Online Test
TN History Culture Part 3 Revision Test in Tamil
TN History Culture Part 3 Revision Test in Tamil
Congratulations - you have completed TN History Culture Part 3 Revision Test in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஆங்கிலேயர்களின் நாடு பிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை யாரிடமிருந்து வெளிப்பட்டது?
மருது சகோதரர்கள் | |
வீரபாண்டிய கட்டபொம்மன் | |
புலித்தேவர் | |
வேலுநாச்சியார் |
Question 1 Explanation:
(குறிப்பு: திருநெல்வேலிப் பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சி புரிந்தவர் புலித்தேவர். இவரைத் தொடர்ந்து வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றோரும் ஆங்கிலேயரை எதிர்த்தனர். பாளையக்காரர் போர் என அறியப்படும் இது 1806 இல் நிகழ்ந்த வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றது.)
Question 2 |
தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
பிரதாபருத்ரன் | |
விஸ்வநாத நாயக்கர் | |
சந்தாசாகிப் | |
D ஹைதர் அலி |
Question 2 Explanation:
(குறிப்பு: வாரங்கல்லை சார்ந்த பிரதாபருத்ரனின் ஆட்சியில் காகதீய அரசில் இப்பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மதுரை நாயக்கராக 1529 இல் பதவியேற்ற விஸ்வநாத நாயக்கர் அவர்தம் அமைச்சரான அரியநாதரின் உதவியோடு இம்முறையை தமிழகத்தில் அறிமுகம் செய்தார்.)
Question 3 |
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
பரம்பரை பரம்பரையாக 72 பாளையக்காரர்கள் இருந்தனர் | |
நிலப்பகுதிகளை நிர்வகிப்பதிலும், வழக்குகளை விசாரிப்பதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் பாளையக்காரர்களால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை. | |
பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது. | |
72 பாளையங்களுள் கிழக்கு மற்றும் மேற்கு என்ற இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த பாளையங்களே முக்கியத்துவம் பெற்றிருந்தன. |
Question 3 Explanation:
(குறிப்பு: நிலப்பகுதிகளை நிர்வகிப்பதிலும், வழக்குகளை விசாரிப்பதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் பாளையக்காரர்களால் தன்னிச்சையாக செயல்பட்டனர்.)
Question 4 |
நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட பாளையங்களுள் கிழக்கில் அமையப்பெற்ற பாளையம் எது?
நடுவக்குறிச்சி | |
சேத்தூர் | |
சிங்கம்பட்டி | |
சாத்தூர் |
Question 4 Explanation:
(குறிப்பு: சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகியன கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள். ஊத்துமலை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர் ஆகியன மேற்கில் அமைந்த பாளையங்கள் ஆகும்.)
Question 5 |
கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடனாகப் பணத்தை வாங்கியவர் யார்?
வேலுநாச்சியார் | |
புலித்தேவர் | |
ஆற்காட்டு நவாப் | |
திருவிதாங்கூர் மன்னர் |
Question 5 Explanation:
(குறிப்பு: ஆற்காட்டு நவாப் கடனைத் திரும்ப செலுத்தக்கூடிய நிலையை கடந்த போது, தெற்கத்தியப் பாளையக்காரர்களிடமிருந்து வரிவசூல் செய்யும் அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது.)
Question 6 |
களக்காடு போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
வேலுநாச்சியார் – யூசுப்கான் | |
புலித்தேவர் – யூசுப்கான் | |
வேலுநாச்சியார் – மாபூஸ்கான் | |
புலித்தேவர் – மாபூஸ்கான் |
Question 6 Explanation:
(குறிப்பு: களக்காடு போரில் திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் புலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.இதில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.)
Question 7 |
எந்த ஆண்டு புலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?
1760 மே 16 | |
1761 மே 16 | |
1760 ஜூன் 16 | |
1761 ஜூன் 16 |
Question 7 Explanation:
(குறிப்பு: நெற்கட்டும்செவல், வாசுதேவ நல்லூர் மற்றும் பனையூர் ஆகியவை மூன்று முக்கிய கோட்டைகளாகும்.)
Question 8 |
கான்சாகிப் காலமானதை தொடர்ந்து, புலித்தேவர் எந்த ஆண்டு நெற்கட்டும்செவலை மீண்டும் கைப்பற்றினார்?
1760 | |
1762 | |
1764 | |
1767 |
Question 8 Explanation:
(குறிப்பு: 1767 ல் கேப்டன் கேம்ப்பெல் என்பவரால் புலித்தேவர் மீண்டும் தோற்கடிக்கப்பட்டார். யூசுப்கான் மீது நம்பிக்கைத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 1764ல் தூக்கிலிடப்பட்டார்.)
Question 9 |
வேலுநாச்சியார் _________ ஆண்டு இராமநாதபுரத்தின் அரசர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே பெண் வாரிசாக தோன்றினார்.
1690 | |
1720 | |
1730 | |
1780 |
Question 9 Explanation:
(குறிப்பு: தனது 16வது வயதில் வேலுநாச்சியார் சிவகங்கை மன்னரான முத்துவடுகநாதரை மணந்து வெள்ளச்சி நாச்சியார் என்ற பெண்மகவை பெற்றார்.)
Question 10 |
1772 இல் ஆற்காட்டு நவாபும் _________ தலைமையிலான கம்பெனி படைகளும் இணைந்து காளையார்கோவில் அரண்மனையைத் தாக்கினர்.
கான்சாகிப் | |
மாபூஸ்கான் | |
பார்ன் ஜோர் | |
லெப்டினென்ட் க்ளார்க் |
Question 10 Explanation:
(குறிப்பு: இப்போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். தனது மகளோடு தப்பிச் சென்ற வேலுநாச்சியார் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார்.)
Question 11 |
________ இல் கம்பெனியாருடன் நவாப் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின்படி, மைசூரின் திப்பு சுல்தானுடன் ஆற்காட்டு நவாப் போர் புரிந்து கொண்டிருந்த போது, கர்நாடக பகுதியில் வரி மேலாண்மையும், நிர்வாகமும் கம்பெனியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் செல்லும் நிலை ஏற்பட்டது.
1771 | |
1776 | |
1781 | |
1791 |
Question 11 Explanation:
(குறிப்பு: வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்குமென ஒதுக்கப்பட்டது.)
Question 12 |
கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நில வரி நிலுவையானது 1798 ஆம் ஆண்டு வாக்கில் _______ பகோடாக்களாக இருந்தது.
2310 | |
3310 | |
3210 | |
3120 |
Question 12 Explanation:
(குறிப்பு: இவற்றை வசூலிப்பதற்காக ஜாக்சன் என்ற கர்வமுள்ள ஆட்சியர் இராணுவத்தை அனுப்ப முனைந்த போது மதராஸ் அரசாங்கம் அதற்கு அனுமதியளிக்க மறுத்தது.)
Question 13 |
எந்த ஆண்டு கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்தார்?
1789 ஆகஸ்ட் 18 | |
1789 செப்டம்பர் 19 | |
1798 ஆகஸ்ட் 18 | |
1798 செப்டம்பர் 19 |
Question 13 Explanation:
(குறிப்பு: 1798 ஆகஸ்ட் 18 இல் இராமநாதபுரத்தில் தன்னை சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஜாக்சன் ஆணை பிறப்பித்தார். ஆனால் கட்டபொம்மன் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததோடு குற்றாலம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களிலும் ஜாக்சன் அவரை சந்திக்க மறுத்தார்.)
Question 14 |
அமைச்சர் சிவசுப்ரமணியனாரை சிறையிலிருந்து விடுவித்தும், கலெக்டர் ஜாக்ஸனைப் பணி இடைநீக்கம் செய்தும் உததரவிட்ட ஆளுநர்
ராபர்ட் கிளைவ் | |
எட்வர்ட் கிளைவ் | |
வில்லியம் பிரௌன் | |
வில்லியம் ஓரம் |
Question 14 Explanation:
(குறிப்பு: சிவசுப்ரமணியனார் என்பவர் கட்டபொம்மனின் அமைச்சர். ஜாக்சன் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டு அவரது இடத்தில் புதிய ஆட்சியராக எஸ்.ஆர்.லூஷிங்டன் என்பவர் நியமிக்கப்பட்டார்.)
Question 15 |
திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், ஆனைமலையின் யதுல் நாயக்கர் போன்ற அருகாமையிலிருந்த பாளையங்களை உள்ளடக்கிய தென்னிந்திய கூட்டமைப்பை ஏற்படுத்தியவர்?
கட்டபொம்மன் | |
மருதுபாண்டியர் | |
வேலுநாச்சியார் | |
தீரன் சின்னமலை |
Question 15 Explanation:
(குறிப்பு: மருதுபாண்டியர் இக்கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டார்)
Question 16 |
கட்டபொம்மனைச் சரணடையக் கோரிய நிபந்தனை _____________ அன்று வழங்கப்பட்டது.
1798 ஜுன் 1 | |
1799 ஜுன் 1 | |
1799 செப்டம்பர் 1 | |
1798 செப்டம்பர் 1 |
Question 16 Explanation:
(குறிப்பு. மே 1799 இல் மதராஸில் இருந்த வெல்லஸ்லி பிரபு திருச்சி, தஞ்சாவூர் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல உத்தரவிட்டார். படைகளுக்கு மேஜர் பானர்மென் தலைமையேற்றார்.திருவிதாங்கூர் படைகளும் பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்தன. பின் கட்டபொம்மனை சரணடைய நிபந்தனை வழங்கப்பட்டது)
Question 17 |
மருது சகோதரர்களால் 'திருச்சிராப்பள்ளி பேரறிக்கை’ வெளியிடப்பட்ட ஆண்டு
1798 | |
1799 | |
1800 | |
1801 |
Question 17 Explanation:
(குறிப்பு: இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன் சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச்சுவரிலும் ஒட்டப்பட்டது.)
Question 18 |
இராமநாதபுரம் அருகே அமைந்த திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
1801 செப்டம்பர் 13 | |
1801 நவம்பர் 24 | |
1801 அக்டோபர் 24 | |
1801 நவம்பர் 24 |
Question 18 Explanation:
(குறிப்பு: ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801 நவம்பர் 16 இல் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்.)
Question 19 |
யாருடைய கலகம் ‘தென்னிந்திய புரட்சி’ என்று அழைக்கப்படுகிறது?
கட்டபொம்மன் | |
மருதுபாண்டியர் | |
வேலுநாச்சியார் | |
தீரன் சின்னமலை |
Question 19 Explanation:
(குறிப்பு: பாளையக்காரர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் அவர்களது வீரமும்,தியாகமும் எதிர்காலச் சந்ததிகளை ஈர்ப்பதாக அமைந்தது. இதனால் மருது சகோதரர்களின் கலகம் தென்னிந்திய புரட்சி என்று அழைக்கப்படுகிறது)
Question 20 |
________ ஆண்டு திப்புவோடு ஏற்பட்ட போரின் முடிவில் கிழக்கிந்திய கம்பெனி சேலம் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
1792 | |
1797 | |
1798 | |
1799 |
Question 20 Explanation:
(குறிப்பு: 1799 இல் நடந்த ஆங்கிலேயமைசூர் போரின் முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது.)
Question 21 |
1806 ஆம் ஆண்டு புரட்சி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த புதிய இராணுவ விதிமுறையை வெளியிட்டவர்
மேஜர் கூட்ஸ் | |
கர்னல் பேன்கோர்ட் | |
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் | |
சர் ஜான் கிரடாக் |
Question 21 Explanation:
(குறிப்பு: புதிய விதிமுறைகளின்படி, இந்திய வீரர்கள் சீருடையிலிருக்கும் போது சாதி அடையாளங்களையோ, காதணிகளையோ அணியக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் தாடையை முழுமையாகச் சவரம் செய்யவும் மீசையை ஒரே பாணியில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள்)
Question 22 |
1806 ஜூலை 10 அன்று எந்த படைப்பிரிவுகளை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்.
1 மற்றும் 3 | |
1 மற்றும் 23 | |
3 மற்றும் 23 | |
2 மற்றும் 4 |
Question 22 Explanation:
(குறிப்பு: இப்புரட்சியில் கோட்டைக் காவற்படையின் உயர்பொறுப்பு வகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர் முதல் பலியானார்.)
Question 23 |
சந்தாசாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
வேலுநாச்சியார் | |
கட்டபொம்மன் | |
புலித்தேவர் | |
ஊமைத்துரை |
Question 23 Explanation:
(குறிப்பு: மியானா, முடிமையா, நபீகான் கட்டாக் ஆகியோர் சந்தாசாகிப்பின் மூன்று முகவர்கள் ஆவர்.)
Question 24 |
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
கல்கத்தா | |
மும்பை | |
டெல்லி | |
மைசூர் |
Question 24 Explanation:
(குறிப்பு: வேலூர் கலகத்தின் போது புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பிரகடனம் செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர்.)
Question 25 |
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலை தெரிவிக்க பானெர்மென் _______ என்பவரை அனுப்பிவைத்தார்.
சிவசுப்ரமணியனார் | |
இராமலிங்கர் | |
கோபால நாயக்கர் | |
ஒண்டிவீரன் |
Question 25 Explanation:
(குறிப்பு: பாஞ்சால்ங்குறிச்சி கோட்டையின் இரகசியங்கள் அனைத்தையும் இராமலிங்கர் சேகரித்தார். அவரது அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பானர்மென் தாக்குதல் உத்திகளை வடிவமைத்தார்.)
Question 26 |
சென்னை வாசிகள் சங்கம் எந்த ஆண்டு கஜுலு லட்சுமி நரசு, சீனிவாசனார் மற்றும் அவர்களை சேர்ந்தோர்களால் நிறுவப்பட்டது?
1847 | |
1852 | |
1858 | |
1862 |
Question 26 Explanation:
(குறிப்பு: இவ்வமைப்பில் வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கம் வகித்தனர். 1862க்குப் பின்னர் இவ்வமைப்பு செயலிழந்தது)
Question 27 |
கீழ்க்கண்ட எந்த அமைப்பின் முயற்சிகளால் சித்திரவதை ஆணையம் நிறுவப்பட்டது?
சென்னை மகாஜன சபை | |
சென்னைவாசிகள் சங்கம் | |
திராவிடர் கழகம் | |
ஆரிய சமாஜம் |
Question 27 Explanation:
(குறிப்பு: இந்த ஆணையத்தின் மூலம் சித்திரவதை முறைகள் மூலம் கட்டாய வரி வசூல் முறையை நியாயப்படுத்திய சித்ரவதைச் சட்டம் ஒழிக்கப்பட்டது.)
Question 28 |
_________ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
G. சுப்பிரமணியம் | |
P. அனந்தாச்சார்லு | |
T. முத்துசாமி | |
P. ரங்கையா |
Question 28 Explanation:
(குறிப்பு: 1877 ல் T.முத்துசாமி அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியர் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டதை சென்னையைச் சேர்ந்த அனைத்து பத்திரிக்கைகளும் விமர்சனம் செய்தன.)
Question 29 |
சுப்பிரமணியம், M.வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து 1878 ல் ________ எனும் செய்திப் பத்திரிக்கையைத் தொடங்கினர்.
தி இந்து | |
சுதேசமித்திரன் | |
விஜயா | |
இந்தியா |
Question 30 |
சுப்பிரமணியம் அவர்களால் 1891 இல் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன் என்ற தேசியப் பருவ இதழ் எப்போது நாளிதழாக மாறியது ?
1893 | |
1895 | |
1899 | |
1908 |
Question 30 Explanation:
(குறிப்பு: தி இந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகள் தொடங்கியது இந்தியன் பேட்ரியாட் சவுத் இந்தியன் மெயில், மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா போன்ற உள்நாட்டுப் பத்திரிகைகள் தொடங்குவதற்கு ஊக்கமளித்தது.)
Question 31 |
தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு
சென்னை மகாஜன சபை | |
சென்னைவாசிகள் சங்கம் | |
திராவிடர் கழகம் | |
ஆரிய சமாஜம் |
Question 31 Explanation:
(குறிப்பு: 1884 மே 16 இல் M.வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு, P.ரங்கையா மற்றும் சிலரால் இவ்வமைப்பு நிறுவப்பட்டது)
Question 32 |
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக ________ பொறுப்பேற்றார்.
P. அனந்தாச்சார்லு | |
M. வீரராகவாச்சாரி | |
P. ரங்கையா | |
G. சுப்பிரமணியம் |
Question 32 Explanation:
(குறிப்பு: இவ்வமைப்பின் செயலாளராக P. அனந்தாச்சார்லு பொறுப்பேற்றார்.)
Question 33 |
இந்திய தேசிய காங்கிரசின் முதற்கூட்டம் 1885 இல் எங்கு நடைபெற்றது?
வங்காளம் | |
பூனே | |
சென்னை | |
பம்பாய் |
Question 33 Explanation:
(குறிப்பு: இதில் கலந்து கொண்ட 72 பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையை சேர்ந்தோராவர்)
Question 34 |
இந்தியா பொருளாதாரரீதியாக ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதைப் புரிந்துகொள்ள மேற்கொண்ட பங்களிப்புகளில் நௌரோஜி மற்றும் கோகலேவுக்கு இணையாக கருதப்படுபவர்
P. அனந்தாச்சார்லு | |
M. வீரராகவாச்சாரி | |
P. ரங்கையா | |
G. சுப்பிரமணியம் |
Question 34 Explanation:
(குறிப்பு: G. சுப்பிரமணியம் தனது எழுத்துக்களின் மூலமாக தேசியத்தை முன்னெடுத்தவர் ஆவார்.)
Question 35 |
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு 1886 ல் யாருடைய தலைமையில் நடைபெற்றது?
கோகலே | |
தாதாபாய் நௌரோஜி | |
பத்ருதீன் தியாப்ஜி | |
சுரேந்திரநாத் பானர்ஜி |
Question 35 Explanation:
(குறிப்பு: இரண்டாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது)
Question 36 |
மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் எத்தனை பேர் சென்னை மாகாணத்தை சேர்ந்தவர்கள்?
607 | |
607 | |
362 | |
562 |
Question 36 Explanation:
(குறிப்பு: மூன்றாவது காங்கிரஸ் மாநாடு 1887 இல் சென்னையில் ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டத்தில் பத்ருதீன் தியாப்ஜியின் தலைமையில் நடைபெற்றது.இதில் மொத்தம் 607 அகில இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.)
Question 37 |
கீழ்க்கண்ட எந்த இரு கப்பல்களை வ.உ.சி. விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்?
காலியா, சுதேசி | |
லாவோ, சுதேசி | |
பாரதி, சுதேசி | |
லாவோ, சுதேசி |
Question 37 Explanation:
(குறிப்பு: தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரால் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்டது.)
Question 38 |
தமிழ்நாட்டைச் சேர்ந்த புரட்சிகர தேசியவாதிகள் பலருக்கு புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் எங்கு வழங்கப்பெற்றது?
- லண்டன்
- பாரிஸ்
- கனடா
- ஜெர்மனி
- ஜப்பான்
1, 2 | |
2, 3 | |
1, 4 | |
1, 2, 5 |
Question 38 Explanation:
(குறிப்பு: லண்டனில் இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் இப்பயிற்சி வழங்கப் பெற்றது.M.P.T.ஆச்சார்யா, V. V. சுப்ரமணியனார்,T.S.S ராஜன் ஆகியோர் இப்பயிற்சி பெற்றவர்களில் முக்கியமானவர்களாவர்.)
Question 39 |
எந்த ஆண்டு நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினர்?
1902 | |
1903 | |
1904 | |
1906 |
Question 39 Explanation:
(குறிப்பு: ஆங்கில அதிகாரிகளைக் கொள்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.)
Question 40 |
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E ஆஷ் என்பவர் மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு
1910 ஜூன் 17 | |
1911 ஜூன் 17 | |
1910 ஜூலை 17 | |
1911 ஜூலை 17 |
Question 40 Explanation:
(குறிப்பு: செங்கோட்டையை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர் ஆஷை சுட்டுககொன்றார்.)
Question 41 |
பிரம்ம ஞான சபையின் தலைவரும், அயர்லாந்து பெண்மணியுமான அன்னிபெசன்ட் அவர்களால் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1901 | |
1914 | |
1916 | |
1918 |
Question 41 Explanation:
(குறிப்பு: அன்னிபெசன்ட் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார். இச்செயல் திட்டத்தில் G.S. அருண்டேல், B.P. வாடியா மற்றும் C.P ராமசாமி ஆகியோர் அவருக்கு துணை நின்றனர்.)
Question 42 |
நியூ இந்தியா, காமன் வீல் எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கியவர் யார்?
காந்தி | |
பாரதியார் | |
அன்னிபெசன்ட் | |
V.V. சுப்ரமணியனார் |
Question 42 Explanation:
(குறிப்பு: 1910 ஆம் ஆண்டு பத்திரிகைச் சட்டத்தின்படி அன்னிபெசன்ட் பிணைத்தொகையாக பெருமளவு பணத்தை செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டார்)
Question 43 |
‘விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது’, ‘இந்தியா: ஒரு தேசம்' எனும் இரண்டு புத்தகங்களை எழுதியவர்
வ.உ.சி | |
C.நடேசனார் | |
C.P. ராமசாமி | |
அன்னிபெசன்ட் |
Question 43 Explanation:
(குறிப்பு: அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என அன்னிபெசன்ட் கூறினார்.)
Question 44 |
எந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அன்னிபெசன்ட் தலைவராகத் தேர்வு செயயப்பட்டார்?
1916 | |
1917 | |
1918 | |
1919 |
Question 44 Explanation:
(குறிப்பு: தன்னாட்சி இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த B.P. வாடியா போன்றோர் தொழிற்சங்கங்களை உருவாக்கி தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவதில் முக்கிய பங்காற்றினர்.)
Question 45 |
சென்னை திராவிடர் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1910 | |
1912 | |
1914 | |
1916 |
Question 45 Explanation:
(குறிப்பு: இக்கழகத்தின் செயலராக C. நடேசனார் 1916 ஜுன் மாதத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக 'திராவிடர் சங்க தங்கும் விடுதி’ யை நிறுவினார்.)
Question 46 |
எந்த ஆண்டுச் சட்டம் பிராமணரல்லாதோர்களுக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கியது?
1917 | |
1918 | |
1919 | |
1921 |
Question 46 Explanation:
(குறிப்பு: இந்நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது ஆனால் நீதிக்கட்சியால் இது வரவேற்கப்பட்டது.)
Question 47 |
1920 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில், வெற்றி பெற்ற நீதிக் கட்சியின் முதலாவது முதலமைச்சர்
பனகல் அரசர் | |
A. சுப்பராயலு | |
P. தியாகராயர் | |
T.M. நாயர் |
Question 47 Explanation:
(குறிப்பு: சட்டமன்றத்தில் மொத்தமிருந்த 98 இடங்களில் 63 இல் நீதிக் கட்சி வெற்றி பெற்றது. 1923 இல் நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் நீதிக் கட்சியைச் சேர்ந்த பனகல் அரசர் அமைச்சரவையை அமைத்தார்.)
Question 48 |
கருப்புச் சட்டத்தை எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பும் வேலை நிறுத்தமும் எப்போது நடத்தப்பட்டன?
1919 மார்ச் 18 | |
1919 ஏப்ரல் 1 | |
1919 ஏப்ரல் 6 | |
1919 மார்ச் 16 |
Question 48 Explanation:
(குறிப்பு: ரௌலட் சட்டம், கருப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1919 மார்ச் 18 இல் மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்.)
Question 49 |
மதுரை மக்களால் ரோசாப்பு துரை என அழைக்கப்பட்டவர் யார்?
யாகுப் ஹாசன் | |
ஜார்ஜ் ஜோசப் | |
B.P. வாடியா | |
நடேசனார் |
Question 49 Explanation:
(குறிப்பு: ஜார்ஜ் ஜோசப் செங்கண்ணூரில் (கேரளா) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பினார்.மதுரை தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவினார்.)
Question 50 |
ஒத்துழையாமை இயக்கத்தை தமிழ்நாட்டில் தலைமையேற்று நடத்தியவர்கள்
- சத்தியமூர்த்தி
- C. ராஜாஜி
- ஈ.வெ. ராமசாமி
- வ.உ.சி
1, 2 | |
2, 3 | |
3, 4 | |
1, 4 |
Question 50 Explanation:
(குறிப்பு: முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவிய யாகுப்ஹசன் என்பாருடன் ராஜாஜி நெருக்கமாக செயல்பட்டார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தின் போது இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்து செயல்பட்டனர்.)
Question 51 |
எந்த ஆண்டு வைக்கத்தில் கோவிலைச் சுற்றியிருந்த வீதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது?
1923 | |
1924 | |
1925 | |
1927 |
Question 51 Explanation:
(குறிப்பு: திருவாங்கூர் அரசின் ஆட்சியிலிருந்த வைக்கம் எனும் ஊரில் நடைபெற்ற கோவில் நுழைவுக்கான சத்தியாகிரகத்தில் ஈ.வெ.ரா முக்கிய பங்கு வகித்தார்.)
Question 52 |
சென்னை மெளன்ட்ரோட்டில் அமைந்திருந்த நீல் சிலை அகற்றப்பட்டு சென்னை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆண்டு?
1924 | |
1927 | |
1937 | |
1939 |
Question 52 Explanation:
(குறிப்பு: ஜேம்ஸ் நீல் மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர். ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்த போது நீல் சிலை அகற்றப்பட்டது.)
Question 53 |
1919 ஆம் ஆண்டு சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்ய, ஜான் சைமனின் தலைமையில் ஓர் இந்திய சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
1921 | |
1924 | |
1927 | |
1929 |
Question 53 Explanation:
(குறிப்பு: வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்த இக்குழுவில் ஓர் இந்தியர் கூட இடம்பெறாதது இந்தியர்களுக்கு மிகப்பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. சென்னையில் S. சத்தியமூர்த்தி தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவொன்று உருவாக்கப்பட்டது.)
Question 54 |
1929 ஆம் ஆண்டு ________ இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் என்பதே இலக்கு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்கத்தா | |
பம்பாய் | |
சென்னை | |
லாகூர் |
Question 54 Explanation:
(குறிப்பு: 1927 இல் இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாநாடு முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்தது.)
Question 55 |
ராவி நதிக்கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக ஜவகர்லால் நேரு தேசிய கொடியை ஏற்றிய நாள்
1929 டிசம்பர் 26 | |
1929 ஜனவரி 26 | |
1930 ஜனவரி 26 | |
1930 டிசம்பர் 26 |
Question 56 |
காந்தியடிகள் தண்டியை நோக்கி உப்பு சத்தியாகிரக யாத்திரையை துவக்கிய நாள்
1930 மார்ச் 18 | |
1930 மார்ச் 12 | |
1930 ஏப்ரல் 13 | |
1930 ஏப்ரல் 28 |
Question 56 Explanation:
(குறிப்பு: ராஜாஜி ஏற்பாடு செய்திருந்த உப்பு சத்தியாகிரக அணிவகுப்பு 1930 ஏப்ரல் 13 இல் திருச்சியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28 இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தை சென்றடைந்தது.)
Question 57 |
ஆர்யா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றிய நாள்
1930 ஜனவரி 26 | |
1930 நவம்பர் 26 | |
1932 நவம்பர் 26 | |
1932 ஜனவரி 26 |
Question 57 Explanation:
(குறிப்பு: உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதி ஆவார்.)
Question 58 |
மாநில சுயாட்சிக்கு வழிவகுத்த சட்டம் ___________.
1919 – ரௌலட் சட்டம் | |
1935 - இந்திய அரசுச் சட்டம் | |
1858 – இந்திய அரசுச்சட்டம் | |
1852 - இந்திய அரசுச் சட்டம் |
Question 58 Explanation:
(குறிப்பு: சட்டமன்றத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள் குழு மாகாண அதிகாரங்களை நிர்வகித்தது. இருந்த போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைகளைப் புறக்கணிக்கும் அதிகாரத்தை ஆளுநர் பெற்றிருந்தார்.)
Question 59 |
ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை மதுவிலக்கைப் பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்த இடம்
வேலூர் | |
சேலம் | |
காஞ்சிபுரம் | |
திருவண்ணாமலை |
Question 59 Explanation:
(குறிப்பு: 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ராஜாஜி முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார். மதுவிலக்கு மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்)
Question 60 |
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ள குடிமை, சமூகக் குறைபாடுகளை அகற்றுவதற்காக எந்த ஆண்டு கோவில் நுழைவு அங்கீகார, இழப்பீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது?
1935 | |
1937 | |
1939 | |
1940 |
Question 60 Explanation:
(குறிப்பு: மதுரை ஹரிஜன சேவக் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதர், செயலர் L.N.கோபால்சாமி ஆகியோரால் 1939 ஜூலை 9 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஹரிஜன மக்களுடன் நுழைய திட்டமிடப்பட்டது.)
Question 61 |
பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிராக ஈ.வெ.ரா. இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்திய இடம் ________.
வேலூர் | |
சேலம் | |
மதுரை | |
சென்னை |
Question 61 Explanation:
(குறிப்பு: இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பும், முஸ்லிம் லீக்கும் ஆதரவளித்தன. காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து நிர்வாகத்தை கைக்கொண்ட சென்னை மாகாண ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் என்பதை நீக்கினார்.)
Question 62 |
_________ இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காந்தியடிகள் ‘செய் அல்லது செத்துமடி' எனும் முழக்கத்தை வழங்கினார்.
1930 ஆகஸ்டு 8 | |
1940 செப்டம்பர் 18 | |
1942 ஆகஸ்டு 8 | |
1943 நவம்பர் 26 |
Question 62 Explanation:
(குறிப்பு: ராயல் இந்தியக் கடற்படைப் புரட்சிம், இங்கிலாந்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தொழிலாளர் கட்சி அரசு தொடங்கிய பேச்சுவார்த்தைகளும் இந்திய விடுதலைக்கு வழிகோலின.)
Question 63 |
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது?
ஈரோடு | |
சென்னை | |
சேலம் | |
மதுரை |
Question 63 Explanation:
(குறிப்பு: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பக்கிங்காம் மற்றும் கர்நாட்டிக் மில், சென்னை துறைமுகம், சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார டிராம் போக்குவரத்து போன்ற இடங்களில் பெருமளவிலான தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றன.)
Question 64 |
விஸ்வநாத நாயக்கர் மதுரை நாயக்கராக பொறுப்பேற்ற ஆண்டு
1519 | |
1525 | |
1529 | |
1532 |
Question 64 Explanation:
(குறிப்பு: இவரால் தனது மாகாணங்களில் அதிகாரங்களைப் பெற விரும்பிய சிறுகுடித் தலைவர்களை கட்டுப்பட்டுத்த முடியவில்லை. இதனால் 1529ல் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார் . )
Question 65 |
- கூற்று 1: கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்.
- கூற்று 2: மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் புலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 65 Explanation:
(குறிப்பு: இந்த இரண்டு பாளையக்காரர்களும் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.)
Question 66 |
இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர்
சிவாஜி | |
முகமது அலி | |
புலித்தேவர் | |
கட்டபொம்மன் |
Question 66 Explanation:
(குறிப்பு: ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகளை திருநெல்வேலியில் புலித்தேவர் தோற்கடித்தார்.)
Question 67 |
புலித்தேவர் அவரது ஆட்சிக் காலத்தில் ஆற்காட்டு நவாபான________ கும் ஆங்கிலேருக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்கத் தொடங்கினார்.
ஹைதர் அலி | |
செளகத் அலி | |
முகமது அலி | |
யூசுப்கான் |
Question 68 |
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
கட்டபொம்மனின் முன்னோர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். | |
11ஆம் நூற்றாண்டில் அவர்கள் நாட்டிற்கு இடம் பெயர்ந்தனர். | |
பாண்டியர்களின் கீழ் நிலமானிய அடிப்படையில் பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராக கொண்டு ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், வீரபாண்டியபுரத்தை ஆட்சி செய்தார். | |
கர்நாடகாவில் நவாப் முகலாயர்களின் பிரதிநிதியாக செயல்பட்டார். |
Question 68 Explanation:
(குறிப்பு: கட்டபொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.)
Question 69 |
கலெக்டர் காலின் ஜாக்சன் நடந்து கொண்டதை ________ கவர்னராக இருந்த சென்னை கவுன்சிலுக்கு,கட்டபொம்மன் கடிதம் எழுதினார்.
ராபர்ட் கிளைவ் | |
எட்வர்ட் கிளைவ் | |
லூஷிங்டன் | |
வில்லியம் பெண்டிங் |
Question 70 |
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பில் இணைய மறுத்த பளையம்
மணப்பாறை | |
சிவகங்கை | |
இராமநாதபுரம் | |
சிவகிரி |
Question 70 Explanation:
(குறிப்பு: இதனால் கட்டபொம்மன் சிவகிரியின் மீது தனது செல்வாக்கை செலுத்த முயன்று சிவகிரி மீது படையெடுத்தார்.)
Question 71 |
களப்பூர் காட்டில் மறைந்திருந்த கட்டபொம்மனை _________ன் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து கம்பெனியிடம் ஒப்படைத்தார்.
மைசூர் | |
வேலூர் | |
கோயம்புத்தூர் | |
புதுக்கோட்டை |
Question 71 Explanation:
(குறிப்பு: கள்ளர் பட்டியில் நடந்த சண்டையில் அமைச்சர் சிவசுப்பிரமணிWம் கைது செய்யப்பட்டார்.)
Question 72 |
வீரபாண்டிய கட்டபொம்மன் எப்போது கயத்தாறு கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்?
1798 அக்டோபர் 16 | |
1798 அக்டோபர் 17 | |
1799 அக்டோபர் 16 | |
1799 அக்டோபர் 17 |
Question 72 Explanation:
(குறிப்பு: 1799 அக்டோபர் 16 ஆம் நாள் பாளையக்காரர் அவையின் முன் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டார். நாகலாபுரத்தில் சிவசுப்ரமணியம் சிரச்சேதம் செய்யப்பட்டார்.)
Question 73 |
தமிழர்களால் வீரமங்கை எனவும் தென்னிந்தியாவின் ஜான்சிராணி எனவும் அறியப்படுபவர்
பொன்னாத்தாள் | |
அஞ்சலையம்மாள் | |
வேலுநாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 74 |
பிப்ரவரி 1801 ல் கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும் செவத்தையாவும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்து __________ வந்தடைந்தனர்.
சிறுவயல் | |
பாளையங்கோட்டை | |
கமுதி | |
சிவகங்கை |
Question 74 Explanation:
(குறிப்பு: அங்கிருந்து அவர்களை தனது தலைநகர் சிறுவயலுக்கு சின்னமருது அழைத்து சென்றார்.)
Question 75 |
_________ ஆண்டு சிவகங்கையை ஆங்கிலேயர் இணைத்துக் கொண்டனர்.
1799 | |
1800 | |
1801 | |
1803 |
Question 75 Explanation:
(குறிப்பு: 73 கிளர்ச்சியாளர்கள் மலாயாவின் பினாங்கிற்கு (பின்னர் வேல்ஸ் இளவரசர் தீவு என அழைக்கப்பட்டது) நாடு கடத்தப்பட்டனர்.)
Question 76 |
தவறான தொடரைத் தேர்ந்தெடு
தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையத்தில் பிறந்தார். | |
தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி. | |
கொங்கு நாடு என்பது சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கள் பகுதிகளை உள்ளடக்கிய மதுரை நாயக்க அரசின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டிருந்தது. | |
தீரன் சின்னமலை தனது சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக் கொடுக்கப்பட்டதால் 1804 ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். |
Question 76 Explanation:
(குறிப்பு: தீரன் சின்னமலை தனது சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக் கொடுக்கப்பட்டதால் 1805 ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.)
Question 77 |
________ போருக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.
இரண்டாவது கர்நாடகப்போர் | |
இரண்டாவது மைசூர் போர் | |
மராத்திய போர் | |
நான்காம் மைசூர் போர் |
Question 77 Explanation:
(குறிப்பு: மைசூரின் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்கள் வேலூருக்கு அருகில் இடம் பெயர்ந்தனர்.)
Question 78 |
வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் என்பவர் எப்போது சென்னை மாகாண கவர்னரானார்?
1802 | |
1803 | |
1805 | |
1806 |
Question 78 Explanation:
(குறிப்பு: வில்லியம் பெண்டிங் காலத்தில் (1805-1806) சில கட்டுப்பாடுகள் இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை பின்பற்ற வேண்டுமென இராணுவ வீரர்கள் சென்னை மாகாண படைத்தளபதி சர் ஜான் கிரடாக் என்பவரால் கட்டாயப்படுத்தப்பட்டனர்)
Question 79 |
ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியவர்
வில்லியம் பெண்டிங் | |
சர் ஜான் கிரடாக் | |
அக்னியூ | |
எட்வர்டு கிளைவ் |
Question 79 Explanation:
(குறிப்பு: ஜூன் 1806ல் அக்னியூ தலைப்பாகை அறிமுகப்படுத்தப்பட்டது.)
Question 80 |
வேலூர் கலகத்தில், கிளர்ச்சி படைகளின் மீது தாக்குதல் நடத்தி கலகத்தை முழுமையாக அடக்கியவர்
மேஜர் கூட்ஸ் | |
கர்னல் பான் கோர்ட் | |
கர்னல் கில்லெஸ்பி | |
வில்லியம் பெண்டிங் |
Question 80 Explanation:
(குறிப்பு: கலகத்தில் மொத்தம் 113 ஐரோப்பியர்கள் மற்றும் சுமார் 350 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.)
Question 81 |
வேலூர் கலகத்தின் தோல்விக்கான காரணங்களில் தவறானது எது?
இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை. | |
கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப்படவில்லை | |
ஆங்கிலேயரின் பிரித்தாலும் கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது. | |
ஆங்கிலேய படைகளுக்கு நிகரான ஆயுதங்கள், போர்கருவிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. |
Question 82 |
1806ல் நடந்த வேலூர் கலகத்தை, 1857ல் நடைபெற்ற "முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி" எனக் கூறியவர்
யாகுப் ஹாசன் | |
ஜார்ஜ் ஜோசப் | |
B.P. வாடியா | |
வி.டி.சவார்க்கர் |
Question 83 |
1857_________ஆம் நாள் பாரக்பூரில் உள்ள வங்காள படைப் பிரிவைச் சேர்ந்த மங்கள் பாண்டே கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்த மறுத்து தனது உயரதிகாரியை சுட்டுக்கொன்றார்.
ஏப்ரல் 18 | |
ஏப்ரல் 29 | |
மார்ச் 29 | |
மார்ச் 19 |
Question 83 Explanation:
(குறிப்பு: 1857 மே 10ஆம் நாள் மீரட்டில் மூன்றாம் குதிரைப்படையை சேர்ந்த சிப்பாய்கள் சிறைச்சாலையை உடைத்து புரட்சியில் ஈடுபட்டனர். டெல்லிக்கு வந்த மீரட் சிப்பாய்கள் மே 11 ஆம் நாள் இரண்டாம் பகதூர்ஷாவை இந்தியாவின் பேரரசராக அறிவித்தனர்.)
Question 84 |
கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
திண்டுக்கல் | |
நாகலாபுரம் | |
புதுக்கோட்டை | |
ஓடாநிலை |
Question 84 Explanation:
(குறிப்பு: சின்னமலை சுல்தான் பக்கம் இருந்து ஆங்கிலேயருக்கெதிராக போராடி வெற்றி பெற்றார். திப்பு சுல்தான் இறந்த பிறகு, இவர் ஓடாநிலையில் தங்கி ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்துப் போராட அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார்.)
Question 85 |
ஜி.சுப்ரமணிய அய்யர் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்த ஆண்டு
1884 | |
1885 | |
1888 | |
1889 |
Question 85 Explanation:
(குறிப்பு : ஜி.சுப்ரமணிய அய்யர் 1885 ஆம் ஆண்டு முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் முதலாவது தீர்மானத்தை கொண்டு வந்தார்.)
Question 86 |
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது
சூரத் பிளவு | |
வங்கப் பிரிவினை | |
ஒத்துழையாமை இயக்கம் | |
வேலூர் கலகம் |
Question 86 Explanation:
(குறிப்பு: தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களில் வ.உ.சி, சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.)
Question 87 |
__________ ஆண்டு பாரதியார் காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான பிபின் சந்திரபால் என்பவரை சென்னை நகருக்கு வரவழைத்து உரை நிகழ்த்தச் செய்தார்.
1905 | |
1906 | |
1907 | |
1909 |
Question 87 Explanation:
(குறிப்பு: பாரதி ‘இந்தியா’ என்ற தமிழ்வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.சுதேச கீதங்கள் என்றழைக்கப்படும் தேசிய பாடல்களை அவர் எழுதினார்.)
Question 88 |
வ.உ.சிதம்பரம் பிள்ளை யாருடைய சீடராக திகழ்ந்தார்?
கோபால கிருஷ்ண கோகலே | |
பாரதியார் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
பாலகங்காதர திலகர் |
Question 88 Explanation:
(குறிப்பு: வ.உ.சி ஒரு வழக்குரைஞராக தமது வாழ்க்கையைத் தொடங்கினார். 1905ல் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார்.)
Question 89 |
எந்த ஆண்டு தூத்துக்குடியில் சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தை வ.உ.சி நிறுவினார்.
1904 | |
1906 | |
1910 | |
1916 |
Question 89 Explanation:
(குறிப்பு: 1908ல் தூத்துக்குடியில் நடைபெற்ற பவழ ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை வ.உ.சி முன்னின்று நடத்தினார்.)
Question 90 |
காந்தியின் செயல் திட்டங்களில் சட்டசபை புறக்கணிப்பே முக்கியமானது என்று வலியுறுத்தியவர்
ஈ.வெ.ரா | |
சத்தியமூர்த்தி | |
ராஜாஜி | |
காமராசர்காமராசர் |
Question 90 Explanation:
(குறிப்பு: கஸ்தூரிரங்க அய்யங்கார், சீனுவாச அய்யங்கார், வரதராஜூலு நாயுடு, விஜயராகவாச்சாரி போன்ற தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.)
Question 91 |
__________ நடத்தி வந்த சேரன்மாதேவி குருகுலத்தில் சமூகப் பாகுபாடு நிலவுவதைக் கண்டித்த பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.
வி.வி.எஸ். அய்யர் | |
சத்தியமூர்த்தி | |
ராஜாஜி | |
காமராசர் |
Question 92 |
எந்த ஆண்டு காமராசர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், பொருளாளராகவும் விளங்கினார்
1924 | |
1926 | |
1929 | |
1932 |
Question 92 Explanation:
(குறிப்பு: 1924ல் வைக்கம் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதின் மூலம் காமராசர் தேசிய இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்தி கொண்டார்.)
Question 93 |
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை எந்த ஆண்டு வரை பதவியில் இருந்தது?
1938 அக்டோபர் | |
1938 செப்டம்பர் | |
1939 அக்டோபர் | |
1939 செப்டம்பர் |
Question 93 Explanation:
(குறிப்பு: இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகிய போது ராஜாஜி அமைச்சரவையும் பதவி விலகியது.)
Question 94 |
1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலையடைந்த போது, _________ தலைமையிலான சென்னை அரசாங்கம் இந்திய விடுதலை சட்டத்தை பாராட்டி தீர்மானத்தை இயற்றியது.
சத்தியமூர்த்தி | |
காமராசர் | |
ராஜாஜி | |
ஒ.பி.ராமசாமி செட்டியார் |
Question 95 |
வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர்
கிருஷ்ணப்ப நாயக்கர் | |
கோபால நாயக்கர் | |
ஜெகவீர பாண்டியன் | |
கேரள வர்மா |
Question 95 Explanation:
(குறிப்பு: தந்தையின் மறைவிற்கு பிறகு, முப்பதாவது வயதில் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்.)
Question 96 |
நெல்கட்டும்செவல் பகுதியை கைப்பற்றியவர்
கர்னல் ஹெரான் | |
கர்னல் கேம்ப்பெல் | |
காலின் ஜாக்சன் | |
புலித்தேவர் |
Question 96 Explanation:
(குறிப்பு: 1767ல் கர்னல் கர்மப்பெல் நெல்கட்டும்செவல் பகுதியை கைப்பற்றினார்.)
Question 97 |
பொருத்துக
- மது பாண்டியர் i) நெல் கட்டும் செவல்
- கோபால நாயக்கர் ii) மைசூர்
- கேரள வர்மா iii) மலபார்
- கிருஷ்ணப்ப நாயக்கர் iv) திண்டுக்கல்
- புலித் தேவர் v) சிவகங்கை
i iii iv v ii | |
v iv iii ii i | |
ii iii iv v i | |
v ii iii iv i |
Question 98 |
சரியான தொடரை தேர்ந்தெடு
வட இந்தியாவின் அரசியலில் பாளையக்காரர்கள் வலிமை பெற்று விளங்கினர். | |
யூசுப்கான், கான்சாகிப் என்றும் அழைக்கப்பட்டார். | |
சிவசுப்ரமணிய பிள்ளை, மருதுபாண்டியரின் அமைச்சர் . | |
தென்னிந்திய கூட்டிணைவு ஊமைத்துரையின் தலைமையில் அமைக்கப்பட்டது. |
Question 99 |
பின்வருவனவற்றுள் வேலூர் கலகத்திற்கான காரணம் எது?
வாரிசு இழக்கும் கொள்கை | |
கப்பம் வசூலித்தனர் | |
புதிய ஆயுதங்களையும் சீருடைகளையும் அறிமுகப்படுத்தியது | |
பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார சுரண்டல் |
Question 100 |
வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர்
கர்னல் பான் கோர்ட் | |
மேஜர் ஆம்ஸ்ட்ராங் | |
மேஜர் கூட்ஸ் | |
கர்னல் ஜில்லெஸ்பி |
Question 100 Explanation:
(குறிப்பு: 23ம் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.