் உள்ள மிகச்சிறிய துகள்களே அணுக்கள் ஆகும். அவை சக்தி வாய்ந்த நுண்ணோக்கியால் கூட பார்க்க இயலாதவை ஆகும். நாம் எதை காண்கிறோமோ அவை துகள்களின் தொகுப்பு ஆகும்.
- 
                        Question 7 of 287. Question7) ஒரு துளி நீரில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கை? Correct
 விளக்கம்: பேனாவால் நாம் வைக்கும் ஒரு புள்ளியில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மூலக்கூறுகள் உள்ளது. Incorrect
 விளக்கம்: பேனாவால் நாம் வைக்கும் ஒரு புள்ளியில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மூலக்கூறுகள் உள்ளது. 
- 
                        Question 8 of 288. Question8) கீழ்க்கண்டவற்றுள் பருப்பொருளின் சிறப்பு பண்புகள் எவை? Correct
 விளக்கம்: பருப்பொருளின் சிறப்பு பண்புகள்:- 
 அ) நீரின் துகள்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது. சர்க்கரை துகள்கள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன.
 ஆ) பருப்பொருளின் துகள்களுக்கு இடையே ஈர்ப்பு விசை உள்ளது. இவ்விசையே துகள்களை பிணைக்கிறது. இத்தகைய ஈர்ப்பு விசை பருப்பொருளுக்கு பருப்பொருள் வேறுபடுகிறது.Incorrect
 விளக்கம்: பருப்பொருளின் சிறப்பு பண்புகள்:- 
 அ) நீரின் துகள்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது. சர்க்கரை துகள்கள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன.
 ஆ) பருப்பொருளின் துகள்களுக்கு இடையே ஈர்ப்பு விசை உள்ளது. இவ்விசையே துகள்களை பிணைக்கிறது. இத்தகைய ஈர்ப்பு விசை பருப்பொருளுக்கு பருப்பொருள் வேறுபடுகிறது.
- 
                        Question 9 of 289. Question9) கீழ்க்கண்டவற்றுள் பருப்பொருளின் இயற்பியல் நிலை எது? Correct
 விளக்கம்: இயற்பியல் நிலை அடிப்படையில் பருப்பொருள்களை திண்மம், திரவம், வாயு என மேற்கண்ட பண்புகள் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம். இவையே பொருளின் இயற்பியல் நிலைகள் என அழைக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: இயற்பியல் நிலை அடிப்படையில் பருப்பொருள்களை திண்மம், திரவம், வாயு என மேற்கண்ட பண்புகள் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம். இவையே பொருளின் இயற்பியல் நிலைகள் என அழைக்கப்படுகிறது. 
- 
                        Question 10 of 2810. Question10) எளிதில் பாயும் தன்மையுள்ள பொருட்கள் எவை? Correct
 விளக்கம்: செங்கல் மற்றும் கதவு போன்றவை வலுவானவை தின்மங்கள் ஆகும். பாயும் தன்மையுள்ளவை திரவங்கள் ஆகும். எளிதில் பாயும் தன்மையுள்ள பொருட்கள் வாயுக்கள் ஆகும். Incorrect
 விளக்கம்: செங்கல் மற்றும் கதவு போன்றவை வலுவானவை தின்மங்கள் ஆகும். பாயும் தன்மையுள்ளவை திரவங்கள் ஆகும். எளிதில் பாயும் தன்மையுள்ள பொருட்கள் வாயுக்கள் ஆகும். 
- 
                        Question 11 of 2811. Question11) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது? Correct
 விளக்கம்: திரவத்தில் அணுக்களுக்கு இடையே இடைவெளி இருப்பதால் பொருட்கள் உள்ளே செல்ல அனுமதிக்கின்றன. திரவங்கள் புவியீர்ப்பு விளைவினால் அதிகம் ஈர்க்கப்படுகிறது. திரவத்தை சுற்றி புவியீர்ப்பு விசை செயல்படுவதால் அதன் மூலக்கூறுகள் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும். Incorrect
 விளக்கம்: திரவத்தில் அணுக்களுக்கு இடையே இடைவெளி இருப்பதால் பொருட்கள் உள்ளே செல்ல அனுமதிக்கின்றன. திரவங்கள் புவியீர்ப்பு விளைவினால் அதிகம் ஈர்க்கப்படுகிறது. திரவத்தை சுற்றி புவியீர்ப்பு விசை செயல்படுவதால் அதன் மூலக்கூறுகள் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும். 
- 
                        Question 12 of 2812. Question12) வாயுக்களை பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியான கூற்று எது? Correct
 விளக்கம்: வாயு அணுக்கள் நீண்ட தூரத்திற்கு பரவுகிறது.நீங்கள் எவ்வித தடையுமின்றி அதனுள் செல்லலாம். புவியீர்ப்பு விளைவால் பாதிக்கப்படுவதில்லை. வாயுக்கள் ஒரு இடத்தில் நிற்காமல் பரவிக்கொண்டே இருக்கும். Incorrect
 விளக்கம்: வாயு அணுக்கள் நீண்ட தூரத்திற்கு பரவுகிறது.நீங்கள் எவ்வித தடையுமின்றி அதனுள் செல்லலாம். புவியீர்ப்பு விளைவால் பாதிக்கப்படுவதில்லை. வாயுக்கள் ஒரு இடத்தில் நிற்காமல் பரவிக்கொண்டே இருக்கும். 
- 
                        Question 13 of 2813. Question13) குறைந்த இடைவெளியுடன் ஒழுங்கற்ற நிலையில் அமைந்துள்ள துகள்கள் எதில் அமைந்துள்ளன? Correct
 விளக்கம்: மிகவும் குறைந்த இடைவெளியுடன் திண்மத்தில் துகள்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. எ.கா: கல் 
 குறைந்த இடைவெளியுடன் திரவத்தில் துகள்கள் தாறுமாறாக அல்லது ஒழுங்கற்ற நிலையில் அமைந்துள்ளன. எ.கா: நீர். அதிக இடைவெளியுடன் எளிதில் நகரக்கூடிய வகையில் வாயுவில் துகள்கள் அமைந்துள்ளன. எ.கா: காற்று.Incorrect
 விளக்கம்: மிகவும் குறைந்த இடைவெளியுடன் திண்மத்தில் துகள்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. எ.கா: கல் 
 குறைந்த இடைவெளியுடன் திரவத்தில் துகள்கள் தாறுமாறாக அல்லது ஒழுங்கற்ற நிலையில் அமைந்துள்ளன. எ.கா: நீர். அதிக இடைவெளியுடன் எளிதில் நகரக்கூடிய வகையில் வாயுவில் துகள்கள் அமைந்துள்ளன. எ.கா: காற்று.
- 
                        Question 14 of 2814. Question14) விரவும் தன்மை அதிகம் கொண்ட துகள் எது? Correct
 விளக்கம்: விரவுதல் என்பது கிடைக்கும் இடத்தை நிரப்ப பரவும் துகள்களின் தன்மை ஆகும். இடம் முழுவதும் துகள்கள் பரவும் அல்லது விரவும் தன்மையே விரவுதல் எனப்படும். திண்மங்களில் உள்ள துகள்கள் நகர இயலாத நிலையில் உள்ளது. எனவே அவை திரவம் அல்லது வாயுக்களை போல பரவாது. பாய்மங்களில் துகள்கள் இயக்கத்தில் உள்ளது. எனவே மைத்துகள்கள் மற்றும் புகைத்துகள்கள் அங்கும் இங்கும் பரவுகிறது. Incorrect
 விளக்கம்: விரவுதல் என்பது கிடைக்கும் இடத்தை நிரப்ப பரவும் துகள்களின் தன்மை ஆகும். இடம் முழுவதும் துகள்கள் பரவும் அல்லது விரவும் தன்மையே விரவுதல் எனப்படும். திண்மங்களில் உள்ள துகள்கள் நகர இயலாத நிலையில் உள்ளது. எனவே அவை திரவம் அல்லது வாயுக்களை போல பரவாது. பாய்மங்களில் துகள்கள் இயக்கத்தில் உள்ளது. எனவே மைத்துகள்கள் மற்றும் புகைத்துகள்கள் அங்கும் இங்கும் பரவுகிறது. 
- 
                        Question 15 of 2815. Question15) கீழ்க்கண்டவற்றுள் அதிக அழுத்தத்திற்கு உட்படுவது எது? Correct
 விளக்கம்: திண்மம் மற்றும் திரவங்களை ஒப்பிடும்போது வாயுக்கள் அதிக அழுத்தத்திற்கு உட்படும். கண்ணாடி சன்னல்கள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அக்காலத்தில் சன்னல் கண்ணாடிகள் அடிப்பகுதி தடித்தும், மேல் பகுதி மெலிந்தும் காணப்பட்டன. ஏனெனில் கடந்த காலங்களில் கண்ணாடி வழிந்தோடக்கூடிய திரவமாக இருந்தது என்னும் கருத்து சான்றாக வைக்கப்பட்டது. Incorrect
 விளக்கம்: திண்மம் மற்றும் திரவங்களை ஒப்பிடும்போது வாயுக்கள் அதிக அழுத்தத்திற்கு உட்படும். கண்ணாடி சன்னல்கள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அக்காலத்தில் சன்னல் கண்ணாடிகள் அடிப்பகுதி தடித்தும், மேல் பகுதி மெலிந்தும் காணப்பட்டன. ஏனெனில் கடந்த காலங்களில் கண்ணாடி வழிந்தோடக்கூடிய திரவமாக இருந்தது என்னும் கருத்து சான்றாக வைக்கப்பட்டது. 
- 
                        Question 16 of 2816. Question16) ஒரு வேதியலாளரை பொறுத்தவரை தூய்மை என்ற சொல் குறிப்பது எது? Correct
 விளக்கம்: ஒரு தூய பொருள் என்பது ஒரே தன்மையான துகள்களால் மட்டுமே ஆனது. தூய பொருள்கள் தனிமங்களாகவோ அல்லது சேர்மங்களாகவோ இருக்கலாம். ஒரு தனிமம் என்பது சிறிய துகள்களாலான அணுக்களால் ஆனது. ஒரு மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கையாகும். ஒரு சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கையாகும். Incorrect
 விளக்கம்: ஒரு தூய பொருள் என்பது ஒரே தன்மையான துகள்களால் மட்டுமே ஆனது. தூய பொருள்கள் தனிமங்களாகவோ அல்லது சேர்மங்களாகவோ இருக்கலாம். ஒரு தனிமம் என்பது சிறிய துகள்களாலான அணுக்களால் ஆனது. ஒரு மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கையாகும். ஒரு சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கையாகும். 
- 
                        Question 17 of 2817. Question17) கீழ்க்கண்டவற்றுள் கலவைப்பொருள் எது? Correct
 விளக்கம்: ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி, மந்த வாயுக்கள் மற்றும் பிறவற்றை தன்னுள் கொண்டதால் காற்று என்பது ஒரு கலவை ஆகும். Incorrect
 விளக்கம்: ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி, மந்த வாயுக்கள் மற்றும் பிறவற்றை தன்னுள் கொண்டதால் காற்று என்பது ஒரு கலவை ஆகும். 
- 
                        Question 18 of 2818. Question18) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது? Correct
 விளக்கம்: ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களைக்கொண்ட தூய்மையற்ற பொருளாகும். கலவையின் பகுதிப்பொருட்கள் எந்த விகிதத்திலும் கலக்கப்பட்டு இருக்கும். கலவை என்பது அதில் அடங்கியுள்ள பகுதிப்பொருட்களின் அளவு நிலையான விகிதத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. Incorrect
 விளக்கம்: ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களைக்கொண்ட தூய்மையற்ற பொருளாகும். கலவையின் பகுதிப்பொருட்கள் எந்த விகிதத்திலும் கலக்கப்பட்டு இருக்கும். கலவை என்பது அதில் அடங்கியுள்ள பகுதிப்பொருட்களின் அளவு நிலையான விகிதத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. 
- 
                        Question 19 of 2819. Question19) கீழ்க்கண்டவற்றுள் எந்த இயற்பியல் சேர்க்கையின் மூலம் கலவைகள் உருவாகின்றன? Correct
 விளக்கம்: அ) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்களை இணைத்தல். எ.கா: 22 கேரட் தங்கத்தில் உள்ள தங்கம் மற்றும் தாமிரம், தங்கம் மற்றும் காட்மியம் கலவைகள். Incorrect
 விளக்கம்: அ) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்களை இணைத்தல். எ.கா: 22 கேரட் தங்கத்தில் உள்ள தங்கம் மற்றும் தாமிரம், தங்கம் மற்றும் காட்மியம் கலவைகள். 
- 
                        Question 20 of 2820. Question20) கீழ்க்கண்டவற்றுள் கலவைகளை பிரிப்பதன் அவசியம் யாது? Correct
 விளக்கம்: கலவைகளில் உள்ள மாசுக்களையும் தீங்கு விளைவிக்கும் பகுதிப்பொருட்களையும் நீக்குதல் (எ.கா) அரிசியில் உள்ள கற்களை நீக்குதல். பயனளிக்கும் ஒரு பகுதிப்பொருளினை அதன் மற்ற பகுதிப்பொருட்களில் இருந்து தனித்தெடுத்தல். எ.கா: பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோல் பெறுதல். ஒரு பொருளை மிகுந்த தூய நிலையில் பெறுதல். எ.கா: தங்கச்சுரங்கத்திலிருந்து தங்கம் பெறுதல். Incorrect
 விளக்கம்: கலவைகளில் உள்ள மாசுக்களையும் தீங்கு விளைவிக்கும் பகுதிப்பொருட்களையும் நீக்குதல் (எ.கா) அரிசியில் உள்ள கற்களை நீக்குதல். பயனளிக்கும் ஒரு பகுதிப்பொருளினை அதன் மற்ற பகுதிப்பொருட்களில் இருந்து தனித்தெடுத்தல். எ.கா: பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோல் பெறுதல். ஒரு பொருளை மிகுந்த தூய நிலையில் பெறுதல். எ.கா: தங்கச்சுரங்கத்திலிருந்து தங்கம் பெறுதல். 
- 
                        Question 21 of 2821. Question21) கீழ்க்கண்டவற்றுள் எதை பொறுத்து பிரித்தெடுக்கும் முறை தேர்வு செய்யப்படுகிறது? Correct
 விளக்கம்: கலவையில் அடங்கியுள்ள பகுதிப்பொருட்களின் தன்மையைப் பொறுத்தே கலவைகளை பிரித்தெடுக்கும் முறை தேர்வு செய்யப்படுகிறது. பொருட்களின் அளவு, வடிவம், இயற்பியல் தன்மையினை பொறுத்து பிரித்தெடுக்கும் முறை தேர்வு செய்யப்படுகிறது. Incorrect
 விளக்கம்: கலவையில் அடங்கியுள்ள பகுதிப்பொருட்களின் தன்மையைப் பொறுத்தே கலவைகளை பிரித்தெடுக்கும் முறை தேர்வு செய்யப்படுகிறது. பொருட்களின் அளவு, வடிவம், இயற்பியல் தன்மையினை பொறுத்து பிரித்தெடுக்கும் முறை தேர்வு செய்யப்படுகிறது. 
- 
                        Question 22 of 2822. Question22) வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களை பிரித்தெடுக்கும் முறை எது? Correct
 விளக்கம்: வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களை பிரித்தெடுக்கும் முறைக்கு சலித்தல் என்று பெயர். 
 எ.கா: மாவிலிருந்து தவிடு நீக்குதல், மணலிலிருந்து சரளைக்கல்லை நீக்குதல், கட்டுமான இடங்களில் மணலிலிருந்து சரளைக்கல்லை நீக்குவதற்கு துணி சல்லடை பயன்படுத்தப்படுகிறது.Incorrect
 விளக்கம்: வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களை பிரித்தெடுக்கும் முறைக்கு சலித்தல் என்று பெயர். 
 எ.கா: மாவிலிருந்து தவிடு நீக்குதல், மணலிலிருந்து சரளைக்கல்லை நீக்குதல், கட்டுமான இடங்களில் மணலிலிருந்து சரளைக்கல்லை நீக்குவதற்கு துணி சல்லடை பயன்படுத்தப்படுகிறது.
- 
                        Question 23 of 2823. Question23) கீழ்க்கண்டவற்றுள் ஈர உடைகளிலிருந்து நீரினை வெளியேற்றப்பயன்படும் தத்துவம் எது? Correct
 விளக்கம்: துணி துவைக்கும் இயந்திரத்தில் இந்த தத்துவத்தினை பயன்படுத்தி ஈர உடைகளில் இருந்து நீரினை வெளியேற்றும் முறைக்கு மைய விலக்கல் என்று பெயர். Incorrect
 விளக்கம்: துணி துவைக்கும் இயந்திரத்தில் இந்த தத்துவத்தினை பயன்படுத்தி ஈர உடைகளில் இருந்து நீரினை வெளியேற்றும் முறைக்கு மைய விலக்கல் என்று பெயர். 
- 
                        Question 24 of 2824. Question24) மிகச்சிறிய அளவிலான கரையாத திடப்பொருட்களை திரவத்திலிருந்து பிரித்தெடுக்க பயன்படும் முறை எது? Correct
 விளக்கம்: மிகச்சிறிய அளவிலான கரையாத திடப்பொருட்களை திரவத்திலிருந்து பிரித்தெடுக்க கடைதல் என்ற முறையினை கையாளலாம். எ.கா: தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்தல். Incorrect
 விளக்கம்: மிகச்சிறிய அளவிலான கரையாத திடப்பொருட்களை திரவத்திலிருந்து பிரித்தெடுக்க கடைதல் என்ற முறையினை கையாளலாம். எ.கா: தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்தல். 
- 
                        Question 25 of 2825. Question25) எடை அதிகமுள்ள பொருள் நீரில் மூழ்கும்போது மிதக்கும் இலேசான பொருட்களை பிரிக்கும் முறை எது? Correct
 விளக்கம்: நீரை சேர்க்கும்போது இலேசான மாசுக்கள் நீரில் மிதக்கும். எடை அதிகமுள்ள அரிசி போன்ற தானியங்கள் நீரில் மூழ்கி அடியில் தங்கும். இம்முறைக்கு வண்டலாக்குதல் என்று பெயர். தூய்மையான அரிசி நீருக்கடியில் தங்கிய பின் நீரில் உள்ள மாசுக்கள் அனைத்தையும் கவனமாக வெளியேற்ற வேண்டும். இம்முறைக்கு தெளிய வைத்து இறுத்தல் என்று பெயர். Incorrect
 விளக்கம்: நீரை சேர்க்கும்போது இலேசான மாசுக்கள் நீரில் மிதக்கும். எடை அதிகமுள்ள அரிசி போன்ற தானியங்கள் நீரில் மூழ்கி அடியில் தங்கும். இம்முறைக்கு வண்டலாக்குதல் என்று பெயர். தூய்மையான அரிசி நீருக்கடியில் தங்கிய பின் நீரில் உள்ள மாசுக்கள் அனைத்தையும் கவனமாக வெளியேற்ற வேண்டும். இம்முறைக்கு தெளிய வைத்து இறுத்தல் என்று பெயர். 
- 
                        Question 26 of 2826. Question26) நீரில் உள்ள மணலும் உப்பும் கலந்த கலவையை பிரிக்க பயன்படும் வெவ்வேறு முறைகள் யாவை? Correct
 விளக்கம்: நீரில் உள்ள மணலும் உப்பும் கலந்த கலவையை பிரிக்க படிய வைத்தல், தெளிய வைத்து இறுத்தல், வடிகட்டுதல், ஆவியாக்குதல், மற்றும் குளிர வைத்தல் போன்ற பல முறைகளை வெவ்வேறு படிநிலைகளில் நிகழ்த்த வேண்டும். Incorrect
 விளக்கம்: நீரில் உள்ள மணலும் உப்பும் கலந்த கலவையை பிரிக்க படிய வைத்தல், தெளிய வைத்து இறுத்தல், வடிகட்டுதல், ஆவியாக்குதல், மற்றும் குளிர வைத்தல் போன்ற பல முறைகளை வெவ்வேறு படிநிலைகளில் நிகழ்த்த வேண்டும். 
- 
                        Question 27 of 2827. Question27) குடிநீரில் உள்ள நுண் கிருமிகளை அழிக்கப்பயன்படும் முறை எது? Correct
 விளக்கம்: பெரும்பாலான இல்லங்களில் நீரில் உள்ள மாசுக்களை நீக்குவதற்காகவும், நீரில் உள்ள நுண்கிருமிகளை புற ஊதா கதிர்களைக்கொண்டு அழிப்பதற்காகவும் வணிக ரீதியான நீர் வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. Incorrect
 விளக்கம்: பெரும்பாலான இல்லங்களில் நீரில் உள்ள மாசுக்களை நீக்குவதற்காகவும், நீரில் உள்ள நுண்கிருமிகளை புற ஊதா கதிர்களைக்கொண்டு அழிப்பதற்காகவும் வணிக ரீதியான நீர் வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. 
- 
                        Question 28 of 2828. Question28) கனமான பொருள்களில் மற்றும் தானியங்களில் கலந்துள்ள இலேசான பொருள்களை நீக்கும் முறை எது? Correct
 விளக்கம்: கனமான பொருள்களில் மற்றும் தானியங்களில் கலந்துள்ள இலேசான பொருள்களை நீக்கும் முறை தூற்றல் ஆகும். Incorrect
 விளக்கம்: கனமான பொருள்களில் மற்றும் தானியங்களில் கலந்துள்ள இலேசான பொருள்களை நீக்கும் முறை தூற்றல் ஆகும். 
Leaderboard: நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் Online Test 6th Science Lesson 3 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||