November 3rd Week 2020 Current Affairs Online Test Tamil
November 3rd Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1.டிஜிட்டல் செய்தி இணையதளங்கள், ஆன்லைன் திரைப்படங்கள் மற்றும் உள்ளடக்க வழங்குநர்களை கண்காணிக்கும் மத்திய அமைச்சகம் எது?
Correct
• நடுவணரசின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, டிஜிட்டல் அல்லது ஆன்லைன் மீடியா, திரைப்படங்கள் மற்றும் ஒளி-ஒலி நிகழ்ச்சிகள், செய்தி & நடப்பு நிகழ்வுகளின் உள்ளடக்கம் ஆகிய அனைத்தும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்படும். தற்போது நாட்டில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நிர்வகிக்கும் எந்தவொரு சட்டமோ (அ) தன்னாட்சி அமைப்போ கிடையாது. இந்த உத்தரவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
Incorrect
• நடுவணரசின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, டிஜிட்டல் அல்லது ஆன்லைன் மீடியா, திரைப்படங்கள் மற்றும் ஒளி-ஒலி நிகழ்ச்சிகள், செய்தி & நடப்பு நிகழ்வுகளின் உள்ளடக்கம் ஆகிய அனைத்தும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்படும். தற்போது நாட்டில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நிர்வகிக்கும் எந்தவொரு சட்டமோ (அ) தன்னாட்சி அமைப்போ கிடையாது. இந்த உத்தரவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
-
Question 2 of 50
2. Question
2. நடப்பாண்டில் (2020) வரும் உலக நகரங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
• உலகளாவிய நகரமயமாக்கலில் ஆர்வங்கொண்ட பன்னாட்டுச் சமூகங்ககளை ஊக்குவிப்பதற்காகவும் நகரமயமாக்கலில் சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.31 அன்று உலக நகரங்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Valuing Our Communities and Cities” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். “Better City, Better Life” என்பது இந்நாளுக்கு வழங்கப்பெறும் பொதுவான கருப்பொருளாகும்.
Incorrect
• உலகளாவிய நகரமயமாக்கலில் ஆர்வங்கொண்ட பன்னாட்டுச் சமூகங்ககளை ஊக்குவிப்பதற்காகவும் நகரமயமாக்கலில் சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.31 அன்று உலக நகரங்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Valuing Our Communities and Cities” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். “Better City, Better Life” என்பது இந்நாளுக்கு வழங்கப்பெறும் பொதுவான கருப்பொருளாகும்.
-
Question 3 of 50
3. Question
3.நடப்பாண்டில் (2020) வரும் உலக நிமோனியா நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
• பொதுநலவாழ்வு பிரச்சனையான நுரையீரல் அழற்சியின் தீவிரத்தன்மையை எடுத்துரைக்கவும், மேலும் அந்நோயை எதிர்த்துப்போராடுவதற்கு அமைப்புகள் & நாடுகளை ஊக்கப்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று உலக நுரையீரல் அழற்சி நாள் (Pneumonia Day) கடைப்பிடிக்கப்படுகிறது. “Every Breath Counts” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
• பொதுநலவாழ்வு பிரச்சனையான நுரையீரல் அழற்சியின் தீவிரத்தன்மையை எடுத்துரைக்கவும், மேலும் அந்நோயை எதிர்த்துப்போராடுவதற்கு அமைப்புகள் & நாடுகளை ஊக்கப்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று உலக நுரையீரல் அழற்சி நாள் (Pneumonia Day) கடைப்பிடிக்கப்படுகிறது. “Every Breath Counts” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 4 of 50
4. Question
4. ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வென்ற விளையாட்டு ஆளுமை யார்?
Correct
• உலகின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சென் மெங் (26), இந்த ஆண்டு (2020) ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வென்றார். சீன நாட்டைச்சேர்ந்த சன் யிங்ஷாவை வீழ்த்தி சென் மெங் தனது முதல் ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வெய்ஹாயில் வென்றார். ITTF’இன் #RESTART தொடரின் முதல் வெற்றியாளராகவும் அவர் மாறியுள்ளார்.
Incorrect
• உலகின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சென் மெங் (26), இந்த ஆண்டு (2020) ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வென்றார். சீன நாட்டைச்சேர்ந்த சன் யிங்ஷாவை வீழ்த்தி சென் மெங் தனது முதல் ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வெய்ஹாயில் வென்றார். ITTF’இன் #RESTART தொடரின் முதல் வெற்றியாளராகவும் அவர் மாறியுள்ளார்.
-
Question 5 of 50
5. Question
5.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘உள்ளக சந்தை மசோதா’வுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
• BREXIT செயல்முறைக்குப் பிறகு பிரிட்டனின் 4 நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை பாதுகாக்க ‘உள்ளக சந்தை மசோதா’ வடிவமைக்கப்பட்டது. அண்மையில், பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒப்பந்தத்தை மீறுவதற்காக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி தரும் மசோதாவில் உள்ள உட்பிரிவுகளுக்கு எதிராக பிரபுக்கள் அவை வாக்களித்தது. இது மேலவையில் ஆளும் பழமைவாத கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
Incorrect
• BREXIT செயல்முறைக்குப் பிறகு பிரிட்டனின் 4 நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை பாதுகாக்க ‘உள்ளக சந்தை மசோதா’ வடிவமைக்கப்பட்டது. அண்மையில், பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒப்பந்தத்தை மீறுவதற்காக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி தரும் மசோதாவில் உள்ள உட்பிரிவுகளுக்கு எதிராக பிரபுக்கள் அவை வாக்களித்தது. இது மேலவையில் ஆளும் பழமைவாத கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
-
Question 6 of 50
6. Question
6.இந்தியா-ASEAN உச்சிமாநாட்டை, எந்த நாட்டின் தலைவருடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கவுள்ளார்?
Correct
• மெய்நிகராக நடைபெறவுள்ள 17ஆவது இந்தியா-ASEAN உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாமிய பிரதமர் நுயேன் ஜுவான் புக் உடன் இணைந்து தலைமை வகிப்பார். ASEAN-இந்தியா செயல்திட்டத்தை (2021-2025) ஏற்றுக்கொள்வதில் இருநாட்டு தலைவர்களும் தங்களது கவனத்தை செலுத்துவார்கள். கடந்த ஆண்டு நவம்பரில், பாங்காக்கில் நடந்த 16ஆவது ASEAN-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
Incorrect
• மெய்நிகராக நடைபெறவுள்ள 17ஆவது இந்தியா-ASEAN உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாமிய பிரதமர் நுயேன் ஜுவான் புக் உடன் இணைந்து தலைமை வகிப்பார். ASEAN-இந்தியா செயல்திட்டத்தை (2021-2025) ஏற்றுக்கொள்வதில் இருநாட்டு தலைவர்களும் தங்களது கவனத்தை செலுத்துவார்கள். கடந்த ஆண்டு நவம்பரில், பாங்காக்கில் நடந்த 16ஆவது ASEAN-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
-
Question 7 of 50
7. Question
7.நடப்பாண்டில் (2020) வரும் உலக நீரழிவு நோய் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
• நீரழிவு நோயை கண்டறிவது தடுப்பது மற்றும் நிர்வகிப்பது குறித்து குடும்பங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.16 அன்று உலக நீரழிவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “The Nurse and Diabetes” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலக நாடுகளை நீரழிவு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டமொன்றை இந்நாளின்போது உலக நலவாழ்வு அமைப்பு (WHO) அறிவித்தது.
Incorrect
• நீரழிவு நோயை கண்டறிவது தடுப்பது மற்றும் நிர்வகிப்பது குறித்து குடும்பங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.16 அன்று உலக நீரழிவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “The Nurse and Diabetes” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலக நாடுகளை நீரழிவு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டமொன்றை இந்நாளின்போது உலக நலவாழ்வு அமைப்பு (WHO) அறிவித்தது.
-
Question 8 of 50
8. Question
8.எத்தனை துறைகளுக்கான `1.46 இலட்சம் கோடி வரை மதிப்புள்ள ‘உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
Correct
• பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பத்து முக்கிய துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தி ‘தற்சார்பு இந்தியா’ இலட்சியத்தை அடையும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
• (1) மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம்; (2) மின்னணு மற்றும் தொழில்நுட்பப் பொருட்கள்; (3) வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள்; (4) மருந்துகள்; (6) தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் பொருட்கள்; (7) ஜவுளிப் பொருட்கள்; (8) உணவுப் பொருட்கள்; (9) அதிக திறன்கொண்ட சூரிய ஆற்றல் ஒளி மின்னழுத்தப் பொருட்கள் மற்றும் (10) சிறப்பு எஃகு ஆகிய துறைகள் இதில் அடங்கும்.Incorrect
• பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பத்து முக்கிய துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தி ‘தற்சார்பு இந்தியா’ இலட்சியத்தை அடையும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
• (1) மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம்; (2) மின்னணு மற்றும் தொழில்நுட்பப் பொருட்கள்; (3) வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள்; (4) மருந்துகள்; (6) தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் பொருட்கள்; (7) ஜவுளிப் பொருட்கள்; (8) உணவுப் பொருட்கள்; (9) அதிக திறன்கொண்ட சூரிய ஆற்றல் ஒளி மின்னழுத்தப் பொருட்கள் மற்றும் (10) சிறப்பு எஃகு ஆகிய துறைகள் இதில் அடங்கும். -
Question 9 of 50
9. Question
9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ORF3d’ என்றால் என்ன?
Correct
• கொரோனா வைரஸில், ‘ORF3d’ என்றவொரு புதிய மறைந்திருந்த மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். ஒன்றுக்கு மேல் ஒன்றாக அமைந்துள்ள இந்தப் புதிய ‘ORF3d’ மரபணு, தனித்துவமான உயிரியல் துறைக்கும் அதேவேளையில் தொற்றுநோய்க்கும் இது பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. COVID-19 வைரசுக்கு எதிரான புதிய தடுப்பூசிகளின் உருவாக்கத்திற்கும் இது வழிவகுக்கும். இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை, ‘eLife’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Incorrect
• கொரோனா வைரஸில், ‘ORF3d’ என்றவொரு புதிய மறைந்திருந்த மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். ஒன்றுக்கு மேல் ஒன்றாக அமைந்துள்ள இந்தப் புதிய ‘ORF3d’ மரபணு, தனித்துவமான உயிரியல் துறைக்கும் அதேவேளையில் தொற்றுநோய்க்கும் இது பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. COVID-19 வைரசுக்கு எதிரான புதிய தடுப்பூசிகளின் உருவாக்கத்திற்கும் இது வழிவகுக்கும். இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை, ‘eLife’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Question 10 of 50
10. Question
10. ‘வேம்கோ’ சூறாவளியானது கீழ்க்காணும் எந்த நாட்டைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது?
Correct
• ‘வேம்கோ’ சூறாவளியானது பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரைகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது. எனவே, கிழக்கு கடலோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை அப்பகுதியை காலி செய்துவிட்டு பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்ல அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச் சூறாவளி, பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் (2020) வரும் 21ஆவது வெப்பமண்டல சூறாவளியாகும்.
Incorrect
• ‘வேம்கோ’ சூறாவளியானது பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரைகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது. எனவே, கிழக்கு கடலோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை அப்பகுதியை காலி செய்துவிட்டு பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்ல அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச் சூறாவளி, பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் (2020) வரும் 21ஆவது வெப்பமண்டல சூறாவளியாகும்.
-
Question 11 of 50
11. Question
1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘IBSA’ என்பதன் விரிவாக்கம் என்ன?
Correct
இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்காவின் (IBSA) “Deepening Cooperation in IBSA: Perspectives from Key Sectors” என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் இராகுல் சாப்ரா வெளியிட்டுள்ளார். ‘IBSA Visiting Fellowship’ திட்டத்தின்கீழ் இரண்டாம் தொகுதி உறுப்பினர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
Incorrect
இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்காவின் (IBSA) “Deepening Cooperation in IBSA: Perspectives from Key Sectors” என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் இராகுல் சாப்ரா வெளியிட்டுள்ளார். ‘IBSA Visiting Fellowship’ திட்டத்தின்கீழ் இரண்டாம் தொகுதி உறுப்பினர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
-
Question 12 of 50
12. Question
2. “ஹுனார் ஹாத்” என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?
Correct
“ஹுனார் ஹாத்” என்பது மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. COVID-19 பெருந்தொற்றால் சுமார் ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு, ‘ஹுனார் ஹாத்’ புது தில்லியின் பிதாம்புராவில் உள்ள தில்லி ஹாதத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. “Vocal for Local” என்பது இந்த நிகழ்வுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
“ஹுனார் ஹாத்” என்பது மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. COVID-19 பெருந்தொற்றால் சுமார் ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு, ‘ஹுனார் ஹாத்’ புது தில்லியின் பிதாம்புராவில் உள்ள தில்லி ஹாதத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. “Vocal for Local” என்பது இந்த நிகழ்வுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
Question 13 of 50
13. Question
3. UNESCO’ஆல் நடப்பாண்டிற்கான (2020) உலக நூல்கள் தலைநகராக அறிவிக்கப்பட்ட நகரம் எது?
Correct
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் நடப்பாண்டிற்கான (2020) உலக நூல்கள் தலைநகராக UNESCO’ஆல் அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல்.23 அன்று உலக நூல்கள் & பதிப்புரிமை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. UNESCO அமைப்பானது வெளியீட்டாளர்கள், நூல் விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் உலக நூல்கள் தலைநகரத்தை தேர்ந்தெடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக நூல்கள் தலைநகரமாக (2020), கோலாலம்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Incorrect
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் நடப்பாண்டிற்கான (2020) உலக நூல்கள் தலைநகராக UNESCO’ஆல் அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல்.23 அன்று உலக நூல்கள் & பதிப்புரிமை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. UNESCO அமைப்பானது வெளியீட்டாளர்கள், நூல் விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் உலக நூல்கள் தலைநகரத்தை தேர்ந்தெடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக நூல்கள் தலைநகரமாக (2020), கோலாலம்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Question 14 of 50
14. Question
4. ஆறு மாத குறுக்கத்திற்குப் பிறகு, இந்தியாவின் எந்தப் பொருளாதார நடவடிக்கை 0.2% என சாதகமாக வளர்ந்துள்ளது?
Correct
இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு எண்ணானது ஆண்டு அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆறு மாத தொடர்ச்சியான குறுக்கத்திற்குப் பிறகு, இந்தக் குறியீட்டின் வளர்ச்சி நேர்மறையாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 7.36% குறுக்கம் பதிவு செய்யப்பட்டது. நுகர்வோர் பொருட்கள், மின் & சுரங்கத்துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
Incorrect
இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு எண்ணானது ஆண்டு அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆறு மாத தொடர்ச்சியான குறுக்கத்திற்குப் பிறகு, இந்தக் குறியீட்டின் வளர்ச்சி நேர்மறையாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 7.36% குறுக்கம் பதிவு செய்யப்பட்டது. நுகர்வோர் பொருட்கள், மின் & சுரங்கத்துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
-
Question 15 of 50
15. Question
5.அண்மையில், இந்திய எண்ணெய் நிறுவனத்தால் (OIL) இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்ட டின்சுகியா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான இந்திய எண்ணெய் நிறுவனம் அண்மையில், அஸ்ஸாம் மாநிலத்தின் டின்சுகியாவில் தோண்டப்பட்ட கிணற்றில் இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டறிந்தது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல் அஸ்ஸாம் படுகையில் உள்ள டின்சுகியாவில் உள்ள டின்ஜன்-1 கிணற்றில் 10 மீட்டர் அளவுக்கு ஹைட்ரோகார்பன் உள்ளது. இக்கண்டுபிடிப்பானது அஸ்ஸாம் மாநிலத்தில் மேலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுக்கான புதிய பகுதிகளை ஆராய உதவும்.
Incorrect
இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான இந்திய எண்ணெய் நிறுவனம் அண்மையில், அஸ்ஸாம் மாநிலத்தின் டின்சுகியாவில் தோண்டப்பட்ட கிணற்றில் இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டறிந்தது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல் அஸ்ஸாம் படுகையில் உள்ள டின்சுகியாவில் உள்ள டின்ஜன்-1 கிணற்றில் 10 மீட்டர் அளவுக்கு ஹைட்ரோகார்பன் உள்ளது. இக்கண்டுபிடிப்பானது அஸ்ஸாம் மாநிலத்தில் மேலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுக்கான புதிய பகுதிகளை ஆராய உதவும்.
-
Question 16 of 50
16. Question
6.பிரதமரின் KUSUM திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
பிரதமரின் உழவர்கள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எழுச்சி பேரியக்கத்தின் (Prime Minister Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan–KUSUM) முதலாமாண்டு செயல்பாட்டில் அறிந்துகொண்டவற்றின் அடிப்படையில், இந்தத் திட்டத்துக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் செய்துள்ளது.
வேளாண் துறையில் அதிக அளவில் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக பிரதமரின் KUSUM திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, தரிசு நிலம் மற்றும் விவசாய நிலம் தவிர, விவசாயிகளின் மேய்ச்சல் நிலத்திலும், சதுப்பு நிலத்திலும் சூரிய ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். சிறு உழவர்களும் இதில் பங்குபெறும் விதமாக சூரிய ஆற்றல் ஆலைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.Incorrect
பிரதமரின் உழவர்கள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எழுச்சி பேரியக்கத்தின் (Prime Minister Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan–KUSUM) முதலாமாண்டு செயல்பாட்டில் அறிந்துகொண்டவற்றின் அடிப்படையில், இந்தத் திட்டத்துக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் செய்துள்ளது.
வேளாண் துறையில் அதிக அளவில் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக பிரதமரின் KUSUM திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, தரிசு நிலம் மற்றும் விவசாய நிலம் தவிர, விவசாயிகளின் மேய்ச்சல் நிலத்திலும், சதுப்பு நிலத்திலும் சூரிய ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். சிறு உழவர்களும் இதில் பங்குபெறும் விதமாக சூரிய ஆற்றல் ஆலைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. -
Question 17 of 50
17. Question
7.இந்தியாவின் ஒரே நிறுவனமயமாக்கப்பட்ட முதன்மை துறைமுகம் எது?
Correct
சோழமண்டலக் கடற்கரையில் எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம், இந்தியாவின் ஒரே நிறுவனமயமாக்கப்பட்ட முதன்மை துறைமுகமாகும். இது, ஒரு பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் துறைமுகமாகும். ‘MSC Faith’ என்ற மிகப்பெரிய கொள்கலன் கப்பலைக் இத் துறைமுகம் அண்மையில் கையாண்டதை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் புதிய தலைமுறை முனையத்தில் நவீன பாரந்தூக்கிகள் மற்றும் போதுமான புழக்கடை நிறுத்த வசதிகளும் உள்ளன.
Incorrect
சோழமண்டலக் கடற்கரையில் எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம், இந்தியாவின் ஒரே நிறுவனமயமாக்கப்பட்ட முதன்மை துறைமுகமாகும். இது, ஒரு பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் துறைமுகமாகும். ‘MSC Faith’ என்ற மிகப்பெரிய கொள்கலன் கப்பலைக் இத் துறைமுகம் அண்மையில் கையாண்டதை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் புதிய தலைமுறை முனையத்தில் நவீன பாரந்தூக்கிகள் மற்றும் போதுமான புழக்கடை நிறுத்த வசதிகளும் உள்ளன.
-
Question 18 of 50
18. Question
8. பாங்க் ஆப் அமெரிக்கா ஏற்பாடு செய்த ‘India: Drivers of Change’ மாநாட்டில் உரையாற்றிய இந்திய அமைச்சர் யார்?
Correct
மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘இந்தியா: மாற்றத்தின் உந்துசக்தி’ என்ற மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
அமெரிக்க வங்கி ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில், இந்தியாவின் பிரம்மாண்ட உள்நாட்டு சந்தையை -யும், வர்த்தகத்துக்கு உகந்த சூழலையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, பியூஷ் கோயல், பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். உற்பத்தித் துறைக்கு வழங்கப்ப -டும் உற்பத்தியுடன் கூடிய சலுகைகள் குறித்தும் அவர் அப்போது எடுத்துரைத்தார்.Incorrect
மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘இந்தியா: மாற்றத்தின் உந்துசக்தி’ என்ற மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
அமெரிக்க வங்கி ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில், இந்தியாவின் பிரம்மாண்ட உள்நாட்டு சந்தையை -யும், வர்த்தகத்துக்கு உகந்த சூழலையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, பியூஷ் கோயல், பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். உற்பத்தித் துறைக்கு வழங்கப்ப -டும் உற்பத்தியுடன் கூடிய சலுகைகள் குறித்தும் அவர் அப்போது எடுத்துரைத்தார். -
Question 19 of 50
19. Question
9.அண்மையில் எந்தத் தேதியில், இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் (National Cancer Awareness Day) கடைப்பிடிக்கப்பட்டது?
Correct
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் புற்றுநோய்க்கு வழிகோலும் வாழ்க்கை முறையை தவிர்த்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்மூலம் தேசிய அளவில் புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதை தடுக்கும் தடைகளை நீக்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.7 அன்று இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
Incorrect
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் புற்றுநோய்க்கு வழிகோலும் வாழ்க்கை முறையை தவிர்த்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்மூலம் தேசிய அளவில் புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதை தடுக்கும் தடைகளை நீக்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.7 அன்று இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
-
Question 20 of 50
20. Question
10.உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
ஆழிப்பேரலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை அதிசயமாக நேரக் கூடிய ஓர் இயற்கை சீற்றந்தான் இந்த ஆழிப்பேரலை. ஆனால் இது மிகவும் பயங்கரமானது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 58 ஆழிப்பேரலைகளால் மட்டும் சுமார் 2,60,000 பேர் மாண்டுள்ளனர்.
“Sendai Seven Campaign” என்ற கருப்பொருளின்கீழ் இந்த ஆண்டுக்குரிய உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது.Incorrect
ஆழிப்பேரலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை அதிசயமாக நேரக் கூடிய ஓர் இயற்கை சீற்றந்தான் இந்த ஆழிப்பேரலை. ஆனால் இது மிகவும் பயங்கரமானது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 58 ஆழிப்பேரலைகளால் மட்டும் சுமார் 2,60,000 பேர் மாண்டுள்ளனர்.
“Sendai Seven Campaign” என்ற கருப்பொருளின்கீழ் இந்த ஆண்டுக்குரிய உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. -
Question 21 of 50
21. Question
1.காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுத்து அவற்றை பாதுகாப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கவுள்ள மாநிலம் எது?
Correct
காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுத்து அவற்றை பாதுகாப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு துறைசார் உறுப்பினர்கள் இடம்பெறும் இந்தப் பிரிவில், வனத்துறை இயக்குநரகம், மின்சாரத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்களும் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர்களும் உள்ளனர். விலங்குகளுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக, உயரழுத்த மின்வடங்கள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Incorrect
காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுத்து அவற்றை பாதுகாப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு துறைசார் உறுப்பினர்கள் இடம்பெறும் இந்தப் பிரிவில், வனத்துறை இயக்குநரகம், மின்சாரத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்களும் உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர்களும் உள்ளனர். விலங்குகளுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக, உயரழுத்த மின்வடங்கள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
-
Question 22 of 50
22. Question
2. முதலமைச்சர் ஊரக வீதியோர விற்பனையாளர் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
பிரதமர் வீதியோர விற்பனையாளர் திட்டத்தின்கீழ், முதலமைச்சர் ஊரக வீதியோர விற்பனையாளர் திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது. அண்மையில், கிராமப்புற வீதியோர விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 10,000 ரூபாய் வட்டியில்லா கடனை அம்மாநில முதலமைச்சர் வரவு செய்தார். கல்வி மற்றும் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, ‘தற்சார்பு மத்திய பிரதேசம்’ திட்டத்திற்கான ஒரு செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
Incorrect
பிரதமர் வீதியோர விற்பனையாளர் திட்டத்தின்கீழ், முதலமைச்சர் ஊரக வீதியோர விற்பனையாளர் திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது. அண்மையில், கிராமப்புற வீதியோர விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 10,000 ரூபாய் வட்டியில்லா கடனை அம்மாநில முதலமைச்சர் வரவு செய்தார். கல்வி மற்றும் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, ‘தற்சார்பு மத்திய பிரதேசம்’ திட்டத்திற்கான ஒரு செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
-
Question 23 of 50
23. Question
3. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021’இல் ‘சர்னா’வை ஒரு தனி மதமாக சேர்க்கும் தீர்மானத்தை எந்த மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது?
Correct
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021’இல் ‘சர்னா’வை ஒரு தனி மதமாக சேர்க்கக்கோரும் தீர்மானத்தை ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கூற்றுப்படி, ஒருநாள் சிறப்பு மாநாட்டின்போது நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், ஒப்புதலுக்காக நடுவணரசுக்கு அனுப்பப்படவுள்ளது. ‘சர்னா’ என்னும் மதத்தைப் பின்பற்றுபவர்கள் ‘நீர், காடு, நிலம்’ என்ற கொள்கைகொண்டு இயற்கையை வணங்குகிறார்கள்.
Incorrect
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021’இல் ‘சர்னா’வை ஒரு தனி மதமாக சேர்க்கக்கோரும் தீர்மானத்தை ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கூற்றுப்படி, ஒருநாள் சிறப்பு மாநாட்டின்போது நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், ஒப்புதலுக்காக நடுவணரசுக்கு அனுப்பப்படவுள்ளது. ‘சர்னா’ என்னும் மதத்தைப் பின்பற்றுபவர்கள் ‘நீர், காடு, நிலம்’ என்ற கொள்கைகொண்டு இயற்கையை வணங்குகிறார்கள்.
-
Question 24 of 50
24. Question
4. ‘தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்’ அமைந்துள்ள இடம் எது?
Correct
குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மற்றும் ஒரே போக்குவரத்து பல்கலைக்கழகமாக ‘தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்’ உள்ளது. அண்மையில் இந்தப் பல்கலை இளங்கலை, MBA & MSc உள்ளிட்ட ஏழு புதிய கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் MSc கல்வித்திட்டமானது ஐக்கியப் பேரரசின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. அதே வேளையில் MBA கல்வித்திட்டம் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் கவனஞ்செலுத்துகின்றது.Incorrect
குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மற்றும் ஒரே போக்குவரத்து பல்கலைக்கழகமாக ‘தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்’ உள்ளது. அண்மையில் இந்தப் பல்கலை இளங்கலை, MBA & MSc உள்ளிட்ட ஏழு புதிய கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் MSc கல்வித்திட்டமானது ஐக்கியப் பேரரசின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. அதே வேளையில் MBA கல்வித்திட்டம் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் கவனஞ்செலுத்துகின்றது. -
Question 25 of 50
25. Question
5.அண்மையில், உலகின் முதல் 6G தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
Correct
6G தகவல் தொடர்பு சோதனை செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய உலகின் முதல் நாடாக சீனா மாறியுள்ளது. இச்செயற்கைக்கோள் ஷாங்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 6 ஏவுகணையைப் பயன்படுத்தி ஏவப்பட்டது. 6G தொழில்நுட்பமானது 5G தொழில்நுட்பத்தைவிட நூறு மடங்கு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
6G தகவல் தொடர்பு சோதனை செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய உலகின் முதல் நாடாக சீனா மாறியுள்ளது. இச்செயற்கைக்கோள் ஷாங்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 6 ஏவுகணையைப் பயன்படுத்தி ஏவப்பட்டது. 6G தொழில்நுட்பமானது 5G தொழில்நுட்பத்தைவிட நூறு மடங்கு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 26 of 50
26. Question
6. ‘பாரத தரிசனம்-தட்சின பாரத யாத்திரை’யை ஏற்பாடு செய்யும் அமைப்பு எது?
Correct
இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகமானது ‘பாரத தரிசனம் – தட்சின பாரத யாத்திரை’யை ஏற்பாடு செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த யாத்திரை ஐதராபாத் & செகந்திராபாத்தில் இருந்து டிசம்பர்.12-18 வரை தொடங்கப்படும். “இந்தியர்களுக்கு இந்தியாவைக் காட்டு – Show India to Indians” என்பது இந்தப் பயணத்தின் கருப்பொருளாகும்.
இந்தப் பயணம், திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், தஞ்சாவூரில் அமைந்துள்ள பெருவுடையார் திருக்கோவில், இராமேசுவரம், மதுரை மீனாட்சி சொக்கனார் திருக்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.Incorrect
இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகமானது ‘பாரத தரிசனம் – தட்சின பாரத யாத்திரை’யை ஏற்பாடு செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த யாத்திரை ஐதராபாத் & செகந்திராபாத்தில் இருந்து டிசம்பர்.12-18 வரை தொடங்கப்படும். “இந்தியர்களுக்கு இந்தியாவைக் காட்டு – Show India to Indians” என்பது இந்தப் பயணத்தின் கருப்பொருளாகும்.
இந்தப் பயணம், திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், தஞ்சாவூரில் அமைந்துள்ள பெருவுடையார் திருக்கோவில், இராமேசுவரம், மதுரை மீனாட்சி சொக்கனார் திருக்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். -
Question 27 of 50
27. Question
7.நடப்பாண்டில் (2020) வரும் உலக கழிப்பறை நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
உலகளாவிய தூய்மை நெருக்கடியை கையாளுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.19 அன்று உலக கழிப்பறை நாள் அனுசரிக்கப்படுகிறது. “Sustainable Sanitation & Climate Change” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். அடிப்படை கழிப்பறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
Incorrect
உலகளாவிய தூய்மை நெருக்கடியை கையாளுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.19 அன்று உலக கழிப்பறை நாள் அனுசரிக்கப்படுகிறது. “Sustainable Sanitation & Climate Change” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். அடிப்படை கழிப்பறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
-
Question 28 of 50
28. Question
8.இந்தியாவில் எந்தத் தேதியில், பொது சேவை ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது?
Correct
1947 நவம்பர் 12 அன்று தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு (AIR) வருகைதந்து, இந்திய பிரிவினைக்குப்பின் ஹரியானாவின் குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறியவர்கள்பற்றி உரையாற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று பொது சேவை ஒலிபரப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லியிலுள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Incorrect
1947 நவம்பர் 12 அன்று தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு (AIR) வருகைதந்து, இந்திய பிரிவினைக்குப்பின் ஹரியானாவின் குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறியவர்கள்பற்றி உரையாற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று பொது சேவை ஒலிபரப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லியிலுள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
Question 29 of 50
29. Question
9.அண்மையில் எந்தத் தேதியில், இந்தியாவில், தேசிய பத்திரிகை நாள் கொண்டாடப்பட்டது?
Correct
1966ஆம் ஆண்டில் இந்திய பிரஸ் கவுன்சில் நிறுவப்பட்டதை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவ.16 அன்று தேசிய பத்திரிகை நாள் (National Press Day) கொண்டாடப்படுகிறது. இந்தியப் பத்திரிகைகளின் சுதந்திரம் மற்றும் பொறுப்பின் அடையாளமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
1966ஆம் ஆண்டில் இந்திய பிரஸ் கவுன்சில் நிறுவப்பட்டதை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவ.16 அன்று தேசிய பத்திரிகை நாள் (National Press Day) கொண்டாடப்படுகிறது. இந்தியப் பத்திரிகைகளின் சுதந்திரம் மற்றும் பொறுப்பின் அடையாளமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 30 of 50
30. Question
10.தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
Correct
இந்தியாவில் கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவ.17 அன்று தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கால்-கை வலிப்பு என்பது மூளைசார்ந்த ஒரு நாட்பட்ட கோளாறாகும். இது, தொடர்ச்சியான வலிப்பினால் ஏற்படுகிறது. நியூரான்களில் (மூளை செல்கள்) திடீரென அதிகப்படியான மின்கசிவு ஏற்படுவதன் விளைவாக வலிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையானது, எந்த வயதுசார்ந்த மக்களையும் பாதிக்கும் மற்றும் ஒவ்வொரு வயதினருக்கும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் வித்தியாசமாக இருக்கும்.Incorrect
இந்தியாவில் கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவ.17 அன்று தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கால்-கை வலிப்பு என்பது மூளைசார்ந்த ஒரு நாட்பட்ட கோளாறாகும். இது, தொடர்ச்சியான வலிப்பினால் ஏற்படுகிறது. நியூரான்களில் (மூளை செல்கள்) திடீரென அதிகப்படியான மின்கசிவு ஏற்படுவதன் விளைவாக வலிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையானது, எந்த வயதுசார்ந்த மக்களையும் பாதிக்கும் மற்றும் ஒவ்வொரு வயதினருக்கும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் வித்தியாசமாக இருக்கும். -
Question 31 of 50
31. Question
1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற துரிதமாக செயலாற்றும் தரைப்பரப்பிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையை (QRSAM) உருவாக்கிய அமைப்பு எது?
Correct
விமானி இல்லாத இலக்கு விமானம் ஒன்றை சரியாக தாக்கியதன்மூலம் முக்கிய மைல்கல் ஒன்றை இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (Quick Reaction Surface-to-Air Missile QRSAM) எட்டியுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு அருகே ITR சந்திப்பூரிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
Incorrect
விமானி இல்லாத இலக்கு விமானம் ஒன்றை சரியாக தாக்கியதன்மூலம் முக்கிய மைல்கல் ஒன்றை இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை (Quick Reaction Surface-to-Air Missile QRSAM) எட்டியுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு அருகே ITR சந்திப்பூரிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
-
Question 32 of 50
32. Question
2.புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாக திட்டத்தின் கீழ், திட்டமொன்றை இறுதிசெய்துள்ள முதல் இந்திய நகரம் எது?
Correct
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாக திட்டத்தின் (ARHC) கீழ் திட்டமொன்றை இறுதிசெய்த முதல் நகராக சூரத் மாறியுள்ளது. ARHC திட்டமானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகரம் (PMAY-U)’இன்கீழ் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், அரசின் பயன்படுத்தப்படாத வீட்டுவசதித் திட்டங்கள் தனியார் நிறுவனங்களிடத்தில், புதுப்பிக்க மற்றும் வாடகை வீடுகளாக செயல்படுவதற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு வழங்கப்படும்.
Incorrect
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாக திட்டத்தின் (ARHC) கீழ் திட்டமொன்றை இறுதிசெய்த முதல் நகராக சூரத் மாறியுள்ளது. ARHC திட்டமானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகரம் (PMAY-U)’இன்கீழ் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், அரசின் பயன்படுத்தப்படாத வீட்டுவசதித் திட்டங்கள் தனியார் நிறுவனங்களிடத்தில், புதுப்பிக்க மற்றும் வாடகை வீடுகளாக செயல்படுவதற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு வழங்கப்படும்.
-
Question 33 of 50
33. Question
3.நடப்பாண்டில் வரும் (2020) தேசிய ஆயுர்வேத நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
தேசிய ஆயுர்வேத நாளானது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ‘தன்வந்திரி ஜெயந்தி’யன்று அதே நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த நாள், நவம்பர் 13 அன்று கொண்டாடப்பட்டது.
Ayurveda for COVID-19 என்ற தலைப்பில் நாடு முழுவதும் தேசிய ஆயுர்வேத நாள் கொண்டாடப்பட்டது. நமது அன்றாட வாழ்வில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.Incorrect
தேசிய ஆயுர்வேத நாளானது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ‘தன்வந்திரி ஜெயந்தி’யன்று அதே நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த நாள், நவம்பர் 13 அன்று கொண்டாடப்பட்டது.
Ayurveda for COVID-19 என்ற தலைப்பில் நாடு முழுவதும் தேசிய ஆயுர்வேத நாள் கொண்டாடப்பட்டது. நமது அன்றாட வாழ்வில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. -
Question 34 of 50
34. Question
4.அண்மையில் காலமான மூத்த இதழாளரும் எழுத்தாளருமான இரவி பெலகேரே சார்ந்த மாநிலம் எது?
Correct
மூத்த இதழாளரும், கர்நாடகாவின் எழுத்தாளருமான இரவி பெலகேரே அண்மையில் தனது 62ஆவது வயதில் காலமானார். பிரபல கன்னட செய்தித்தாளான ஹாய் பெங்களூரில் அவர் பணியாற்றி வந்தார். கர்நாடக சாகித்திய அகாடமி விருது, கன்னட இராஜ்யோத்சவ விருது, கர்நாடக ஊடக அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இரவி பெலகேரே பெற்றுள்ளார். ‘பிரார்த்தனா’ என்ற பள்ளியை தொடங்கி அதனை அவர் நடத்தியும் வந்தார்.
Incorrect
மூத்த இதழாளரும், கர்நாடகாவின் எழுத்தாளருமான இரவி பெலகேரே அண்மையில் தனது 62ஆவது வயதில் காலமானார். பிரபல கன்னட செய்தித்தாளான ஹாய் பெங்களூரில் அவர் பணியாற்றி வந்தார். கர்நாடக சாகித்திய அகாடமி விருது, கன்னட இராஜ்யோத்சவ விருது, கர்நாடக ஊடக அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இரவி பெலகேரே பெற்றுள்ளார். ‘பிரார்த்தனா’ என்ற பள்ளியை தொடங்கி அதனை அவர் நடத்தியும் வந்தார்.
-
Question 35 of 50
35. Question
5. குழு 77 (G-77) கூட்டணியில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை?
Correct
குழு 77 (G-77) ஆனது கடந்த 1964 ஜூன் 15 அன்று 77 வளரும் நாடுகளால் நிறுவப்பட்டது. தற்போது, இக்கூட்டணியிலுள்ள உறுப்புநாடுகளின் எண்ணிக்கை 134 நாடுகளாக அதிகரித்துள்ளது. சமீபத்தில், G-77 வெளியுறவு அமைச்சர்களின் 44ஆவது ஆண்டுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி T S திருமூர்த்தி, இதில் கலந்துகொண்டு G-77 கூட்டணி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினார்.
Incorrect
குழு 77 (G-77) ஆனது கடந்த 1964 ஜூன் 15 அன்று 77 வளரும் நாடுகளால் நிறுவப்பட்டது. தற்போது, இக்கூட்டணியிலுள்ள உறுப்புநாடுகளின் எண்ணிக்கை 134 நாடுகளாக அதிகரித்துள்ளது. சமீபத்தில், G-77 வெளியுறவு அமைச்சர்களின் 44ஆவது ஆண்டுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி T S திருமூர்த்தி, இதில் கலந்துகொண்டு G-77 கூட்டணி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினார்.
-
Question 36 of 50
36. Question
6. ‘பேரளவிலான அகல் விளக்குகளை’ ஏற்றியதன்மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்த இந்திய நகரம் எது?
Correct
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியா நகரம், ‘பேரளவிலான அகல் விளக்குகளை’ ஏற்றியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ‘தீபோத்சவ’ கொண்டாட்டத்தின்போது, நவம்பர்.13 அன்று சரயு ஆற்றின் கரையில், 5.8 இலட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
Incorrect
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியா நகரம், ‘பேரளவிலான அகல் விளக்குகளை’ ஏற்றியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ‘தீபோத்சவ’ கொண்டாட்டத்தின்போது, நவம்பர்.13 அன்று சரயு ஆற்றின் கரையில், 5.8 இலட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
-
Question 37 of 50
37. Question
7. BRICS அறிவியல், தொழில்நுட்பம் & புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?
Correct
எட்டாவது BRICS அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்கள் கூட்டமானது மெய்நிகராக நடைபெற்றது. இது, ரஷ்யாவின் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 12ஆவது BRICS உச்சிமாநாட்டின் தலைவராக இரஷ்யா உள்ளது. இந்த அமைச்சரவைக்கூட்டம் BRICS STI பிரகடனம்-2020’ஐ ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதன் உறுப்பினர்கள் இந்தியாவின், ‘SERB – POWER’ (Promoting Opportunities for Women in Exploratory Research) திட்டத்தைப் பாராட்டினர்.
Incorrect
எட்டாவது BRICS அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்கள் கூட்டமானது மெய்நிகராக நடைபெற்றது. இது, ரஷ்யாவின் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 12ஆவது BRICS உச்சிமாநாட்டின் தலைவராக இரஷ்யா உள்ளது. இந்த அமைச்சரவைக்கூட்டம் BRICS STI பிரகடனம்-2020’ஐ ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதன் உறுப்பினர்கள் இந்தியாவின், ‘SERB – POWER’ (Promoting Opportunities for Women in Exploratory Research) திட்டத்தைப் பாராட்டினர்.
-
Question 38 of 50
38. Question
8.சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் (World Day of Remembrance for Road Accident Victims) அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
ஆண்டுதோறும் சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் நவ.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான ஒரு கருவியாகவும் இந்த நாள் உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் பேரிடர் குறித்த கவனத்தை இந்த நாள் ஈர்க்கிறது. மேலும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அங்கீகாரம் அளிக்கிறது.
Incorrect
ஆண்டுதோறும் சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் நவ.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான ஒரு கருவியாகவும் இந்த நாள் உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் பேரிடர் குறித்த கவனத்தை இந்த நாள் ஈர்க்கிறது. மேலும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அங்கீகாரம் அளிக்கிறது.
-
Question 39 of 50
39. Question
9. சமூக பாதுகாப்பு நெறிமுறைகளின்கீழ் வரைவு விதிகளை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
சமூக பாதுகாப்பு நெறிமுறைகள் 2020’இன்கீழ் வரைவு விதிகளை தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சம் அறிவித்துள்ளது. முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், நடைமேடை தொழிலாளர்கள் அனைவரும் நடுவணரசு இணையதளத்தில் தானாக பதிவு செய்வது உட்பட ஆதார் அடிப்படையிலான பதிவை இவ்வரைவு விதிகள் வழங்குகின்றன. இதன்கீழ் பயன்களைப் பெறுவதற்கு, முறைசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர் (அ) நடைமேடை தொழிலாளர், அரசு இணையதளத்தில் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
Incorrect
சமூக பாதுகாப்பு நெறிமுறைகள் 2020’இன்கீழ் வரைவு விதிகளை தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சம் அறிவித்துள்ளது. முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், நடைமேடை தொழிலாளர்கள் அனைவரும் நடுவணரசு இணையதளத்தில் தானாக பதிவு செய்வது உட்பட ஆதார் அடிப்படையிலான பதிவை இவ்வரைவு விதிகள் வழங்குகின்றன. இதன்கீழ் பயன்களைப் பெறுவதற்கு, முறைசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர் (அ) நடைமேடை தொழிலாளர், அரசு இணையதளத்தில் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
-
Question 40 of 50
40. Question
10.பன்னிரண்டாவது BRICS உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?
Correct
பன்னிரண்டாம் BRICS உச்சிமாநாடானது அண்மையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். “Global Stability, Shared Security & Innovative Growth” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். இவ்வுச்சிமாநாட்டின் பிற நிகழ்ச்சி நிரல்களுள் BRICS உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, COVID-19 பெருந்தொற்றின் விளைவைக் குறைத்தல், தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.
Incorrect
பன்னிரண்டாம் BRICS உச்சிமாநாடானது அண்மையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். “Global Stability, Shared Security & Innovative Growth” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். இவ்வுச்சிமாநாட்டின் பிற நிகழ்ச்சி நிரல்களுள் BRICS உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, COVID-19 பெருந்தொற்றின் விளைவைக் குறைத்தல், தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.
-
Question 41 of 50
41. Question
IIT கரக்பூரைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கீழ்க்காணும் எந்தப் பொருளைப் பயன்படுத்தி உணவுப் பொட்டலங்கட்ட பயன்படும் பொருளை உருவாக்கியுள்ளனர்?
Correct
கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமமானது வெள்ளரித் தோல்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பொட்டலங்கட்ட பயன்படும் பொருளை உருவாக்கியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, வெள்ளரித் தோல்களில் அதிக செல்லுலோஸ் உள்ளது. வெள்ளரித் தோல்களிலிருந்து பெறப்பட்ட நானோ படிகங்கள் மக்கக்கூடிய உணவுப் பொட்டலங்கட்ட பயன்படும் பொருளை உருவாக்குவதற்கு ஏற்றதாக அமைகின்றன.
Incorrect
கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமமானது வெள்ளரித் தோல்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பொட்டலங்கட்ட பயன்படும் பொருளை உருவாக்கியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, வெள்ளரித் தோல்களில் அதிக செல்லுலோஸ் உள்ளது. வெள்ளரித் தோல்களிலிருந்து பெறப்பட்ட நானோ படிகங்கள் மக்கக்கூடிய உணவுப் பொட்டலங்கட்ட பயன்படும் பொருளை உருவாக்குவதற்கு ஏற்றதாக அமைகின்றன.
-
Question 42 of 50
42. Question
2.ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை?
Correct
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பு என்பது 21 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாகும். இது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது, பசிபிக் விளிம்பு நாடுகளிடையேயான ஒரு கட்டற்ற வர்த்தக சங்கமாகும். அண்மையில், இதன் அனைத்து 21 உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும், COVID-19 தொற்றுநோய்க்குப்பின்னான பொருளாதார மீட்சிக்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர்.
Incorrect
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பு என்பது 21 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாகும். இது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது, பசிபிக் விளிம்பு நாடுகளிடையேயான ஒரு கட்டற்ற வர்த்தக சங்கமாகும். அண்மையில், இதன் அனைத்து 21 உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும், COVID-19 தொற்றுநோய்க்குப்பின்னான பொருளாதார மீட்சிக்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர்.
-
Question 43 of 50
43. Question
3. UNESCO’ஆல் பன்னாட்டு சகிப்புத்தன்மை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
ஆண்டுதோறும் நவ.16 அன்று பன்னாட்டு சகிப்புத்தன்மை நாள் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதும், சகிப்புத்தன்மை சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதும் இதன் நோக்கமாகும். சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை ஊக்கப்படுத்துவதற்கான UNESCO மதன்ஜீத் சிங் பரிசு, காங்கோ ஜனநாயக குடியரசில், ‘மோதல்களைத் தீர்ப்பதற்கான மையம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
ஆண்டுதோறும் நவ.16 அன்று பன்னாட்டு சகிப்புத்தன்மை நாள் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதும், சகிப்புத்தன்மை சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதும் இதன் நோக்கமாகும். சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை ஊக்கப்படுத்துவதற்கான UNESCO மதன்ஜீத் சிங் பரிசு, காங்கோ ஜனநாயக குடியரசில், ‘மோதல்களைத் தீர்ப்பதற்கான மையம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 44 of 50
44. Question
4.இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வர்த்தகத் தடையின்கீழ் வைக்கப்பட்டுள்ள தனியார் வங்கி எது?
Correct
இந்திய ரிசர்வ் வங்கியானது இலக்ஷ்மி விலாஸ் வங்கியை (LVB) தடைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவ்வங்கியிலிருந்து குறிப்பிட்ட ஓரளவுக்கு மேலான வைப்புத்தொகையை அவ்வங்கியின் வாடிக்கையாளரால் எடுக்கவியலாது. LVB வங்கியை DBS வங்கி இந்தியாவுடன் இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இம்முடிவு, கடந்த மூன்று ஆண்டுகளில் LVB’இன் நிதிநிலை மோசமாக சரிவடைந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. மோசமான கடன்களின் அதிகரிப்பு காரணமாக, அவ்வங்கி தற்போது பெரும் வாராக்கடனில் தத்தளித்து வருகிறது.
Incorrect
இந்திய ரிசர்வ் வங்கியானது இலக்ஷ்மி விலாஸ் வங்கியை (LVB) தடைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவ்வங்கியிலிருந்து குறிப்பிட்ட ஓரளவுக்கு மேலான வைப்புத்தொகையை அவ்வங்கியின் வாடிக்கையாளரால் எடுக்கவியலாது. LVB வங்கியை DBS வங்கி இந்தியாவுடன் இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இம்முடிவு, கடந்த மூன்று ஆண்டுகளில் LVB’இன் நிதிநிலை மோசமாக சரிவடைந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. மோசமான கடன்களின் அதிகரிப்பு காரணமாக, அவ்வங்கி தற்போது பெரும் வாராக்கடனில் தத்தளித்து வருகிறது.
-
Question 45 of 50
45. Question
5. COVID-19 தடுப்பூசிகள்பற்றி பரப்படும் போலியான தகவல்களை எதிர்கொள்வதற்காக, ‘Halo’ என்னும் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
Correct
ஐக்கிய நாடுகள் அவையானது இலண்டன் பல்கலைக்கழகத்தின் ‘Vaccine Confidence’ திட்டத்துடன் கூட்டிணைந்து, ‘Halo’ என்றவொரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. COVID-19 தடுப்பூசிகள் பற்றி பரப்படும் போலியான தகவல்களை கையாளுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த உண்மையான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இந்தி -யாவிலிருந்து, 22’க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் அடங்கிய அணி ‘Halo’இல் சேர்ந்துள்ளது.Incorrect
ஐக்கிய நாடுகள் அவையானது இலண்டன் பல்கலைக்கழகத்தின் ‘Vaccine Confidence’ திட்டத்துடன் கூட்டிணைந்து, ‘Halo’ என்றவொரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. COVID-19 தடுப்பூசிகள் பற்றி பரப்படும் போலியான தகவல்களை கையாளுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த உண்மையான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இந்தி -யாவிலிருந்து, 22’க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் அடங்கிய அணி ‘Halo’இல் சேர்ந்துள்ளது. -
Question 46 of 50
46. Question
6.இந்திய உயராணையர் அலுலகமானது கீழ்க்காணும் எந்த நாட்டில், சிறப்பு பதிப்பு கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
Correct
‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், இந்திய உயர் ஆணையர் அலுவலகமானது சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசம் அதன் முதல் அதிபரும், தேசத்தின் தந்தையுமான ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் பிறந்த நூற்றாண்டை முஜிப் நூற்றாண்டாக, ‘முஜிப் போர்ஷோ’ என்று கொண்டாடுகிறது. இந்தச்சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்கள் அனைத்தும், ஷேக் முஜிபுர் இரகுமானின் நிழற்படத்தையும் கையொப்பத்தையும் தாங்கி நிற்கின்றன.
Incorrect
‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், இந்திய உயர் ஆணையர் அலுவலகமானது சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசம் அதன் முதல் அதிபரும், தேசத்தின் தந்தையுமான ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் பிறந்த நூற்றாண்டை முஜிப் நூற்றாண்டாக, ‘முஜிப் போர்ஷோ’ என்று கொண்டாடுகிறது. இந்தச்சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்கள் அனைத்தும், ஷேக் முஜிபுர் இரகுமானின் நிழற்படத்தையும் கையொப்பத்தையும் தாங்கி நிற்கின்றன.
-
Question 47 of 50
47. Question
7.கொரோனா வைரஸைக் கண்டறியும் முதல் தன்-பரிசோதனை கருவிக்கு ஒப்புதல் அளித்த நாடு எது?
Correct
அமெரிக்க உணவு & மருந்து நிர்வாகமானது வீட்டிலேயே தன்-பரிசோதனையின்மூலம் கொரோனா வைரஸைக் கண்டறியும் முதல் கருவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ‘Lucira COVID-19 All in One Test Kit’ என்பது மூலக்கூறு அடிப்படையில் இயங்கும் ஒருமுறை மட்டுமே பயன்பாட்டுக்குரிய ஒரு பரிசோதனை கருவியாகும். இது, முப்பது அல்லது அதற்கும் குறைவான நிமிடங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய முதல் பரிசோதனையாகும். 14 வயதுக்கு மேற்பட்டவர்களால் இதனை தாமாக நிர்வகிக்க முடியும்.
Incorrect
அமெரிக்க உணவு & மருந்து நிர்வாகமானது வீட்டிலேயே தன்-பரிசோதனையின்மூலம் கொரோனா வைரஸைக் கண்டறியும் முதல் கருவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ‘Lucira COVID-19 All in One Test Kit’ என்பது மூலக்கூறு அடிப்படையில் இயங்கும் ஒருமுறை மட்டுமே பயன்பாட்டுக்குரிய ஒரு பரிசோதனை கருவியாகும். இது, முப்பது அல்லது அதற்கும் குறைவான நிமிடங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய முதல் பரிசோதனையாகும். 14 வயதுக்கு மேற்பட்டவர்களால் இதனை தாமாக நிர்வகிக்க முடியும்.
-
Question 48 of 50
48. Question
8.பசுக்களின் பாதுகாப்பிற்காக, “பசு அமைச்சரவை” என்றவொன்றை அமைக்கவுள்ள மாநில அரசு எது?
Correct
பசுக்களின் பாதுகாப்பிற்காக மாநிலத்தில் ‘பசு அமைச்சரவை’ அமைக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அந்த அமைச்சரவையில் கால்நடைப் பராமரிப்பு, வனம், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், வீட்டுவசதி மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை உள்ளடங்கும். அவ்வமைச்சரவையின் முதல் கூட்டம் நவ.22 அன்று நடைபெற்றது.
Incorrect
பசுக்களின் பாதுகாப்பிற்காக மாநிலத்தில் ‘பசு அமைச்சரவை’ அமைக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அந்த அமைச்சரவையில் கால்நடைப் பராமரிப்பு, வனம், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், வீட்டுவசதி மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை உள்ளடங்கும். அவ்வமைச்சரவையின் முதல் கூட்டம் நவ.22 அன்று நடைபெற்றது.
-
Question 49 of 50
49. Question
9.உலக மீனவர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
மீனவர்களின் வாழ்வு செழிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்களால் நவ.21 அன்று ‘உலக மீனவர் நாள்’ கொண்டாடப்படுகிறது. உலகில் மீனவர்களின் முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் விதமாக பேரணிகள், பயிலரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், நாடகங்கள், கண்காட்சி, இசை நிகழ்ச்சி மற்றும் செய்முறை விளக்கங்கள் ஆகியவற்றின்மூலம் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
மீனவர்களின் வாழ்வு செழிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்களால் நவ.21 அன்று ‘உலக மீனவர் நாள்’ கொண்டாடப்படுகிறது. உலகில் மீனவர்களின் முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் விதமாக பேரணிகள், பயிலரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், நாடகங்கள், கண்காட்சி, இசை நிகழ்ச்சி மற்றும் செய்முறை விளக்கங்கள் ஆகியவற்றின்மூலம் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 50 of 50
50. Question
10.இலண்டனிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வெண்கல சிலைகளை, நடுவண் கலாச்சார அமைச்சர் எந்த மாநிலத்திடம் ஒப்படைத்துள்ளார்?
Correct
இலண்டனிலிருந்து மீட்கப்பட்ட இராமன், சீதை, இலக்குவனின் வெண்கல சிலைகளை தமிழ்நாடு அரசிடம், மத்திய கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீ இராஜகோபால் விஷ்ணு கோவிலானது விஜயநகர பேரரசு காலத்திய கோவிலாகும். இங்கிருந்த இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் வெண்கல சிலைகள் கடந்த 1978ஆம் ஆண்டு திருடுபோனது. இந்தத் திருட்டு குறித்து இலண்டன் காவல் துறையிடம், இந்திய தூதரகம் புகார் செய்தது.
இலண்டன் காவல்துறையினர் விசாரணை நடத்தி, இலண்டனில் சிலைகளை வைத்திருந்த நபரிடம் இருந்து இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் சிலைகளை மீட்டு இந்திய தூதரகத்திடம் கடந்த செப்.15 அன்று ஒப்படைத்தனர். தமிழ்நாட்டு கோவிலில் திருடப்பட்ட சிலைகள் 42 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Incorrect
இலண்டனிலிருந்து மீட்கப்பட்ட இராமன், சீதை, இலக்குவனின் வெண்கல சிலைகளை தமிழ்நாடு அரசிடம், மத்திய கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீ இராஜகோபால் விஷ்ணு கோவிலானது விஜயநகர பேரரசு காலத்திய கோவிலாகும். இங்கிருந்த இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் வெண்கல சிலைகள் கடந்த 1978ஆம் ஆண்டு திருடுபோனது. இந்தத் திருட்டு குறித்து இலண்டன் காவல் துறையிடம், இந்திய தூதரகம் புகார் செய்தது.
இலண்டன் காவல்துறையினர் விசாரணை நடத்தி, இலண்டனில் சிலைகளை வைத்திருந்த நபரிடம் இருந்து இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் சிலைகளை மீட்டு இந்திய தூதரகத்திடம் கடந்த செப்.15 அன்று ஒப்படைத்தனர். தமிழ்நாட்டு கோவிலில் திருடப்பட்ட சிலைகள் 42 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leaderboard: November 3rd Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||