ஒலி Online Test 9th Science Lesson 8 Questions in Tamil
ஒலி Online Test 9th Science Lesson 8 Questions in Tamil
Quiz-summary
0 of 52 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 52 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- Answered
- Review
- 
                        Question 1 of 521. Question1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒலியானது ஒரு வித ஆற்றல் ஆகும்.
 II. அனைத்து ஒலிகளும் பொருட்கள் அதிர்வடைவதால் உண்டாகிறது.Correct
 (குறிப்பு – ஒலியானது ஒருவித ஆற்றலாகும். அது நமது செவியை அடையும்போது உணர்வை ஏற்படுத்துகின்றது. அனைத்து ஒலிகளும் பொருட்கள் அதிர்வடைவதாலேயே உண்டாகின்றன. இந்த அதிர்வுகள் ஒரு ஊடகத்தின் வழியே ஆற்றலாக பரவி நம் செவியை அடைகின்றன.) Incorrect
 (குறிப்பு – ஒலியானது ஒருவித ஆற்றலாகும். அது நமது செவியை அடையும்போது உணர்வை ஏற்படுத்துகின்றது. அனைத்து ஒலிகளும் பொருட்கள் அதிர்வடைவதாலேயே உண்டாகின்றன. இந்த அதிர்வுகள் ஒரு ஊடகத்தின் வழியே ஆற்றலாக பரவி நம் செவியை அடைகின்றன.) 
- 
                        Question 2 of 522. Question2) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. மனிதர்களால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் நெடுக்கம் மற்றும் ஆற்றல் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்டுணர முடியும்.
 II. ஒலியின் சுரப்பண்பும் (quality) ஒவ்வொரு ஒலிக்கும் வெவ்வேறாக இருக்கும்.Correct
 (குறிப்பு – மனிதனின் செவிகளால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் நெடுக்கம் மற்றும் ஆற்றல் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்டு உணர முடியும். ஒலியின் செறிவானது ஒரு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருந்தால் அந்த ஒலியை நம் செவிகள் கேட்க இயலாது. ஒலியின் சுரப்பண்பும் (quality) ஒவ்வொரு ஒலிக்கும் வெவ்வேறாக இருக்கும்.) Incorrect
 (குறிப்பு – மனிதனின் செவிகளால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் நெடுக்கம் மற்றும் ஆற்றல் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்டு உணர முடியும். ஒலியின் செறிவானது ஒரு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருந்தால் அந்த ஒலியை நம் செவிகள் கேட்க இயலாது. ஒலியின் சுரப்பண்பும் (quality) ஒவ்வொரு ஒலிக்கும் வெவ்வேறாக இருக்கும்.) 
- 
                        Question 3 of 523. Question3) ஒலி அலைகள் கீழ்காணும் எவற்றின் மூலம் பரவும்? 
 I. காற்று
 II. நீர்
 III. எஃகுCorrect
 (குறிப்பு – ஒலி அலைகள் பரவுவதற்கு காற்று, நீர், எஃகு போன்ற பொருள்கள் தேவை. ஒளி அலைகள் வெற்றிடத்தில் பரவ முடியாது. இதனை மணிச்சாடி போதனை மூலம் விளக்க முடியும்.) Incorrect
 (குறிப்பு – ஒலி அலைகள் பரவுவதற்கு காற்று, நீர், எஃகு போன்ற பொருள்கள் தேவை. ஒளி அலைகள் வெற்றிடத்தில் பரவ முடியாது. இதனை மணிச்சாடி போதனை மூலம் விளக்க முடியும்.) 
- 
                        Question 4 of 524. Question4) மணிச்சாடி கீழ்க்கண்டவற்றுள் எதனை கொண்டிருக்கும்? 
 I. நூல்
 II. மின்சார மணி
 III. வெற்றிடமாக்கும் பம்பு
 IV. தக்கைCorrect
 (குறிப்பு – ஒரு மின்சார மணி மற்றும் ஒரு மணிச்சாடியை எடுத்துக் கொள்வோம். மின்சார மணியானது காற்றுப்புகாத மணிச்சாடியினுள் பொருத்தப்பட்டுள்ளது. மணியை ஒலிக்க செய்யும் போது நாம் ஒலியைக் கேட்க முடியும். வெற்றிடமாக்கும் பம்பின் மூலம் ஜாடியில் உள்ள காற்றை சிறிது சிறிதாக வெளியேற்றும் போது, ஒலியின் அளவு சிறிது சிறிதாகக் குறைகிறது. இது வெற்றிடத்தில் ஒலி பரவாது என்பதை காட்டுகிறது.) Incorrect
 (குறிப்பு – ஒரு மின்சார மணி மற்றும் ஒரு மணிச்சாடியை எடுத்துக் கொள்வோம். மின்சார மணியானது காற்றுப்புகாத மணிச்சாடியினுள் பொருத்தப்பட்டுள்ளது. மணியை ஒலிக்க செய்யும் போது நாம் ஒலியைக் கேட்க முடியும். வெற்றிடமாக்கும் பம்பின் மூலம் ஜாடியில் உள்ள காற்றை சிறிது சிறிதாக வெளியேற்றும் போது, ஒலியின் அளவு சிறிது சிறிதாகக் குறைகிறது. இது வெற்றிடத்தில் ஒலி பரவாது என்பதை காட்டுகிறது.) 
- 
                        Question 5 of 525. Question5) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒலியானது ஒலி மூலத்திலிருந்து ஒரு ஊடகத்தின் வழியே கேட்பவரின் செவியை சென்றடைகிறது.
 II. பொருள் அதிர்வடையும்போது, அது அதனை சுற்றியுள்ள ஊடகத்தின் துகள்களையும் அதிர்வடைய செய்கிறது.
 III. எனினும் ஊடகத்தின் துகள்கள் இடம்பெயர்வதில்லை.Correct
 (குறிப்பு – ஒலியானது ஒலி மூலத்திலிருந்து ஒரு ஊடகத்தின் வழியே கேட்பவரின் செவியை சென்றடைகிறது. பொருள் அதிர்வடையும்போது, அது அதனை சுற்றியுள்ள ஊடகத்தின் துகள்களையும் அதிர்வடைய செய்கிறது. எனினும் ஊடகத்தின் துகள்கள் இடம்பெயர்வதில்லை. ஒலி மூலத்திலிருந்து அதன் பாதிப்பு மட்டுமே இலக்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.) Incorrect
 (குறிப்பு – ஒலியானது ஒலி மூலத்திலிருந்து ஒரு ஊடகத்தின் வழியே கேட்பவரின் செவியை சென்றடைகிறது. பொருள் அதிர்வடையும்போது, அது அதனை சுற்றியுள்ள ஊடகத்தின் துகள்களையும் அதிர்வடைய செய்கிறது. எனினும் ஊடகத்தின் துகள்கள் இடம்பெயர்வதில்லை. ஒலி மூலத்திலிருந்து அதன் பாதிப்பு மட்டுமே இலக்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.) 
- 
                        Question 6 of 526. Question6) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. பொருள் ஒன்று அதிர்வடையும் போது, அந்த பொருளிற்கு அருகிலுள்ள துகளானது தனது சமநிலை புள்ளியிலிருந்து விலக்கப்படுகிறது. இத்துகள் அருகிலுள்ள துகள் மீது ஒரு விசையை செலுத்தி, அதன் காரணமாக அருகில் உள்ள துகள் தனது ஓய்வு நிலையில் இருந்து நகர்ந்து செல்கிறது.
 II. அருகிலுள்ள துகளை இடப்பெயர்ச்சி அடையச் செய்த பின்னர் முதல் தனது பழைய நிலையை வந்தடையும். ஒலியானது நமது செவியை அடையும் வரை இந்த நிகழ்வானது தொடர்ந்து நடைபெறும்.Correct
 (குறிப்பு – பொருள் ஒன்று அதிர்வடையும் போது, அந்த பொருளிற்கு அருகிலுள்ள துகளானது தனது சமநிலை புள்ளியிலிருந்து விலக்கப்படுகிறது. இத்துகள் அருகிலுள்ள துகள் மீது ஒரு விசையை செலுத்தி, அதன் காரணமாக அருகில் உள்ள துகள் தனது ஓய்வு நிலையில் இருந்து நகர்ந்து செல்கிறது. அருகிலுள்ள துகளை இடப்பெயர்ச்சி அடையச் செய்த பின்னர் முதல் தனது பழைய நிலையை வந்தடையும். ஒலியானது நமது செவியை அடையும் வரை இந்த நிகழ்வானது தொடர்ந்து நடைபெறும். எனவே ஒலி மூலத்தினால் உருவாகும் பாதிப்பு மட்டுமே செல்கிறது. ஆனால் துகள்கள் அதே நிலையில்தான் இருக்கிறது.) Incorrect
 (குறிப்பு – பொருள் ஒன்று அதிர்வடையும் போது, அந்த பொருளிற்கு அருகிலுள்ள துகளானது தனது சமநிலை புள்ளியிலிருந்து விலக்கப்படுகிறது. இத்துகள் அருகிலுள்ள துகள் மீது ஒரு விசையை செலுத்தி, அதன் காரணமாக அருகில் உள்ள துகள் தனது ஓய்வு நிலையில் இருந்து நகர்ந்து செல்கிறது. அருகிலுள்ள துகளை இடப்பெயர்ச்சி அடையச் செய்த பின்னர் முதல் தனது பழைய நிலையை வந்தடையும். ஒலியானது நமது செவியை அடையும் வரை இந்த நிகழ்வானது தொடர்ந்து நடைபெறும். எனவே ஒலி மூலத்தினால் உருவாகும் பாதிப்பு மட்டுமே செல்கிறது. ஆனால் துகள்கள் அதே நிலையில்தான் இருக்கிறது.) 
- 
                        Question 7 of 527. Question7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஊடகத்தில் உள்ள அனைத்து துகள்களும் தங்களது சமநிலை புள்ளியிலிருந்து அதிர்வு எனப்படும் முன்னும் பின்னுமான இயக்கத்தை மேற்கொள்ளும்.
 II. அதிர்வானது முன்னோக்கி செல்லும்.Correct
 (குறிப்பு – ஊடகத்தில் உள்ள அனைத்து துகள்களும் தங்களது சமநிலை புள்ளியிலிருந்து அதிர்வு எனப்படும் முன்னும் பின்னுமான இயக்கத்தை மேற்கொள்ளும். இதனால் அதிர்வானது முன்னோக்கி செல்கின்றது. முன்னோக்கி செல்லும் அதிர்வு அலை என அழைக்கப்படுகிறது.) Incorrect
 (குறிப்பு – ஊடகத்தில் உள்ள அனைத்து துகள்களும் தங்களது சமநிலை புள்ளியிலிருந்து அதிர்வு எனப்படும் முன்னும் பின்னுமான இயக்கத்தை மேற்கொள்ளும். இதனால் அதிர்வானது முன்னோக்கி செல்கின்றது. முன்னோக்கி செல்லும் அதிர்வு அலை என அழைக்கப்படுகிறது.) 
- 
                        Question 8 of 528. Question8) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. நெருக்கமும், நெகிழ்ச்சியுமாக செல்லும் அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன.
 II. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுன்றன.Correct
 (குறிப்பு – ஒரு கம்பி சுருளின் சில பகுதிகளில் சுருள்கள் நெருக்கமாகவும், சில பகுதிகளில் நெகிழ்ச்சியாகவும் இருப்பதை காணமுடியும். கம்பிச்சுருள் அதிர்வுறும்போது நெருக்கமும், நெகிழ்வும் கம்பிகளின் வழியே நகர்ந்து செல்லும். இவ்வாறு நெருக்கமும், நெகிழ்ச்சியுமாக செல்லும் அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுன்றன) Incorrect
 (குறிப்பு – ஒரு கம்பி சுருளின் சில பகுதிகளில் சுருள்கள் நெருக்கமாகவும், சில பகுதிகளில் நெகிழ்ச்சியாகவும் இருப்பதை காணமுடியும். கம்பிச்சுருள் அதிர்வுறும்போது நெருக்கமும், நெகிழ்வும் கம்பிகளின் வழியே நகர்ந்து செல்லும். இவ்வாறு நெருக்கமும், நெகிழ்ச்சியுமாக செல்லும் அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுன்றன) 
- 
                        Question 9 of 529. Question9) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒலி என்பது ஒரு நெட்டலையாகும்
 II. ஊடகத்தில் உள்ள துகள்கள் நெருக்கமும் நெகிழ்ச்சியும் அடையும் போது அதன் வழியே ஒலி அலைகள் செல்ல முடிகிறது.Correct
 (குறிப்பு – நெருக்கமும், நெகிழ்ச்சியுமாக செல்லும் அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுன்றன. ஒலி என்பது ஒரு நெட்டலையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள் நெருக்கமும், நெகிழ்ச்சியும் அடையும் போதுதான் அதன் வழியே ஒலி அலைகள் செல்ல முடியும். நெடுக்கும் என்பது துகள்கள் அருகருகே இருக்கும் பகுதியாகும். நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதியாகும்.) Incorrect
 (குறிப்பு – நெருக்கமும், நெகிழ்ச்சியுமாக செல்லும் அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுன்றன. ஒலி என்பது ஒரு நெட்டலையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள் நெருக்கமும், நெகிழ்ச்சியும் அடையும் போதுதான் அதன் வழியே ஒலி அலைகள் செல்ல முடியும். நெடுக்கும் என்பது துகள்கள் அருகருகே இருக்கும் பகுதியாகும். நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதியாகும்.) 
- 
                        Question 10 of 5210. Question10) ஒரு ஒலியலையை முழுமையாக வரையறுக்க கீழ்க்கண்டவற்றுள் எவை தேவை? 
 I. வீச்சு
 II. அதிர்வெண்
 III. அலைவுக்காலம்.
 IV. அலைநீளம்Correct
 (குறிப்பு – வீச்சு, அதிர்வெண், அலைவுக்காலம், அலைநீளம் மற்றும் வேகம் அல்லது திசைவேகம் ஆகிய பண்புகளைக் கொண்டு ஒரு ஒலி அலையை முழுமையாக வரையறுக்க முடியும்.) Incorrect
 (குறிப்பு – வீச்சு, அதிர்வெண், அலைவுக்காலம், அலைநீளம் மற்றும் வேகம் அல்லது திசைவேகம் ஆகிய பண்புகளைக் கொண்டு ஒரு ஒலி அலையை முழுமையாக வரையறுக்க முடியும்.) 
- 
                        Question 11 of 5211. Question11) வீச்சு என்பதன் பொருள் கீழ்க்கண்டவற்றுள் எது? 
 I. ஒலி அலையானது, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி, வீச்சு எனப்படும்.
 II. வீச்சு அதிகமாக இருந்தால், ஒலி உரத்த ஒலியாகவும், வீச்சு குறைவாக இருந்தால் மென்மையான ஒலியாகவும் இருக்கும்.Correct
 (குறிப்பு – ஒலி அலையானது, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி, வீச்சு எனப்படும். வீச்சு அதிகமாக இருந்தால், ஒலி உரத்த ஒலியாகவும், வீச்சு குறைவாக இருந்தால் மென்மையான ஒலியாகவும் இருக்கும். வீச்சின் SI அலகு மீட்டர் ( மீ ) ஆகும்.) Incorrect
 (குறிப்பு – ஒலி அலையானது, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி, வீச்சு எனப்படும். வீச்சு அதிகமாக இருந்தால், ஒலி உரத்த ஒலியாகவும், வீச்சு குறைவாக இருந்தால் மென்மையான ஒலியாகவும் இருக்கும். வீச்சின் SI அலகு மீட்டர் ( மீ ) ஆகும்.) 
- 
                        Question 12 of 5212. Question12) வீச்சு, எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது? Correct
 (குறிப்பு – ஒலி அலையானது, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி, வீச்சு எனப்படும். வீச்சானது ‘A’ என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. இதன் SI அலகு மீட்டர் (மீ) ஆகும்.) Incorrect
 (குறிப்பு – ஒலி அலையானது, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி, வீச்சு எனப்படும். வீச்சானது ‘A’ என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. இதன் SI அலகு மீட்டர் (மீ) ஆகும்.) 
- 
                        Question 13 of 5213. Question13) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. அதிர்வு அடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது, அதிர்வெண் என அழைக்கப்படுகிறது.
 II. அதிவெண்ணானது ‘t’ என்னும் எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.Correct
 (குறிப்பு – அதிர்வு அடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது, அதிர்வெண் என அழைக்கப்படுகிறது. அதிவெண்ணானது ‘n’ என்னும் எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. அதிர்வெண்ணின் SI அலகு ஹெர்ட்ஸ் (Hz) அல்லது செ-1 ஆகும்.) Incorrect
 (குறிப்பு – அதிர்வு அடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது, அதிர்வெண் என அழைக்கப்படுகிறது. அதிவெண்ணானது ‘n’ என்னும் எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. அதிர்வெண்ணின் SI அலகு ஹெர்ட்ஸ் (Hz) அல்லது செ-1 ஆகும்.) 
- 
                        Question 14 of 5214. Question14) மனிதனின் செவிகள் எந்த அதிர்வெண்கள் கொண்ட ஒலி அலைகளை மட்டும் கேட்டுணரமுடியும்? Correct
 (குறிப்பு – 20 Hz முதல் 20,000 Hz வரையிலான அதிர்வெண்கள் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே மனிதனின் செவிகள் கேட்டுணர முடியும். 20 Hz க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகள் குற்றொலிகள் எனப்படும். அதிர்வெண் 20,000 Hz க்கு அதிகமான ஒலி, மிகை ஒலி அல்லது மீயோலி எனப்படும்.) Incorrect
 (குறிப்பு – 20 Hz முதல் 20,000 Hz வரையிலான அதிர்வெண்கள் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே மனிதனின் செவிகள் கேட்டுணர முடியும். 20 Hz க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகள் குற்றொலிகள் எனப்படும். அதிர்வெண் 20,000 Hz க்கு அதிகமான ஒலி, மிகை ஒலி அல்லது மீயோலி எனப்படும்.) 
- 
                        Question 15 of 5215. Question15) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. அலைவுக்காலத்தின் SI அலகு வினாடி ஆகும்.
 II. அலைவுக்காலம் மற்றும் அதிர்வெண் ஆகியவை ஒன்றுக்கொன்று எதிர் விகிதத்தில் உள்ளன.Correct
 (குறிப்பு – அதிர்வுறும் துகள், ஒரு முழுமையான அதிர்வுக்கு எடுத்துக்கொள்ளும் காலம், அலைவுக்காலம் எனப்படும். இது ‘T’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. இதன் SI அலகு, வினாடி ஆகும். அலைவுக்காலம் மற்றும் அதிர்வெண் ஆகியவை ஒன்றுக்கொன்று எதிர் விகிதத்தில் உள்ளன.) Incorrect
 (குறிப்பு – அதிர்வுறும் துகள், ஒரு முழுமையான அதிர்வுக்கு எடுத்துக்கொள்ளும் காலம், அலைவுக்காலம் எனப்படும். இது ‘T’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. இதன் SI அலகு, வினாடி ஆகும். அலைவுக்காலம் மற்றும் அதிர்வெண் ஆகியவை ஒன்றுக்கொன்று எதிர் விகிதத்தில் உள்ளன.) 
- 
                        Question 16 of 5216. Question16) அலைநீளம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. இது λ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது.
 II. அலைநீளத்தின் SI அலகு மீட்டர் (மீ) ஆகும்.Correct
 (குறிப்பு – அதிர்வுறும் துகளொன்று, ஒரு அதிர்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் ஊடகத்தில் அலை பரவும் தொலைவு அலைநீளம் எனப்படும். ஒரு ஒலி அலையில் இரண்டு நெருக்கங்கள் மற்றும் நெகிழ்வுகளின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவே ஒரு அலைநீளம் எனப்படும். அலைநீளமானது, λ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது.) Incorrect
 (குறிப்பு – அதிர்வுறும் துகளொன்று, ஒரு அதிர்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் ஊடகத்தில் அலை பரவும் தொலைவு அலைநீளம் எனப்படும். ஒரு ஒலி அலையில் இரண்டு நெருக்கங்கள் மற்றும் நெகிழ்வுகளின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவே ஒரு அலைநீளம் எனப்படும். அலைநீளமானது, λ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது.) 
- 
                        Question 17 of 5217. Question17) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு திசைவேகம் அல்லது வேகம் எனப்படும்.
 II. ஒலியின் திசைவேகம் அல்லது வேகம் ‘V’ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது.Correct
 (குறிப்பு – ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு திசைவேகம் அல்லது வேகம் எனப்படும். ஒலியின் திசைவேகம் அல்லது வேகம் ‘V’ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. இதன் SI அலகு மீ வி-1 ஆகும்.) Incorrect
 (குறிப்பு – ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு திசைவேகம் அல்லது வேகம் எனப்படும். ஒலியின் திசைவேகம் அல்லது வேகம் ‘V’ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. இதன் SI அலகு மீ வி-1 ஆகும்.) 
- 
                        Question 18 of 5218. Question18) ஒலியை கீழ்காணும் எந்த காரணியை கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றாக வேறுபடுத்த முடியும்? 
 I. ஒலி உரப்பு மற்றும் ஒலி செறிவு
 II. சுருதி
 III. தரம்Correct
 (குறிப்பு – ஒலிகளை பின்வரும் காரணிகளைக் கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றாக வேறுபடுத்த முடியும். அவை, ஒலி உரப்பு மற்றும் ஒலி செறிவு, சுருதி மற்றும் தரம் என்பனவாகும்.) Incorrect
 (குறிப்பு – ஒலிகளை பின்வரும் காரணிகளைக் கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றாக வேறுபடுத்த முடியும். அவை, ஒலி உரப்பு மற்றும் ஒலி செறிவு, சுருதி மற்றும் தரம் என்பனவாகும்.) 
- 
                        Question 19 of 5219. Question19) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒலியின் உரப்பு பண்பானது அதன் செறிவை சார்ந்து இருக்கிறது
 II. ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் வழியே அலை பரவும் திசைக்கு செங்குத்தாக செல்லும் ஆற்றலின் அளவு செறிவு என வரையறுக்கப்படுகிறது.Correct
 (குறிப்பு – ஒலியின் உரப்பு பண்பானது அதன் செறிவை சார்ந்து இருக்கிறது. ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் வழியே அலை பரவும் திசைக்கு செங்குத்தாக செல்லும் ஆற்றலின் அளவு செறிவு என வரையறுக்கப்படுகிறது. ஒலியின் செறிவானது டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது.) Incorrect
 (குறிப்பு – ஒலியின் உரப்பு பண்பானது அதன் செறிவை சார்ந்து இருக்கிறது. ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் வழியே அலை பரவும் திசைக்கு செங்குத்தாக செல்லும் ஆற்றலின் அளவு செறிவு என வரையறுக்கப்படுகிறது. ஒலியின் செறிவானது டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது.) 
- 
                        Question 20 of 5220. Question20) ஒலியின் செறிவானது கீழ்காணும் எந்த காரணிகளை சார்ந்துள்ளது? 
 I. ஒலி மூலத்தின் வீச்சு
 II. ஒலி மூலத்திற்கும் கேட்பவருக்கும் இடையே உள்ள தொலைவு
 III. ஒலி மூலத்தின் மரபு
 IV. ஊடகத்தின் அடர்த்திCorrect
 (குறிப்பு – ஓரிடத்தில் கேட்கும் ஒலியின் செறிவானது பின்வரும் காரணிகளை சார்ந்துள்ளது. அவை, ஒலி மூலத்தின் வீச்சு, ஒலி மூலத்திற்கும் கேட்பவருக்கும் இடையே உள்ள தொலைவு, ஒலி மூலத்தின் பரப்பு, ஊடகத்தின் அடர்த்தி மற்றும் ஒலிமூலத்தின் அதிர்வெண் என்பன ஆகும்.) Incorrect
 (குறிப்பு – ஓரிடத்தில் கேட்கும் ஒலியின் செறிவானது பின்வரும் காரணிகளை சார்ந்துள்ளது. அவை, ஒலி மூலத்தின் வீச்சு, ஒலி மூலத்திற்கும் கேட்பவருக்கும் இடையே உள்ள தொலைவு, ஒலி மூலத்தின் பரப்பு, ஊடகத்தின் அடர்த்தி மற்றும் ஒலிமூலத்தின் அதிர்வெண் என்பன ஆகும்.) 
- 
                        Question 21 of 5221. Question21) யாருடைய நினைவாக ஒலியின் செறிவானது டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது? Correct
 (குறிப்பு – தொலைப்பேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் ஆவார். அவருடைய நினைவாக ஒலியின் செறிவானது டெசிபெல் (dB) என்ற அலகால் அளவிடப்படுகிறது.) Incorrect
 (குறிப்பு – தொலைப்பேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் ஆவார். அவருடைய நினைவாக ஒலியின் செறிவானது டெசிபெல் (dB) என்ற அலகால் அளவிடப்படுகிறது.) 
- 
                        Question 22 of 5222. Question22) பொருத்துக 
 I. ராக்கெட் ஏவுதல் – a) 60 dB
 II. உரையாடல் – b) 180 dB
 III. கொதிகலன் தொழிற்சாலை – c) 140 dB
 IV. ஜெட் விமானம் புறப்படும் ஒலி – d) 100 dBCorrect
 (குறிப்பு – ஒலியின் செறிவானது 120 dB விட அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்தும். இலை சருகின் சப்தம் 10dB ஆகும். அமைதியான அறை 20dB கொண்டிருக்கும். மெதுவாக பேசுதல் 30dB அளவில் இருக்கும். ராக்கெட் ஏவுதல் 180dB இருக்கும்.) Incorrect
 (குறிப்பு – ஒலியின் செறிவானது 120 dB விட அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்தும். இலை சருகின் சப்தம் 10dB ஆகும். அமைதியான அறை 20dB கொண்டிருக்கும். மெதுவாக பேசுதல் 30dB அளவில் இருக்கும். ராக்கெட் ஏவுதல் 180dB இருக்கும்.) 
- 
                        Question 23 of 5223. Question23) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. சுருதி என்பது ஒலியானது கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை அறிய உதவும் ஒலியின் பண்பாகும்.
 II. அதிக சுருதி கொண்ட ஒலிகள் கீச்சலாகவும் குறைந்த சுருதி கொண்ட ஒலிகள் கனத்ததாகவும் இருக்கும்.Correct
 (குறிப்பு – சுருதி என்பது ஒலியானது கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை அறிய உதவும் ஒலியின் பண்பாகும். அதிக சுருதி கொண்ட ஒலிகள் கீச்சலாகவும் குறைந்த சுருதி கொண்ட ஒலிகள் கனத்ததாகவும் இருக்கும். இரண்டு இசைக் கருவிகளால் எழுப்பப்படும் ஒரே வீச்சை இந்த இரண்டு ஒலிகள் வேறுபட்ட அதிர்வெண்களை கொண்டிருந்தால், அவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.) Incorrect
 (குறிப்பு – சுருதி என்பது ஒலியானது கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை அறிய உதவும் ஒலியின் பண்பாகும். அதிக சுருதி கொண்ட ஒலிகள் கீச்சலாகவும் குறைந்த சுருதி கொண்ட ஒலிகள் கனத்ததாகவும் இருக்கும். இரண்டு இசைக் கருவிகளால் எழுப்பப்படும் ஒரே வீச்சை இந்த இரண்டு ஒலிகள் வேறுபட்ட அதிர்வெண்களை கொண்டிருந்தால், அவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.) 
- 
                        Question 24 of 5224. Question24) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. இரண்டு வெவ்வேறு இசைக் கருவிகளால் எழுப்பப்பட்ட ஒரே மாதிரியான உரப்பு மற்றும் சுருதியை கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்துவதற்கு தரம் என்ற பண்பு பயன்படுகிறது.
 II. ஒரே ஒரு அதிர்வெண்ணை கொண்ட ஒலி, தொனி (tone) என்று அழைக்கப்படுகிறது.Correct
 (குறிப்பு – இரண்டு வெவ்வேறு இசைக் கருவிகளால் எழுப்பப்பட்ட ஒரே மாதிரியான உரப்பு மற்றும் சுருதியை கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்துவதற்கு தரம் என்ற பண்பு பயன்படுகிறது. ஒரே ஒரு அதிர்வெண்ணை கொண்ட ஒலி, தொனி (tone) என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு தொனிகளின் தொகுப்பு இசைக்குறிப்பு (Note) என்று அழைக்கப்படுகிறது. தொனி என்பதன் வேறு பெயர் சுரம் (Timre) என்பதாகும்.) Incorrect
 (குறிப்பு – இரண்டு வெவ்வேறு இசைக் கருவிகளால் எழுப்பப்பட்ட ஒரே மாதிரியான உரப்பு மற்றும் சுருதியை கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்துவதற்கு தரம் என்ற பண்பு பயன்படுகிறது. ஒரே ஒரு அதிர்வெண்ணை கொண்ட ஒலி, தொனி (tone) என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு தொனிகளின் தொகுப்பு இசைக்குறிப்பு (Note) என்று அழைக்கப்படுகிறது. தொனி என்பதன் வேறு பெயர் சுரம் (Timre) என்பதாகும்.) 
- 
                        Question 25 of 5225. Question25) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. மீட்சித்தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் பொழுது, ஒலியானது ஓரளவு காலத்தில் கடந்த தொலைவே ஒலியின் வேகம் என்று அழைக்கப்படுகிறது
 II. ஒலியின் வேகம் = λ / T என்று வழங்கப்படுகிறது.Correct
 (குறிப்பு – மீட்சித்தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் பொழுது, ஒலியானது ஓரளவு காலத்தில் கடந்த தொலைவே ஒலியின் வேகம் என்று அழைக்கப்படுகிறது. 
 வேகம் (v) = ஒரு அலைநீளம் (λ) / ஒரு அலைவுகாலம் (T).
 வேகம் (v) = λ / T [ T = 1 / n ]
 வேகம் (v) = n λ. )Incorrect
 (குறிப்பு – மீட்சித்தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் பொழுது, ஒலியானது ஓரளவு காலத்தில் கடந்த தொலைவே ஒலியின் வேகம் என்று அழைக்கப்படுகிறது. 
 வேகம் (v) = ஒரு அலைநீளம் (λ) / ஒரு அலைவுகாலம் (T).
 வேகம் (v) = λ / T [ T = 1 / n ]
 வேகம் (v) = n λ. )
- 
                        Question 26 of 5226. Question26) ஒரு ஒலி அலையின் அதிர்வெண் 2 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் அலைநீளம் 5 செமீ எனில் 1.5 கிமீ தூரத்தை கடக்க, அது எடுத்து கொள்ளும் காலம் என்ன? Correct
 (குறிப்பு – வேகம் = n λ 
 n = 2000 ஹெர்ட்ஸ், λ = 0.15 மீ
 v = 0.15 × 2000 = 300 மீ செ-1
 வேகம் (v) = 1500 / 300 = 5 வி )Incorrect
 (குறிப்பு – வேகம் = n λ 
 n = 2000 ஹெர்ட்ஸ், λ = 0.15 மீ
 v = 0.15 × 2000 = 300 மீ செ-1
 வேகம் (v) = 1500 / 300 = 5 வி )
- 
                        Question 27 of 5227. Question27) 20°C வெப்பநிலையில் 22 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒலியின் அலைநீளம் என்ன? Correct
 (குறிப்பு – λ = v / n 
 இங்கே, v = 344 ms-1
 n = 22 Mhz = 22 × 106 Hz
 λ = 344 / 22 × 106
 λ = 15.64 × 10-6 m
 λ = 15.64 μm.]Incorrect
 (குறிப்பு – λ = v / n 
 இங்கே, v = 344 ms-1
 n = 22 Mhz = 22 × 106 Hz
 λ = 344 / 22 × 106
 λ = 15.64 × 10-6 m
 λ = 15.64 μm.]
- 
                        Question 28 of 5228. Question28) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒலியானது ஒரு ஊடகத்தின் வழியே ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பரவுகிறது.
 II. வானத்தில் இடி இடிக்கும் போது முதலில் மின்னலை காண்கிறோம், பின்னர் இடி ஒலியை கேட்கிறோம்Correct
 (குறிப்பு – ஒலியானது ஒரு ஊடகத்தின் வழியே ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பரவுகிறது. வானத்தில் இடி இடிக்கும் போது முதலில் மின்னலை காண்கிறோம், பின்னர் இடி ஒலியை கேட்கிறோம். ஆகவே ஒலியானது ஒளியைவிட மிக குறைவான வேகத்திலேயே செல்கிறது என்பதை நாம் அறியமுடிகிறது.) Incorrect
 (குறிப்பு – ஒலியானது ஒரு ஊடகத்தின் வழியே ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பரவுகிறது. வானத்தில் இடி இடிக்கும் போது முதலில் மின்னலை காண்கிறோம், பின்னர் இடி ஒலியை கேட்கிறோம். ஆகவே ஒலியானது ஒளியைவிட மிக குறைவான வேகத்திலேயே செல்கிறது என்பதை நாம் அறியமுடிகிறது.) 
- 
                        Question 29 of 5229. Question29) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒலியின் வேகமானது, திடப்பொருளைவிட வாயுவில் மிக குறைவாக இருக்கும்.
 II. எந்த ஒரு ஊடகத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலியின் வேகமும் அதிகரிக்கும்.Correct
 (குறிப்பு – ஒலியின் வேகமானது, திடப்பொருளைவிட வாயுவில் மிக குறைவாக இருக்கும். எந்த ஒரு ஊடகத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலியின் வேகமும் அதிகரிக்கும். உதாரணமாக, காற்றில் 0°C வெப்பநிலையில் ஒலியின் வேகம் 330 மீ வி-1 ஆகும்.) Incorrect
 (குறிப்பு – ஒலியின் வேகமானது, திடப்பொருளைவிட வாயுவில் மிக குறைவாக இருக்கும். எந்த ஒரு ஊடகத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலியின் வேகமும் அதிகரிக்கும். உதாரணமாக, காற்றில் 0°C வெப்பநிலையில் ஒலியின் வேகம் 330 மீ வி-1 ஆகும்.) 
- 
                        Question 30 of 5230. Question30) 25°C வெப்பநிலையில் ஊடகத்தின் வேகத்தை பொருத்துக. 
 I. அலுமினியம் – a) 6040 மீவி-1
 II. நிக்கல் – b) 6420 மீவி-1
 III. எஃகு – c) 5950 மீவி-1
 IV. இரும்பு – d) 5960 மீவி-1Correct
 (குறிப்பு – திடப்பொருள்களான அலுமினியம், நிக்கல், எஃகு, இரும்பு, பித்தளை, கண்ணாடி போன்றவற்றின் வேகம் முறையே 6420 மீவி-1, 6040 மீவி-1, 5960 மீவி-1, 5950 மீவி-1, 4700 மீவி-1 மற்றும் 3980 மீவி-1 ஆகும்.) Incorrect
 (குறிப்பு – திடப்பொருள்களான அலுமினியம், நிக்கல், எஃகு, இரும்பு, பித்தளை, கண்ணாடி போன்றவற்றின் வேகம் முறையே 6420 மீவி-1, 6040 மீவி-1, 5960 மீவி-1, 5950 மீவி-1, 4700 மீவி-1 மற்றும் 3980 மீவி-1 ஆகும்.) 
- 
                        Question 31 of 5231. Question31) ஒலியானது காற்றைவிட __________ மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும். Correct
 (குறிப்பு – ஒலியானது காற்றைவிட ஐந்து மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும். கடல் நீரில் ஒலியின் வேகம் மிக அதிகமாக (அதாவது 5500 கிமீ / மணி) இருப்பதால், கடல் நீருக்குள் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று எளிதில் பேசிக்கொள்ள முடியும்.) Incorrect
 (குறிப்பு – ஒலியானது காற்றைவிட ஐந்து மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும். கடல் நீரில் ஒலியின் வேகம் மிக அதிகமாக (அதாவது 5500 கிமீ / மணி) இருப்பதால், கடல் நீருக்குள் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று எளிதில் பேசிக்கொள்ள முடியும்.) 
- 
                        Question 32 of 5232. Question32) காற்றில் ஒலியின் வேகம்? Correct
 (குறிப்பு – ஒரு பொருளின் வேகமானது, காற்றில் ஒலியின் வேகத்தைவிட (300 மீவி-1 )அகிகமாகும் போது அது மீயொலி வேகத்தில் செல்கிறது. துப்பாக்கி குண்டு, ஜெட் விமானம், ஆகாய விமானங்கள் போன்றவை மீயொலி வேகத்தில் செல்பவையாகும்.) Incorrect
 (குறிப்பு – ஒரு பொருளின் வேகமானது, காற்றில் ஒலியின் வேகத்தைவிட (300 மீவி-1 )அகிகமாகும் போது அது மீயொலி வேகத்தில் செல்கிறது. துப்பாக்கி குண்டு, ஜெட் விமானம், ஆகாய விமானங்கள் போன்றவை மீயொலி வேகத்தில் செல்பவையாகும்.) 
- 
                        Question 33 of 5233. Question33) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒரு பொருளானது காற்றில், ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது அவை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.
 II. இந்த அதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக அவை கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது.Correct
 (குறிப்பு – ஒரு பொருளானது காற்றில், ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது அவை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக அவை கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது. இதனை ஒலி முழக்கம் என்கிறோம்.) Incorrect
 (குறிப்பு – ஒரு பொருளானது காற்றில், ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது அவை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக அவை கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது. இதனை ஒலி முழக்கம் என்கிறோம்.) 
- 
                        Question 34 of 5234. Question34) கீழ்கண்டவற்றுள் எது எதிரொலித்தல் விதிகள் ஆகும்? 
 I. ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்க வேண்டும்.
 II. ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைய வேண்டும்.Correct
 (குறிப்பு – ஒரு ரப்பர் பந்து சுவற்றில் பட்டு பிரதிபலிப்பது போல் ஒலியானது திடப்பொருள் அல்லது திரவத்தின் மீது பட்டு பிரதிபலிக்கும். ஒலி எதிரொலிப்பதற்கு, வழவழப்பான அல்லது சொரசொரப்பான ஒரு பெரிய பரப்பு தேவைப்படுகிறது. அந்த விதிகளாவன, ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்க வேண்டும். ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைய வேண்டும்.) Incorrect
 (குறிப்பு – ஒரு ரப்பர் பந்து சுவற்றில் பட்டு பிரதிபலிப்பது போல் ஒலியானது திடப்பொருள் அல்லது திரவத்தின் மீது பட்டு பிரதிபலிக்கும். ஒலி எதிரொலிப்பதற்கு, வழவழப்பான அல்லது சொரசொரப்பான ஒரு பெரிய பரப்பு தேவைப்படுகிறது. அந்த விதிகளாவன, ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்க வேண்டும். ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைய வேண்டும்.) 
- 
                        Question 35 of 5235. Question35) கீழ்கண்டவற்றுள் எது பலமுறை எதிரொலிப்பதின் பயனாகும்? Correct
 (குறிப்பு – குழல்பெருக்கி, ஒலிபெருக்கி, குழல்கள், நாதஸ்வரம், செனாய், தாரை போன்ற இசைக் கருவிகள் யாவும் ஒளியானது ஒரு குறிப்பிட்ட திசையில் பரவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளில் ஒரு குழாயினை தொடர்ந்து ஒரு கூம்பு வடிவ அமைப்பானது ஒலியை பெருக்கமடைய செய்து கேட்பவரை நோக்கி முன்னேறி செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.) Incorrect
 (குறிப்பு – குழல்பெருக்கி, ஒலிபெருக்கி, குழல்கள், நாதஸ்வரம், செனாய், தாரை போன்ற இசைக் கருவிகள் யாவும் ஒளியானது ஒரு குறிப்பிட்ட திசையில் பரவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளில் ஒரு குழாயினை தொடர்ந்து ஒரு கூம்பு வடிவ அமைப்பானது ஒலியை பெருக்கமடைய செய்து கேட்பவரை நோக்கி முன்னேறி செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.) 
- 
                        Question 36 of 5236. Question36) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. உயரமான கட்டிடங்கள் மலைகள் போன்ற பரப்புகளில் அருகே நின்று கை தட்டினாலோ அல்லது குரல் எழுப்பினாலோ சிறிது நேரம் கழித்து அதை நாம் மீண்டும் கேட்க முடியும். இது எதிரொலி என அழைக்கப்படுகிறது.
 II. ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு காலத்திற்கு ஒலியானது தொடர்ந்து மூளையில் உணரப்படுகிறது.Correct
 (குறிப்பு – உயரமான கட்டிடங்கள் மலைகள் போன்ற பரப்புகளில் அருகே நின்று கை தட்டினாலோ அல்லது குரல் எழுப்பினாலோ சிறிது நேரம் கழித்து அதை நாம் மீண்டும் கேட்க முடியும். இது எதிரொலி என அழைக்கப்படுகிறது. ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு காலத்திற்கு ஒலியானது தொடர்ந்து மூளையில் உணரப்படுகிறது. எனவே, எதிரொலிக்கபட்ட ஒலியை தெளிவாக கேட்க வேண்டும் எனில் ஒலி மற்றும் எதிரொலிக்கு இடைப்பட்ட காலம் குறைந்தது 0.1 விநாடியாக இருக்கவேண்டும்.) Incorrect
 (குறிப்பு – உயரமான கட்டிடங்கள் மலைகள் போன்ற பரப்புகளில் அருகே நின்று கை தட்டினாலோ அல்லது குரல் எழுப்பினாலோ சிறிது நேரம் கழித்து அதை நாம் மீண்டும் கேட்க முடியும். இது எதிரொலி என அழைக்கப்படுகிறது. ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு காலத்திற்கு ஒலியானது தொடர்ந்து மூளையில் உணரப்படுகிறது. எனவே, எதிரொலிக்கபட்ட ஒலியை தெளிவாக கேட்க வேண்டும் எனில் ஒலி மற்றும் எதிரொலிக்கு இடைப்பட்ட காலம் குறைந்தது 0.1 விநாடியாக இருக்கவேண்டும்.) 
- 
                        Question 37 of 5237. Question37) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒலியின் வேகம் 340 மீவி-1 என்றும், ஒலி மற்றும் எதிரொலிக்கு இடைப்பட்ட காலம் 0.1 விநாடியாக இருந்தால், ஒலி பயணித்த தொலைவு? Correct
 (குறிப்பு – 
 ஒலியின் வேகம் = 340 மீவி-1
 எதிரொலிக்க எடுத்த நேரம் = 0.1 வி
 ஒலி பயணித்த தூரம் = 340 × 0.1
 ஒலி பயணித்த தூரம் = 34 மீ.)Incorrect
 (குறிப்பு – 
 ஒலியின் வேகம் = 340 மீவி-1
 எதிரொலிக்க எடுத்த நேரம் = 0.1 வி
 ஒலி பயணித்த தூரம் = 340 × 0.1
 ஒலி பயணித்த தூரம் = 34 மீ.)
- 
                        Question 38 of 5238. Question38) எதிரொலியை தெளிவாக கேட்க வேண்டுமானால் எதிரொலிக்கும் பரப்பு குறைந்தபட்சம் எத்தனை மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்? Correct
 (குறிப்பு – எதிரொலியை தெளிவாக கேட்க வேண்டுமானால் எதிரொலிக்கும் பரப்பு குறைந்தபட்சம் 17 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். இந்த தொலைவானது காற்றின் வெப்ப நிலையைப் பொருத்து மாறுபடும். தொடர் அல்லது பலமுறை எதிரொலித்ததினால் எதிரொலியை ஒரு முறைக்கு மேலும் கேட்க இயலும்.) Incorrect
 (குறிப்பு – எதிரொலியை தெளிவாக கேட்க வேண்டுமானால் எதிரொலிக்கும் பரப்பு குறைந்தபட்சம் 17 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். இந்த தொலைவானது காற்றின் வெப்ப நிலையைப் பொருத்து மாறுபடும். தொடர் அல்லது பலமுறை எதிரொலித்ததினால் எதிரொலியை ஒரு முறைக்கு மேலும் கேட்க இயலும்.) 
- 
                        Question 39 of 5239. Question39) ஒருவர் தனது துப்பாக்கியை சுட்ட 5 வினாடிக்குப் பிறகு எதிரொலியை கேட்கிறார். அவர் குன்றை நோக்கி 310 மீ முன்னோக்கி நகர்ந்து மீண்டும் சுடுகிறார். இப்பொழுது 3 வினாடிக்குப் பிறகு எதிரொலியை கேட்கிறார் எனில் ஒலியின் வேகம் எவ்வளவு? Correct
 (குறிப்பு – தொலைவு = வேகம் × காலம் 
 முதல் முறை சுடும்போது ஒளி கடந்த தொலைவு 2d = v × 5 ( சமன்பாடு 1)
 இரண்டாவது முறை சுடும்போது ஒளி கடந்த தொலைவு, 2d – 620 = v × 3 (சமன்பாடு 2)
 சமன்பாடு 2 ஐ மாற்றி எழுதினால்,
 2d = ( v × 3 ) + 620
 5v = 3v + 620
 2v = 620
 v = 320 மீ/வி-1 )Incorrect
 (குறிப்பு – தொலைவு = வேகம் × காலம் 
 முதல் முறை சுடும்போது ஒளி கடந்த தொலைவு 2d = v × 5 ( சமன்பாடு 1)
 இரண்டாவது முறை சுடும்போது ஒளி கடந்த தொலைவு, 2d – 620 = v × 3 (சமன்பாடு 2)
 சமன்பாடு 2 ஐ மாற்றி எழுதினால்,
 2d = ( v × 3 ) + 620
 5v = 3v + 620
 2v = 620
 v = 320 மீ/வி-1 )
- 
                        Question 40 of 5240. Question40) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. பெரிய அறைகளில் ஏற்படுத்தப்படும் ஒலியானது, அறையின் சுவர்களில் பட்டு மீண்டும் எதிரொலிப்பு அடைந்து அதன் கேட்கும் தன்மை சுழியாகும் வரை நீடித்திருக்கும்.
 II. பன்முக எதிரொலிப்பின் காரணமாக ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர் முழக்கம் எனப்படும்.Correct
 (குறிப்பு – கலையரங்கம், பெரிய அறைகள் திரையரங்கம், ஒலிப்பதிவு கூடங்கள் போன்றவற்றில் ஏற்படும் அதிகமான எதிர் முழக்கம் விரும்பத்தக்கது அல்ல. ஏனெனில் இசையை ரசிக்கவோ, பேச்சை தெளிவாக கேட்கவோ இயலாது. எதிர் முழக்கத்தை குறைப்பதற்கு கலையரங்கத்தின் மேற் கூரை, சுவர்கள் போன்றவை ஒலியைச் கவரும் தன்மை கொண்ட பொருள்களால் மூடப்பட்டிருக்கும்.) Incorrect
 (குறிப்பு – கலையரங்கம், பெரிய அறைகள் திரையரங்கம், ஒலிப்பதிவு கூடங்கள் போன்றவற்றில் ஏற்படும் அதிகமான எதிர் முழக்கம் விரும்பத்தக்கது அல்ல. ஏனெனில் இசையை ரசிக்கவோ, பேச்சை தெளிவாக கேட்கவோ இயலாது. எதிர் முழக்கத்தை குறைப்பதற்கு கலையரங்கத்தின் மேற் கூரை, சுவர்கள் போன்றவை ஒலியைச் கவரும் தன்மை கொண்ட பொருள்களால் மூடப்பட்டிருக்கும்.) 
- 
                        Question 41 of 5241. Question41) கீழ்க்கண்டவகைகளில் எது ஒலியை உட்கவரும் தன்மை கொண்டவை? 
 I. நார் அட்டை
 II. திரைசீலை
 III. பிளாஸ்டர்Correct
 (குறிப்பு – ஒலியை உட்கவரும் தன்மை கொண்ட பொருள்கள் நார் அட்டை, திரைசீலைகள், பிளாஸ்டர் போன்றவை ஆகும். கலையரங்கம், திரையரங்கம் போன்றவைகளில் சுவர்கள் மற்றும் மேற்கூரை போன்றவை இத்தகைய பொருட்களால் மூடப்பட்டிருக்கும். இவை எதிர் முழக்கத்தை குறைக்கும்.) Incorrect
 (குறிப்பு – ஒலியை உட்கவரும் தன்மை கொண்ட பொருள்கள் நார் அட்டை, திரைசீலைகள், பிளாஸ்டர் போன்றவை ஆகும். கலையரங்கம், திரையரங்கம் போன்றவைகளில் சுவர்கள் மற்றும் மேற்கூரை போன்றவை இத்தகைய பொருட்களால் மூடப்பட்டிருக்கும். இவை எதிர் முழக்கத்தை குறைக்கும்.) 
- 
                        Question 42 of 5242. Question42) மீயொலி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. நாய்களால் மீயொலியை கேட்க முடியாது.
 II. மீயொலி, மனித உடலின் உறுப்புகளை ஆராய்வதற்கு பயன்படுகின்றன.Correct
 (குறிப்பு – 20,000 ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான அதிர்வெண்ணை கொண்ட ஒலி அலைகள் மீயொலி அலைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த அலைகளை மனித செவிகளால் உணர முடியாது. ஆனால், விலங்குகள் இவற்றை கேட்டுணர முடியும். நாய்களால் மீயொலியை கேட்க முடியும். மீயொலி அலைகளின் முக்கியமான பயன், மனித உடலின் உறுப்புகளை ஆராய்வதற்கு இவை பயன்படுகின்றன.) Incorrect
 (குறிப்பு – 20,000 ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான அதிர்வெண்ணை கொண்ட ஒலி அலைகள் மீயொலி அலைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த அலைகளை மனித செவிகளால் உணர முடியாது. ஆனால், விலங்குகள் இவற்றை கேட்டுணர முடியும். நாய்களால் மீயொலியை கேட்க முடியும். மீயொலி அலைகளின் முக்கியமான பயன், மனித உடலின் உறுப்புகளை ஆராய்வதற்கு இவை பயன்படுகின்றன.) 
- 
                        Question 43 of 5243. Question43) எதிரொலித்து இடம் கண்டறிதல் என்ற முறையைப் பயன்படுத்தும் விலங்கு எது, 
 I. வௌவால்
 II. திமிங்கிலம்
 III. ஆமைCorrect
 (குறிப்பு – வௌவால், டால்பின் மற்றும் சில திமிங்கிலங்கள் மீயொலியை என்படுத்தும் முறை ஆகிய எதிரொலித்து இடம் கண்டறிதல் என்ற முறையைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் பொருட்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. வவ்வால்கள், இந்த முறை மூலம் இருட்டான குகைகளில் பயணிப்பதோடு, தங்களுக்கு தேவையான இரையையும் பெற்றுக் கொள்கின்றன.) Incorrect
 (குறிப்பு – வௌவால், டால்பின் மற்றும் சில திமிங்கிலங்கள் மீயொலியை என்படுத்தும் முறை ஆகிய எதிரொலித்து இடம் கண்டறிதல் என்ற முறையைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் பொருட்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. வவ்வால்கள், இந்த முறை மூலம் இருட்டான குகைகளில் பயணிப்பதோடு, தங்களுக்கு தேவையான இரையையும் பெற்றுக் கொள்கின்றன.) 
- 
                        Question 44 of 5244. Question44) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. மீயொலி அலைகள் உடலினுள் செலுத்தப்படும் போது எலும்புகளில் பட்டு எதிரொலிக்கின்றன.
 II. மீயொலி அலைகள் கடல் கண்காணிப்பிலும், மருத்துவ ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.Correct
 (குறிப்பு – மீயொலி அலைகளை உடலினுள் செலுத்தும்போது, அவை உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகளில் பட்டு எதிரொலிக்கின்றன. இந்த அலைகள் கண்டறியப்பட்டு, ஆராயப்பட்டு கணினியில் சேமிக்கப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் வரைபடத்திற்கு எதிரொலி ஆழ வரைவு (Echogram) என்று பெயர்.) Incorrect
 (குறிப்பு – மீயொலி அலைகளை உடலினுள் செலுத்தும்போது, அவை உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகளில் பட்டு எதிரொலிக்கின்றன. இந்த அலைகள் கண்டறியப்பட்டு, ஆராயப்பட்டு கணினியில் சேமிக்கப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் வரைபடத்திற்கு எதிரொலி ஆழ வரைவு (Echogram) என்று பெயர்.) 
- 
                        Question 45 of 5245. Question45) மீயொலியின் பயன்களில் சரியானது எது? 
 I. பொருள்களின் மீது உள்ள மிகச்சிறிய துகள்களை நீக்குவதற்கு, அப்பொருள்கள் மியோலி செல்லும் திரவத்தினுள் வைத்து தூய்மைப்படுத்தப்படுகிறது.
 II. உலோகபட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை மீயொலி அலைகளை கொண்டு கண்டறிய முடியும்.
 III. மீயொலி அலைகள் மூலம் இதயத்தின் பல்வேறு பகுதிகளின் வரைபடத்தை உருவாக்க முடியும்.Correct
 (குறிப்பு – மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொருள்களின் மீது உள்ள மிகச்சிறிய துகள்களை நீக்குவதற்கு, அப்பொருள்கள் மீயொலி செல்லும் திரவத்தினுள் வைத்து தூய்மைப்படுத்தப்படுகிறது. உலோக பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை மீயொலி அலைகளைக் கொண்டு கண்டறிய முடியும். மீயொலி அலைகளைக் கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறுசிறு துகள்களாக உடைக்க முடியும்.) Incorrect
 (குறிப்பு – மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொருள்களின் மீது உள்ள மிகச்சிறிய துகள்களை நீக்குவதற்கு, அப்பொருள்கள் மீயொலி செல்லும் திரவத்தினுள் வைத்து தூய்மைப்படுத்தப்படுகிறது. உலோக பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை மீயொலி அலைகளைக் கொண்டு கண்டறிய முடியும். மீயொலி அலைகளைக் கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறுசிறு துகள்களாக உடைக்க முடியும்.) 
- 
                        Question 46 of 5246. Question46) சோனார் (SONAR) என்ற கருவியை கொண்டு நீருக்கு அடியில் உள்ள பொருளின் எந்த தகவலை அறிய முடியும்? 
 I. தூரம்
 II. திசை
 III. வேகம்Correct
 (குறிப்பு – சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியில் உள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றை கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலியை பரப்பக்கூடிய சாதனமும், மீயொலியை உணரக் கூடிய உணர்வியும் உள்ளது.) Incorrect
 (குறிப்பு – சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியில் உள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றை கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலியை பரப்பக்கூடிய சாதனமும், மீயொலியை உணரக் கூடிய உணர்வியும் உள்ளது.) 
- 
                        Question 47 of 5247. Question47) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. சோனார் கருவி மூலம் பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை கொண்டு, நீருக்கு அடியில் இருக்கும் பொருளின் தொலைவை கண்டறிய முடியும்.
 II. பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளி ‘t’ எனவும், நீரின் வேகத்தை ‘v’ எனவும் குறிப்பிடுவர்.Correct
 (குறிப்பு – சோனார் கருவி மூலம் பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை கொண்டு, நீருக்கு அடியில் இருக்கும் பொருளின் தொலைவை கண்டறிய முடியும். பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளி ‘t’ எனவும், நீரின் வேகத்தை ‘v’ எனவும் குறிப்பிடுவர். அவ்வாறெனில் மீயொலியானது கடந்த தொலைவு 2d / t = v ஆகும்.) Incorrect
 (குறிப்பு – சோனார் கருவி மூலம் பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை கொண்டு, நீருக்கு அடியில் இருக்கும் பொருளின் தொலைவை கண்டறிய முடியும். பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளி ‘t’ எனவும், நீரின் வேகத்தை ‘v’ எனவும் குறிப்பிடுவர். அவ்வாறெனில் மீயொலியானது கடந்த தொலைவு 2d / t = v ஆகும்.) 
- 
                        Question 48 of 5248. Question48) எதிரொலி நெடுக்கம் (echo-ranging) என்பதன் பயன் என்ன? 
 I. நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள் ஆகியவற்றின் இடத்தை கண்டறிய முடியும்.
 II. நீருக்கு அடியில் உள்ள நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றின் இருப்பிடத்தை அறிய முடியும்.Correct
 (குறிப்பு – சோனார் கருவிக்கொண்டு நீருக்கு அடியில் உள்ள பொருள்களின் தொலைவை கண்டறியும் முறை எதிரொலி நெடுக்கம் (echo-ranging) என்று அழைக்கப்படுகிறது. கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர் மூழ்கி கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றின் இடத்தை கண்டறிவதற்கும் இந்த முறை பயன்படுகிறது.) Incorrect
 (குறிப்பு – சோனார் கருவிக்கொண்டு நீருக்கு அடியில் உள்ள பொருள்களின் தொலைவை கண்டறியும் முறை எதிரொலி நெடுக்கம் (echo-ranging) என்று அழைக்கப்படுகிறது. கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர் மூழ்கி கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றின் இடத்தை கண்டறிவதற்கும் இந்த முறை பயன்படுகிறது.) 
- 
                        Question 49 of 5249. Question49) ஒரு கப்பலில் இருந்து அனுப்பப்படும் மீயொலியானது கடலுக்கு அடியில் உள்ள பொருளின் மீது எதிரொலிக்கப்பட்டு 3.42 வினாடிக்கு பிறகு மீண்டும் வந்தடைகிறது. கடல்நீரில் மீயொலியின் வேகம் 1531 எனில் கப்பலிலிருந்து கடலின் அடிப்பகுதி வரை உள்ள தொலைவு எவ்வளவு? Correct
 (குறிப்பு – மீயொலி கடந்த தொலைவு = 2 × கடலின் ஆழம் 
 தொலைவு = வேகம் × நேரம் என்பதால்,
 2d = வேகம் × நேரம்
 d = 5236 / 2
 d = 2618 மீ )Incorrect
 (குறிப்பு – மீயொலி கடந்த தொலைவு = 2 × கடலின் ஆழம் 
 தொலைவு = வேகம் × நேரம் என்பதால்,
 2d = வேகம் × நேரம்
 d = 5236 / 2
 d = 2618 மீ )
- 
                        Question 50 of 5250. Question50) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. மின்னொலி இதய வரைபடம் (ECG) என்பது இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான எளிய மற்றும் பழமையான முறை ஆகும்.
 II. இந்த முறையில் இதயத்தில் இருந்து பெறப்படும் ஒலியானது மின் சிக்னல்களாக மாற்றப்படுகின்றன.
 III. ECG என்பது நேரத்தைப் பொறுத்து மாறக்கூடிய இதய தசைகளின் மின்சார செயல்பாடுகளை குறிப்பதாகும்.Correct
 (குறிப்பு – மின் ஒலி இதய வரைபடம் என்பது இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான எளிய மற்றும் பழமையான முறையாகும். இது இதயத்தை பற்றி அனேக தகவல்களை அளிக்கின்றது. மேலும் இதயநோய் நோயாளிகளைப் பற்றிய ஆய்வில் இது மிக முக்கியமான பகுதியாக உள்ளது. பொதுவாக பகுப்பாய்வு செய்வதற்காக தாள்களின் மீது, பதிவு செய்யப்பட்ட சிக்னல்கள் அச்சிடப்படுகின்றன.) Incorrect
 (குறிப்பு – மின் ஒலி இதய வரைபடம் என்பது இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான எளிய மற்றும் பழமையான முறையாகும். இது இதயத்தை பற்றி அனேக தகவல்களை அளிக்கின்றது. மேலும் இதயநோய் நோயாளிகளைப் பற்றிய ஆய்வில் இது மிக முக்கியமான பகுதியாக உள்ளது. பொதுவாக பகுப்பாய்வு செய்வதற்காக தாள்களின் மீது, பதிவு செய்யப்பட்ட சிக்னல்கள் அச்சிடப்படுகின்றன.) 
- 
                        Question 51 of 5251. Question51) செவியின் வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? Correct
 (குறிப்பு – செவியின் வெளிப்பகுதி செவிமடல் என்று அழைக்கப்படுகிறது. இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியை சேகரிக்கிறது. சேகரிக்கப்பட்ட ஒலியானது, வெளி செவிகுழாய் மூலம் செவிக்கு உள்ளே செல்கிறது.) Incorrect
 (குறிப்பு – செவியின் வெளிப்பகுதி செவிமடல் என்று அழைக்கப்படுகிறது. இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியை சேகரிக்கிறது. சேகரிக்கப்பட்ட ஒலியானது, வெளி செவிகுழாய் மூலம் செவிக்கு உள்ளே செல்கிறது.) 
- 
                        Question 52 of 5252. Question52) நடு செவியில் உள்ள எலும்புகளில் அல்லாதது எது? Correct
 (குறிப்பு – வெளி செவி குழாயின் முடிவில், செவிப்பறை (Tympanic membrane) உள்ளது. காற்று ஊடகத்தில் ஒரு நெருக்கமானது உண்டாகும்போது, செவிப்பறையின் வெளிப்பகுதியில் உள்ள அழுத்தமானது அதிகரித்து, செவிப்பறையானது உட்புறம் தள்ளப்படுகிறது. அதுபோலவே காற்று ஊடகத்தில் ஒரு நெகிழ்ச்சி உண்டாகும்போது, செவிப்பறையானது, வெளிப்புறம் தள்ளப்படுகிறது. இவ்வாறாக செவிப்பறை ஆனது அதிர்வு அடைகின்றது. இந்த அதிர்வானது, நடுச்செவியில் உள்ள மூன்று எலும்புகளால் (சுத்தி, பட்டை மற்றும் அங்கவடி) பலமுறை பெருக்கமடைகிறது.) Incorrect
 (குறிப்பு – வெளி செவி குழாயின் முடிவில், செவிப்பறை (Tympanic membrane) உள்ளது. காற்று ஊடகத்தில் ஒரு நெருக்கமானது உண்டாகும்போது, செவிப்பறையின் வெளிப்பகுதியில் உள்ள அழுத்தமானது அதிகரித்து, செவிப்பறையானது உட்புறம் தள்ளப்படுகிறது. அதுபோலவே காற்று ஊடகத்தில் ஒரு நெகிழ்ச்சி உண்டாகும்போது, செவிப்பறையானது, வெளிப்புறம் தள்ளப்படுகிறது. இவ்வாறாக செவிப்பறை ஆனது அதிர்வு அடைகின்றது. இந்த அதிர்வானது, நடுச்செவியில் உள்ள மூன்று எலும்புகளால் (சுத்தி, பட்டை மற்றும் அங்கவடி) பலமுறை பெருக்கமடைகிறது.) 
Leaderboard: ஒலி Online Test 9th Science Lesson 8 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||