Online TestTnpsc Exam
உற்பத்தி Online Test 7th Social Science Lesson 8 Questions in Tamil
உற்பத்தி Online Test 7th Social Science Lesson 8 Questions in Tamil
Congratulations - you have completed உற்பத்தி Online Test 7th Social Science Lesson 8 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயல் _________ எனப்படும்.
நுகர்வு | |
உற்பத்தி | |
இடைவினையாற்றல் | |
உள்ளீடு |
Question 1 Explanation:
(குறிப்பு: உற்பத்தி, ஒவ்வொருவரின் தேவைக்கேற்பச் சிறந்த சேவையையும் மதிப்பையும் அளிப்பதில் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது.)
Question 2 |
விளைபொருளாகிய பருத்தியைக் கொண்டு ஆடைகள் உருவாக்கப்படுவது எவ்வகையான பயன்பாடு?
இடப் பயன்பாடு | |
காலப் பயன்பாடு | |
வடிவப் பயன்பாடு | |
மூலப்பொருள் பயன்பாடு |
Question 2 Explanation:
(குறிப்பு: ஒரு விளைபொருளின் வடிவம் மாற்றப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது. இவ்வகைப் பயன்பாடு வடிவப் பயன்பாடு எனப்படும்.)
Question 3 |
பொருளாதாரத்தில் __________ எனும் சொல், மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கும்.
மூலதனம் | |
விற்பனை | |
உற்பத்தி | |
நுகர்வு |
Question 3 Explanation:
(குறிப்பு: பயன்பாட்டை உருவாக்குதலே உற்பத்தியாகும். பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.)
Question 4 |
பயன்பாடு அதன் இயல்பைப் பொருத்து எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 4 Explanation:
(குறிப்பு: வகைகள் - வடிவப் பயன்பாடு, இடப் பயன்பாடு, காலப் பயன்பாடு)
Question 5 |
இந்தியாவில் ________ பொருளாதார நிலை காணப்படுகிறது.
முதலாளித்துவ பொருளாதாரம் | |
காலனி ஆதிக்க பொருளாதாரம் | |
கலப்பு பொருளாதாரம் | |
தனியார் துறை பொருளாதாரம் |
Question 5 Explanation:
(குறிப்பு: கலப்பு பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.)
Question 6 |
விளைபொருளான அரிசி தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிப்பது _________ பயன்பாடு.
இடப் பயன்பாடு | |
காலப் பயன்பாடு | |
வடிவப் பயன்பாடு | |
மூலப்பொருள் பயன்பாடு |
Question 6 Explanation:
(குறிப்பு: ஒரு விளைபொருள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் போது அதன் பயன்பாடு மிகுதியாகிறது. இவ்வகைப் பயன்பாடு இடப்பயன்பாடு எனப்படும்.)
Question 7 |
ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும்போது, அதன் பயன்பாடு மிகுகிறது. இது ________ பயன்பாடு எனப்படும்.
இடப் பயன்பாடு | |
காலப் பயன்பாடு | |
காலப் பயன்பாடு | |
மூலப்பொருள் பயன்பாடு |
Question 7 Explanation:
(குறிப்பு: நுகர்வோர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றைச் சேமித்து வைப்பதால், அவற்றின் தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன. இது காலப்பயன்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகும்.)
Question 8 |
பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை __________ என்கிறோம்.
- முதன்மை நிலை உற்பத்தி
- இரண்டாம் நிலை உற்பத்தி
- மூன்றாம் நிலை உற்பத்தி
- வேளாண்மைத் துறை உற்பத்தி
1, 4 | |
3,4 | |
1 மட்டும் | |
4 மட்டும் |
Question 8 Explanation:
(குறிப்பு: முதன்மை நிலையில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனை வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.)
Question 9 |
கீழ்க்கண்டவற்றுள் முதன்மை நிலை உற்பத்தியில் அடங்காதது எது?
மீன் பிடித்தல் | |
சுரங்கத் தொழில் | |
எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் | |
பருத்தித் தொழிற்சாலை |
Question 9 Explanation:
(குறிப்பு: வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய செயல்கள், வளங்களைப் பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், பூமியின் மேற்பரப்பிலிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் இயற்கை வளங்களைப் பிரித்தெடுக்கின்றன.)
Question 10 |
இரண்டாம் நிலை உற்பத்தியில் _________க்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து | |
ஏற்றுமதி | |
சேவை | |
தொழில் |
Question 10 Explanation:
(குறிப்பு: முதன்மை நிலையின் உற்பத்திப் பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்திப் புதிய உற்பத்திப் பொருள்களாக உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம். என்கிறோம். இது தொழில்துறை உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது.)
Question 11 |
கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை உற்பத்தியில் அடங்கும் தொழில்கள் எவை?
- மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல்
- இரும்புத் தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருள்களைத் தயாரித்தல்
- பொறியியல் துறை சார்ந்த பணிகள்
- போக்குவரத்து
அனைத்தும் | |
1, 2 | |
1, 2, 4 | |
1, 2, 3 |
Question 11 Explanation:
(குறிப்பு: நான்கு சக்கர வண்டிகள், ஆடைகள், இரசாயனப் பொருள்கள் போன்றவற்றைத் தயாரித்தலும், கட்டப் பணிகள் சார்ந்த தொழில்களும் இரண்டாம் நிலை உற்பத்தியில் அடங்கும்.)
Question 12 |
மூன்றாம் நிலை உற்பத்தியில் _________க்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து | |
ஏற்றுமதி | |
சேவை | |
தொழில் |
Question 12 Explanation:
(குறிப்பு: முதன்மை நிலை, இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருள்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். இது சேவைத்துறை உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது.)
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் சேவைத் துறை உற்பத்தியில் அடங்கும் நிறுவனங்கள் எவை?
- வாணிகம்
- காப்பீடு
- போக்குவரத்து
- சட்டம்
- உடல்நலப் பாதுகாப்பு
அனைத்தும் | |
1, 2, 4 | |
1, 3, 5 | |
1, 2, 4, 5 |
Question 13 Explanation:
(குறிப்பு: வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, சட்டம், நிருவாகம், கல்வி, உடல் நலப் பாதுகாப்பு போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை உற்பத்தி நிறுவனங்களாக விளங்குகின்றன.)
Question 14 |
இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவை ____________ துறை உற்பத்திகள் ஆகும்.
முதல் நிலை உற்பத்தி | |
இரண்டாம் நிலை உற்பத்தி | |
மூன்றாம் நிலை உற்பத்தி | |
வேளாண்மைத் துறை உற்பத்தி |
Question 15 |
மனிதனின் செயல்பாடுகள் _________ கூறுகளில் உள்ளடங்கியுள்ளன.
2 | |
3 | |
4 | |
5 |
Question 15 Explanation:
(குறிப்பு: மனித செயல்பாடுகள் பொருளை உற்பத்தி செய்தல், நுகர்தல் என்னும் இரு கூறுகளில் உள்ளடங்கியுள்ளன.)
Question 16 |
ஒரு பொருளின் உற்பத்திக்கு உதவுகின்ற காரணிகள் கீழ்க்கண்ட எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
- மூலதனம்
- நிலம்
- உழைப்பு
- முதலீடு
- வருமானம்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 5 | |
2, 3, 5 |
Question 16 Explanation:
(குறிப்பு: உற்பத்தியின்போது, பொருள்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றம் செய்யப்படுகின்றன. உற்பத்திக்கு காரணமாக அமையும் உள்ளீட்டுப் பொருள்கள் யாவும் வெளியீட்டுப் பொருள்களாக மாற்றப்படுகின்றன.)
Question 17 |
உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு தேவைப்படும் நான்காவதாக காரணி
சந்தை | |
உழைப்பு | |
இயற்கை | |
அமைப்பு |
Question 17 Explanation:
(குறிப்பு: பண்டங்களும் பொருள்களும் தாமாகவே உற்பத்தி செய்ய முடியாது. இவற்றை உற்பத்தி செய்வதற்கு பொறுப்பு ஏற்கும் ஒரு காரணியே அமைப்பு அல்லது நிறுவனமாகும்.)
Question 18 |
உற்பத்திக் காரணிகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 18 Explanation:
(குறிப்பு: உற்பத்திக் காரணிகளை முதல்நிலை உற்பத்திக் காரணிகள் எனவும் மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் எனவும் இரண்டாகப் பிரிக்கலாம்.)
Question 19 |
கீழ்க்கண்டவற்றுள் முதல்நிலை உற்பத்திக் காரணிகளில் அடங்குபவை எவை?
- நிலம்
- உழைப்பு
- முதலீடு
- அமைப்பு
1, 2 | |
2, 3 | |
1, 3 | |
1, 4 |
Question 19 Explanation:
(குறிப்பு: முதல்நிலை உற்பத்திக் காரணிகள் இரண்டும் இயற்கையின் கொடை. இவற்றின் துணையின்றி எந்தப் பொருள்களையும் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது.)
Question 20 |
கீழ்க்கண்டவற்றுள் மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் எவை?
- நிலம் 2. உழைப்பு 3. முதலீடு 4. அமைப்பு
1, 2 | |
2, 3 | |
1, 3 | |
3, 4 |
Question 20 Explanation:
(குறிப்பு: முதலீடு, அமைப்பு ஆகிய இரண்டு காரணிகளும் முதல்நிலை உற்பத்திக் காரணிகளுடன் ஒன்றிணைந்து செயல்படும்போது, மொத்த உற்பத்தியானது அதிகரிக்கிறது.)
Question 21 |
இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிக்கும் உற்பத்திக் காரணி
நிலம் | |
உழைப்பு | |
முதலீடு | |
நிறுவனம் |
Question 21 Explanation:
(குறிப்பு: நிலப்பரப்பு, நீர், காற்று, கனிம வளங்கள், காடுகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள், மலைகள், தட்பவெப்பநிலை, காலநிலை ஆகிய அனைத்தும் நிலம் என்ற சொல்லுக்குள் அடங்குகின்றன.)
Question 22 |
குறிப்பிட்ட நிலப்பகுதி அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் __________ யைப் பொருத்து, நிலத்தின் வடிவம் மாற்றமடைகிறது.
உழைப்பு | |
மூலதனம் | |
வளங்கள் | |
கல்வி |
Question 22 Explanation:
(குறிப்பு: (எ.கா) வேளாண்மை செய்யும்போது விளை நிலமாகவும் மனை விற்பனை செய்யும்போது, வீட்டு நிலமாகவும் மாறுகிறது.)
Question 23 |
- கூற்று 1: நிலம் என்ற உற்பத்திக் காரணியைப் பெறுவதற்கு மனிதன் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை.
- கூற்று 2: நிலம் மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 23 Explanation:
(குறிப்பு: நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று.)
Question 24 |
- கூற்று: நிலத்தின் அளிப்பு என்றென்றும் மாறாததாக, அழிவுற்றதாக உள்ளது.
- காரணம்: மனிதன் மேற்கொள்ளும் முயற்சியால் நிலத்தின் அளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் தவறு |
Question 24 Explanation:
(குறிப்பு:நிலத்தின் செழிப்பை உயர்த்த முடியுமே தவிர, அதன் அளவை மாற்றமுடியாது.)
Question 25 |
பண்டங்களை உற்பத்தி செய்திட _________முக்கியக் காரணியாகும்.
மூலதனம் | |
உழைப்பு | |
நிலம் | |
ஆற்றல் |
Question 25 Explanation:
(குறிப்பு: மனிதன் செய்கின்ற எந்த ஓர் உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படையாக அமைகிறது.)
Question 26 |
- கூற்று 1: மனிதனால் அழிக்க முடியாத ஆற்றல்கள் சிலவற்றை நிலம் கொண்டுள்ளது.
- கூற்று 2: எங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் பற்றாக்குறையைப் பொறுத்தே உற்பத்தி செய்யும் பொருள் சந்தையில் விலை பெறுகிறது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 27 |
"வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன்கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு" என உழைப்பிற்கு விளக்கமளித்தவர் யார்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | |
ஆடம்ஸ்மித் | |
ஆல்பிரட் மார்ஷல் | |
ஆல்பிரட் மார்ஷல் |
Question 27 Explanation:
(குறிப்பு: உற்பத்தியில் மனித உழைப்பு ஓர் உள்ளீடாகும்.)
Question 28 |
செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடான 'செல்வ இலக்கணம்’ யாருடையக் கோட்பாடு?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | |
ஆடம்ஸ்மித் | |
ஆல்பிரட் மார்ஷல் | |
ஆபிரகாம் லிங்கன் |
Question 28 Explanation:
(குறிப்பு: ஆடம்ஸ்மித் "பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.)
Question 29 |
கீழ்க்கண்டவற்றுள் ஆடம் ஸ்மித் இயற்றிய நூல்கள் எவை?
- நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை
- நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு
- செல்வ இலக்கணம்
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1,3 |
Question 30 |
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும் | |
நிலம் ஆற்றல் வாய்ந்தது | |
நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி | |
நிலம் ஆற்றல் குறைந்தது |
Question 30 Explanation:
(குறிப்பு: நிலம் இயற்கையின் கொடை. நிலம் ஆற்றல் வாய்ந்தது, இடம்பெயரக் கூடியதன்று, நிலத்தின் அளிப்பு நிலையானது மற்றும் அழிவில்லாதது.)
Question 31 |
உழைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
உழைப்பு ஒரே சீரானதல்ல, திறமையும் பயிற்சியும் நபருக்கு நபர் மாறுபடுகின்றன. | |
உழைப்பை, உழைப்பாளரிடமிருந்து பிரிக்க இயலாது. | |
உழைப்பை சேமித்து வைக்க இயலாது. | |
உழைப்பு இடம்பெயரக்கூடியது அல்ல. |
Question 31 Explanation:
(குறிப்பு: உழைப்பு இடம்பெயரக்கூடியது. குறைந்த ஊதியம் பெறுவதைக் காட்டிலும் அதிக ஊதியம் பெற வேண்டும் என்பதற்காக, மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்கிறார்கள்.)
Question 32 |
உற்பத்தியில் _________ என்பது செயற்படு காரணியாகும்.
நிலம் | |
உழைப்பு | |
மூலதனம் | |
நிறுவனம் |
Question 32 Explanation:
(குறிப்பு: நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலாது.)
Question 33 |
வேலைப்பகுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | |
ஆடம்ஸ்மித் | |
ஆல்பிரட் மார்ஷல் | |
ஆபிரகாம் லிங்கன் |
Question 33 Explanation:
(குறிப்பு: வேலை பகுப்பு முறையை, ஆடம்ஸ்மித், தனது "நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும்" என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.)
Question 34 |
ஒரு உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே _________ எனப்படும்.
பகிர்வு | |
நுகர்வு | |
வேலைப் பகுப்பு முறை | |
வேலைவாய்ப்பு |
Question 34 Explanation:
(குறிப்பு: (எ.கா) பல்வேறு கட்டடங்களிலும் ஒரே தொழிலாளி ஈடுபடாமல், அவற்றைப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு கட்டப்பணியையும் ஒரு தொழிலாளி மேற்கொள்ளுதல்.)
Question 35 |
வேலைப் பகுப்பு முறையின் நன்மைகளில் தவறானதை தேர்ந்தெடு.
வேலைப் பகுப்பு முறையின் நன்மைகளில் தவறானதை தேர்ந்தெடு. | |
வேலைப் பகுப்பு முறை நவீன இயந்திரங்களை உற்பத்தியில் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு வழிவகுக்கிறது. | |
காலமும், மூலப்பொருட்களும் மிகத் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. | |
வேலைவாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது. |
Question 36 |
வேலைப்பகுப்பு முறையின் தீமைகளில் தவறானது எது?
தொழிலாளி, ஒரே வேலையைத் திரும்ப திரும்ப செய்வதால், சுவையற்ற களிப்பற்ற, தன்மையை அடைகிறார். இது மனிதத் தன்மையை அழிக்கிறது. | |
ஒரு பகுதி பணியினை மட்டும் ஒரு தொழிலாளி மேற்கொள்வதால் அவன் குறுகிய தேர்ச்சியை பெற்று வேலைவாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது. | |
இம்முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியினைப் பாதிக்கின்றது. | |
ஒரு தொழிலாளி, ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மனநிறைவினைப் பெறுகிறார். |
Question 36 Explanation:
(குறிப்பு: வேலைவாய்ப்புப் பகுப்பு முறையில், ஒரு தொழிலாளி, ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மனநிறைவினைப் பெறுவதில்லை.)
Question 37 |
- கூற்று 1: மூலதனம் என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
- கூற்று 2: செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம் என்றும் மூலதனத்தைக் கூறலாம்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 37 Explanation:
(குறிப்பு: மூலதனம் என்பது செல்வத்தை குறிக்கும்.)
Question 38 |
"இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக்கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்." என்று கூறியவர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் | |
ஆடம்ஸ்மித் | |
ஆல்பிரட் மார்ஷல் | |
ஆபிரகாம் லிங்கன் |
Question 39 |
சரியான இணையைத் தேர்ந்தெடு. (மூலதனத்தின் வடிவங்கள்)
- பருமப் பொருள் மூலதனம் - இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்
- பண மூலதனம் - வங்கி வைப்புகள், பங்குகள், பத்திரங்கள்
- மனித மூலதனம் - கல்வி, பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 39 Explanation:
(குறிப்பு: பருமப்பொருள் மூலதனம் பொருட்சார் மூலதனம் எனவும், பண மூலதனம் பணவியல் வளங்கள் எனவும், மனித மூலதனம் மனிதத் திறன் வளங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.)
Question 40 |
மூலதனத்தின் சிறப்பியல்புகளில் தவறானதை தேர்ந்தெடு.
மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி | |
மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி | |
மூலதனத்தின் அளிப்பு நெகிழாத்தன்மையுடையது. | |
மூலதனம் ஆக்கமுடையது. |
Question 40 Explanation:
(குறிப்பு: மூலதனத்தின் சிறப்பியல்புகள்
மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது.
இது உற்பத்தியில் தவிர்க்க முடியாத காரணியல்ல. இது இன்றியும் உற்பத்தி நடைபெறும்.
மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.
மூலதனத்தை ஈடுபடுத்துவதன் நோக்கம், எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதேயாகும்.)
Question 41 |
__________ என்பவர் பல உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார்.
- தொழில் முனைவோர்
- தொழில் அமைப்பாளர்
- சமுதாய மாற்றம் காணும் முகவர்
அனைத்தும் | |
1 மட்டும் | |
1, 3 | |
2, 3 |
Question 41 Explanation:
(குறிப்பு: நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய காரணிகளைச் சரியான அளவிலும், முறையிலும் தொடங்கி, இடர்ப்பாடுகளை ஏற்று, உற்பத்தி அதிகரிக்க முயல்பவரே தொழில்முனைவோர் ஆவார்.)
Question 42 |
தொழில் முனைவோரின் சிறப்பியல்புகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
- இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்
- உற்பத்தி அலகின் இருப்பிடத்தைத் தீர்மானித்தல்
- புதுமைகளை உருவாக்குதல்
- வெகுமதி செலவைத் தீர்மானித்தல்
- இடர்களை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளல்
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
2, 3, 5 சரி | |
2, 3, 5 சரி |
Question 43 |
பொருத்துக.
- முதன்மை உற்பத்தி i) ஆடம்ஸ்மித்
- காலப்பயன்பாடு ii) மீன்பிடித்தல், சுரங்கத் தொழில்
- நாடுகளின் செல்வம் iii) தொழில் முனைவோர்
- மனித மூலதனம் iv) எதிர்கால சேமிப்பு
- புதுமை புனைபவர் v) கல்வி, உடல்நலம்
ii iv v i iii | |
ii iv i v iii | |
iii ii i iv v | |
v i iii ii iv |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 43 questions to complete.