ஒளி Online Test 9th Science Lesson 6 Questions in Tamil
ஒளி Online Test 9th Science Lesson 6 Questions in Tamil
Quiz-summary
0 of 52 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 52 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- Answered
- Review
-
Question 1 of 52
1. Question
1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. ஒளி என்பது ஆற்றலின் வடிவம் ஆகும்.
II. ஒளி மின்காந்த அலை வடிவத்தில் பரவுகின்றது.
III. ஒளியின் பண்புகளையும், அதன் பயன்பாடுகளையும் பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு ஒளியியல் என்று அழைக்கப்படுகிறது.Correct
(குறிப்பு – ஒளி என்பது ஆற்றலின் வடிவம் ஆகும். ஒளி மின்காந்த அலை வடிவத்தில் பரவுகின்றது. ஒளியின் பண்புகளையும், அதன் பயன்பாடுகளையும் பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு ஒளியியல் என்று அழைக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் நாம் பல ஒளியியல் கருவிகளை பயன்படுத்துகிறோம். கல்வி, அறிவியல், பொழுதுபோக்கு ஆகிய தளங்களில் தொலைநோக்கிகள், புகைப்படக்கருவிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.)
Incorrect
(குறிப்பு – ஒளி என்பது ஆற்றலின் வடிவம் ஆகும். ஒளி மின்காந்த அலை வடிவத்தில் பரவுகின்றது. ஒளியின் பண்புகளையும், அதன் பயன்பாடுகளையும் பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு ஒளியியல் என்று அழைக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் நாம் பல ஒளியியல் கருவிகளை பயன்படுத்துகிறோம். கல்வி, அறிவியல், பொழுதுபோக்கு ஆகிய தளங்களில் தொலைநோக்கிகள், புகைப்படக்கருவிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.)
-
Question 2 of 52
2. Question
2) ஒரு சமதள ஆடியில், ஒரு புள்ளியின் மேல் படும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct
(குறிப்பு – ஒரு சமதள ஆடியில், O என்னும் புள்ளியில் அந்த ஆடியின் மேல்படும் கதிர் படுகதிர் எனப்படும். இந்த கதிரை ஆடி எதிரொளிக்கும். அவ்வாறு எதிரொளிக்கும் கதிர், எதிரொளிப்பு கதிர் என அழைக்கப்படும்.)
Incorrect
(குறிப்பு – ஒரு சமதள ஆடியில், O என்னும் புள்ளியில் அந்த ஆடியின் மேல்படும் கதிர் படுகதிர் எனப்படும். இந்த கதிரை ஆடி எதிரொளிக்கும். அவ்வாறு எதிரொளிக்கும் கதிர், எதிரொளிப்பு கதிர் என அழைக்கப்படும்.)
-
Question 3 of 52
3. Question
3) குத்துக்கோடுடன் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
(குறிப்பு – குத்துக்கோடுடன் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் படுகோணம் எனப்படும். குத்துக்கோடுடன் எதிரொளிப்பு கதிர் ஏற்படுத்தும் கோணம் எதிரொளிப்பு கோணம் என அழைக்கப்படும். மேலும் படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும்.)
Incorrect
(குறிப்பு – குத்துக்கோடுடன் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் படுகோணம் எனப்படும். குத்துக்கோடுடன் எதிரொளிப்பு கதிர் ஏற்படுத்தும் கோணம் எதிரொளிப்பு கோணம் என அழைக்கப்படும். மேலும் படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும்.)
-
Question 4 of 52
4. Question
4) எதிரொளிப்பு விதி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. ஒரு ஒளியானது எதிரொளிக்க படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைய வேண்டும்.
II. படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும்.Correct
(குறிப்பு – ஒரு ஒளியானது எதிரொளிக்க படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைய வேண்டும். மேலும் படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும். இவையே எதிரொளிப்பு விதி என அழைக்கப்படுகிறது.)
Incorrect
(குறிப்பு – ஒரு ஒளியானது எதிரொளிக்க படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைய வேண்டும். மேலும் படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும். இவையே எதிரொளிப்பு விதி என அழைக்கப்படுகிறது.)
-
Question 5 of 52
5. Question
5) இடவல மாற்றம் (Lateral Inversion) என்பதில் Lateral என்னும் வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
Correct
(குறிப்பு – இடவல மாற்றம் (Lateral Inversion) என்பதில் Lateral என்னும் வார்த்தையானது பக்கம் என்று பொருள்படும் Latus என்ற லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது. பக்கவாட்டில் ஏற்படும் மாற்றம் இடவல மாற்றம் எனப்படும். இது ஒரு சமதள ஆடியில் ஏற்படுவது போல் தோன்றும் இடவல மாற்றம் ஆகும்.)
Incorrect
(குறிப்பு – இடவல மாற்றம் (Lateral Inversion) என்பதில் Lateral என்னும் வார்த்தையானது பக்கம் என்று பொருள்படும் Latus என்ற லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது. பக்கவாட்டில் ஏற்படும் மாற்றம் இடவல மாற்றம் எனப்படும். இது ஒரு சமதள ஆடியில் ஏற்படுவது போல் தோன்றும் இடவல மாற்றம் ஆகும்.)
-
Question 6 of 52
6. Question
6) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. இடவல மாற்றம் என்பது ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் ஆகும்.
II. உண்மையில் இடவல மாற்றம் ஆடியால் ஏற்படுகிறது.
III. இடவல மாற்றம் என்பது நம் புலனுணர்வினால் ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும்.Correct
(குறிப்பு – இடவல மாற்றம் என்பது ஒரு ஒளியியல் மாயத்தோற்றமே ஆகும். உண்மையில் இடவல மாற்றம் ஆடியால் ஏற்படுவதில்லை. அது நம் புலனுணர்வினால் (Perception) ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும்.)
Incorrect
(குறிப்பு – இடவல மாற்றம் என்பது ஒரு ஒளியியல் மாயத்தோற்றமே ஆகும். உண்மையில் இடவல மாற்றம் ஆடியால் ஏற்படுவதில்லை. அது நம் புலனுணர்வினால் (Perception) ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும்.)
-
Question 7 of 52
7. Question
7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொலிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மெய்பிம்பம் எனப்படும்.
II. மெய்பிம்பம் எப்போதும் நேரான பிம்பமாகவே இருக்கும்.Correct
(குறிப்பு – பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொலிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மெய்பிம்பம் எனப்படும். மேலும் அது, எப்போதும் தலைகீழாகவே இருக்கும். மெய் பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியும்.)
Incorrect
-
Question 8 of 52
8. Question
8) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் ஒன்றை ஒன்று சந்திக்காமல், பின்னோக்கி நீட்டப்படும் போது சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மாயபிம்பம் எனப்படும்.
II. மாயபிம்பத்தை திரையில் வீழ்த்த முடியாது.Correct
(குறிப்பு – பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் ஒன்றை ஒன்று சந்திக்காமல், பின்னோக்கி நீட்டப்படும் போது சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மாயபிம்பம் எனப்படும். மாய பிம்பம் எப்போதுமே நேரான பிம்பமாகவே இருக்கும். மேலும் அதை திரையில் வீழ்த்த முடியாது.)
Incorrect
(குறிப்பு – பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் ஒன்றை ஒன்று சந்திக்காமல், பின்னோக்கி நீட்டப்படும் போது சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மாயபிம்பம் எனப்படும். மாய பிம்பம் எப்போதுமே நேரான பிம்பமாகவே இருக்கும். மேலும் அதை திரையில் வீழ்த்த முடியாது.)
-
Question 9 of 52
9. Question
9) ஆடியில் ஒருவரது முழு உருவம் தெரிய வேண்டுமெனில் கீழ்க்காணும் எந்த விதியை பூர்த்தி செய்ய வேண்டும்?
I. ஆடியின் உயரம் அந்த நபரின் உயரத்தில் பாதியாவது இருக்க வேண்டும்.
II. ஆடியின் உயரம் அந்த நபரின் உயரத்தை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும்.Correct
(குறிப்பு – நிலைப்பேழையில் (பீரோ) உள்ள ஆடியின் முன் நின்றால், நம் முழு உருவமும் தெரிகிறது. ஏனெனில், ஆடியில் ஒருவரது முழு உருவமும் தெரிய வேண்டுமெனில், ஆடியின் உயரம் அந்த நபரின் உயரத்தில் பாதியாவது இருக்க வேண்டும். அதாவது, ஆடியின் உயரம் = உங்கள் உயரம் / 2)
Incorrect
(குறிப்பு – நிலைப்பேழையில் (பீரோ) உள்ள ஆடியின் முன் நின்றால், நம் முழு உருவமும் தெரிகிறது. ஏனெனில், ஆடியில் ஒருவரது முழு உருவமும் தெரிய வேண்டுமெனில், ஆடியின் உயரம் அந்த நபரின் உயரத்தில் பாதியாவது இருக்க வேண்டும். அதாவது, ஆடியின் உயரம் = உங்கள் உயரம் / 2)
-
Question 10 of 52
10. Question
10) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. எதிரொளிப்பு விதிகள், வளைந்த பரப்புகள் உள்ளிட்ட அனைத்து எதிரொளிக்கும் பரப்புகளுக்கும் பொருந்தும்.
II. பொதுவாக பயன்படுத்தப்படும் வளைவு ஆடி, கோளக ஆடி ஆகும்.Correct
(குறிப்பு – எதிரொளிப்பு விதிகள், வளைந்த பரப்புகள் உள்ளிட்ட அனைத்து எதிரொளிக்கும் பரப்புகளுக்கும் பொருந்தும். பொதுவாக பயன்படுத்தப்படும் வளைவு ஆடி, கோளக ஆடி ஆகும். பளபளப்பான கரண்டி ஒன்றின் வளைந்த பரப்பு கூட வளைவு ஆடியே ஆகும்.)
Incorrect
(குறிப்பு – எதிரொளிப்பு விதிகள், வளைந்த பரப்புகள் உள்ளிட்ட அனைத்து எதிரொளிக்கும் பரப்புகளுக்கும் பொருந்தும். பொதுவாக பயன்படுத்தப்படும் வளைவு ஆடி, கோளக ஆடி ஆகும். பளபளப்பான கரண்டி ஒன்றின் வளைந்த பரப்பு கூட வளைவு ஆடியே ஆகும்.)
-
Question 11 of 52
11. Question
11) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. வளைவு ஆடிகளில் எதிரொளிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
II. சில கோளக ஆடிகளில் எதிரொலிக்கும் பகுதி உள்பக்கமாக வளைந்திருக்கும்.Correct
(குறிப்பு – வளைவு ஆடிகளில் எதிரொளிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவ்வாறு எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள், கோளக ஆடிகள் எனப்படும். சில கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள் பக்கமாக வளைந்திருக்கும்.)
Incorrect
(குறிப்பு – வளைவு ஆடிகளில் எதிரொளிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவ்வாறு எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள், கோளக ஆடிகள் எனப்படும். சில கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள் பக்கமாக வளைந்திருக்கும்.)
-
Question 12 of 52
12. Question
12) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருப்பது குழியாடி எனப்படும்.
II. கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள் பக்கமாக வளைந்திருப்பது குவியாடி எனப்படும்.Correct
(குறிப்பு – சில கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள் பக்கமாக வளைந்திருக்கும். அதாவது, கோளத்தின் மையத்தை நோக்கி அப்பகுதி பார்த்துள்ளபடி இருக்கும். இவை குழியாடிகள் எனப்படும். சில வகை கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருக்கும். அவை குவியாடிகள் எனப்படும்.)
Incorrect
(குறிப்பு – சில கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள் பக்கமாக வளைந்திருக்கும். அதாவது, கோளத்தின் மையத்தை நோக்கி அப்பகுதி பார்த்துள்ளபடி இருக்கும். இவை குழியாடிகள் எனப்படும். சில வகை கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருக்கும். அவை குவியாடிகள் எனப்படும்.)
-
Question 13 of 52
13. Question
13) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. ஒரு குழியாடியைக் கொண்டு இணையாகச் செல்லும் சூரிய கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்க இயலும்.
II. சமதள ஆடியின் தன்மையை விட குழியாடியின் தன்மை சிக்கலானது.Correct
(குறிப்பு – ஒரு குழியாடியைக் கொண்டு இணையாகச் செல்லும் சூரிய கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்க இயலும். வளைவு ஆடிகளில் எதிரொளிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவ்வாறு எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள், கோளக ஆடிகள் எனப்படும்.)
Incorrect
(குறிப்பு – ஒரு குழியாடியைக் கொண்டு இணையாகச் செல்லும் சூரிய கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்க இயலும். வளைவு ஆடிகளில் எதிரொளிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவ்வாறு எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள், கோளக ஆடிகள் எனப்படும்.)
-
Question 14 of 52
14. Question
14) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. பொருளின் ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் எண்ணற்ற கதிர்கள் அனைத்து திசைகளிலும் செல்கின்றன.
II. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும்.Correct
(குறிப்பு – குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும்.அவை i) ஆடியின் வளைவு மையம் வழியாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொலிக்கப்பட்ட பின்பு, அதே பாதையில் திருப்பி செல்லும் ii) முக்கிய குவியம் வழியாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொலித்த பின் முதன்மை அச்சுக்கு இணையாக செல்லும் போன்றவை ஆகும்.)
Incorrect
(குறிப்பு – குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும்.அவை i) ஆடியின் வளைவு மையம் வழியாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொலிக்கப்பட்ட பின்பு, அதே பாதையில் திருப்பி செல்லும் ii) முக்கிய குவியம் வழியாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொலித்த பின் முதன்மை அச்சுக்கு இணையாக செல்லும் போன்றவை ஆகும்.)
-
Question 15 of 52
15. Question
15) குவியாடி தோன்ற அவசியமான விதிகளில் கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
I. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும்.
II. ஆடி மையத்தில் படும் ஒளிக்கதிர் படுகோன் அதற்கு சமமான கோணத்தில், ஒரு திசையில் எதிரொளிக்கப்படும்.
III. ஆடியின் வளைவு மையம் வழியாக செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு, அதேபாதையில் திரும்பி செல்லும்.Correct
(குறிப்பு – குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை கீழ்காணும் விதிகள் தீர்மானிக்கின்றன. அவை i) ஆடியின் வளைவு மையம் வழியாக செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு, அதேபாதையில் திரும்பி செல்லும், ii) ஆடி மையத்தில் படும் ஒளிக்கதிர் படுகோன் அதற்கு சமமான கோணத்தில், ஒரு திசையில் எதிரொளிக்கப்படும் iii) குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும் போன்றவை ஆகும்.)
Incorrect
(குறிப்பு – குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை கீழ்காணும் விதிகள் தீர்மானிக்கின்றன. அவை i) ஆடியின் வளைவு மையம் வழியாக செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு, அதேபாதையில் திரும்பி செல்லும், ii) ஆடி மையத்தில் படும் ஒளிக்கதிர் படுகோன் அதற்கு சமமான கோணத்தில், ஒரு திசையில் எதிரொளிக்கப்படும் iii) குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும் போன்றவை ஆகும்.)
-
Question 16 of 52
16. Question
16) குழி ஆடி ஒன்றின் முதன்மை அச்சில் வைக்கப்படும் பொருள் ஒன்றின் பிம்பத்தின் நிலை, அளவு மற்றும் தன்மையை கீழ்க்கண்டவற்றுள் எது தீர்மானிக்கிறது?
I. ஈரிலா தொலைவில் பொருள் வைக்கப்படும்போது பொருளில் இருந்து குழி ஆடி வந்தடையும் ஒளிக்கதிர்கள் இணையானவையாக இருக்கும். இதனால் தலைகீழான மிகவும் சிறியதான மெய் பிம்பம் தோன்றும்.
II. வளைவு மையத்திற்கு அப்பால் பொருள் வைக்கப்படும்போது, பொருளை விட சிறியதான தலைகீழான பிம்பம் தோன்றும்.Correct
(குறிப்பு – ஈரிலா தொலைவில் பொருள் வைக்கப்படும்போது பொருளில் இருந்து குழி ஆடி வந்தடையும் ஒளிக்கதிர்கள் இணையானவையாக இருக்கும். இதனால் தலைகீழான மிகவும் சிறியதான மெய் பிம்பம் தோன்றும். மேலும் பிம்பம் முக்கிய குவியத்தில் உருவாகும். வளைவு மையத்திற்கு அப்பால் பொருள் வைக்கப்படும்போது, பொருளை விட சிறியதான தலைகீழான பிம்பம் தோன்றும். அதாவது பிம்பத்தின் நிலையானது முக்கிய குவியம் மற்றும் வளைவு மையத்திற்கு இடையில் இருக்கும்.)
Incorrect
(குறிப்பு – ஈரிலா தொலைவில் பொருள் வைக்கப்படும்போது பொருளில் இருந்து குழி ஆடி வந்தடையும் ஒளிக்கதிர்கள் இணையானவையாக இருக்கும். இதனால் தலைகீழான மிகவும் சிறியதான மெய் பிம்பம் தோன்றும். மேலும் பிம்பம் முக்கிய குவியத்தில் உருவாகும். வளைவு மையத்திற்கு அப்பால் பொருள் வைக்கப்படும்போது, பொருளை விட சிறியதான தலைகீழான பிம்பம் தோன்றும். அதாவது பிம்பத்தின் நிலையானது முக்கிய குவியம் மற்றும் வளைவு மையத்திற்கு இடையில் இருக்கும்.)
-
Question 17 of 52
17. Question
17) வளைவு மையம் மற்றும் முக்கிய குவியத்திற்கு இடையே பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தில் நிலை எங்கு இருக்கும்?
Correct
(குறிப்பு – வளைவு மையம் மற்றும் முக்கிய குவியத்திற்கு இடையே பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தில் நிலை அல்லது இடம் C க்கு அப்பால் இருக்கும். மேலும் பிம்பத்தின் தன்மை பெரிதாக்கப்பட்ட தலைகீழான மெய் பிம்பமாக இருக்கும்)
Incorrect
(குறிப்பு – வளைவு மையம் மற்றும் முக்கிய குவியத்திற்கு இடையே பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தில் நிலை அல்லது இடம் C க்கு அப்பால் இருக்கும். மேலும் பிம்பத்தின் தன்மை பெரிதாக்கப்பட்ட தலைகீழான மெய் பிம்பமாக இருக்கும்)
-
Question 18 of 52
18. Question
18) முக்கிய குவியம் F, இல் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் தன்மை?
Correct
(குறிப்பு – முக்கிய குவியம் F, இல் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் தன்மை திரையில் எந்த பிம்பமும் தெரியாது, மேலும் மாய பிம்பமும் தெரியாது. கருத்தியல் படி பிம்பத்தின் நிலையானது பிம்பம் ஈரிலாத்தொலைவில் கிடைக்கும்.)
Incorrect
(குறிப்பு – முக்கிய குவியம் F, இல் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் தன்மை திரையில் எந்த பிம்பமும் தெரியாது, மேலும் மாய பிம்பமும் தெரியாது. கருத்தியல் படி பிம்பத்தின் நிலையானது பிம்பம் ஈரிலாத்தொலைவில் கிடைக்கும்.)
-
Question 19 of 52
19. Question
19) முக்கிய குவியம் F க்கும் ஆடி மையம் P க்கும் கையில் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் நிலை?
Correct
(குறிப்பு – முக்கிய குவியம் F க்கும் ஆடி மையம் P க்கும் கையில் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் நிலை ஆடிக்கு பின்புறம் தோன்றும். மேலும் பிம்பத்தின் தன்மை பெரியதாக்கப்பட்ட, நேரான மாய பிம்பமாக இருக்கும்.)
Incorrect
(குறிப்பு – முக்கிய குவியம் F க்கும் ஆடி மையம் P க்கும் கையில் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் நிலை ஆடிக்கு பின்புறம் தோன்றும். மேலும் பிம்பத்தின் தன்மை பெரியதாக்கப்பட்ட, நேரான மாய பிம்பமாக இருக்கும்.)
-
Question 20 of 52
20. Question
20) பொருத்துக
I. வளைவு மையம் – a) F
II. முக்கியக் குவியம் – b) C
III. ஆடி மையம் – c) AB
IV. ஒளிக்கதிர் – d) PCorrect
(குறிப்பு – குழி ஆடி மற்றும் குவி ஆடி கொண்டு பிம்பங்களை உருவாக்க கீழ்கண்டவை அவசியமாகிறது. அவை வளைவு மையம் (C), முக்கிய குவியம் (F), ஆடி மையம் (P), ஒளிக்கதிர் (AB) போன்றவை ஆகும். ஆடியின் அச்சு MM’ என குறிக்கபடுகிறது.)
Incorrect
(குறிப்பு – குழி ஆடி மற்றும் குவி ஆடி கொண்டு பிம்பங்களை உருவாக்க கீழ்கண்டவை அவசியமாகிறது. அவை வளைவு மையம் (C), முக்கிய குவியம் (F), ஆடி மையம் (P), ஒளிக்கதிர் (AB) போன்றவை ஆகும். ஆடியின் அச்சு MM’ என குறிக்கபடுகிறது.)
-
Question 21 of 52
21. Question
21) கதிர் வரைபடங்களின் தூரத்தை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீட்டு மரபு எது?
Correct
(குறிப்பு – கதிர் வரைபடங்களின் தூரத்தை கணக்கிடுவதற்கு கார்டீசியன் குறியீட்டு மரபுகள் என்ற குறியீட்டு முறையை நாம் பயன்படுத்துகிறோம். இந்த முறைப்படி ஆடியின் மையம் (P) ஆதிபுள்ளியாகவும் முதன்மை அச்சு X-அச்சாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)
Incorrect
(குறிப்பு – கதிர் வரைபடங்களின் தூரத்தை கணக்கிடுவதற்கு கார்டீசியன் குறியீட்டு மரபுகள் என்ற குறியீட்டு முறையை நாம் பயன்படுத்துகிறோம். இந்த முறைப்படி ஆடியின் மையம் (P) ஆதிபுள்ளியாகவும் முதன்மை அச்சு X-அச்சாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)
-
Question 22 of 52
22. Question
22) கீழ்காணும் குறியீட்டு மரபுகளில் எது தவறானது?
I. பொருள் எப்போதும் ஆடிக்கு வலதுபுறமே வைக்கப்படுகிறது.
II. அனைத்து தொலைவுகளும் ஆடி மையத்திலிருந்தே (P) அளவிடப்படுகின்றன.
III. முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்க்குறியாக (+) கருதப்படுகின்றன.Correct
(குறிப்பு – குறியீட்டு மரபுகள் பின்வருமாறு i) பொருள் எப்போதும் ஆடிக்கு இடதுபுறமே வைக்கப்படுகிறது, ii) அனைத்து தொலைவுகளும் ஆடி மையத்திலிருந்தே அளவிடப்படுகின்றன, iii) படுகதிரின் திசையிலுள்ள தொலைவுகள் நேர்க்குறியாகவும் அதற்கு எதிர்திசையில் அளக்கப்படும் தொலைவுகள் எதிர்குறியாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, iv) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும்,அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்குறியாக கருதப்படுகின்றன. என்பனவாம்.)
Incorrect
(குறிப்பு – குறியீட்டு மரபுகள் பின்வருமாறு i) பொருள் எப்போதும் ஆடிக்கு இடதுபுறமே வைக்கப்படுகிறது, ii) அனைத்து தொலைவுகளும் ஆடி மையத்திலிருந்தே அளவிடப்படுகின்றன, iii) படுகதிரின் திசையிலுள்ள தொலைவுகள் நேர்க்குறியாகவும் அதற்கு எதிர்திசையில் அளக்கப்படும் தொலைவுகள் எதிர்குறியாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, iv) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும்,அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்குறியாக கருதப்படுகின்றன. என்பனவாம்.)
-
Question 23 of 52
23. Question
23) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்க்குறியாக (+) கருதப்படுகின்றன.
II. முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு கீழ் நோக்கியும் உள்ள தொலைவுகள் எதிர்க்குறியாக கருதப்படும்.Correct
(குறிப்பு – i) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்க்குறியாக (+) கருதப்படுகின்றன. ii) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு கீழ் நோக்கியும் உள்ள தொலைவுகள் எதிர்க்குறியாக கருதப்படும். இவை கார்டீசியன் குறியீட்டு மரபுகள் என அழைக்கப்படுகின்றன.)
Incorrect
(குறிப்பு – i) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்க்குறியாக (+) கருதப்படுகின்றன. ii) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு கீழ் நோக்கியும் உள்ள தொலைவுகள் எதிர்க்குறியாக கருதப்படும். இவை கார்டீசியன் குறியீட்டு மரபுகள் என அழைக்கப்படுகின்றன.)
-
Question 24 of 52
24. Question
24) கீழ்க்கண்டவற்றுள் எது சரியான ஆடி சமன்பாடு ஆகும்?
Correct
(குறிப்பு – பொருளின் தொலைவு (u), பிம்பத்தின் தொலைவு (v), குவிய தொலைவு (f) ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு ஆடி சமன்பாடு எனப்படும்.
ஆடி சமன்பாடு, 1/f = 1/u + 1/v ஆகும்.)Incorrect
(குறிப்பு – பொருளின் தொலைவு (u), பிம்பத்தின் தொலைவு (v), குவிய தொலைவு (f) ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு ஆடி சமன்பாடு எனப்படும்.
ஆடி சமன்பாடு, 1/f = 1/u + 1/v ஆகும்.) -
Question 25 of 52
25. Question
25) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. பொருளின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பெரியதாக உள்ளது என்பதை கோளக ஆடியின் உருப்பெருக்கம் குறிக்கும்.
II. பிம்பத்தின் அளவிற்கும்,பொருளின் அளவிற்கும் இடையேயான தகவு உருப்பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது.Correct
(குறிப்பு – பொருளின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பெரியதாக உள்ளது என்பதை கோளக ஆடியின் உருப்பெருக்கம் குறிக்கும். பிம்பத்தின் அளவிற்கும்(hi), பொருளின் அளவிற்கும் (h°) இடையேயான தகவு உருப்பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது. அதாவது m = hi / h° என்று குறிப்பிடப்படுகிறது.)
Incorrect
(குறிப்பு – பொருளின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பெரியதாக உள்ளது என்பதை கோளக ஆடியின் உருப்பெருக்கம் குறிக்கும். பிம்பத்தின் அளவிற்கும்(hi), பொருளின் அளவிற்கும் (h°) இடையேயான தகவு உருப்பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது. அதாவது m = hi / h° என்று குறிப்பிடப்படுகிறது.)
-
Question 26 of 52
26. Question
26) கீழ்காணும் சமன்பாடுகளில் எது சரியானது?
Correct
(குறிப்பு – பிம்பத்தின் தொலைவு மற்றும் பொருளின் தொலைவை கொண்டு உருpபெருக்கத்தின் தொலைவை கணக்கிட முடியும். அதாவது,
m = hi / h° மற்றும் m = – v / u எனில்
m = hi / h° = – v / u ஆகும்.
உருபெருக்கத்தின் மதிப்பில் எதிர் குறி (-ve), பிம்பம் மெய்பிம்பம் என்பதையும், நேர்குறி (+ve), பிம்பம் மாய பிம்பம் என்பதையும் குறிக்கும்.)Incorrect
(குறிப்பு – பிம்பத்தின் தொலைவு மற்றும் பொருளின் தொலைவை கொண்டு உருpபெருக்கத்தின் தொலைவை கணக்கிட முடியும். அதாவது,
m = hi / h° மற்றும் m = – v / u எனில்
m = hi / h° = – v / u ஆகும்.
உருபெருக்கத்தின் மதிப்பில் எதிர் குறி (-ve), பிம்பம் மெய்பிம்பம் என்பதையும், நேர்குறி (+ve), பிம்பம் மாய பிம்பம் என்பதையும் குறிக்கும்.) -
Question 27 of 52
27. Question
27) 10 செமீ குவிய தொலைவு கொண்ட குழி ஆடி ஒன்றிலிருந்து 15 செமீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 1 செமீ உயரம் கொண்ட பொருளின் பிம்பத்தின் தொலைவு?
Correct
(குறிப்பு – தீர்வு
பொருளின் தொலைவு = – 15 செமீ
குவிய தொலைவு, f = -10 செமீ.
ஆடி சமன்பாடு = 1/v + 1/u = 1/f
1/v + 1/-15 = 1/10
1/v – 1/15 = -1/10
1/v = -1/10 + 1/15
1/v = (-3+2) / 30
1/v = -1/30
v = -30 செமீ ஆகும்.)Incorrect
(குறிப்பு – தீர்வு
பொருளின் தொலைவு = – 15 செமீ
குவிய தொலைவு, f = -10 செமீ.
ஆடி சமன்பாடு = 1/v + 1/u = 1/f
1/v + 1/-15 = 1/10
1/v – 1/15 = -1/10
1/v = -1/10 + 1/15
1/v = (-3+2) / 30
1/v = -1/30
v = -30 செமீ ஆகும்.) -
Question 28 of 52
28. Question
28) 10 செமீ குவிய தொலைவு கொண்ட குழி ஆடி ஒன்றிலிருந்து 15 செமீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 1 செமீ உயரம் கொண்ட பொருளின் பிம்பத்தின் தொலைவு -30 செமீ எனில், பிம்பத்தின் உயரத்தை கணக்கீடு செய்.
Correct
(குறிப்பு – தீர்வு
m = -v / u
m = (-30) / (15)
m = – 2
m = h2 / h1என்பதை நாம் அறிவோ இங்கு பொருளின் உயரம் h1 = 1 செமீ
-2 = h2 / 1
h2 = -2 × 1 = -2 cm
எனவே பிம்பத்தின் உயரம் = 2 செமீ
இங்கு எதிர் குறி வந்துள்ளது. எனவே பிம்பம் முதன்மை அச்சுக்கு கீழே ஏற்படுகிறது.))Incorrect
(குறிப்பு – தீர்வு
m = -v / u
m = (-30) / (15)
m = – 2
m = h2 / h1என்பதை நாம் அறிவோ இங்கு பொருளின் உயரம் h1 = 1 செமீ
-2 = h2 / 1
h2 = -2 × 1 = -2 cm
எனவே பிம்பத்தின் உயரம் = 2 செமீ
இங்கு எதிர் குறி வந்துள்ளது. எனவே பிம்பம் முதன்மை அச்சுக்கு கீழே ஏற்படுகிறது.)) -
Question 29 of 52
29. Question
29) குழியாடியிலிருந்து 16 செமீ தொலைவில் வைக்கப்படும் 2 செமீ உயரம் கொண்ட பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செமீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தை காண்க.
Correct
(குறிப்பு – தீர்வு
பொருளின் உயரம், h1 = 2 செமீ
பிம்பத்தின் உயரம், h2 = -3 செமீ
உருப்பெருக்கம் m = -3 / 2 = – 1.5 செமீ
ஆனால், m = -v / u
இங்கு பொருளின் தொலைவு u = – 16 செமீ மதிப்புகளை பிரதியிட,
– 1.5 = – (v) / (-16)
– 1.5 = v / 16
v = 16 × (-1.5)
v = – 24 cm
பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் 24 செமீ தொலைவில் இருக்கும். (எதிர்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதை குறிக்கிறது.)Incorrect
(குறிப்பு – தீர்வு
பொருளின் உயரம், h1 = 2 செமீ
பிம்பத்தின் உயரம், h2 = -3 செமீ
உருப்பெருக்கம் m = -3 / 2 = – 1.5 செமீ
ஆனால், m = -v / u
இங்கு பொருளின் தொலைவு u = – 16 செமீ மதிப்புகளை பிரதியிட,
– 1.5 = – (v) / (-16)
– 1.5 = v / 16
v = 16 × (-1.5)
v = – 24 cm
பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் 24 செமீ தொலைவில் இருக்கும். (எதிர்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதை குறிக்கிறது.) -
Question 30 of 52
30. Question
30) கீழ்காணும் குழியாடியின் பயன்களில் சரியானது எது?
I. ஒப்பனை ஆடிகளில் குழியாடி பயன்படுத்தப்படுகிறது.
II. கை மின்விளக்குகளில் குழியாடி பயன்படுத்தப்படுகிறது.
III. வாகனங்களில் முகப்பு விளக்குகளில் குழியாடி பயன்படுத்தப்படுகிறது.Correct
(குறிப்பு – பல் மருத்துவர் / காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் தலையில் ஒரு பட்டை கட்டப்பட்டு அதில் ஒரு வட்டவடிவ ஆடி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒளி மூலத்திலிருந்து வரும் இணைக்கதிர்கள் அந்த ஆடியின் மீது படும்படி வைக்கப்படும். அந்த ஆடி நம் உடலில் காணப்படும் சிறு பகுதியின் (பல், தொண்டை) மீது அந்த ஒளியை குவித்து ஒளியூட்டும். கை மின்விளக்கு, வாகனங்களின் முகப்பு விளக்கு மற்றும் தேடும் விளக்கு ஆகியவற்றில் பயன்படுகிறது.)
Incorrect
(குறிப்பு – பல் மருத்துவர் / காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் தலையில் ஒரு பட்டை கட்டப்பட்டு அதில் ஒரு வட்டவடிவ ஆடி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒளி மூலத்திலிருந்து வரும் இணைக்கதிர்கள் அந்த ஆடியின் மீது படும்படி வைக்கப்படும். அந்த ஆடி நம் உடலில் காணப்படும் சிறு பகுதியின் (பல், தொண்டை) மீது அந்த ஒளியை குவித்து ஒளியூட்டும். கை மின்விளக்கு, வாகனங்களின் முகப்பு விளக்கு மற்றும் தேடும் விளக்கு ஆகியவற்றில் பயன்படுகிறது.)
-
Question 31 of 52
31. Question
31) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. குழியாடிகள் ஆற்றல் வாய்ந்த ஒளியைப் பாய்ச்ச உதவுகின்றன.
II. குழியாடி எதிரொளிப்பான்கள் அறை சூடேற்றியில் பயன்படுத்தப்படுகின்றன.Correct
(குறிப்பு – குழியாடிகள் ஆற்றல் வாய்ந்த ஒளியைப் பாய்ச்ச உதவுகின்றன. குழியாடி எதிரொளிப்பான்கள் அறை சூடேற்றியில் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய குழியாடிகள் சூரிய சூடேற்றியில் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பனை ஆடி என்பதும் ஒரு குழியாடி ஆகும்.)
Incorrect
(குறிப்பு – குழியாடிகள் ஆற்றல் வாய்ந்த ஒளியைப் பாய்ச்ச உதவுகின்றன. குழியாடி எதிரொளிப்பான்கள் அறை சூடேற்றியில் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய குழியாடிகள் சூரிய சூடேற்றியில் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பனை ஆடி என்பதும் ஒரு குழியாடி ஆகும்.)
-
Question 32 of 52
32. Question
32) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. முதன்மை அச்சுக்கு இணையான கதிர் கொண்டு குவியாடியால் ஏற்படும் பிம்பத்தை வரையலாம்.
II. முதன்மை அச்சுக்கு இணையான கதிர் கொண்டு குவியாடியால் ஏற்படும் பிம்பத்தை வரையலாம்.Correct
(குறிப்பு – கீழ்காணும் இரண்டு கதிர்களை கொண்டு குவியாடியால் ஏற்படும் பிம்பத்தை வரையலாம். முதல்கதிர் : முதன்மை அச்சுக்கு இணையான கதிர் (விதி 1) இரண்டாம் கதிர் : வளைவு மையத்தை நோக்கி செல்லும் கதிர் (விதி 2). குவி ஆடிக்கு பின் புறமுள்ள கதிர்கள் அனைத்தும் புள்ளி கோட்டினால் குறிக்கப்படும்.)
Incorrect
(குறிப்பு – கீழ்காணும் இரண்டு கதிர்களை கொண்டு குவியாடியால் ஏற்படும் பிம்பத்தை வரையலாம். முதல்கதிர் : முதன்மை அச்சுக்கு இணையான கதிர் (விதி 1) இரண்டாம் கதிர் : வளைவு மையத்தை நோக்கி செல்லும் கதிர் (விதி 2). குவி ஆடிக்கு பின் புறமுள்ள கதிர்கள் அனைத்தும் புள்ளி கோட்டினால் குறிக்கப்படும்.)
-
Question 33 of 52
33. Question
33) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. குவி ஆடிகள் வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடியாக பயன்படுகின்றது.
II. குவி ஆடிகள் வாகனங்களின் முகப்பு விளக்கு மற்றும் தேடும் விளக்கு ஆகியவற்றில் பயன்படுகிறது.Correct
(குறிப்பு – குவி ஆடிகள் வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடியாக பயன்படுகின்றது. அவை பொருளை விட சிறியதான, நேரான, மாய பிம்பத்தையே எப்போதும் உருவாக்குகின்றன. பின்னே வரும் வாகனங்கள் அருகில் நெருங்கி வரும்போது, பிம்பத்தின் அளவும் அதிகரிக்கின்றது. ஆடியை விட்டு வாகனங்கள் விலகும்போது பிம்பம் சிறியதாக ஆகின்றது.)
Incorrect
(குறிப்பு – குவி ஆடிகள் வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடியாக பயன்படுகின்றது. அவை பொருளை விட சிறியதான, நேரான, மாய பிம்பத்தையே எப்போதும் உருவாக்குகின்றன. பின்னே வரும் வாகனங்கள் அருகில் நெருங்கி வரும்போது, பிம்பத்தின் அளவும் அதிகரிக்கின்றது. ஆடியை விட்டு வாகனங்கள் விலகும்போது பிம்பம் சிறியதாக ஆகின்றது.)
-
Question 34 of 52
34. Question
34) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. சமதள ஆடியின் பார்வைப்புலத்தை விட குவியாடியின் பார்வைப்புலம் பெரியது.
II. போக்குவரத்து பாதுகாப்பு கருவியாக சாலைகளில் குவி ஆடி பயன்படுத்தப்படுகிறதுCorrect
(குறிப்பு – போக்குவரத்து பாதுகாப்பு கருவியாக சாலைகளில் குவி ஆடி பயன்படுத்தப்படுகிறது. மலைப்பாதைகளில் காணப்படும் குறுகிய சாலைகளில் கூர்ந்த வளைவுகளில் முன்னே வரும் வாகனங்களை காண இயலாத இடங்களில் குவி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அங்காடிகளில் ஆளில்லா பகுதிகளை கண்காணிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.)
Incorrect
(குறிப்பு – போக்குவரத்து பாதுகாப்பு கருவியாக சாலைகளில் குவி ஆடி பயன்படுத்தப்படுகிறது. மலைப்பாதைகளில் காணப்படும் குறுகிய சாலைகளில் கூர்ந்த வளைவுகளில் முன்னே வரும் வாகனங்களை காண இயலாத இடங்களில் குவி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அங்காடிகளில் ஆளில்லா பகுதிகளை கண்காணிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.)
-
Question 35 of 52
35. Question
35) வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடிகளில் கீழ்காணும் எந்த சொற்றொடர் காணப்படுகிறது?
Correct
(குறிப்பு – வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடிகளில் எழுதப்பட்டுள்ள சொற்சொடர் “objects in the mirror are closer than they appear” என்பதாகும். அதாவது ஆடியில் பிம்பம் தோன்றும் தொலைவை விட பொருள்கள் மிக அருகில் உள்ளது என்பது இதன் பொருளாகும். இதனால் வாகனங்களில் ஆடியில் தெரியும் வாகனம், மிகவும் நெருக்கமானதாக இருப்பதாக வாகன ஓட்டிகள் உணர்ந்து மிக பாதுகாப்பாக வண்டியை ஓட்ட கூடும்.)
Incorrect
(குறிப்பு – வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடிகளில் எழுதப்பட்டுள்ள சொற்சொடர் “objects in the mirror are closer than they appear” என்பதாகும். அதாவது ஆடியில் பிம்பம் தோன்றும் தொலைவை விட பொருள்கள் மிக அருகில் உள்ளது என்பது இதன் பொருளாகும். இதனால் வாகனங்களில் ஆடியில் தெரியும் வாகனம், மிகவும் நெருக்கமானதாக இருப்பதாக வாகன ஓட்டிகள் உணர்ந்து மிக பாதுகாப்பாக வண்டியை ஓட்ட கூடும்.)
-
Question 36 of 52
36. Question
36) 20 செமீ குவிய தொலைவு கொண்ட குவியாடி ஒன்று மகிழுந்து, ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 6 மீ தொலைவில் இன்னொரு மகிழுந்து உள்ளது எனில், முதல் மகிழுந்தின் ஆடியில் இருந்து பார்க்கும்போது இரண்டாவது மகிழுந்து எங்கு இருக்கும்?
Correct
(குறிப்பு – தீர்வு
பிம்பத்தின் இடத்தை ஆடி சமன்பாட்டை கொண்டு அறிதல்,
1/f = 1/u + 1/ v
1/20 = 1/(-600) + 1/v
1/v = 1/20 – 1/-600
1/v = 1/20 + 1/600
1/v = 30+1 / 600
1/v = 31 / 600
V = 600 /31
v = 19.35 செமீ.)Incorrect
(குறிப்பு – தீர்வு
பிம்பத்தின் இடத்தை ஆடி சமன்பாட்டை கொண்டு அறிதல்,
1/f = 1/u + 1/ v
1/20 = 1/(-600) + 1/v
1/v = 1/20 – 1/-600
1/v = 1/20 + 1/600
1/v = 30+1 / 600
1/v = 31 / 600
V = 600 /31
v = 19.35 செமீ.) -
Question 37 of 52
37. Question
37) 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒளியின் வேகத்தை கணக்கிட முயன்ற அறிவியல் அறிஞர் யார்?
Correct
(குறிப்பு – 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலிலியோ கலிலி (1564 – 1642) என்ற இத்தாலிய அறிவியல் அறிஞர் ஒளியின் வேகத்தை கணக்கிட முயன்றார். கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”, “நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.)
Incorrect
(குறிப்பு – 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலிலியோ கலிலி (1564 – 1642) என்ற இத்தாலிய அறிவியல் அறிஞர் ஒளியின் வேகத்தை கணக்கிட முயன்றார். கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”, “நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.)
-
Question 38 of 52
38. Question
38) ஓலே ரோமர் எந்த ஆண்டு வியாழன் கோளின் 12 நிலவுகளில் ஒன்றை அவதானித்து, ஒளியின் திசைவேகத்தை தோராயமாக கணக்கிட்டார்?
Correct
(குறிப்பு – ஓலே ரோமர் என்ற டேனியே வானியலாளர் 1665 ஆம் ஆண்டு வியாழன் கோளின் 12 நிலவுகளில் ஒன்றை அவதானித்து அதன்மூலம் ஒளியின் திசைவேகத்தை தோராயமாக கணக்கிட்டார். இதன் மூலம் அவரது கணக்கீட்டின் படி ஒளியின் வேகம் கிட்டத்தட்ட 2,20,000 கிமீ / வி என அறியப்பட்டது.)
Incorrect
(குறிப்பு – ஓலே ரோமர் என்ற டேனியே வானியலாளர் 1665 ஆம் ஆண்டு வியாழன் கோளின் 12 நிலவுகளில் ஒன்றை அவதானித்து அதன்மூலம் ஒளியின் திசைவேகத்தை தோராயமாக கணக்கிட்டார். இதன் மூலம் அவரது கணக்கீட்டின் படி ஒளியின் வேகம் கிட்டத்தட்ட 2,20,000 கிமீ / வி என அறியப்பட்டது.)
-
Question 39 of 52
39. Question
39) 1849 ஆம் ஆண்டு பூமியில் ஒளியின் வேகத்தை முதன்முதலாக கணக்கிட்டவர் யார்?
Correct
(குறிப்பு – 1849 ஆம் ஆண்டு, முதன்முதலாக ஆர்மண்ட் ஃபிஷே என்பவரால் பூமியில் (நிலத்தில்) ஒளியின் வேகம் கணக்கிடப்பட்டது. இன்று வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ஏறக்குறைய மிகச்சரியாக 3,00,000 கிமீ / வி என கணக்கிடப்பட்டுள்ளது.)
Incorrect
(குறிப்பு – 1849 ஆம் ஆண்டு, முதன்முதலாக ஆர்மண்ட் ஃபிஷே என்பவரால் பூமியில் (நிலத்தில்) ஒளியின் வேகம் கணக்கிடப்பட்டது. இன்று வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ஏறக்குறைய மிகச்சரியாக 3,00,000 கிமீ / வி என கணக்கிடப்பட்டுள்ளது.)
-
Question 40 of 52
40. Question
40) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. சில உயிரினங்கள் இயல்பாகவே தங்களுக்குள் ஒளிரும் தன்மையை பெற்றுள்ளன.
II. கடலின் ஆழத்தில் வாழக்கூடிய சில வகையான புழுக்கள், மீன், ராட்சத சிப்பி மீன் போன்றவை தங்களை மற்ற உயிர்களிடம் இருந்து காத்துக்கொள்ள ஒளிரும் அல்லது மின்னுகின்ற பண்பை பெற்றுள்ளன.Correct
(குறிப்பு – சில உயிரினங்கள் இயல்பாகவே தங்களுக்குள் ஒளிரும் தன்மையை பெற்றுள்ளன. கடலின் ஆழத்தில் வாழக்கூடிய சில வகையான புழுக்கள், மீன், ராட்சத சிப்பி மீன் போன்றவை தங்களை மற்ற உயிர்களிடம் இருந்து காத்துக்கொள்ள ஒளிரும் அல்லது மின்னுகின்ற பண்பை பெற்றுள்ளன. இந்தப் பண்பிற்கு உயிரி ஒளிர்தல் என்று பெயராகும். )
Incorrect
(குறிப்பு – சில உயிரினங்கள் இயல்பாகவே தங்களுக்குள் ஒளிரும் தன்மையை பெற்றுள்ளன. கடலின் ஆழத்தில் வாழக்கூடிய சில வகையான புழுக்கள், மீன், ராட்சத சிப்பி மீன் போன்றவை தங்களை மற்ற உயிர்களிடம் இருந்து காத்துக்கொள்ள ஒளிரும் அல்லது மின்னுகின்ற பண்பை பெற்றுள்ளன. இந்தப் பண்பிற்கு உயிரி ஒளிர்தல் என்று பெயராகும். )
-
Question 41 of 52
41. Question
41) நேரான எழுதுகோல் ஒன்றை, 45° கோணத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள முகவையுள் வைத்து பார்க்கும் போது எழுதுகோல் எவ்வாறு தெரியும்?
Correct
(குறிப்பு – நேரான எழுதுகோல் ஒன்றை, 45° கோணத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள முகவையுள் வைத்து பார்க்கும் போது எழுதுகோல் உடைந்தது போல தெரியும். காரணம், காற்று தண்ணீர்இடைமுகப்பில் ஒளிவிலகல் ஆகும். ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு ஒளி சாய்வாக செல்லும்போது அதன் பாதையில் விலகல் ஏற்படுகிறது.)
Incorrect
(குறிப்பு – நேரான எழுதுகோல் ஒன்றை, 45° கோணத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள முகவையுள் வைத்து பார்க்கும் போது எழுதுகோல் உடைந்தது போல தெரியும். காரணம், காற்று தண்ணீர்இடைமுகப்பில் ஒளிவிலகல் ஆகும். ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு ஒளி சாய்வாக செல்லும்போது அதன் பாதையில் விலகல் ஏற்படுகிறது.)
-
Question 42 of 52
42. Question
42) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. ஒளிபுகும் ஓர் ஊடகத்தின் இருந்து,மாறுபட்ட அடர்த்தி உடைய மற்றொரு ஒளிபுகும் ஊடககத்திற்கு ஒளி செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது.
II. அடர் குறை ஊடகத்தில் ஒளியின் திசை வேகம் அதிகமாக இருக்கும்.Correct
(குறிப்பு – ஒளிபுகும் ஓர் ஊடகத்தின் இருந்து,மாறுபட்ட அடர்த்தி உடைய மற்றொரு ஒளிபுகும் ஊடககத்திற்கு ஒளி செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது. இவ்விலகளுக்கு (பாதையின் திசையில் மாறுபாடு) ஒளியின் திசை வேகத்தில் ஏற்படும் மாறுபாடே காரணமாகும். ஒளியின் திசைவேகம் அது செல்லும் ஊடகத்தின் தன்மையை பொறுத்தே அமைகிறது. அடர் குறை ஊடகத்தில் (அதாவது குறைந்த ஒளியியல் அடர்த்தி) ஒளியின் திசை வேகம் அதிகமாகவும் அடர்மிகு ஊடகத்தில் (அதிக ஒளியியல் அடர்த்தி) திசை வேகம் குறைவாகவும் இருக்கும்.)
Incorrect
(குறிப்பு – ஒளிபுகும் ஓர் ஊடகத்தின் இருந்து,மாறுபட்ட அடர்த்தி உடைய மற்றொரு ஒளிபுகும் ஊடககத்திற்கு ஒளி செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது. இவ்விலகளுக்கு (பாதையின் திசையில் மாறுபாடு) ஒளியின் திசை வேகத்தில் ஏற்படும் மாறுபாடே காரணமாகும். ஒளியின் திசைவேகம் அது செல்லும் ஊடகத்தின் தன்மையை பொறுத்தே அமைகிறது. அடர் குறை ஊடகத்தில் (அதாவது குறைந்த ஒளியியல் அடர்த்தி) ஒளியின் திசை வேகம் அதிகமாகவும் அடர்மிகு ஊடகத்தில் (அதிக ஒளியியல் அடர்த்தி) திசை வேகம் குறைவாகவும் இருக்கும்.)
-
Question 43 of 52
43. Question
43) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தில் ஒரு ஒளிக் கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை நோக்கி விலகல் அடைகிறது.
II.அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு ஒரு ஒளிக்கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது.Correct
(குறிப்பு – அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தில் ஒரு ஒளிக் கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை நோக்கி விலகல் அடைகிறது. அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு ஒரு ஒளிக்கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது. அடர்மிகு ஊடகத்தின் பரப்பிற்கு குத்தாக அதன்மீது படும் ஒளிக்கதிர் விலகல் அடைவதில்லை.)
Incorrect
(குறிப்பு – அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தில் ஒரு ஒளிக் கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை நோக்கி விலகல் அடைகிறது. அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு ஒரு ஒளிக்கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது. அடர்மிகு ஊடகத்தின் பரப்பிற்கு குத்தாக அதன்மீது படும் ஒளிக்கதிர் விலகல் அடைவதில்லை.)
-
Question 44 of 52
44. Question
44) ஒளி விலகல் விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
(குறிப்பு – ஒளி விலகல் விதி ஸ்நெல் விதி என அழைக்கப்படுகிறது. விதி 1 : படுகதிர், விலகு கதிர், படு புள்ளியில் இரு ஒளி புகும் ஊடகங்களுக்கு இடையிலான தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன. விதி 2 : கொடுக்கப்பட்டுள்ள இரு ஊடகங்களுக்கு, குறிப்பிட்ட நிற ஒளியின் படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு மாறிலி. i என்பது படுகோணம், ர் என்பது விலகு கோணம் எனில், sin i / sin r = மாறிலி ஆகும்.)
Incorrect
(குறிப்பு – ஒளி விலகல் விதி ஸ்நெல் விதி என அழைக்கப்படுகிறது. விதி 1 : படுகதிர், விலகு கதிர், படு புள்ளியில் இரு ஒளி புகும் ஊடகங்களுக்கு இடையிலான தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன. விதி 2 : கொடுக்கப்பட்டுள்ள இரு ஊடகங்களுக்கு, குறிப்பிட்ட நிற ஒளியின் படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு மாறிலி. i என்பது படுகோணம், ர் என்பது விலகு கோணம் எனில், sin i / sin r = மாறிலி ஆகும்.)
-
Question 45 of 52
45. Question
45) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. மாறிலி என்பது முதல் ஊடகத்தை பொறுத்து இரண்டாவது ஊடகத்தின் ஒளி விலகல் எண் எனப்படும்.
II. மாறிலி ‘ μ ‘ என்னும், கிரேக்க எழுத்தால் குறிக்கப்படும்.Correct
(குறிப்பு – மாறிலி ‘ μ ‘ என்னும், கிரேக்க எழுத்தால் குறிக்கப்படும். மாறிலி என்பது முதல் ஊடகத்தை பொறுத்து இரண்டாவது ஊடகத்தின் ஒளி விலகல் எண் எனப்படும் ( அதாவது 1μ2 என்று குறிக்கப்படும்.) இதற்கு அலகு இல்லை. ஏனெனில் இது இரு ஒத்த அளவுகளின் தகவு ஆகும்.)
Incorrect
(குறிப்பு – மாறிலி ‘ μ ‘ என்னும், கிரேக்க எழுத்தால் குறிக்கப்படும். மாறிலி என்பது முதல் ஊடகத்தை பொறுத்து இரண்டாவது ஊடகத்தின் ஒளி விலகல் எண் எனப்படும் ( அதாவது 1μ2 என்று குறிக்கப்படும்.) இதற்கு அலகு இல்லை. ஏனெனில் இது இரு ஒத்த அளவுகளின் தகவு ஆகும்.)
-
Question 46 of 52
46. Question
46) கீழ்க்காணும் சமன்பாடுகளில் எது சரியானது?
Correct
(குறிப்பு – வெவ்வேறு ஊடகங்களில் செல்லும் ஒளியின் திசைவேகத்தை பொருத்தும் ஒளிவிலகல் எண்ணை நாம் வரையறுக்க முடியும்.
அதாவது, μ = வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் / ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்
பொதுவாகக் கூறினால்
μ = ஊடகம் 1இல் ஒளியின் திசைவேகம் / ஊடகம் 2இல் ஒளியின் திசைவேகம் )Incorrect
(குறிப்பு – வெவ்வேறு ஊடகங்களில் செல்லும் ஒளியின் திசைவேகத்தை பொருத்தும் ஒளிவிலகல் எண்ணை நாம் வரையறுக்க முடியும்.
அதாவது, μ = வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் / ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்
பொதுவாகக் கூறினால்
μ = ஊடகம் 1இல் ஒளியின் திசைவேகம் / ஊடகம் 2இல் ஒளியின் திசைவேகம் ) -
Question 47 of 52
47. Question
47) காற்றில் ஒலியின் திசைவேகம் 3 × 108 மீ/வி, கண்ணாடியில் 2 × 108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன?
Correct
(குறிப்பு – தீர்வு
μ = ஊடகம் 1இல் ஒளியின் திசைவேகம் / ஊடகம் 2இல் ஒளியின் திசைவேகம்
aμg = 3 × 108 / 2 × 108
aμg = 3 / 2
aμg = 1.5 ஆகும் )Incorrect
(குறிப்பு – தீர்வு
μ = ஊடகம் 1இல் ஒளியின் திசைவேகம் / ஊடகம் 2இல் ஒளியின் திசைவேகம்
aμg = 3 × 108 / 2 × 108
aμg = 3 / 2
aμg = 1.5 ஆகும் ) -
Question 48 of 52
48. Question
48) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளி செல்கிறது.படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 45° மற்றும் 30° ஆகும். எனில் முதல் ஊடகத்தை பொருத்து இரண்டாவது ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணை கணக்கீடுக.
Correct
(குறிப்பு – தீர்வு
1μ2 = sin i / sin r
1μ2 = sin 45° / sin 30°
1μ2 = (1√2) / (1/2)
1μ2 = √2
1μ2 = 1.414 )Incorrect
(குறிப்பு – தீர்வு
1μ2 = sin i / sin r
1μ2 = sin 45° / sin 30°
1μ2 = (1√2) / (1/2)
1μ2 = √2
1μ2 = 1.414 ) -
Question 49 of 52
49. Question
49) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்தை நோக்கி ஒளி செல்லும் போது, அது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது.
II. அடர்மிகு ஊடகத்தில் படுகோணம் அதிகரிக்கும் போது, அடர் குறை ஊடகத்தில் அதன் விலகு கோணம் அதிகரிக்கிறது.Correct
(குறிப்பு – அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்தை நோக்கி ஒளி செல்லும் போது, அது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது. அடர்மிகு ஊடகத்தில் படுகோணம் அதிகரிக்கும் போது, அடர் குறை ஊடகத்தில் அதன் விலகு கோணமும் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட படுகோணத்திற்கு விலகு கோணத்தின் மதிப்பு r = 90° என்ற பெருமை மதிப்பை அடைகிறது. இப்படுகோணமே மாறுநிலைக்கோணம் எனப்படும்.)
Incorrect
(குறிப்பு – அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்தை நோக்கி ஒளி செல்லும் போது, அது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது. அடர்மிகு ஊடகத்தில் படுகோணம் அதிகரிக்கும் போது, அடர் குறை ஊடகத்தில் அதன் விலகு கோணமும் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட படுகோணத்திற்கு விலகு கோணத்தின் மதிப்பு r = 90° என்ற பெருமை மதிப்பை அடைகிறது. இப்படுகோணமே மாறுநிலைக்கோணம் எனப்படும்.)
-
Question 50 of 52
50. Question
50) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. படு கோணத்தின் மதிப்பு, மாறு நிலை கோணத்தை விட அதிகமாக உள்ளபோது, விலகு கதிர் வெளியேறாது.
II. குறிப்பிட்ட படுகோணத்திற்கு விலகு கோணத்தின் மதிப்பு r = 90° என்ற பெருமை மதிப்பை அடையும்போது, இப்படுகோணமே மாறுநிலைக்கோணம் எனப்படும்.Correct
(குறிப்பு – படு கோணத்தின் மதிப்பு, மாறு நிலை கோணத்தை விட அதிகமாக உள்ளபோது, விலகு கதிர் வெளியேறாது. ஏனெனில் r = 90°. எனவே அதே ஊடகத்திலேயே ஒளி முழுவதுமாக எதிரொளிக்கப்படுகிறது. இதுவே முழு அக எதிரொளிப்பு ஆகும்.)
Incorrect
(குறிப்பு – படு கோணத்தின் மதிப்பு, மாறு நிலை கோணத்தை விட அதிகமாக உள்ளபோது, விலகு கதிர் வெளியேறாது. ஏனெனில் r = 90°. எனவே அதே ஊடகத்திலேயே ஒளி முழுவதுமாக எதிரொளிக்கப்படுகிறது. இதுவே முழு அக எதிரொளிப்பு ஆகும்.)
-
Question 51 of 52
51. Question
51) முழு அக எதிரொளிப்பிற்கான கீழ்க்காணும் நிபந்தனைகளுள் எது சரியானது?
I. ஒளியானது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு செல்ல வேண்டும்.
II. அடர் மிகு ஊடகத்தில் படு கோணத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்Correct
(குறிப்பு – முழு அக எதிரொளிப்பு ஏற்படுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் அவசியம். அவை ஒலியானது அடர் மிகு ஊடகத்தில் இருந்து (எ.கா தண்ணீர்) அடர் குறை ஊடகத்திற்கு (எ.கா காற்று) செல்ல வேண்டும். அடர்மிகு படுகோணத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.)
Incorrect
(குறிப்பு – முழு அக எதிரொளிப்பு ஏற்படுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் அவசியம். அவை ஒலியானது அடர் மிகு ஊடகத்தில் இருந்து (எ.கா தண்ணீர்) அடர் குறை ஊடகத்திற்கு (எ.கா காற்று) செல்ல வேண்டும். அடர்மிகு படுகோணத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.)
-
Question 52 of 52
52. Question
52) கீழ்கண்டவற்றுள் எது முழு அகஎதிரொளிப்பு ஆகும்?
I. கானல் நீர்
II. வைரம் ஜொலிப்பது
III. விண்மீன்கள் மின்னுவது.Correct
(குறிப்பு – சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் செல்லும்போது தொலைவில் தண்ணீர்த் திட்டுகள் தோன்றுவதை காணலாம்.இது ஒரு மாய தோற்றம் ஆகும். ஒளிக்கதிர் காற்றில் ஒளிவிலகல் அடைந்து குத்து கோட்டை விட்டு விலகல் அடைகிறது. மேலும் மாறுநிலை கோணத்தை விட படுகோணம் அதிகமாக இருப்பதால், முழு அக எதிரொலிப்பு அடைகிறது. எனவே கானல்நீர், வைரம் ஜொலிப்பது மற்றும் விண்மீன்கள் மின்னுவதற்கு காரணம் முழு அக எதிரொலிப்பே ஆகும்.)
Incorrect
(குறிப்பு – சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் செல்லும்போது தொலைவில் தண்ணீர்த் திட்டுகள் தோன்றுவதை காணலாம்.இது ஒரு மாய தோற்றம் ஆகும். ஒளிக்கதிர் காற்றில் ஒளிவிலகல் அடைந்து குத்து கோட்டை விட்டு விலகல் அடைகிறது. மேலும் மாறுநிலை கோணத்தை விட படுகோணம் அதிகமாக இருப்பதால், முழு அக எதிரொலிப்பு அடைகிறது. எனவே கானல்நீர், வைரம் ஜொலிப்பது மற்றும் விண்மீன்கள் மின்னுவதற்கு காரணம் முழு அக எதிரொலிப்பே ஆகும்.)
Leaderboard: ஒளி Online Test 9th Science Lesson 6 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
Sir 10th and 11th questions answers are wrong… kindly check that once…