Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTnpsc Exam

குடிமக்களும் குடியுரிமையும் Online Test 8th Social Science Lesson 9 Questions in Tamil

குடிமக்களும் குடியுரிமையும் Online Test 8th Social Science Lesson 9 Questions in Tamil

Congratulations - you have completed குடிமக்களும் குடியுரிமையும் Online Test 8th Social Science Lesson 9 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

குடிமகன் என்னும் சொல் சிவிஸ் என்னும்.............. வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

A
கிரேக்கம்
B
இலத்தீன்
C
அரேபிய
D
பிரெஞ்சு
Question 1 Explanation: 
(குறிப்பு- சிட்டிசன் என்ற சொல் சிவிஸ் என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் குடியிருப்பாளர் என்பதாகும்.)
Question 2

சிவிஸ் என்னும் வார்த்தையின் தற்போதைய பொருள் என்ன

A
நாடுகளின் உறுப்பினர்
B
நாட்டின் அங்கம்
C
உலக மக்களுள் ஒருவர்
D
குடியிருப்பாளர்
Question 2 Explanation: 
(குறிப்பு - பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் சிவிஸ் என்ற சொல்லுக்கு குடியிருப்பாளர் என்ற பொருளாகும். நகர நாடுகள் அமைப்புகள் மறைந்த பின்னர் இச்சொல் நாடுகளின் உறுப்பினர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது)
Question 3

குடியுரிமை என்பது ஒரு குடிமகன்................ அந்த நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதல் ஆகும்.

A
அவர் விரும்பும் காலம் வரையில்
B
அவர் வாழும் காலம் வரையில்
C
அவர் தலைமுறை முடியும் வரையில்
D
இவை எதுவும் அல்ல
Question 3 Explanation: 
(குறிப்பு - குடியுரிமை என்பது ஒரு குடிமகன் அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதல் ஆகும். எனினும் தேவை ஏற்படின் குடியுரிமையை ரத்து செய்ய முடியும்)
Question 4

கீழ்க்கண்டவற்றில் குடியுரிமையின் வகை அல்லாதது எது

  1. இயற்கை குடியுரிமை
  2. இயல்பு குடியுரிமை
  3. செயற்கை குடியுரிமை
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 4 Explanation: 
(குறிப்பு - குடியுரிமை இரண்டு வகைப்படுகிறது. அவை இயற்கை குடியுரிமை மற்றும் இயல்பு குடியுரிமை என்பதாம்)
Question 5

இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

A
1953ஆம் ஆண்டு
B
1954ஆம் ஆண்டு
C
1955ஆம் ஆண்டு
D
1956ஆம் ஆண்டு
Question 5 Explanation: 
(குறிப்பு - இந்திய குடியுரிமை சட்டம் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்திய குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், விடுத்தலையும் பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது)
Question 6

1955ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம், குடியுரிமை பெறுவதற்கு எத்தனை வழிமுறைகளை பரிந்துரை செய்கிறது

A
நான்கு
B
ஐந்து
C
ஆறு
D
ஏழு
Question 6 Explanation: 
(குறிப்பு - இந்திய குடியுரிமை சட்டத்தின்படி (1955), குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் 5 ஆகும். பிறப்பால் குடியுரிமை பெறுதல், இயல்பு குடியுரிமை போன்றவைகளாகும்)
Question 7

இந்திய குடியுரிமை சட்டம் 1955ஆம் ஆண்டின்படி, குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளுள் அல்லாதது எது

A
பிறப்பால் குடியுரிமை பெறுதல்
B
வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்
C
பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
D
போர்க்கால குடியுரிமை பெறுதல்
Question 7 Explanation: 
(குறிப்பு - இந்திய குடியுரிமை சட்டத்தின்படி ஒருவர் ஐந்து வழிமுறைகளின் மூலம் இந்திய குடியுரிமையை பெறமுடியும். அவற்றுள் போர்க்காலங்களில் அகதி ஒருவர்க்கு குடியுரிமை வழங்கும் வரையறை இல்லை )
Question 8

...............முதல்............. வரை குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவர் ஆக இருப்பினும் அவர்கள் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுவர்.

A
1950 ஜனவரி 26, 1987 ஜூலை
B
1951 ஜனவரி 15, 1987 ஜூலை
C
1950 ஜனவரி 20, 1987 ஜூலை
D
1952 ஜனவரி 26, 1987 ஜூலை
Question 8 Explanation: 
(குறிப்பு - ஜனவரி 26, 1950 முதல் ஜூலை, 1987 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவர் ஆக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்)
Question 9

1987 ஜூலை 1 க்கு பின்னர் பிறந்தவர் இந்திய குடியுரிமை பெற கீழ்காணும் எந்த விதியை பூர்த்தி செய்ய வேண்டும்

  1. குழந்தையின் தாய் இந்திய குடிமகனாக இருந்தால் போதும்.
  2. குழந்தையின் தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் போதும்
  3. இருவரும் கட்டாயம் குடிமை இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
A
I மட்டும் அவசியம்
B
II மட்டும் அவசியம்
C
I அல்லது II ஏதேனும் ஒன்று அவசியம்
D
III மட்டும் அவசியம்
Question 9 Explanation: 
(குறிப்பு - ஜூலை 1987க்கு பின்னர் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால், அந்த குழந்தை இந்திய குடிமகனாக கருதப்படும்)
Question 10

கீழ்காணும் எவர் பிறப்பால் இந்திய குடியுரிமை பெற தகுதி உள்ளவர் ஆவார்

A
2003, டிசம்பர் 5 அன்று பிறந்தவர்
B
2005, ஜனவரி 31 அன்று பிறந்தவர்
C
2004, அக்டோபர் 16 அன்று பிறந்தவர்
D
2001, மே 20 அன்று பிறந்தவர்
Question 10 Explanation: 
(குறிப்பு - 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 3க்கு பின்னர் பிறந்தவர்கள் பிறப்பால் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்)
Question 11

இந்திய குடியுரிமை பெற்ற ஒருவரின் குழந்தை வெளிநாட்டில்.................முதல்................... வரையான பாலத்தின் பிறக்குமேயானால் அக்குழந்தை, வம்சாவளியால் குடியுரிமை பெறும் தகுதி உடையது ஆகிறது.

A
1951 ஜனவரி 26, 1993 டிசம்பர் 31
B
1950 ஜனவரி 26, 1992 டிசம்பர் 31
C
1949 ஜனவரி 26, 1991 டிசம்பர் 31
D
1948 ஜனவரி 26, 1990 டிசம்பர் 31
Question 11 Explanation: 
(குறிப்பு - 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையின் தந்தை இந்திய குடிமகனாக இருந்தால், அக்குழந்தை இந்திய குடியுரிமை பெறும் தகுதி உடையதாக ஆகிறது)
Question 12

....................   பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அந்த குழந்தை இந்திய குடியுரிமை பெறும் தகுதி உடையதாக ஆகிறது.

A
1992 டிசம்பர் 10க்கு பின்னர்
B
1993 டிசம்பர் 10க்கு பின்னர்
C
1994 டிசம்பர் 10க்கு பின்னர்
D
1995 டிசம்பர் 10க்கு பின்னர்
Question 12 Explanation: 
(குறிப்பு - 1992 டிசம்பர் 10க்கு பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால், வம்சாவழி கால் குடியுரிமை பெறும் தகுதி உடையவர் ஆகிறார்)
Question 13

எந்த காலத்திற்குப்பின் வெளி நாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளி குடிமகனாக முடியாது

A
2001 டிசம்பர் 3ஆம் நாள்
B
2002 டிசம்பர் 3ஆம் நாள்
C
2003 டிசம்பர் 3ஆம் நாள்
D
2004 டிசம்பர் 3ஆம் நாள்
Question 13 Explanation: 
(குறிப்பு -2004 டிசம்பர் 3ஆம் நாளுக்கு பின்னர் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்)
Question 14

இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன்....................... இந்தியாவில் வசித்தவராக இருக்க வேண்டும்.

A
5 ஆண்டுகள்
B
6 ஆண்டுகள்
C
7 ஆண்டுகள்
D
8 ஆண்டுகள்
Question 14 Explanation: 
(குறிப்பு - பதிவின் மூலம் இந்திய குடியுரிமை பெற, இந்திய குடிமகனை திருமணம் செய்யும் ஒருவர் விண்ணப்பிக்கும் முன்னர் ஏழு ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்)
Question 15

கீழ் கீழ்காணும் நபர்களில் யார் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர் ஆவார்

  1. எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர்
  2. ஏதேனும் ஒரு நாட்டில் மட்டும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற ஒரு இந்தியர்.
A
I மட்டும்
B
II மட்டும்
C
I, II இருவரும்
D
இருவரும் அல்ல
Question 15 Explanation: 
(குறிப்பு - எந்த ஒரு நாட்டின் குடியுரிமை பெறாத ஒரு இந்தியர் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர் ஆவார். வேறு நாட்டின் குடியுரிமை பெற்ற ஒரு இந்தியர், இந்தியக் குடியுரிமையை இழக்கிறார்)
Question 16

கீழ்காணும் நபர்களில் யார் இயல்பு குடியுரிமை பெற தகுதி அல்லாதவர் ஆவார்

A
இந்தியாவில் வசிக்கும் ஒருவர்
B
இந்திய அரசு பணியில் இருப்பவர்
C
ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங்கி இருப்பவர்
D
வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக வந்தவர்
Question 16 Explanation: 
(குறிப்பு - ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசு பணியில் இருக்கும் பட்சத்தில் அல்லது ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங்கி இருக்கும் பட்சத்தில் இயல்பு குடியுரிமை மூலம் இந்திய குடிமகன் ஆகிறார்)
Question 17

பாண்டிச்சேரி மக்களுக்கு, இந்திய அரசு எந்த ஆண்டு முதல் இந்தியக் குடியுரிமை காண ஆணையை வழங்கியது

A
1960ஆம் ஆண்டு முதல்
B
1961ஆம் ஆண்டு முதல்
C
1962ஆம் ஆண்டு முதல்
D
1965ஆம் ஆண்டு முதல்
Question 17 Explanation: 
(குறிப்பு - 1962ஆம் ஆண்டு முதல் பாண்டிச்சேரி இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் பாண்டிச்சேரி மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது)
Question 18

வெளிநாட்டு குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்தில் அவருக்கு கீழ்காணும் எந்த விதியின் படி இந்திய குடியுரிமை வழங்கப்படும்

A
பிறப்பால் குடியுரிமை பெறுதல்
B
வம்சாவழியில் குடியுரிமை பெறுதல்
C
பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
D
இயல்பு குடியுரிமை பெறுதல்
Question 18 Explanation: 
(குறிப்பு - வெளிநாட்டு குடியுரிமை ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவருக்கு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் இந்திய குடிமகனாக கருதப்படுகிறார்)
Question 19
இந்திய அரசமைப்புச் சட்டம் குடியுரிமை இழத்தலைப் பற்றி எத்தனை வழிமுறைகளை கொண்டுள்ளது?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 19 Explanation: 
(குறிப்பு - இந்திய அரசமைப்புச் சட்டம் குடியுரிமை இறப்பு பற்றிய மூன்று வழிமுறைகளை குறிப்பிடுகிறது. தானாக முன்வந்து குடியுரிமை துறத்தல், குடியுரிமை முடிவுக்கு வருதல் மற்றும் குடியுரிமை மறுத்தல் ஆகியவை ஆகும்)
Question 20

கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது

  1. ஒருவர் வெளிநாட்டில் குடியுரிமை பெறும் பட்சத்தில் அவரின் இந்திய குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
  2. ஒரு இந்திய குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்திய குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 20 Explanation: 
(குறிப்பு - ஒருவர் வெளிநாட்டில் குடியுரிமை பெறும் இந்திய குடியுரிமையை அவர் கைவிடுகிறார். எனினும் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து வெளி நாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்திய குடியுரிமை பறிக்கப்படுகிறது)
Question 21

கீழ்க்காணும் எந்த செயல் மூலம் இந்திய குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஒரு ஆணை மூலம் இழக்கச் செய்கிறது

A
மோசடி
B
தவறான பிரதிநிதித்துவம்
C
அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல்
D
பொதுக்கூட்டங்களில் அரசை விமர்சித்தல்
Question 21 Explanation: 
(குறிப்பு - குடியுரிமை மறுத்தல் அல்லது கட்டாயமாக முடிவுக்கு வருதல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் மூலமும் மோசடி தவறான பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மூலமும், இந்திய அரசு ஒரு ஆணை மூலம் குடியுரிமையை பறிக்கிறது)
Question 22

கீழ்க்காணும் எவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாகப் பெறுவது நாட்டுரிமை ஆகாது

A
இனம்
B
பூர்விகம்
C
பிறப்பு
D
தொடர்பு
Question 22 Explanation: 
(குறிப்பு- பூர்வீகம் பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை நாட்டுரிமை எனப்படும்)
Question 23

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. ஒருவர் தனது நாட்டுரிமையை  மாற்ற முடியாது.
  2. ஒருவர் தனது குடியுரிமையை மாற்ற முடியும்.
  3. ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியும்
  4. ஒருவர் தனது குடியுரிமையை மாற்ற முடியாது
A
I, II மட்டும் சரி
B
I, IV மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
III, IV மட்டும் சரி
Question 23 Explanation: 
(குறிப்பு - ஒருவர் தனது நாட்டுரிமை மாற்ற முடியாது ஆனால் குடியுரிமையை மாற்ற முடியும்)
Question 24

கீழ்க்காணும் கூற்றுகளில் எது

  1. குடியுரிமை என்பது சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது ஆகும்.
  2. இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குகிறது.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் சரி
Question 24 Explanation: 
( குறிப்பு - இந்திய அரசாங்கம் இந்திய குடிமக்களுக்கு ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது. இந்தியாவின் குடிமகன் ஆனவர், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் அனைத்து ஒன்றிய பிரதேசங்களுக்கும் குடிமகன் ஆகிறார்)
Question 25

இரட்டை குடியுரிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் தவறானது எது

A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
ஸ்விட்சர்லாந்து
C
இந்தியா
D
கனடா
Question 25 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட நாடுகளில் இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் இரட்டை குடியுரிமை உள்ளது )
Question 26
குடியுரிமை பற்றி சொல்லும் அரசியலமைப்பு சட்ட விதி எது?
A
அரசமைப்பு சட்டம் விதி 5
B
அரசமைப்பு சட்டம் விதி 15
C
அரசமைப்பு சட்டம் விதி 25
D
அரசமைப்பு சட்டம் விதி 35
Question 26 Explanation: 
(குறிப்பு - இந்திய அரசமைப்பு 5 முதல் 11 வரையிலான விதிகளில் குடியுரிமை பற்றி விளக்குகிறது)
Question 27

முன்னுரிமை வரிசையின் படி இந்தியாவின் முதல் குடிமகன் யார்

  1. இந்தியாவின் மிக வயதான நபர்
  2. இந்தியாவின் குடியரசு தலைவர்
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 27 Explanation: 
(குறிப்பு - முன்னுரிமை வரிசையின் படி குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகன் ஆவார். வயதில் மூத்தவர்கள், மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுவர்)
Question 28

கீழ் உள்ளவற்றில் யார் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற அங்கீகாரம் உடையவர்

  1. இந்திய கடவுச் சீட்டினை பெற்று வெளிநாட்டில் வசிப்பவர்கள்.
  2. இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட, வெளிநாட்டில் குடியுரிமை பெற்று இருக்கும் ஒருவர்.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 28 Explanation: 
(குறிப்பு - இந்திய கடவுச்சீட்டு பெற்று வெளிநாட்டில் இருப்பவர்களும், இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர் ஆகினும் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற அங்கீகாரம் பெறுகிறார்)
Question 29

இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்டவர்கள், வெளிநாடுகளில் எந்த நாட்டில் குடியுரிமை பெற்றிருப்பின் வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்படுவார்கள்

A
பாகிஸ்தான்
B
வங்கதேசம்
C
ஸ்ரீலங்கா
D
சிங்கப்பூர்
Question 29 Explanation: 
(குறிப்பு - பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்ரீலங்கா, பூடான், ஆப்கானிஸ்தான், சீனா நேபாளம் ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள், இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்டிருந்தாலும் அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற அங்கீகாரம் பெற மாட்டார்கள்)
Question 30

.................. முதல் இந்திய பூர்வீக குடியினர் என்ற முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது.

A
2015 ஜனவரி
B
2016 மார்ச்
C
2013 டிசம்பர்
D
2012 ஜூலை
Question 30 Explanation: 
(குறிப்பு - 2015, ஜனவரி 9 முதல் இனிய பூர்வீகக் குடியினர் என்ற முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு, வெளிநாட்டு குடியுரிமையை கொண்ட இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவர் என்ற முறையுடன் இணைக்கப்பட்டது )
Question 31

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எந்த வெளிநாட்டு குடிமகன்களுக்கு காலவரையின்றி இந்தியாவில் வசிப்பதற்கும்பணி செய்வதற்கும் OCI அட்டை வழங்கப்படுவதில்லை

  1. பாகிஸ்தான் 
  2. வங்கதேசம் 
  3. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மட்டும் 
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
III மட்டும் சரி
D
எல்லாமே தவறு
Question 31 Explanation: 
(குறிப்பு - வெளிநாட்டு குடியுரிமை கொண்ட இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை (Overseas Citizen of India Card Holder) பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் குடிமகனாக இருப்பவருக்கு வழங்கப்படுவதில்லை)
Question 32

கீழ் உள்ளவர்களில் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லாதவர் யார்

  1. 18 வயதுக்கு கீழே உள்ள இந்திய குடிமக்கள்.
  2. OCI அட்டை வைத்திருப்பவர்கள்
  3. இந்திய குடியுரிமை அல்லாதவர்கள்
A
I, II மட்டும்
B
II, III மட்டும்
C
I, III மட்டும்
D
அனைவரும்
Question 32 Explanation: 
(குறிப்பு - OCI அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் வாக்களிக்க உரிமை இல்லாதவர்கள், 18வயது நிரம்பாத இந்திய குடிமகன் மற்றும் இந்திய குடியுரிமை அல்லாதவர் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது)
Question 33

இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் இணைக்கப்பட்டது

A
40வது அரசமைப்பு சட்டத்திருத்தம்
B
42வது அரசமைப்பு சட்டத்திருத்தம்
C
44வது அரசமைப்பு சட்டத்திருத்தம்
D
46வது அரசமைப்பு சட்டத்திருத்தம்
Question 33 Explanation: 
(குறிப்பு - 42வது அரசமைப்பு சட்டத்திருத்தம்(1976)இன் படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் (11 கடமைகள்) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது)
Question 34
அடிப்படை கடமைகள் அல்லாதது எது?
A
நேர்மையாக வரி செலுத்துதல்
B
ஆளும் அரசுக்கு ஆதரவாக பேசுதல்.
C
நாட்டின் பாதுகாப்பிற்காக செயலாற்றுதல்.
D
சட்டங்களை மதித்தல்.
Question 34 Explanation: 
(குறிப்பு - பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமை ஆகும். அரசுக்கு ஆதரவாக பேசுவது என்பது அடிப்படை கடமை அல்ல)
Question 35

ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை எவ்வாறு அழைக்கின்றோம்

  1. அன்னியர்
  2. குடியேறியவர்
  3. தேச விரோதி
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
I, II மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 35 Explanation: 
(குறிப்பு- ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை அன்னியர் மற்றும் குடியேறியவர் என இரண்டு வகையினராகப் அழைக்கின்றோம்)
Question 36

கீழ் உள்ளவர்கள் யார் அன்னியர் ஆவார்

  1. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
  2. வெளிநாட்டு மாணவர்
A
I மட்டும்
B
II மட்டும்
C
I மற்றும் II இருவரும்
D
இருவரும் அல்ல
Question 36 Explanation: 
(குறிப்பு - ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அன்னியர் எனப்படுவர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள் போன்றவர்கள் அன்னியர் என்று அழைக்கப்படுவர்)
Question 37

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  1. உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும் குடிமை பொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன.
  2. உலகில் வாழும் ஒவ்வொருவரும் உலகளாவிய சமுதாயத்தில் ஒரு அங்கம் என்பதே உலகளாவிய குடியுரிமை ஆகும்.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
II மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 37 Explanation: 
(குறிப்பு - புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாட்டையும் பங்களிப்பையும் பெறுவதே உலகளாவிய குடியுரிமையின் அடிப்படை ஆகும்)
Question 38

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது

A
ஜனவரி 12
B
ஜனவரி 9
C
ஜனவரி 15
D
ஜனவரி 30
Question 38 Explanation: 
(குறிப்பு - ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் நாள், வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.(பிரவாசி பாரதிய தினம்))
Question 39

ஜனவரி 9 ஆம் நாளை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக எந்த அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது

A
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
B
இந்திய உள்துறை அமைச்சகம்
C
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்
D
இது எதுவும் அல்ல
Question 39 Explanation: 
(குறிப்பு - வெளிநாடு வாழ் இந்தியர் தினம், இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது. தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் என்பவர் ஆவார்)
Question 40

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததை நினைவு கூறும் விதமாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தது எப்போது

A
1912, ஜனவரி 9
B
1913, ஜனவரி 9
C
1914, ஜனவரி 9
D
1915, ஜனவரி 9
Question 40 Explanation: 
(குறிப்பு - 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் மகாத்மா காந்தி மும்பை துறைமுகம் வந்து இறங்கினார். அந்நாளை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது)
Question 41

வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக ஜனவரி 9 ஆம் நாளை எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது

A
2001 முதல்
B
2003 முதல்
C
2005 முதல்
D
2007 முதல்
Question 41 Explanation: 
(குறிப்பு - வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக ஜனவரி 9ஆம் நாளை, 2003 ஜனவரி 9 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது)
Question 42

இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது

A
பகுதி II
B
பகுதி III
C
பகுதி IV
D
இவை எதுவும் இல்லை
Question 42 Explanation: 
(குறிப்பு - இந்திய அரசியலமைப்பின் பகுதி-II இந்தியக் குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது. விதியின் 5 முதல் 11 வரை குடியுரிமை பற்றி சொல்கிறது)
Question 43

பொருத்துக

  1. Iவிதி 8      - a) குடிமை உரிமைகள் தொடர்ந்து இருத்தல்
  2. Iவிதி 9     - b) இந்தியாவுக்கு வெளியே குடியிருப்பவரின் குடியுரிமை
  3. விதி 10    - c) நாடாளுமன்றம் சட்டம் மூலம் குடியுரிமை ஒழுங்கறுத்துதல்.
  4. விதி 11     - d) வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்திய குடிமகன் ஆகமுடியாது.
A
I-b, II-d, III-a, IV-c
B
I-a, II-d, III-b, IV-c
C
I-d, II-a, III-c, IV-b
D
I-c, II-a, III-d, IV-b
Question 43 Explanation: 
(குறிப்பு - குடியுரிமை பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் விதிகள் 5 முதல் 11 வரை குறிப்பிடுகிறது)
Question 44

தவறான இணை எது

A
விதி 6 - பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து உள்ள சிலரின் குடிமை உரிமைகள் பற்றியது.
B
விதி 7 - பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து உள்ள சிலரின் குடிமை உரிமைகள் பற்றியது
C
விதி 8 - குடிமை உரிமைகள் தொடர்ந்து இருத்தல்
D
விதி 9 - வெளிநாட்டு விருப்பக்குடியுரிமை கொண்டவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதில்லை.
Question 44 Explanation: 
(குறிப்பு - அரசமைப்பு சட்ட விதி 8ஆனது இந்தியாவுக்கு வெளியே குடியிருந்து வரும் சில இந்திய மரபினரின் குடிமை உரிமைகள் பற்றியது ஆகும்)
Question 45

அடிப்படை கடமைகள் அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அமைந்துள்ளது

A
பகுதி IV-A
B
பகுதி II-A
C
பகுதி III-A
D
இது எதுவும் இல்லை
Question 45 Explanation: 
(குறிப்பு - அடிப்படை கடமைகள் பகுதி IV-A என்னும் கீழ் அமைந்துள்ளது. அரசமைப்பு சட்ட விதி 51A அடிப்படை கடமைகளைப் பற்றி கூறுகிறது.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!