December 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
December 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1. இந்திய ரிசர்வ் வங்கியின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தொடுதலற்ற அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான புதிய வரம்பு என்ன?
Correct
• தொடுதலற்ற அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கான வரம்பை 2021 ஜனவரி.1 முதல் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கையின் ஒரு பகுதியாகும். அட்டைகள் மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வரம்பும் `5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Incorrect
• தொடுதலற்ற அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கான வரம்பை 2021 ஜனவரி.1 முதல் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கையின் ஒரு பகுதியாகும். அட்டைகள் மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வரம்பும் `5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
-
Question 2 of 50
2. Question
2.உறவுகளை வலுப்படுத்துவதற்காக, இந்தியாவுடன் ‘நட்பு சங்கம்’ என்றவொன்றை நிறுவவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
Correct
• அண்மையில் மெய்நிகராக நடைபெற்ற இந்தியா-ஓமான் உரையாடலின்போது, ‘ஓமான்-இந்தியா நட்பு சங்கத்தை’ நிறுவவுள்ளதாக ஓமான் அறிவித்தது. மேற்கத்திய ஆசியாவில் வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையில் இதுபோன்றதொரு முயற்சி மேற்கொள்வது இது முதன்முறையாகும். 2019 டிசம்பரில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஓமான் நாட்டிற்கு சென்றிருந்தபோது, இந்தியாவும் ஓமானும் கடல் போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
Incorrect
• அண்மையில் மெய்நிகராக நடைபெற்ற இந்தியா-ஓமான் உரையாடலின்போது, ‘ஓமான்-இந்தியா நட்பு சங்கத்தை’ நிறுவவுள்ளதாக ஓமான் அறிவித்தது. மேற்கத்திய ஆசியாவில் வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையில் இதுபோன்றதொரு முயற்சி மேற்கொள்வது இது முதன்முறையாகும். 2019 டிசம்பரில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஓமான் நாட்டிற்கு சென்றிருந்தபோது, இந்தியாவும் ஓமானும் கடல் போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
-
Question 3 of 50
3. Question
3.போதை மருந்துகள் தொடர்பான ஐநா ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
• ஆஸ்திரியாவின் வியன்னாவை தலைமையிடமாகக் கொண்ட போதை மருந்துகள் தொடர்பான ஐநா ஆணையம் என்பது ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) ஆணையங்களுள் ஒன்றாகும்.
• அண்மையில், அவ்வாணையத்தின் மறுகூட்டப்பட்ட அமர்வின்போது, 53 உறுப்புநாடுகள், 1966ஆம் ஆண்டின் போதைப்பொருள் மீதான ஒற்றை தீர்மானத்தின் அட்டவணை IV’இலிருந்து கஞ்சாவை நீக்க வாக்களித்தன. அத்தீர்மானத்தில் அது கொடிய மற்றும் போதை மருந்து எனப்பட்டியலிடப்பட்டிருந்தது. இந்தியா உட்பட 27 உறுப்புநாடுகள் வாக்களித்தன.Incorrect
• ஆஸ்திரியாவின் வியன்னாவை தலைமையிடமாகக் கொண்ட போதை மருந்துகள் தொடர்பான ஐநா ஆணையம் என்பது ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) ஆணையங்களுள் ஒன்றாகும்.
• அண்மையில், அவ்வாணையத்தின் மறுகூட்டப்பட்ட அமர்வின்போது, 53 உறுப்புநாடுகள், 1966ஆம் ஆண்டின் போதைப்பொருள் மீதான ஒற்றை தீர்மானத்தின் அட்டவணை IV’இலிருந்து கஞ்சாவை நீக்க வாக்களித்தன. அத்தீர்மானத்தில் அது கொடிய மற்றும் போதை மருந்து எனப்பட்டியலிடப்பட்டிருந்தது. இந்தியா உட்பட 27 உறுப்புநாடுகள் வாக்களித்தன. -
Question 4 of 50
4. Question
4. DCOAS (உத்தி) என்பது கீழ்க்காணும் எந்த இந்திய ஆயுதப்படையில் உருவாக்கப்படவுள்ள புதிய பதவியாகும்?
Correct
• இராணுவத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக நடுவணரசு இராணுவப் பணியாளர்களின் துணைத்தலைவர் அல்லது DCOAS (உத்தி) என்ற புதிய பதவியை அறிவித்துள்ளது. இந்தப்பதவியை உருவாக்குவதற்கான திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) மற்றும் இராணுவ புலனாய்வுக்கான தலைமை இயக்குநர் (DGMI) ஆகியோரின் பணிகளை DCOAS மேற்பார்வையிட்டு, துணை தலைமை இராணுவ தலைவருக்கு அறிக்கையளிப்பார்.
Incorrect
• இராணுவத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக நடுவணரசு இராணுவப் பணியாளர்களின் துணைத்தலைவர் அல்லது DCOAS (உத்தி) என்ற புதிய பதவியை அறிவித்துள்ளது. இந்தப்பதவியை உருவாக்குவதற்கான திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) மற்றும் இராணுவ புலனாய்வுக்கான தலைமை இயக்குநர் (DGMI) ஆகியோரின் பணிகளை DCOAS மேற்பார்வையிட்டு, துணை தலைமை இராணுவ தலைவருக்கு அறிக்கையளிப்பார்.
-
Question 5 of 50
5. Question
5. கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் குறியிடப்பட்ட வரகுக்கோழிகள், அண்மையில் தெலுங்கானா மாநிலத்துக்கு பறந்துசென்றன?
Correct
• குஜராத் மாநில வனத்துறையால் குறியிடப்பட்ட இரண்டு வரகுக்கோழிகளுள் ஒன்று தெலுங்கானா மாநிலத்திற்கு பறந்து சென்றுள்ளது. பாவ்நகரில் உள்ள வேளாவதரில் அமைந்துள்ள வெளிமான் தேசிய பூங்காவில் அந்த வரகுக்கோழி குறியிடப்பட்டிருந்தது. வரகுக்கோழிகள் தங்களது இனப்பெருக்க காலத் -திற்குப் பிறகு இந்தியாவின் மேற்குப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்திய நிலப்பரப்புக்கு குடிபெயர்கின்றன என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
Incorrect
• குஜராத் மாநில வனத்துறையால் குறியிடப்பட்ட இரண்டு வரகுக்கோழிகளுள் ஒன்று தெலுங்கானா மாநிலத்திற்கு பறந்து சென்றுள்ளது. பாவ்நகரில் உள்ள வேளாவதரில் அமைந்துள்ள வெளிமான் தேசிய பூங்காவில் அந்த வரகுக்கோழி குறியிடப்பட்டிருந்தது. வரகுக்கோழிகள் தங்களது இனப்பெருக்க காலத் -திற்குப் பிறகு இந்தியாவின் மேற்குப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்திய நிலப்பரப்புக்கு குடிபெயர்கின்றன என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
-
Question 6 of 50
6. Question
6. தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct
• தேசிய இயற்கை மருத்துவ நிறுவனமானது (NIN) புனே நகரில் அமைந்துள்ளது. NIN’இன் தற்போதைய கட்டடம், “பாபு பவன்” என அழைக்கப்படுகிறது. காந்திஜி இங்கு தங்கியிருந்தபோது பல்வேறு இயற்கை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். மேலும் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிகழ்வுக -ளுக்கும் ஏற்பாடு செய்தார். AYUSH அமைச்சகம், புனேவின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய வளாகத்திற்கு, “நிசர்க் கிராம்” என்று பெயரிட பரிந்துரைத்துள்ளது.
Incorrect
• தேசிய இயற்கை மருத்துவ நிறுவனமானது (NIN) புனே நகரில் அமைந்துள்ளது. NIN’இன் தற்போதைய கட்டடம், “பாபு பவன்” என அழைக்கப்படுகிறது. காந்திஜி இங்கு தங்கியிருந்தபோது பல்வேறு இயற்கை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். மேலும் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிகழ்வுக -ளுக்கும் ஏற்பாடு செய்தார். AYUSH அமைச்சகம், புனேவின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய வளாகத்திற்கு, “நிசர்க் கிராம்” என்று பெயரிட பரிந்துரைத்துள்ளது.
-
Question 7 of 50
7. Question
7.பிரகாஷ் சிங் பாதல் என்பவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?
Correct
• பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சரும், ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், ‘பத்ம விபூஷன்’ விருதை அரசுக்கு திருப்பியளித்துள்ளார். நடுவணரசு கொண்டுவந்த வேளாண் சீர்திருத்தங்களுக்கு எதிரான தனது எதிர்ப்பைக்காட்டுவதற்காக அவர் இந்த விருதை திருப்பியளித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கு இம்மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.
Incorrect
• பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சரும், ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், ‘பத்ம விபூஷன்’ விருதை அரசுக்கு திருப்பியளித்துள்ளார். நடுவணரசு கொண்டுவந்த வேளாண் சீர்திருத்தங்களுக்கு எதிரான தனது எதிர்ப்பைக்காட்டுவதற்காக அவர் இந்த விருதை திருப்பியளித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கு இம்மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.
-
Question 8 of 50
8. Question
8.இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, கீழ்க்காணும் எந்த வகை அணில் அழிவின் விளிம்பில் உள்ளது?
Correct
• மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ், இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மேற்கொண்ட இத்தகைய முதலாம் ஆய்வில், பெரிய மலாயன் அணில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. 2050ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரிய மலாயன் அணில்களின் எண்ணிக்கை 90 சதவீத அளவுக்கு குறையக்கூடும் என அது கணித்துள்ளது. அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இவ்வகை இனங்கள் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழிந்துபோகக்கூடும்.
Incorrect
• மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ், இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மேற்கொண்ட இத்தகைய முதலாம் ஆய்வில், பெரிய மலாயன் அணில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. 2050ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரிய மலாயன் அணில்களின் எண்ணிக்கை 90 சதவீத அளவுக்கு குறையக்கூடும் என அது கணித்துள்ளது. அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இவ்வகை இனங்கள் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழிந்துபோகக்கூடும்.
-
Question 9 of 50
9. Question
9. நடப்பாண்டில் (2020) வரும் உலக மண் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
• நலமான மண்ணின் முக்கியத்துவம் மற்றும் மண் வளங்களின் நிலையான மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.5 அன்று உலகம் முழுவதும் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் திட்டத்தின்படி, “Keep soil alive, protect soil biodiversity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் உலக மண் நாளுக்கான கருப் பொருளாகும். பன்னாட்டு மண் அறிவியல் சங்கம், இந்நாளைக்கொண்டாட 2002’இல் பரிந்துரைத்தது.
Incorrect
• நலமான மண்ணின் முக்கியத்துவம் மற்றும் மண் வளங்களின் நிலையான மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.5 அன்று உலகம் முழுவதும் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் திட்டத்தின்படி, “Keep soil alive, protect soil biodiversity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் உலக மண் நாளுக்கான கருப் பொருளாகும். பன்னாட்டு மண் அறிவியல் சங்கம், இந்நாளைக்கொண்டாட 2002’இல் பரிந்துரைத்தது.
-
Question 10 of 50
10. Question
10. NITI ஆயோக்கின் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான, 2020 அக்டோபர் மாத தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மாமித் மாவட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• மிசோரம் மாநிலத்தின் மாமித் மாவட்டம், NITI ஆயோக்கின் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான, 2020 அக்டோபர் மாத தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. பீகார் மாநிலத்தின் பாங்கா மற்றும் ஒடிசா மாநிலத்தின் தெங்கனல் ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. ஆறு வளர்ச்சிக்கூறுகளில் 112’க்கும் மேற்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மேற்
-கொண்ட முன்னேற்றத்தை NITI ஆயோக் மதிப்பிட்டுள்ளது.Incorrect
• மிசோரம் மாநிலத்தின் மாமித் மாவட்டம், NITI ஆயோக்கின் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான, 2020 அக்டோபர் மாத தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. பீகார் மாநிலத்தின் பாங்கா மற்றும் ஒடிசா மாநிலத்தின் தெங்கனல் ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. ஆறு வளர்ச்சிக்கூறுகளில் 112’க்கும் மேற்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மேற்
-கொண்ட முன்னேற்றத்தை NITI ஆயோக் மதிப்பிட்டுள்ளது. -
Question 11 of 50
11. Question
1. நடப்பாண்டில் (2020) ஐக்கிய நாடுகள் அவையால் கீழ்க்காணும் எந்தத் தேதியில் முதன்முறையாக ‘பன்னாட்டு வங்கிகள் நாள்’ கொண்டாடப்பட்டது?
Correct
• கடந்த 2019ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை டிச.4ஆம் தேதியை பன்னாட்டு வங்கிகளின் நாளாக அறிவித்தது. அது, நடப்பாண்டில் (2020) முதன்முறையாக கொண்டாடப்பட்டது. நீடித்த வளர்ச்சிக்கு நிதியளிப்பதில் பன்முக வளர்ச்சி வங்கிகள் மற்றும் சர்வதேச வளர்ச்சி வங்கிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் வங்கி அமைப்புகளின் பங்கையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது.
Incorrect
• கடந்த 2019ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை டிச.4ஆம் தேதியை பன்னாட்டு வங்கிகளின் நாளாக அறிவித்தது. அது, நடப்பாண்டில் (2020) முதன்முறையாக கொண்டாடப்பட்டது. நீடித்த வளர்ச்சிக்கு நிதியளிப்பதில் பன்முக வளர்ச்சி வங்கிகள் மற்றும் சர்வதேச வளர்ச்சி வங்கிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் வங்கி அமைப்புகளின் பங்கையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது.
-
Question 12 of 50
12. Question
2.இந்தியாவின் தனியார் தொலையுணரி செயற்கைக்கோளை ஏவுவதற்காக நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் கூட்டு சேர்ந்துள்ள துளிர் நிறுவனம் எது?
Correct
• நாட்டின் முதல் தனியார் தொலையுணரி செயற்கைக்கோளை ஏவுவதற்காக விண்வெளித் துறையில் முன்னணியில் இருக்கும் துளிர் நிறுவனமான பிக்செல், நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ISRO, PSLV ஏவுகலத்தின் மூலமாக செலுத்தப்படவுள்ளது. முன்னதாக, விண்வெளித்துறையின்கீழ் ‘IN-SPACe’ எனப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, இந்தியாவில் விண்வெளிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தனியார் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்டது.
Incorrect
• நாட்டின் முதல் தனியார் தொலையுணரி செயற்கைக்கோளை ஏவுவதற்காக விண்வெளித் துறையில் முன்னணியில் இருக்கும் துளிர் நிறுவனமான பிக்செல், நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ISRO, PSLV ஏவுகலத்தின் மூலமாக செலுத்தப்படவுள்ளது. முன்னதாக, விண்வெளித்துறையின்கீழ் ‘IN-SPACe’ எனப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, இந்தியாவில் விண்வெளிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தனியார் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்டது.
-
Question 13 of 50
13. Question
3. இணையவழி விளையாட்டுகள் மற்றும் பந்தயம் குறித்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு ஆலோசனை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?
Correct
• தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் எந்த விளம்பரங்களும் ஒளிபரப்பப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கும் அண்மையில் ஓர் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
• இணையவழி விளையாட்டுகள், பந்தயங்கள் மற்றும் கற்பனை விளையாட்டு குறித்த விளம்பரங்கள் தவறானவை என்றும் அவை அமைச்சகத்தின் விளம்பர நெறிமுறைக்கு முரணானவை என்றும் அந்த ஆலோசனை குறிப்பிடுகிறது.Incorrect
• தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் எந்த விளம்பரங்களும் ஒளிபரப்பப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கும் அண்மையில் ஓர் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
• இணையவழி விளையாட்டுகள், பந்தயங்கள் மற்றும் கற்பனை விளையாட்டு குறித்த விளம்பரங்கள் தவறானவை என்றும் அவை அமைச்சகத்தின் விளம்பர நெறிமுறைக்கு முரணானவை என்றும் அந்த ஆலோசனை குறிப்பிடுகிறது. -
Question 14 of 50
14. Question
4.வக்ஃப் வாரியங்களும் வக்ஃப் கவுன்சிலும் எந்த அமைச்சகத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன?
Correct
• வக்ஃப் வாரியங்கள் மற்றும் வக்ஃப் கவுன்சில் ஆகியன சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் விரைவில் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்படும் என்று மத்திய வக்ஃப் கவுன்சில் முடிவுசெய்துள்ளது. இந்தியாவின் J & K மற்றும் லே-கார்கில் பகுதிகளில் வக்ஃப் வாரியங்கள் நிறுவப்படுவது இதுவே முதல்முறையாகும்.
Incorrect
• வக்ஃப் வாரியங்கள் மற்றும் வக்ஃப் கவுன்சில் ஆகியன சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் விரைவில் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்படும் என்று மத்திய வக்ஃப் கவுன்சில் முடிவுசெய்துள்ளது. இந்தியாவின் J & K மற்றும் லே-கார்கில் பகுதிகளில் வக்ஃப் வாரியங்கள் நிறுவப்படுவது இதுவே முதல்முறையாகும்.
-
Question 15 of 50
15. Question
5. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் எந்த உயர்நீதிமன்றத்தில் அதிக பெண் நீதிபதிகள் உள்ளனர்?
Correct
• இந்திய உயர்நீதிமன்றங்களிலேயே தமிழ்நாட்டின் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் உள்ளனர். அண்மையில் பதவியேற்ற கூடுதல் 13 நீதிபதிகளுள் நால்வர் பெண்களாவர். தற்போதைய நிலவரப்படி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மொத்த பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை பதிமூன்றாக உள்ளது. நீதியரசர் AP சாஹி அவர்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ளார்.
Incorrect
• இந்திய உயர்நீதிமன்றங்களிலேயே தமிழ்நாட்டின் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்தான் அதிக பெண் நீதிபதிகள் உள்ளனர். அண்மையில் பதவியேற்ற கூடுதல் 13 நீதிபதிகளுள் நால்வர் பெண்களாவர். தற்போதைய நிலவரப்படி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மொத்த பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை பதிமூன்றாக உள்ளது. நீதியரசர் AP சாஹி அவர்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ளார்.
-
Question 16 of 50
16. Question
6. முதன்முதலாக விண்வெளியில் முள்ளங்கியை வளர்த்து அறுவடை செய்துள்ள அமைப்பு எது?
Correct
• NASA விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக முள்ளங்கியை அறுவடை செய்துள்ளார். இது, NASA’இன் Plant Habitat-02 (PH-02) என்ற கோள் பரிசோதனையின் ஒருபகுதியாகும்.
• இந்தப் பரிசோதனை நுண்ணீர்ப்பு நிலைகளில் தாவர வளர்ச்சியைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 27 நாட்களில் முள்ளங்கிப்பயிர் அறுவடை செய்யப்பட்டுள்ளது.Incorrect
• NASA விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக முள்ளங்கியை அறுவடை செய்துள்ளார். இது, NASA’இன் Plant Habitat-02 (PH-02) என்ற கோள் பரிசோதனையின் ஒருபகுதியாகும்.
• இந்தப் பரிசோதனை நுண்ணீர்ப்பு நிலைகளில் தாவர வளர்ச்சியைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 27 நாட்களில் முள்ளங்கிப்பயிர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. -
Question 17 of 50
17. Question
7.இந்திய அதிகாரமளித்தல் நிதியத்தை (India Empowerment Fund) தொடங்கவுள்ள அமைப்பு எது?
Correct
• இந்திய ஆராய்ச்சி அமைப்பில் `50,000 கோடியை முதலீடு செய்வதற்காக IIT முன்னாள் மாணவர்கள் பேரவையால் இந்தியா அதிகாரமளித்தல் நிதியம் தொடங்கப்படவுள்ளது. இந்த நிதியானது பத்தாண்டு காலப்பகுதியில் முதலீடு செய்யப்படும். இந்த நிதி, IIT ஏஞ்சல் நிதியமாக இயக்கப்படும் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் நிதியங்களின்கீழ் ஒழுங்குபடுத்தப்படும்.
Incorrect
• இந்திய ஆராய்ச்சி அமைப்பில் `50,000 கோடியை முதலீடு செய்வதற்காக IIT முன்னாள் மாணவர்கள் பேரவையால் இந்தியா அதிகாரமளித்தல் நிதியம் தொடங்கப்படவுள்ளது. இந்த நிதியானது பத்தாண்டு காலப்பகுதியில் முதலீடு செய்யப்படும். இந்த நிதி, IIT ஏஞ்சல் நிதியமாக இயக்கப்படும் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் நிதியங்களின்கீழ் ஒழுங்குபடுத்தப்படும்.
-
Question 18 of 50
18. Question
8.பிரதமரால் தொடங்கி வைக்கப்படவுள்ள, “சிக்கந்திரா முதல் தாஜ் வாயில்” வரையிலான வழித்தடம் என்பது கீழ்க்காணும் எந்த மெட்ரோ இரயில் சேவையின் ஒருபகுதியாகும்?
Correct
• ஆக்ரா மெட்ரோவின் முதற்கட்ட கட்டுமானத்தை இந்திய அரசு தொடங்கிவைக்கவுள்ளது. இந்த மெட்ரோ இரயில் சேவையின் முதற்கட்டம் சிக்கந்திராவை தாஜ் வாயிலோடு இணைக்கும். இதன் முதற்கட்ட கட்டுமானத்திற்கான மதிப்பிடப்பட்ட திட்ட செலவு `8379 கோடியாகும். இந்தத் திட்டம் மொத்தம் ஆறு மெட்ரோ இரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்.
Incorrect
• ஆக்ரா மெட்ரோவின் முதற்கட்ட கட்டுமானத்தை இந்திய அரசு தொடங்கிவைக்கவுள்ளது. இந்த மெட்ரோ இரயில் சேவையின் முதற்கட்டம் சிக்கந்திராவை தாஜ் வாயிலோடு இணைக்கும். இதன் முதற்கட்ட கட்டுமானத்திற்கான மதிப்பிடப்பட்ட திட்ட செலவு `8379 கோடியாகும். இந்தத் திட்டம் மொத்தம் ஆறு மெட்ரோ இரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்.
-
Question 19 of 50
19. Question
9.இந்திய மொபைல் மாநாட்டின் அமைப்பாளராக உள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
• இந்திய மொபைல் மாநாட்டை தொலைத்தொடர்புத்துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்கவுரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்வு, டிசம்பர்.8-10 வரை மெய்நிகராக நடத்தப்பட்டது. “Inclusive Innovation – Smart, Secure, Sustainable” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
• இந்திய மொபைல் மாநாட்டை தொலைத்தொடர்புத்துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்கவுரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்வு, டிசம்பர்.8-10 வரை மெய்நிகராக நடத்தப்பட்டது. “Inclusive Innovation – Smart, Secure, Sustainable” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும்.
-
Question 20 of 50
20. Question
10. UNESCO’இன் உலக பாரம்பரிய தளமான ஹம்பி தேர் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• UNESCO உலக பாரம்பரிய தளமான ஹம்பியின் விஜய விட்டலா கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள புகழ்பெற்ற கல் தேர், இந்திய தொல்லியல் ஆய்வுமையத்தால் (ASI) ஒரு பாதுகாப்பு வளையம் கொண்டு மூடப்பட்டுள்ளது. இத்தேர், இந்தியாவில் அமைந்துள்ள மூன்று பிரபலமான கல் தேர்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஒரு கல் தேரும், ஒடிசா மாநிலத்தின் கொனார்க்கில் அமைந்துள்ள ஒரு கல் தேரும் பிற இரு தேர்களாகும். ஹம்பி தேர், பொ ஆ 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த விஜயநகர ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாகும்.
Incorrect
• UNESCO உலக பாரம்பரிய தளமான ஹம்பியின் விஜய விட்டலா கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள புகழ்பெற்ற கல் தேர், இந்திய தொல்லியல் ஆய்வுமையத்தால் (ASI) ஒரு பாதுகாப்பு வளையம் கொண்டு மூடப்பட்டுள்ளது. இத்தேர், இந்தியாவில் அமைந்துள்ள மூன்று பிரபலமான கல் தேர்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஒரு கல் தேரும், ஒடிசா மாநிலத்தின் கொனார்க்கில் அமைந்துள்ள ஒரு கல் தேரும் பிற இரு தேர்களாகும். ஹம்பி தேர், பொ ஆ 14 முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த விஜயநகர ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாகும்.
-
Question 21 of 50
21. Question
1.உலக பாரம்பரியம் குறித்த IUCN’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவின் கீழ்க்காணும் எந்தப்பகுதி மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது?
Correct
• இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமானது (IUCN) ‘IUCN உலக பாரம்பரிய கண்ணோட்டம் 3’ஐ வெளியிட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டம், உலகின் 252 இயற்கை உலக பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பு முயற்சிகள் சரியான பாதையில் செல்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக, 2014-2017 ஆண்டுகளின் தரவைப்பயன்படுத்தியுள்ளது. மேற்குத்தொடர்ச்சிமலையின் பாதுகாப்புக் கண்ணோட்டம் மிகுந்த கவலையளிப்பதாக இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
Incorrect
• இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமானது (IUCN) ‘IUCN உலக பாரம்பரிய கண்ணோட்டம் 3’ஐ வெளியிட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டம், உலகின் 252 இயற்கை உலக பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பு முயற்சிகள் சரியான பாதையில் செல்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக, 2014-2017 ஆண்டுகளின் தரவைப்பயன்படுத்தியுள்ளது. மேற்குத்தொடர்ச்சிமலையின் பாதுகாப்புக் கண்ணோட்டம் மிகுந்த கவலையளிப்பதாக இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
-
Question 22 of 50
22. Question
2. மேம்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கி அமைப்பை (ATAGS) உருவாக்கியுள்ள அமைப்பு எது?
Correct
• இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது மேம்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கி அமைப்பை (Advanced Towed Artillery Gun System) உருவாக்கியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இப்பீரங்கிகள், தற்போது மகாராட்டிராவில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. DRDO’இன் கூற்றுப்படி, 18-24 மாதங்களுக்குள் இதுபோன்ற இருநூறு துப்பாக்கிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ளன.
Incorrect
• இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது மேம்பட்ட இழுவை பீரங்கி துப்பாக்கி அமைப்பை (Advanced Towed Artillery Gun System) உருவாக்கியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இப்பீரங்கிகள், தற்போது மகாராட்டிராவில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. DRDO’இன் கூற்றுப்படி, 18-24 மாதங்களுக்குள் இதுபோன்ற இருநூறு துப்பாக்கிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ளன.
-
Question 23 of 50
23. Question
3. Gaofen-14 என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை கீழ்க்காணும் எந்த ஏவுகலத்தைப் பயன்படுத்தி சீனா விண்ணில் ஏவியது?
Correct
• சீன விண்வெளி முகமையானது அண்மையில் காபென்-14 என்ற பெயரில் ஆப்டிகல் ஸ்டீரியோ மேப்பிங் எர்த் அப்சர்வேஷன் செயற்கைக்கோளை ஏவியது. லாங் மார்ச்-3B ஏவுகலத்தைப்பயன்படுத்தி அந்தச் செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தச் செயற்கைக்கோளால், உலகெங்கிலும் உள்ள தரை பொருட்களை உயர் தெளிவுத்திறனுடன் படங்களை எடுக்க முடியும்.
Incorrect
• சீன விண்வெளி முகமையானது அண்மையில் காபென்-14 என்ற பெயரில் ஆப்டிகல் ஸ்டீரியோ மேப்பிங் எர்த் அப்சர்வேஷன் செயற்கைக்கோளை ஏவியது. லாங் மார்ச்-3B ஏவுகலத்தைப்பயன்படுத்தி அந்தச் செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தச் செயற்கைக்கோளால், உலகெங்கிலும் உள்ள தரை பொருட்களை உயர் தெளிவுத்திறனுடன் படங்களை எடுக்க முடியும்.
-
Question 24 of 50
24. Question
4. நடப்பாண்டில் (2020) முதன்முறையாக ‘புலம்பெயர்ந்த பறவைகள் திருவிழா’வை ஏற்பாடு செய்துள்ள மாநிலம் எது?
Correct
• பீகார் மாநிலமானது இவ்வாண்டில் முதன்முறையாக புலம்பெயர்ந்த பறவைகள் திருவிழாவை ஏற்பாடு செய்யவுள்ளது. மூன்று நாள் நீடிக்கும் இத்திருவிழா, பொதுமக்களிடையே புலம்பெயர்ந்த பறவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழாவை பாகல்பூர் வனப் பிரிவு, பம்பாய் இயற்கை வரலாற்றுச்சங்கம் மற்றும் பீகார் மந்தர் இயற்கை சங்கம் இணைந்து நடத்தும்.
Incorrect
• பீகார் மாநிலமானது இவ்வாண்டில் முதன்முறையாக புலம்பெயர்ந்த பறவைகள் திருவிழாவை ஏற்பாடு செய்யவுள்ளது. மூன்று நாள் நீடிக்கும் இத்திருவிழா, பொதுமக்களிடையே புலம்பெயர்ந்த பறவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழாவை பாகல்பூர் வனப் பிரிவு, பம்பாய் இயற்கை வரலாற்றுச்சங்கம் மற்றும் பீகார் மந்தர் இயற்கை சங்கம் இணைந்து நடத்தும்.
-
Question 25 of 50
25. Question
5. கீழ்க்காணும் எந்தத் தேசியத்தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, ‘மகாபரிநிர்வாணா திவாஸ்’ அனுசரிக்கப்படுகிறது?
Correct
• ஒவ்வோர் ஆண்டும் டிச.6 அன்று டாக்டர் B R அம்பேத்கரின் நினைவு நாள் ‘மகாபரிநிர்வாணா திவாஸ்’ என அனுசரிக்கப்படுகிறது. அவர், 1956ஆம் ஆண்டு இந்தத் தேதியில் மறைந்தார். நடப்பாண்டு (2020) 64ஆவது நினைவு நாளைக் குறிக்கிறது. மரணத்திற்குப் பிறகு விடுதலை அல்லது விடுவிப்பு எனப் பொருள்படும், ‘பரிநிர்வாணா’ என்பது பெளத்த மதத்தின் முக்கியமான கொள்கைகளுள் ஒன்றாகும்.
Incorrect
• ஒவ்வோர் ஆண்டும் டிச.6 அன்று டாக்டர் B R அம்பேத்கரின் நினைவு நாள் ‘மகாபரிநிர்வாணா திவாஸ்’ என அனுசரிக்கப்படுகிறது. அவர், 1956ஆம் ஆண்டு இந்தத் தேதியில் மறைந்தார். நடப்பாண்டு (2020) 64ஆவது நினைவு நாளைக் குறிக்கிறது. மரணத்திற்குப் பிறகு விடுதலை அல்லது விடுவிப்பு எனப் பொருள்படும், ‘பரிநிர்வாணா’ என்பது பெளத்த மதத்தின் முக்கியமான கொள்கைகளுள் ஒன்றாகும்.
-
Question 26 of 50
26. Question
6. உலக பொருளாதார மன்றத்தின் 2021ஆம் ஆண்டு கூட்டத்திற்கான தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்ப -ட்டுள்ள நாடு எது?
Correct
• உலக பொருளாதார மன்றம் தனது வழமையான இடமான சுவிச்சர்லாந்தின் தாவோசுக்கு பதிலாக சிங்கப்பூரில் வரும் 2021ஆம் ஆண்டுக்கான கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. சுவிச்சர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நிகழ்விடம் மாற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் வருடாந்திர கூட்டம், மீண்டும் சுவிச்சர்லாந்திலேயே நடத்தப்படும்.
Incorrect
• உலக பொருளாதார மன்றம் தனது வழமையான இடமான சுவிச்சர்லாந்தின் தாவோசுக்கு பதிலாக சிங்கப்பூரில் வரும் 2021ஆம் ஆண்டுக்கான கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. சுவிச்சர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நிகழ்விடம் மாற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் வருடாந்திர கூட்டம், மீண்டும் சுவிச்சர்லாந்திலேயே நடத்தப்படும்.
-
Question 27 of 50
27. Question
7. 8848.86 மீட்டரை எந்தப் புகழ்பெற்ற சிகரத்தின் திருத்தப்பட்ட உயரமாக நேபாளம் அறிவித்துள்ளது?
Correct
• உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை நேபாளம் மீண்டும் அளந்துள்ளது. சீனாவுடன் சேர்ந்து உச்சத்தின் எவரெஸ்ட் சிகரத்தின் திருத்தப்பட்ட உயரத்தை 8,848.86 மீட்டர் என அது அறிவித்தது. இவ்வுயரம், 1954ஆம் ஆண்டில் இந்திய நில அளவைத்துறை மேற்கொண்ட முந்தைய அளவீட்டைவிட கிட்டத்தட்ட .86 செமீ அதிகமாகும். இப்புதிய உயரம் சீனாவின் அண்மைய அளவீட்டை விட 4 மீ அதிகமாகும். நேபாளம்-சீனா எல்லையானது இந்தச் சிகரத்தின் வழியாக செல்கிறது.
Incorrect
• உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை நேபாளம் மீண்டும் அளந்துள்ளது. சீனாவுடன் சேர்ந்து உச்சத்தின் எவரெஸ்ட் சிகரத்தின் திருத்தப்பட்ட உயரத்தை 8,848.86 மீட்டர் என அது அறிவித்தது. இவ்வுயரம், 1954ஆம் ஆண்டில் இந்திய நில அளவைத்துறை மேற்கொண்ட முந்தைய அளவீட்டைவிட கிட்டத்தட்ட .86 செமீ அதிகமாகும். இப்புதிய உயரம் சீனாவின் அண்மைய அளவீட்டை விட 4 மீ அதிகமாகும். நேபாளம்-சீனா எல்லையானது இந்தச் சிகரத்தின் வழியாக செல்கிறது.
-
Question 28 of 50
28. Question
8.2020 டிசம்பர் மாத பிட்ச் மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்னவாக இருக்கும்?
Correct
• ஃபிட்ச் மதிப்பீடுகள் அதன் உலகளாவிய பொருளாதார பார்வையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை -9.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.5% ஆக சுருங்கும் என்று பிட்ச் மதிப்பிட்டிருந்தது. தற்போது, வரும் 2021ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்படுவதால், கண்ணோட்டம் பிரகாசமாக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.
Incorrect
• ஃபிட்ச் மதிப்பீடுகள் அதன் உலகளாவிய பொருளாதார பார்வையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை -9.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.5% ஆக சுருங்கும் என்று பிட்ச் மதிப்பிட்டிருந்தது. தற்போது, வரும் 2021ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்படுவதால், கண்ணோட்டம் பிரகாசமாக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.
-
Question 29 of 50
29. Question
9. ஐநா’இன் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
• நீடித்த வளர்ச்சி இலக்குகளில் உலகின் முயற்சிகளை அணிதிரட்டுவதற்காக ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. UN SDSN மற்றும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் கொள்கை நிறுவனம் ஆகியவை இணைந்து ஐரோப்பிய நீடித்த வளர்ச்சி அறிக்கை-2020’ஐ வெளியிட்டன. இது ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை தெரிவிக்கிறது.
Incorrect
• நீடித்த வளர்ச்சி இலக்குகளில் உலகின் முயற்சிகளை அணிதிரட்டுவதற்காக ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. UN SDSN மற்றும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் கொள்கை நிறுவனம் ஆகியவை இணைந்து ஐரோப்பிய நீடித்த வளர்ச்சி அறிக்கை-2020’ஐ வெளியிட்டன. இது ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை தெரிவிக்கிறது.
-
Question 30 of 50
30. Question
10.ஐக்கிய அரபு அமீரகம் & சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்யும் முதல் இந்திய இராணுவத் தலைவர் யார்?
Correct
• இந்தியாவின் இராணுவத் தளபதி (COAS) மனோஜ் முகுந்த் நரவனே ஐக்கிய அரபு அமீரகம் (UAE) & சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ‘வரலாற்று’ச்சிறப்புவாய்ந்த 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள் -ளார். இரு வளைகுடா நாடுகளுக்கும் இந்திய இராணுவத்தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த விஜயம், இருநாடுகளுக்கும் இடையிலான உத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சவுதி அரேபியா, இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளராகும்.
Incorrect
• இந்தியாவின் இராணுவத் தளபதி (COAS) மனோஜ் முகுந்த் நரவனே ஐக்கிய அரபு அமீரகம் (UAE) & சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ‘வரலாற்று’ச்சிறப்புவாய்ந்த 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள் -ளார். இரு வளைகுடா நாடுகளுக்கும் இந்திய இராணுவத்தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த விஜயம், இருநாடுகளுக்கும் இடையிலான உத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சவுதி அரேபியா, இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளராகும்.
-
Question 31 of 50
31. Question
1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Go for Zero” என்ற கொள்கையுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
• “சுழியத்திற்கு செல்” என்பது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான கிரட்டன் நிறுவனம் வெளியிட்ட ஒரு கொள்கை முன்மொழிவு ஆகும். கொள்கையின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இறுதியாக சுழிய புதிய COVID-19 பாதிப்புகளை எட்டுவதே இதன் நோக்கமாகும். இதன் விளைவாக, COVID-19 தொற்று நோயானது உள்ளூர் அளவில் பரவாமல் மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ளது.
Incorrect
• “சுழியத்திற்கு செல்” என்பது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான கிரட்டன் நிறுவனம் வெளியிட்ட ஒரு கொள்கை முன்மொழிவு ஆகும். கொள்கையின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இறுதியாக சுழிய புதிய COVID-19 பாதிப்புகளை எட்டுவதே இதன் நோக்கமாகும். இதன் விளைவாக, COVID-19 தொற்று நோயானது உள்ளூர் அளவில் பரவாமல் மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ளது.
-
Question 32 of 50
32. Question
2.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘வாழ்வுக்கலை’ முறையுடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
• இராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறையானது UNESCO’உடன் கூட்டிணைந்து, ‘வாழ்வுக்கலை’ என்ற முறையை பின்பற்றி ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானேர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் சுமார் பத்து கலாச்சார சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படுகின்றன. மேடைக் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை கலை மற்றும் கலாச்சாரத்தின் அபிமானிகளுடன் இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
Incorrect
• இராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறையானது UNESCO’உடன் கூட்டிணைந்து, ‘வாழ்வுக்கலை’ என்ற முறையை பின்பற்றி ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஜெய்சால்மர், ஜோத்பூர், பிகானேர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் சுமார் பத்து கலாச்சார சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படுகின்றன. மேடைக் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை கலை மற்றும் கலாச்சாரத்தின் அபிமானிகளுடன் இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
-
Question 33 of 50
33. Question
3.காற்றிலிருந்து நீரை அறுவடை செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
• கெளகாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் புதிய தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். ‘ஹைட்ரோபோபிசிட்டி’ என்ற அறிவியல் முறையைப்பயன்படுத்தி அவர்கள் அப்புதிய தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளனர். வழுக்கும் திரவம்-உட்செலுத்தப்பட்ட நுண்ணிய மேற்பரப்புகள் (அ) SLIPS என்ற பொருள் வேதியியல் முறையில் வடிவமைக்கப்பட்டு இந்தத் தொழினுட்பத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
• கெளகாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் புதிய தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். ‘ஹைட்ரோபோபிசிட்டி’ என்ற அறிவியல் முறையைப்பயன்படுத்தி அவர்கள் அப்புதிய தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளனர். வழுக்கும் திரவம்-உட்செலுத்தப்பட்ட நுண்ணிய மேற்பரப்புகள் (அ) SLIPS என்ற பொருள் வேதியியல் முறையில் வடிவமைக்கப்பட்டு இந்தத் தொழினுட்பத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
-
Question 34 of 50
34. Question
4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஸ்டார்ஷிப்’ என்பது கீழ்க்காணும் எந்த விண்வெளி நிறுவனம் / அமைப்பின் ஏவுகலமாகும்?
Correct
• ‘ஸ்டார்ஷிப்’ என்பது எலன் மஸ்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனமான ‘Space X’இன் எதிர்கால திட்டத்துக்குரிய விண்வெளி ஓடமாகும். இது செவ்வாய் கோளுக்கு மக்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ‘ஸ்டார்ஷிப்’பின் முதல் சோதனை தானியங்கி எந்திரத்தின் கோளாறு காரணமாக கடைசி வினாடியில் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இந்நிறுவனம், ஐந்து ‘ஸ்டார்ஷிப்’ விண்வெளி ஓடங்களை சோதித்துள்ளது.
Incorrect
• ‘ஸ்டார்ஷிப்’ என்பது எலன் மஸ்கிற்கு சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனமான ‘Space X’இன் எதிர்கால திட்டத்துக்குரிய விண்வெளி ஓடமாகும். இது செவ்வாய் கோளுக்கு மக்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ‘ஸ்டார்ஷிப்’பின் முதல் சோதனை தானியங்கி எந்திரத்தின் கோளாறு காரணமாக கடைசி வினாடியில் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இந்நிறுவனம், ஐந்து ‘ஸ்டார்ஷிப்’ விண்வெளி ஓடங்களை சோதித்துள்ளது.
-
Question 35 of 50
35. Question
5. ‘ஒருங்கிணைந்த மருத்துவத்துறை’யை மத்திய AYUSH அமைச்சகமும் கீழ்க்காணும் எந்நிறுவனமும் இணைந்து அமைக்கவுள்ளன?
Correct
• மத்திய AYUSH அமைச்சகமும், AIIMS மருத்துவமனையும் இணைந்து, AIIMS மருத்துவமனையில் ‘ஒருங்கிணைந்த மருத்துவத்துறை’யை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன. மேலும், COVID தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஆயுர்வேதம், யோகா சார்ந்த ஒருங்கிணைத்த நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
Incorrect
• மத்திய AYUSH அமைச்சகமும், AIIMS மருத்துவமனையும் இணைந்து, AIIMS மருத்துவமனையில் ‘ஒருங்கிணைந்த மருத்துவத்துறை’யை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன. மேலும், COVID தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஆயுர்வேதம், யோகா சார்ந்த ஒருங்கிணைத்த நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
-
Question 36 of 50
36. Question
6.அண்மைய SIPRI அறிக்கையின்படி, கீழ்க்காணும் எவ்விரு நாடுகளின் நிறுவனங்கள் உலகளாவிய ஆயுத சந்தையில் முன்னணியில் உள்ளன?
Correct
• ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அளித்த அறிக்கையின்படி, அமெரிக்க மற்றும் சீனா நிறுவனங்கள், 2019ஆம் ஆண்டில், உலக ஆயுத சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 25 முன்னணி ஆயுத உற்பத்தியாளர்களின் விற்பனையில் கிட்டத்தட்ட 61 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்களும், 15.7 சதவீதத்தை சீன நிறுவனங்களும் வாங்கியுள்ளன.
Incorrect
• ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அளித்த அறிக்கையின்படி, அமெரிக்க மற்றும் சீனா நிறுவனங்கள், 2019ஆம் ஆண்டில், உலக ஆயுத சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 25 முன்னணி ஆயுத உற்பத்தியாளர்களின் விற்பனையில் கிட்டத்தட்ட 61 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்களும், 15.7 சதவீதத்தை சீன நிறுவனங்களும் வாங்கியுள்ளன.
-
Question 37 of 50
37. Question
7.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, கோயில்வார் பாலம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• பீகார் மாநிலத்தில் சோனாற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள `266 கோடி மதிப்பிலான 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள முவ்வழி கோயில்வார் பாலத்தை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலிமூலம் திறந்துவைத்தார். சாலை & ரயில் போக்குவரவுக்காக ஏற்கனவே உள்ள பாலம் 138 ஆண்டுகள் பழமையானதாகும். அதற்குப் பதிலாக ஆறு வழிப் பாலம் கட்டப்பட்டுவரும் நிலையில், அதில் முவ்வழிகள் தற்போது பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டன. பீகார், உத்தர பிரதேசத்துக்கு இடையேயான போக்குவரத்துக்கு இந்தப்பாலம் ஒரு முக்கிய வழியாகும்.
Incorrect
• பீகார் மாநிலத்தில் சோனாற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள `266 கோடி மதிப்பிலான 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள முவ்வழி கோயில்வார் பாலத்தை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலிமூலம் திறந்துவைத்தார். சாலை & ரயில் போக்குவரவுக்காக ஏற்கனவே உள்ள பாலம் 138 ஆண்டுகள் பழமையானதாகும். அதற்குப் பதிலாக ஆறு வழிப் பாலம் கட்டப்பட்டுவரும் நிலையில், அதில் முவ்வழிகள் தற்போது பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டன. பீகார், உத்தர பிரதேசத்துக்கு இடையேயான போக்குவரத்துக்கு இந்தப்பாலம் ஒரு முக்கிய வழியாகும்.
-
Question 38 of 50
38. Question
8.நடப்பாண்டின் (2020) நகர்ப்புற நிர்வாக குறியீட்டில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
Correct
• மும்பையைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான பிரஜா அறக்கட்டளை, நடப்பாண்டின் (2020) நகர்ப்புற நிர்வாக குறியீட்டை வெளியிட்டது. இக்குறியீட்டின்படி, நகர்ப்புற நிர்வாகத்தில், மாநிலங்கள் அளவில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அடுத்தடுத்த இடங்கில் உள்ளன. இந்த ஆய்வு, 28 மாநிலங்களில் உள்ள நாற்பது நகரங்கள் மற்றும் தில்லி தேசிய தலைநகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
Incorrect
• மும்பையைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான பிரஜா அறக்கட்டளை, நடப்பாண்டின் (2020) நகர்ப்புற நிர்வாக குறியீட்டை வெளியிட்டது. இக்குறியீட்டின்படி, நகர்ப்புற நிர்வாகத்தில், மாநிலங்கள் அளவில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அடுத்தடுத்த இடங்கில் உள்ளன. இந்த ஆய்வு, 28 மாநிலங்களில் உள்ள நாற்பது நகரங்கள் மற்றும் தில்லி தேசிய தலைநகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
-
Question 39 of 50
39. Question
9. போர்ப்ஸின் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த 100 பெண்களின் தரவரிசையில், இந்தியாவில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த பெண்மணி யார்?
Correct
• போர்ப்ஸின் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த 100 பெண்களின் தரவரிசையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41ஆவது இடத்தில் உள்ளார். HCL நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ரோஷினி நாடார் மல்கோத்ரா 55ஆவது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார்-ஷா 68ஆவது இடத்திலும் உள்ளனர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அவர்கள் இந்தப்பட்டியலின் முதலிடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
Incorrect
• போர்ப்ஸின் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த 100 பெண்களின் தரவரிசையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41ஆவது இடத்தில் உள்ளார். HCL நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ரோஷினி நாடார் மல்கோத்ரா 55ஆவது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார்-ஷா 68ஆவது இடத்திலும் உள்ளனர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அவர்கள் இந்தப்பட்டியலின் முதலிடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
-
Question 40 of 50
40. Question
10.உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை உருவாக்கியுள்ள நாடு எது?
Correct
• COVID-19 தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் நாடாக ஐக்கியப் பேரரசு ஆனது. பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒழுங்காற்றுநர்கள் ஒப்புதல் அளித்தனர். • நாடு முழுவதுமுள்ள பல்வேறு மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்தத் தடுப்பூசி, 21 நாட்கள் இடைவெளியில் 2 ஊசி மருந்தாக வழங்கப்படுகிறது. இரண்டாவது முறைக்கு 7 நாட்களுக்குப் பிறகு முழுமையான நோயெதிர்ப்பு ஆற்றல் எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
Incorrect
• COVID-19 தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் நாடாக ஐக்கியப் பேரரசு ஆனது. பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒழுங்காற்றுநர்கள் ஒப்புதல் அளித்தனர். • நாடு முழுவதுமுள்ள பல்வேறு மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்தத் தடுப்பூசி, 21 நாட்கள் இடைவெளியில் 2 ஊசி மருந்தாக வழங்கப்படுகிறது. இரண்டாவது முறைக்கு 7 நாட்களுக்குப் பிறகு முழுமையான நோயெதிர்ப்பு ஆற்றல் எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
-
Question 41 of 50
41. Question
1.காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் முதலிடம் பிடித்த நாடு எது?
Correct
• காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டை ஜெர்மன்வாட்ச் & நியூகிளைமேட் ஆகிய நிறுவனங்கள் காலநிலை நடவடிக்கை வலையமைப்புடன் (CAN இன்டர்நேஷனல்) இணைந்து வெளியிட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பதாம் இடத்திலிருந்து இந்தியா, இந்த ஆண்டு (2020) ஒரு தரவரிசை குறைந்து பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளது. முதல் மூன்று இடங்களை எந்த நாடும் பெறவில்லை.
• நான்காமிடம் சுவீடனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தக்குறியீடு, ஐம்பத்தேழு (57) நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்திறனையும் நான்கு பிரிவுகளாக மதிப்பிட்டுள்ளது.Incorrect
• காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டை ஜெர்மன்வாட்ச் & நியூகிளைமேட் ஆகிய நிறுவனங்கள் காலநிலை நடவடிக்கை வலையமைப்புடன் (CAN இன்டர்நேஷனல்) இணைந்து வெளியிட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பதாம் இடத்திலிருந்து இந்தியா, இந்த ஆண்டு (2020) ஒரு தரவரிசை குறைந்து பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளது. முதல் மூன்று இடங்களை எந்த நாடும் பெறவில்லை.
• நான்காமிடம் சுவீடனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தக்குறியீடு, ஐம்பத்தேழு (57) நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்திறனையும் நான்கு பிரிவுகளாக மதிப்பிட்டுள்ளது. -
Question 42 of 50
42. Question
2.இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்?
Correct
• இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் என்பது வெளியுறவு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். அது, 1950’இல் மெளலானா அபுல் கலாம் ஆசாத் என்பவரால் நிறுவப்பட்டது. ICCR தலைவர் வினய் சகஸ்ரபுத்தேயின் கூற்றுப்படி, இந்தியாவைப் பற்றி உலகளவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பள்ளிகளின் பாடநூல்களை, “Global Understanding of India Project – இந்தியா பற்றிய உலகளாவிய புரிதல்” திட்டத்தின்கீழ் அது ஆய்வு செய்து வருகிறது.
Incorrect
• இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் என்பது வெளியுறவு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். அது, 1950’இல் மெளலானா அபுல் கலாம் ஆசாத் என்பவரால் நிறுவப்பட்டது. ICCR தலைவர் வினய் சகஸ்ரபுத்தேயின் கூற்றுப்படி, இந்தியாவைப் பற்றி உலகளவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பள்ளிகளின் பாடநூல்களை, “Global Understanding of India Project – இந்தியா பற்றிய உலகளாவிய புரிதல்” திட்டத்தின்கீழ் அது ஆய்வு செய்து வருகிறது.
-
Question 43 of 50
43. Question
3.சிறார் ஆபாசவியலை கையாளுவதற்காக, சமீபத்தில் பன்னாட்டுக் காவலகத்திலிருந்து, ‘Crawler’ என்ற மென்பொருளை வாங்கிய மாநில காவல்துறை எது?
Correct
• மகாராஷ்டிரா மாநில காவல்துறையின் இணையவெளிக் குற்றத்தடுப்புப் பிரிவானது அண்மையில் INTERPOL’இலிருந்து, ‘Crawler’ என்ற மென்பொருளை வாங்கியுள்ளது. இந்த மென்பொருளை வாங்கிய முதல் இந்திய அமைப்பு இதுவாகும். இம்மென்பொருள், மகாராஷ்டிர மாநிலத்தில் சிறார் ஆபாசவியலை (Child Pornography) கையாள உதவும்.
• இணையத்தில் பதிவேற்றப்பட்ட சிறார் ஆபாசப்படங்களைக் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள் காவல்துறைக்கு உதவுகிறது. நிர்வாணத்தைக் கண்டறிவது, முக்கிய சொற்களைத் தேடுவது, வயதை அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களை இந்த மென்பொருள் கொண்டுள்ளது.Incorrect
• மகாராஷ்டிரா மாநில காவல்துறையின் இணையவெளிக் குற்றத்தடுப்புப் பிரிவானது அண்மையில் INTERPOL’இலிருந்து, ‘Crawler’ என்ற மென்பொருளை வாங்கியுள்ளது. இந்த மென்பொருளை வாங்கிய முதல் இந்திய அமைப்பு இதுவாகும். இம்மென்பொருள், மகாராஷ்டிர மாநிலத்தில் சிறார் ஆபாசவியலை (Child Pornography) கையாள உதவும்.
• இணையத்தில் பதிவேற்றப்பட்ட சிறார் ஆபாசப்படங்களைக் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள் காவல்துறைக்கு உதவுகிறது. நிர்வாணத்தைக் கண்டறிவது, முக்கிய சொற்களைத் தேடுவது, வயதை அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. -
Question 44 of 50
44. Question
4.2020-2023ஆம் ஆண்டு வரையிலும் கடைப்பிடிக்கப்படுகிற அனைத்துலக உள்நாட்டு வான்போக்குவ -ரத்து நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
• 1996ஆம் ஆண்டில், ஐநா அவையின் பொது அவை, டிச.7’ஐ அனைத்துலக சிவில் வான்போக்குவரத்து நாள் என அறிவித்தது. அனைத்துலக உள்நாட்டு வான் போக்குவரத்து மாநாட்டில் கையெழுத்திட்டதன் ஐம்பதாமாண்டு நிறைவுநாளான 1994 டிச.7ஆம் தேதி முதல் பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பால் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. உலகின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வானூர்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதே இந்நாளின் நோக்கமாகும்.
Incorrect
• 1996ஆம் ஆண்டில், ஐநா அவையின் பொது அவை, டிச.7’ஐ அனைத்துலக சிவில் வான்போக்குவரத்து நாள் என அறிவித்தது. அனைத்துலக உள்நாட்டு வான் போக்குவரத்து மாநாட்டில் கையெழுத்திட்டதன் ஐம்பதாமாண்டு நிறைவுநாளான 1994 டிச.7ஆம் தேதி முதல் பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பால் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. உலகின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வானூர்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதே இந்நாளின் நோக்கமாகும்.
-
Question 45 of 50
45. Question
5. “ஆர்கனோகுளோரின்” என்பது பொதுவாக கீழ்க்காணும் எதுவாக பயன்படுத்தப்படுகிறது?
Correct
• சில இந்திய அமைப்புகள் ஆந்திர பிரதேச மாநிலத்தில் பரவிய ஒரு மர்ம நோய்க்குக் காரணம், பூச்சிக் கொல்லியாகவோ (அ) கொசு ஒழிப்பானாகவோ ‘ஆர்கனோகுளோரைன்’ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரித்து வருகின்றன. இந்நோய் ஒருவரின் இறப்புக்கு வழிவகுக்கிறது. ‘ஆர்கனோ குளோரைன்கள்’ புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை மற்றும் இது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள், இவை மனிதரில் பல நோய்களை ஏற்படுத்துகின்றன என்பதை நிரூபித்துள்ளன.
Incorrect
• சில இந்திய அமைப்புகள் ஆந்திர பிரதேச மாநிலத்தில் பரவிய ஒரு மர்ம நோய்க்குக் காரணம், பூச்சிக் கொல்லியாகவோ (அ) கொசு ஒழிப்பானாகவோ ‘ஆர்கனோகுளோரைன்’ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரித்து வருகின்றன. இந்நோய் ஒருவரின் இறப்புக்கு வழிவகுக்கிறது. ‘ஆர்கனோ குளோரைன்கள்’ புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை மற்றும் இது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள், இவை மனிதரில் பல நோய்களை ஏற்படுத்துகின்றன என்பதை நிரூபித்துள்ளன.
-
Question 46 of 50
46. Question
6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயன் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• அண்மையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான மத்திய வனவுயிரி பூங்காக்கள் ஆணையத்தின் கூட்டத்தில், இரு புதிய உயிரியல் பூங்காக்கள் அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவை, பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள இராஜ்கீர் வனவுயிரி பூங்கா பயணமும் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயன் ஆகியனவாகும். இதன்மூலம், உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள உயிரியல் பூங்காக்களின் எண்ணிக்கை 9 ஆனது.
Incorrect
• அண்மையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான மத்திய வனவுயிரி பூங்காக்கள் ஆணையத்தின் கூட்டத்தில், இரு புதிய உயிரியல் பூங்காக்கள் அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவை, பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள இராஜ்கீர் வனவுயிரி பூங்கா பயணமும் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயன் ஆகியனவாகும். இதன்மூலம், உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள உயிரியல் பூங்காக்களின் எண்ணிக்கை 9 ஆனது.
-
Question 47 of 50
47. Question
7.கூகிள் இந்தியாவின்படி, இந்த ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமை யார்?
Correct
• கூகிள் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது வருடாந்திர ‘Year in Search’ முடிவுகளை வெளியிட்டது. அது, கூகிளில் மிகவும் பிரபலமான தேடல்களை முன்னிலைப்படுத்தியது. அந்த அறிக்கையின்படி, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், இவ்வாண்டு (2020) கூகிளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமையாவார். IPL, நடப்பாண்டின் (2020) சிறந்த பிரபலமான தேடலாக இருந்துள்ளது. COVID-19 தொற்றுநோயைப் பற்றிய தேடல்களும் இப்பட்டியலில் அதிகம் இடம்பெற்றன.
Incorrect
• கூகிள் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது வருடாந்திர ‘Year in Search’ முடிவுகளை வெளியிட்டது. அது, கூகிளில் மிகவும் பிரபலமான தேடல்களை முன்னிலைப்படுத்தியது. அந்த அறிக்கையின்படி, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், இவ்வாண்டு (2020) கூகிளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமையாவார். IPL, நடப்பாண்டின் (2020) சிறந்த பிரபலமான தேடலாக இருந்துள்ளது. COVID-19 தொற்றுநோயைப் பற்றிய தேடல்களும் இப்பட்டியலில் அதிகம் இடம்பெற்றன.
-
Question 48 of 50
48. Question
8. ’Recover Better – Stand Up for Human Rights’ என்ற கருப்பொருளுடன் டிச.10 அன்று அனுசரிக்கப்பட்ட சிறப்பு நாள் எது?
Correct
• மனிதவுரிமைகள் நாளானது ஆண்டுதோறும் டிச.10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள், கடந்த 1948’இல், ஐநா பொதுச்சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. “Recover Better – Stand Up for Human Rights: சிறந்த முறையில் மீள்வோம் – மனிதவுரிமைகளுக்காக நிற்போம்” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
• மனிதவுரிமைகள் நாளானது ஆண்டுதோறும் டிச.10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள், கடந்த 1948’இல், ஐநா பொதுச்சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. “Recover Better – Stand Up for Human Rights: சிறந்த முறையில் மீள்வோம் – மனிதவுரிமைகளுக்காக நிற்போம்” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 49 of 50
49. Question
9. NASA’இன், நிலவில்-தரையிறங்கும் திட்டத்தின் பெயர் என்ன?
Correct
• 18 விண்வெளி வீரர் / வீராங்கனைகள் அடங்கிய குழுவில் சரிபாதி பெண்கள் இருப்பார்கள் என NASA அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில், ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற பெயரிலான அதன் நிலவில்-தரையிறங்கும் திட்டத்திற்கு அவர்கள் அனைவருக்கும் பயிற்சியளிக்கப்படவுள்ளது. அவர்களுள், நிலவில் கால்தடம் பதியப்போகும் முதல் பெண்ணும், அடுத்த ஆணும் தெரிவு செய்யப்படுவார்கள். இக்குழுவில் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோரும் அடங்குவர். அவர்களிருவரும் உலகின் முதல் அனைத்து பெண் விண்வெளி நடையணத்தை நிகழ்த்தியவர்களாவர்.
Incorrect
• 18 விண்வெளி வீரர் / வீராங்கனைகள் அடங்கிய குழுவில் சரிபாதி பெண்கள் இருப்பார்கள் என NASA அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில், ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற பெயரிலான அதன் நிலவில்-தரையிறங்கும் திட்டத்திற்கு அவர்கள் அனைவருக்கும் பயிற்சியளிக்கப்படவுள்ளது. அவர்களுள், நிலவில் கால்தடம் பதியப்போகும் முதல் பெண்ணும், அடுத்த ஆணும் தெரிவு செய்யப்படுவார்கள். இக்குழுவில் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோரும் அடங்குவர். அவர்களிருவரும் உலகின் முதல் அனைத்து பெண் விண்வெளி நடையணத்தை நிகழ்த்தியவர்களாவர்.
-
Question 50 of 50
50. Question
10.இந்திய கரும்புலி இறால்களுக்கான இறக்குமதி ஆய்வுக்கு விலக்கு அளித்துள்ள நாடு எது?
Correct
• அண்மையில், இந்திய கரும்புலி இறால்களுக்கான இறக்குமதி ஆய்வுக்கு ஜப்பான் விலக்களித்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்திய கரும்புலி இறால்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக ஜப்பான் உள்ளது. ஏற்றுமதிப்பண்டங்களில் செயற்கை பாக்டீரியா எதிர்ப்புமருந்தான ‘புராசோலிடோன்’ முற்றிலும் இல்லாததையடுத்து இம்முடிவை அந்த நாடு எடுத்துள்ளது. இம்முடிவானது, மேற்கு வங்கம் & கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் வேளாண்மை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தும்.
Incorrect
• அண்மையில், இந்திய கரும்புலி இறால்களுக்கான இறக்குமதி ஆய்வுக்கு ஜப்பான் விலக்களித்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்திய கரும்புலி இறால்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக ஜப்பான் உள்ளது. ஏற்றுமதிப்பண்டங்களில் செயற்கை பாக்டீரியா எதிர்ப்புமருந்தான ‘புராசோலிடோன்’ முற்றிலும் இல்லாததையடுத்து இம்முடிவை அந்த நாடு எடுத்துள்ளது. இம்முடிவானது, மேற்கு வங்கம் & கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் வேளாண்மை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தும்.
Leaderboard: December 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||