Online TestTamil

6th Tamil 1st Term Revision Test – New Book

6th Tamil 1st Term Revision Test

Congratulations - you have completed 6th Tamil 1st Term Revision Test . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியவர் யார்?
A
திரு.வி.க
B
நாமக்கல் கவிஞர்
C
உடுமலை நாராயணக்கவி
D
பாரதிதாசன்
Question 2
சரியான பொருளை தேர்ந்தெடு – நிருமித்த
A
நிருபித்த
B
நிருவிய
C
உருவாக்கிய
D
விளைச்சல்
Question 3
  • " தமிழே உன்னை நினைக்கும்
  • தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் "
  • என்று பாடியவர் யார்?
A
பாரதிதாசன்
B
காசி விஸ்வநாதன்
C
பாரதியார்
D
காசி ஆனந்தன்
Question 4
இன்பத் தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
    1. விளைவுக்கு               i) பால்
    2. அறிவுக்கு                ii) வேல்
    3. இளமைக்கு               iii) நீர்
    4. புலவர்க்கு                iv) தோள்
A
ii iii i ii
B
iii iv i ii
C
iv iii ii i
D
iv iii i ii
Question 5
கீழ்வருவனவற்றுள் பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்களில் அல்லாதது எது?
  1. அமுது
  2. பால்
  3. வான்
  4. மணம்
  5. நிலவு
A
1, 2, 3
B
1, 3, 4
C
1, 4, 5
D
1, 2, 5
Question 6
செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A
செம்மை + பயிர்
B
செம் + பயிர்
C
செமை + பயிர்
D
செம்பு + பயிர்
Question 7
  • "ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு
  •  ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
  • ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
  •  அழியாமலே நிலை நின்றதுவாம்!”
  • என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
தமிழ்க்கும்மி
B
கனிச்சாறு
C
கொய்யாக்கனி
D
நூறாசிரியம்
Question 8
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
A
துரைராசு
B
எத்திராசலு
C
கனக சுப்புரத்தினம்
D
மாணிக்கம்
Question 9
பெருஞ்சித்திரனார் _____ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
A
புரட்சிக்கவி
B
புலவரேறு
C
கவிஞரேறு
D
பாவலரேறு
Question 10
கீழ்வருவனவற்றுள் பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் எவை?
  1. தமிழ்மொழி
  2. தமிழ்நிலம்
  3. தென்மொழி
  4. தென்ச்சிட்டு
  5. தமிழ்ச்சிட்டு
A
1, 2, 5
B
1, 2, 4
C
2, 3, 5
D
2, 3, 4
Question 11
கீழ்வருவனவற்றுள் பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் எவை?
  1. கனிச்சாறு
  2. இசையாயிரம்
  3. கொய்யாக்கனி
  4. பாவியக்கொத்து
  5. நூறாசிரியம்
A
அனைத்தும் சரி
B
1, 2, 4 சரி
C
1, 2, 3, 4 சரி
D
1 , 3, 4, 5 சரி
Question 12
பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு நூல் எத்தனைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
A
6
B
7
C
8
D
9
Question 13
  • " பொய் அகற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு
  •          பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
  • மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்; இந்த
  •                மேதினி வாழ்வழிகாட்டிருக்கும்!"
  • என்ற வரிகளை பாடியவர் யார்?
A
புரட்சிக்கவி
B
புலவரேறு
C
கவிஞரேறு
D
பாவலரேறு
Question 14
  • சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • மேதினி, ஊழி
A
கடல், உலகம்
B
உலகம், நீண்டதொருகாலப்பகுதி
C
கடல், நீண்டதொருகாலப்பகுதி
D
உலகம், கடல்
Question 15
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
A
எட்டுத்திசை
B
எட்டிதிசை
C
எட்டுதிசை
D
எட்டிஇசை
Question 16
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _____ சுருங்கிவிட்டது
A
மேதினி
B
நிலா
C
வானம்
D
காற்று
Question 17
உலகில் _______கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
A
2000
B
4000
C
6000
D
7000
Question 18
  • "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
  • இனிதாவது எங்கும் காணோம்"
  • என்று பாடியவர் யார்
A
நாமக்கல் கவிஞர்
B
புரட்சிக்கவி
C
புலவரேறு
D
தேசியகவி
Question 19
  • “ என்று பிறந்தவள் என்று உணராத
  • இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழ்த்தாயின் தொன்மையை கூறியவர் யார்?
A
கம்பர்
B
தொல்காப்பியர்
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 20
தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ______ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
A
இடஞ்சுழி
B
வலஞ்சுழி
C
வட்டெழுத்துகள்
D
சித்திர
Question 21
சரியான இணையைத் தேர்ந்தெடு
  1. நாணல் – தோகை
  2. சப்பாத்திக் கள்ளி – மடல்
  3. கமுகு – கூந்தல்
  4. கோரை – புல்
A
அனைத்தும் சரி
B
3, 4 சரி
C
1, 2 சரி
D
1, 3 சரி
Question 22
கீழ்க்கண்டவற்றுள் ‘உலகம்’ என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
A
தொல்காப்பியம் - களவியல்
B
தொல்காப்பியம் – அகத்திணையியல்
C
தொல்காப்பியம் – கிளவியாக்கம்
D
தொல்காப்பியம் – வினையியல்
Question 23
கீழ்வருவனவற்றுள் இடஞ்சுழி எழுத்து அல்லாதது எது?
A
B
C
D
Question 24
  • “ இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்”
  • என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
தொல்காப்பியம்
B
அப்பர் தேவாரம்
C
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம்
D
சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம்
Question 25
"தமிழென் கிளவியும் அதனோரற்றே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
தொல்காப்பியம்
B
அப்பர் தேவாரம்
C
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம்
D
சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம்
Question 26
தமிழன் என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் எது?
A
தொல்காப்பியம்
B
அப்பர் தேவாரம்
C
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம்
D
சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம்
Question 27
'அஃறிணை’ என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ______
A
அ + திணை
B
அது + திணை
C
அல் + திணை
D
அல்ல + திணை
Question 28
பொருத்துக
    1. நன்னூல்                                   i) காப்பியம்
    2. பத்துப்பாட்டு ii) அறநூல்
    3. நாலடியார் iii) சங்க இலக்கியம்
    4. மணிமேகலை iv) இலக்கண நூல்
A
i ii iii iv
B
ii i iii iv
C
iii ii i iv
D
iv iii ii i
Question 29
தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் ______ நிலைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.
A
6
B
7
C
8
D
9
Question 30
‘மா’ என்ற சொல்லுக்குரிய பொருள்களில் தவறானது எது?
  1. திருமகள்
  2. அறிவு
  3. வாய்மை
  4. துகள்
  5. வண்டு
A
1 மட்டும்
B
3 மட்டும்
C
4 மட்டும்
D
எதுவுமில்லை
Question 31
  • "அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பணிவு வேண்டும்!
  • எட்டுத்திக்கும் புகழ வேண்டும், எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!”
  • என்ற பாடலை பாடியவர் யார்?
A
கவிஞர் காசி ஆனந்தன்
B
கவிஞர் அறிவொளி
C
கவிஞர் அறிவுமதி
D
கவிஞர் காசி விஸ்வநாதன்
Question 32
  • "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
  • நாழி முகவாது நால்நாழி" என்பது யாருடைய வரிகள்
A
திருவள்ளுவர்
B
ஒளவையார்
C
கபிலர்
D
தொல்காப்பியர்
Question 33
கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் செய்தி இடம்பெற்றுள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் எவை?
  1. முல்லைப்பாட்டு
  2. திருப்பாவை
  3. பரிபாடல்
  4. திருக்குறள்
  5. நற்றிணை
A
அனைத்தும் சரி
B
1, 3, 4, 5 சரி
C
1, 2, 3, 5 சரி
D
1, 2, 3, 4 சரி
Question 34
"நெடு வெள்ளுசி நெடு வசி பரந்த வடு" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
பதிற்றுப்பத்து
B
நற்றிணை
C
திருப்பாவை
D
மணிமேகலை
Question 35
  • "கோட் சுறா எறிந்தெனச் சுருங்கிய
  • நரம்பின் முடிமுதிர் பரதவர்”
  • என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
பதிற்றுப்பத்து
B
நற்றிணை
C
திருப்பாவை
D
மணிமேகலை
Question 36
  • “நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
  • மேல்நின்று தான் சுரத்தலான்"
  • என்ற வரிகளை இயற்றியவர் வாழ்ந்த காலம்?
A
2 ம் நூற்றாண்டு
B
9 ம் நூற்றாண்டு
C
17 ம் நூற்றாண்டு
D
18 ம் நூற்றாண்டு
Question 37
"கொங்கு அலர்தார்" - இதில் கொங்கு என்பதன் பொருள்
A
மலர்தல்
B
மகரந்தம்
C
இமயமலை
D
கோவை
Question 38
  • சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • திகிரி, நாமநீர்
A
மலை, மழைநீர்
B
ஆணைச்சக்கரம், மழைநீர்
C
ஆணைச்சக்கரம், அச்சம் தரும் கடல்
D
மலை, அச்சம் தரும் கடல்
Question 39
  • தமிழின் முதல் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
A
தொல்காப்பியம்
B
சிலப்பதிகாரம்
C
திருக்குறள்
D
சிவகசிந்தாமணி
Question 40
  • "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
  • கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
  • அங்கண் உலகு அளித்த லான்"
  • இப்பாடலில் இளங்கோவடிகளால் புகழப்படும் அரசன் யார்?
A
பாண்டிய மன்னன்
B
சேர மன்னன்
C
சோழ மன்னன்
D
பல்லவ மன்னன்
Question 41
பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A
பொன் + கோட்டு
B
பொற் + கோட்டு
C
பொண் + கோட்டு
D
பொற்கோ + இட்டு
Question 42
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?
A
சுப்பிரமணியன்
B
கனக சுப்புரத்தினம்
C
கனகசபாபதி
D
இராமலிங்க அடிகள்
Question 43
பொருத்துக
    1. முத்துச்சுடர்போல             i) மாடங்கள்
    2. தூய நிறத்தில் ii) தென்றல்
    3. சித்தம் மகிழ்ந்திட iii) நிலா ஒளி
A
i ii iii
B
ii i iii
C
iii i ii
D
iii ii i
Question 44
கடற்கொள்ளைப் பறவை தரையிரங்காமல் எத்தனை கிலோ மீட்டர் வரை பறக்கும் ?
A
40
B
400
C
4000
D
40000
Question 45
" தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள பாடலை பாடியவர் யார்?
A
கடுவெளி சித்தர்
B
பட்டினத்தடிகள்
C
திருமூலர்
D
சத்திமுத்தப்புலவர்
Question 46
கீழ்க்கண்டவற்றுள் தவறான தொடரைத் தேர்ந்தெடு
A
நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன
B
நிலவு, விண்மீன், புவி ஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.
C
வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன
D
சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.
Question 47
இந்தியாவின் பறவை மனிதர் தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ________ என பெயரிட்டுள்ளார்.
A
வலசைபோதல்
B
காக்கையின் வீழ்ச்சி
C
சிட்டுக்குருவி
D
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
Question 48
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
A
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் அண்டார்டிக் ஆலா.
B
பறவை பற்றிய படிப்பு OROLOGY எனப்படும்.
C
உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20
D
பெண் சிட்டுக்குருவியின் தொண்டைப் பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும்.உடல்பகுதி அடர் பழுப்பாக இருக்கும்.
Question 49
சரியான தொடரைத் தேர்ந்தெடு
  1. கிழவனும் கடலும் என்னும் கதை ஆங்கில கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும்.
  2. இந்நூல் 1954 ஆண்டு நோபல் பரிசு பெற்றது.
  3. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 50
ஆய்த எழுத்து குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு
B
நுட்பமான ஒலிப்பு முறையை உடையது.
C
தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
D
முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குகிறது.
Question 51
  • "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
  • செயற்கரிய செய்கலா தார்"
  • என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
A
மக்கட்பேறு
B
நீத்தார் பெருமை
C
அன்புடைமை
D
இனியவை கூறல்
Question 52
உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்ற ஆண்டு
A
2015
B
2016
C
2017
D
2018
Question 53
தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?
A
பரிதிமாற் கலைஞர்
B
மறைமலை அடிகளார்
C
திரு.வி.க
D
பெருஞ்சித்திரனார்
Question 54
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
A
வளர்மதி
B
மயில்சாமி அண்ணாதுரை
C
சிவன்
D
நெல்லை சு.முத்து
Question 55
எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
  • அணுகு i) தெளிவு
  • ஐயம் ii) சோர்வு
  • ஊக்கம் iii) பொய்மை
  • உண்மை iv) விலகு
A
ii i iv iii
B
iii ii iv i
C
iv i ii iii
D
i iii ii iv
Question 56
நெல்லை சு.முத்து _______கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
A
50
B
60
C
70
D
80
Question 57
  • "வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
  • சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
  • சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்"
  • என்ற பாடலை பாடியவர் யார்?
A
நெல்லை சு. முத்து
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 58
இல்லாது + இயங்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது
A
இல்லாதுஇயங்கும்
B
இல்லாஇயங்கும்
C
இல்லாதியங்கும்
D
இல்லதியங்கும்
Question 59
ரோபோ என்னும் சொல்லுக்கு ______ என்று பொருள்
A
தானியங்கி
B
நுண்ணுணர்வுக் கருவிகள்
C
மனிதன்
D
அடிமை
Question 60
______ என்ற செக் நாட்டு நாடக ஆசிரியர் "ரோபோ” என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
A
கேரி கபெக்
B
கேஸ்புரோவ் கபெக்
C
காரல் கபெக்
D
காரல் கேஸ்புரோவ்
Question 61
1997 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ்புரோவுடன் போட்டியிட்ட மீத்திறன் கணினி எது?
A
சோபியா
B
ஐ.பி.எம்
C
டார்க் புளூ
D
டீப் புளூ
Question 62
உலகிலேயே முதன்முதலாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?
A
துபாய்
B
சவுதி அரேபியா
C
ஜப்பான்
D
அமெரிக்கா
Question 63
ஐக்கிய நாடுகள் சபை 'புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் _____ என்னும் ரோபோவிற்கு வழங்கியுள்ளது.
A
டீப் புளூ
B
டார்க் புளூ
C
சோபியா
D
ஐ.பி.எம்
Question 64
தானியங்கிகளுக்கும் எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு
A
வேலை
B
பாகங்கள்
C
உருவம்
D
செயற்கை நுண்ணறிவு
Question 65
முதன்முதலாக ரோபோ என்ற சொல் எந்த ஆண்டு வெளியான நாடகத்தில் பயன்படுத்தப்பட்டது.
A
1920
B
1924
C
1925
D
1930
Question 66
" தானியங்கிகள் தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்” என்று ______ தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது.
A
அமெரிக்க கலைக்களஞ்சியம்
B
பிரான்சு கலைக்களஞ்சியம்
C
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
D
இத்தாலி கலைக்களஞ்சியம்
Question 67
நுட்பமாகச் சிந்தித்து அறிவது
A
நூலறிவு
B
நுண்ணறிவு
C
சிற்றறிவு
D
பட்டறிவு
Question 68
அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நூலான 'விளக்குகள் பல தந்த ஒளி' என்ற நூலை எழுதியவர் யார்?
A
லார்ட்சன்
B
லிலியன் வாட்சன்
C
லார்ட் வாட்சன்
D
லார்ட் கபெக்
Question 69
அப்துல் கலாம் அவர்கள் 'விளக்குகள் பல தந்த ஒளி' என்ற நூலை படித்தபோது கீழ்க்கண்ட எவற்றை பெற்றார்?
  1. அறிவு
  2. விடாமுயற்சி
  3. தன்னம்பிக்கை
  4. மகிழ்ச்சி
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 3, 4
D
2, 3, 4
Question 70
போலியோவினால் பாதிக்கப்ட்டவர்களுக்கு ______ கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன.
A
நைட்ரஜன் இழைகள்
B
பாஸ்பரஸ் இழைகள்
C
யுரேனியம் இழைகள்
D
கார்பன் இழைகள்
Question 71
______ கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது.
A
252
B
257
C
525
D
527
Question 72
தவறான தொடரை தேர்ந்தெடு
A
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
B
க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
C
ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் அனைத்து எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
D
ஞ வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
Question 73
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
A
ய - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
B
வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
C
ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
D
ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் அனைத்தும் சொல்லின் முதலில் வரும்.
Question 74
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
A
மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது.
B
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
C
உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வரும்.
D
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருதில்லை.
Question 75
ஒகர வரிசையில் ______ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
A
நெ
B
நொ
C
நே
D
நோ
Question 76
நொ – என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் யாது?
A
அம்பு
B
இல்லை
C
துன்பம்
D
நோய்
Question 77
சர்.சி.வி.ராமன் தமது "இராமன் விளைவு என்னும் கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு
A
1926
B
1927
C
1928
D
1929
Question 78
தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
A
ஜனவரி 28
B
பிப்ரவரி 28
C
மார்ச் 28
D
ஏப்ரல் 28
Question 79
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் 'வெள்ளம்' என்ற தமிழ்ச் சொல் இடம் பெற்றுள்ள நூல்
A
பதிற்றுப்பத்து
B
குறுந்தொகை
C
திருக்குறள்
D
பெரும்பாணாற்றுப்படை
Question 80
கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியம் – கிளவியாக்கத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் எவை?
  1. உலகம்
  2. ஊர்
  3. உயிர்
  4. அரசு
  5. ஒழி
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 4, 5 சரி
D
1, 3, 5 சரி
Question 81
கீழ்க்கண்டவற்றுள் 'பாம்பு' என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது
A
குறுந்தொகை
B
பதிற்றுப்பத்து
C
நற்றிணை
D
அகநானூறு
Question 82
சர்.சி.வி.ராமன் அவர்கள் கடல் நீர் ஏன் நீல நிறமாக காட்சியளிக்கிறது என்ற வினாவிற்கான ஆய்வை எந்தெந்த பொருள்களின் உதவியுடன் தொடங்கினார் ?
  1. பாதரச ஆவி விளக்கு
  2. 2. குழிலென்சு
  3. பென்சீன்
  4. நிறமாலைக் காட்டி
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
1 , 3, 4 சரி
D
1, 2, 4 சரி
Question 83
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் 'செய்’ என்ற தமிழ்ச் சொல் இடம் பெற்றுள்ள நூல்
A
பதிற்றுப்பத்து
B
குறுந்தொகை
C
திருக்குறள்
D
பெரும்பாணாற்றுப்படை
Question 84
பொருத்துக
    1. Artificial Intelligene-i) மீத்திறன் கணினி
    2. Super Computer-ii) செயற்கை நுண்ணறிவு
    3. Medicine-iii) நுண்ணறிவு
    4. Intelligence-iv) ஒளடதம்
    5. Robot-v) எந்திர மனிதன்
 
A
i ii iii iv v
B
ii iii i iv v
C
ii i iii v iv
D
ii i iv iii v
Question 85
  • "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
  • கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
  • என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
நன்னூல்
C
நற்றிணை
D
தொல்காப்பியம்
Question 86
  • “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
  • பனையளவு காட்டும்”
  • என்ற வரிகள் யாருடையது?
A
திருவள்ளுவர்
B
ஒளவையார்
C
கபிலர்
D
கம்பர்
Question 87
தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்று நிறுவியவர் யார்?
A
தாலமி
B
கலீலியோ
C
அரிஸ்டாட்டில்
D
நியூட்டன்
Question 88
மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ______ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
A
மின்னணு
B
எழுத்துகள்
C
தொலையுணர்வு
D
எண்கள்
Question 89
‘மா’ என்னும் சொல்லின் பொருள்
A
மாடம்
B
வானம்
C
விலங்கு
D
அம்மா
Question 90
பொருத்துக
    1. இயல்தமிழ்- i) உள்ளத்தை மகிழ்விக்கும்
    2. இசைத்தமிழ்-ii) எண்ணத்தை வெளிப்படுத்தும்
    3. நாடகத்தமிழ்-iii) உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
A
i ii iii
B
ii iii i
C
ii i iii
D
iii ii i
Question 91
தமிழ் எண்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு
A
2 - உ
B
4 – ச
C
5 – எ
D
8 – அ
Question 92
‘பாகற்காய்’ என்ற சொல்லை பிரிக்கக் கிடைக்கும் சொல்
A
பாகு + அற்று + காய்
B
பாகு + அல் + காய்
C
பாக்கு + அற்று + காய்
D
பாக்கு + அற்று + காய்
Question 93
பொருத்துக
    1. வலஞ்சுழி                               i) Clockwise
    2. இடஞ்சுழி                                  ii) Anticlockwise
    3. தேடுபொறி                 iii) Internet
    4. இணையம்                     iv) Search engine
A
i ii iv iii
B
ii iii i iv
C
ii i iii iv
D
ii i iv iii
Question 94
  • சரியான பொருளை தேர்ந்தெடு
  • அளி, மேரு
A
அளித்தல், இமயமலை
B
கருணை, குற்றாலமலை
C
கருணை, இமயமலை
D
அளித்தல், குற்றாலமலை
Question 95
  • 'முத்துச் சுடர் போலே – நிலாவொளி
  • முன்பு வரவேணும் – அங்கு
  • கத்துங் குயிலோசை - சற்றே வந்து
  • காதில் படவேணும்' என்று பாடியவர் யார்
A
நாமக்கல் கவிஞர்
B
கண்ணதாசன்
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 96
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
A
நிலம் + இடையே
B
நிலத்தின் + இடையே
C
நிலத்து + இடையே
D
நிலத் + இடையே
Question 97
வரிசை மாறியுள்ள சொற்களை சரியான வரிசையில் அமைக்கவும்.
A
மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
B
டாக்டர் அலி சலீம் பறவை இந்தியாவின் மனிதர்.
C
டாக்டர் சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர்.
D
டாக்டர் சலீம் அலி இந்தியாவின் மனிதர் பறவை.
Question 98
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
தட்பவெப்பநிலை – Weather
B
வலசை – Migration
C
புகலிடம் – Sanctuary
D
கண்டம் – Continent
Question 99
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்சொல் _____.
A
போக்குதல்
B
தள்ளுதல்
C
அழித்தல்
D
சேர்த்தல்
Question 100
  • “ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
  • சான்றோன் எனக்கேட்ட தாய் "
  • என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
A
இனியவை கூறல்
B
அன்புடைமை
C
மக்கட்பேறு
D
நீத்தார் பெருமை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!