Online TestTamil
		
	
	
9th Tamil Part 10 Online Test – New Book
9th Tamil Questions - Part 10
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 10.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
"நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” என்பது யாருடைய கூற்று
| காந்தி  | |
| நேரு  | |
| தெறென்ஸ்  | |
| கோர்டன் ஆல்போர்ட் | 
Question 1 Explanation: 
 (விளக்கம்: தெறென்ஸ் என்பவர் இலத்தீன் புலவர்)
| Question 2 | 
முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்று கூறியவர் யார்?
| காந்தி  | |
| நேரு  | |
| தெறென்ஸ்  | |
| கோர்டன் ஆல்போர்ட் | 
Question 2 Explanation: 
 (விளக்கம்: கோர்டன் ஆல்போர்ட் என்பவர் உளநூல் வல்லுநர்.)
| Question 3 | 
கீழ்க்கண்டவற்றுள் முதிர்ந்த ஆளுமைக்கு  கோர்டன் ஆல்போர்ட் கூறிய மூன்று இலக்கணங்கள் எவை?
- மனிதன், தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.
- பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.
- ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
- அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தை கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.
| அனைத்தும் சரி  | |
| 1, 2, 3 சரி  | |
| 2, 3, 4 சரி 	 | |
| 1, 3, 4 சரி | 
| Question 4 | 
______ இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும் என்னும் உண்மையைப் பண்டைக் காலத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.
| நாகரிகம்  | |
| வியாபாரம்  | |
| முன்னேற்றம்  | |
| குறிக்கோள் | 
| Question 5 | 
"பூட்கையில்லோன் யாக்கை போல” என்று கூறியவர் யார்?
| கணிமேதாவியார்  | |
| ஆலத்தூர் கிழார்  | |
| திருவள்ளுவர்  | |
| ஒளவையார் | 
Question 5 Explanation: 
 (பொருள்: குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் என புறநானூற்றில் ஆலத்தூர் கிழார் கூறியுள்ளார்.)
| Question 6 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- விரிவாகும் ஆளுமையை உருவாக்கும் நோக்கம கொண்டுள்ள மக்கள் சமுதாயமே இன்பத்தை அளிக்கும் சமுதாயமாகக் காணப்படும்.
- எந்த அளவிற்கு பிறர் நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்த அளவிற்கு அவனது மனிதநேயம் வளரும்.
- பிறருக்காகப் பணி செய்வதில் தான் ஒருவனுடைய வாழ்க்கை, பண்புடைய வாழ்க்கை ஆகின்றது.
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி | |
| 1, 3 சரி 	 | |
| 2, 3 சரி | 
Question 6 Explanation: 
 (விளக்கம்: எந்த அளவிற்கு பிறர் நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்த அளவிற்கு அவனது ஆளுமை வளரும்.)
| Question 7 | 
Altruism என்பது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| ஒழுக்கவியல்  | |
| ஆளுமை | |
| மனித நேயம் 	 | |
| பிறர் நலவியல் | 
| Question 8 | 
சீன அறிஞர் லாவோட்சு அவர்கள் பிறந்த ஆண்டு?
| பொ.ஆ.மு.600 	 | |
| பொ.ஆ.மு.604 | |
| பொ.ஆ.மு. 605 	 | |
| பொ.ஆ.மு.606 | 
| Question 9 | 
சீன அறிஞர் கன்பூசியஸ் அவர்களின் காலம்?
| பொ.ஆ.மு.550- 470		 | |
| பொ.ஆ.மு.551 – 470 | |
| பொ.ஆ.மு.551 – 470 | |
| பொ.ஆ.மு. 550 – 479 | 
| Question 10 | 
பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் _____ தத்துவஞானிகள் ஆவர்.
| ரஷ்ய  | |
| சீன  | |
| ஐரோப்பிய  | |
| கிரேக்க | 
| Question 11 | 
கீழ்க்கண்டவற்றுள் பிறர் நலவியலை கர்பித்த அறிஞர்கள் யாவர்?
- லாவோட்சு 2. கன்பூசியஸ் 3. பிளேட்டோ
- 4. அரிஸ்டாட்டில்
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி | |
| 1, 3 சரி  | |
| 1, 2, 4 சரி | 
Question 11 Explanation: 
 (விளக்கம்: பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவ ஞானிகள் கிரேக்கக் குடியினரை மட்டுமே தம் சிந்தனைக்கு உட்படுத்தினர்)
| Question 12 | 
பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.
| பஃருளி மலை | |
| விந்திய, சாத்பூரா | |
| சாத்பூரா, இமயமலை | |
| விந்தியமலை, இமயமலை | 
Question 12 Explanation: 
 (விளக்கம்: வீடுபேறு அடைவதற்கு அப்பூமியிலே பிறந்திருக்க வேண்டும் என கருதப்பட்டது.)
| Question 13 | 
"மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்; பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது" என்ற தமிழ் மக்களின் நம்பிக்கை யார் கூறியது போல இருந்தது?
| கிரேக்கர்கள்  | |
| சீனர்கள் | |
| ஸ்டாயிக்வாதிகள்  | |
| பெளத்தர்கள் | 
| Question 14 | 
Ethics என்பதன் தமிழ்ச்சொல்லாக்கம் என்ன?
| ஒழுக்கவியல்  | |
| ஆளுமை | |
| மனித நேயம் 	 | |
| பிறர் நலவியல் | 
| Question 15 | 
“ இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்று திருக்குறளை பற்றிக் கூறியவர் யார்?
| கோர்டன்  | |
| தெறன்ஸ் | |
| ஆல்பர்ட் சுவைட்சர் 	 | |
| ஜி.யு.போப் | 
Question 15 Explanation: 
 (விளக்கம்: ஆல்பர்ட் சுவைட்சர் என்பவர் ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆவார்.)
| Question 16 | 
தமிழ் இலக்கியத்தை ஆராயும் போது, பிறர் நலக் கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன் முதலில் புரப்புவதற்கு காரணமாய் இருந்தவர்கள் யார்?
| நெசவாளர்கள்  | |
| இசைக் கலைஞர்கள் | |
| வியாபாரிகள் | |
| பாணர்கள், புலவர்கள் | 
| Question 17 | 
பண்டை தமிழர்கள் பிற நாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்க _____, _____ என்று வரையறுத்துக் கூறியுள்ளனர்.
| அந்நிய நாடு, அந்நிய தேயம் | |
| பிறர் நாடு, பிறர் தேயம் | |
| மொழிமாறும் நாடு, மொழிபெயர்தேயம் | |
| வெளிநாடு, வெளிதேயம் | 
| Question 18 | 
____ இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனபான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது.
| புறத்திணை  | |
| அகத்திணை | |
| சங்க இலக்கியம்  | |
| உரைநடை | 
| Question 19 | 
யாருடைய நிலப்பிரிப்பு முறை உலகின் பிரிவாக அமைந்தது.
| அகத்தியர்  | |
| தொல்காப்பியர் | |
| இளங்கோவடிகள்  | |
| திருவள்ளுவர் | 
| Question 20 | 
"படுதிரை வையம் பாத்திய பண்பே" என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.
| நன்னூல்  | |
| தொல்காப்பியம் | |
| திருக்குறள்  | |
| சிலப்பதிகாரம்  | 
Question 20 Explanation: 
 (விளக்கம்: தொல்காப்பியத்தில் 948 வது பாடல்)
| Question 21 | 
கீழ்க்கண்டவற்றுள் புலவரும் பாணரும் இலக்கியம் பயில்வோரும் தவறாது எவற்றையெல்லாம் கற்று வந்தனர்?
- 1.பெரும்பொழுது 2. சிறுபொழுது
- வானிலை 4. கருப்பொருள்
| அனைத்தும் சரி 		 | |
| 1, 2, 3  | |
| 2, 3, 4 		 | |
| 1, 2, 4 | 
| Question 22 | 
கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ______ என்பவனைப் போற்றுவதற்குக் காரணம் அவன் நன்மையை நன்மைக்காகவே செய்ததுதான்.
| பாரி  | |
| ஓரி  | |
| காரி  | |
| ஆய் | 
| Question 23 | 
- "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
- அறவிலை வணிகன் ஆய் அலன்"
- இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
| அகநானூறு  | |
| புறநானூறு | |
| தொல்காப்பியம்  | |
| திருக்குறள் | 
Question 23 Explanation: 
 (விளக்கம்: இப்பாடல் புறநானூற்றில் 134 வது பாடல்)
| Question 24 | 
பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் என்பதை விளக்கும் " உண்டாலம்ம இவ்வுலகம் " என்ற வரி எந்நூலில் இடம் பெற்றுள்ளது.
| அகநானூறு  | |
| புறநானூறு | |
| தொல்காப்பியம்  | |
| திருக்குறள் | 
| Question 25 | 
- "இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
- தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே"
- இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
| அகநானூறு  | |
| புறநானூறு | |
| தொல்காப்பியம்  | |
| திருக்குறள் | 
Question 25 Explanation: 
 (விளக்கம்: இவ்வரிகள் புறநானூற்றில் 214 பாடல், 11-13வது வரிகள் )
| Question 26 | 
- " இமயத்தீண்டி இன்குரல் பயிற்றிக்
- கொண்டல் மாமழை பொழிந்த
- நுண்பஃ றுளியினும் வாழிய பலவே”
- இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
| அகநானூறு  | |
| புறநானூறு | |
| தொல்காப்பியம்  | |
| திருக்குறள் | 
Question 26 Explanation: 
 (விளக்கம்: புறநானூறு 34 வது பாடல்,21- 23வது வரிகள்)
| Question 27 | 
திருக்குறளில் கூறப்படும் 'பூட்கைமகன்’ என்பதன் பொருள் யாது?
| செல்வமகன்  | |
| தொழில்புரியும் மாந்தன் | |
| குறிக்கோள் மாந்தன்  | |
| விவசாயம் செய்பவர் | 
| Question 28 | 
தமிழ் மக்கள் " சான்றோன்” எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் _____ எனப்படும் இலட்சியபுருஷனைப் போற்றி வந்தனர்.
| இத்தாலியன்ஸ்  | |
| சைமன்ஸ் | |
| சாப்பியன்ஸ்  | |
| உரோமன்ஸ் | 
| Question 29 | 
உரோமர்கள் போற்றிய "Sapens" என்பதன் பொருள் யாது?
- 1.இலட்சியபுருஷன் 2. அறிவுடையோன்
- சான்றோன்
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி | |
| 2, 3 சரி 	 | |
| 1, 3 சரி | 
| Question 30 | 
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
- உரோமையருடைய "சாப்பியன்ஸ்" அல்லது சான்றோன் என்பவன் சமுதாயத்திலிருந்து விலகி, தம் சொந்த பண்புகளையே வளர்க்க வேண்டும்.
- உரோமையருடைய சான்றோர் அரிதாகவே சமுதாயத்தில் தோன்றுவர்.
| அனைத்தும் சரி 	 | |
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி 	 | |
| இரண்டும் தவறு | 
| Question 31 | 
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
- ஸ்டாயிக்வாதிகளின்படி அவர்களுடைய இலட்சிய மனிதர்கள் பலர்.
- அவர்கள் தனிமையாகத் தம் இல்லங்களில் வாழ்ந்து வருவர்.
- திருக்குறளின் சான்றோர் சிலர்.
- அவர்களின் இயல்புகள் எல்லாம் பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நட்பு முதலான அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
| அனைத்தும் சரி  | |
| 1, 2, 3 சரி | |
| 2 , 3, 4 சரி 		 | |
| 2 , 4 சரி | 
Question 31 Explanation: 
 (விளக்கம்:
ஸ்டாயிக்வாதிகளின்படி அவர்களுடைய இலட்சிய மனிதர்கள் ஒரு சிலரே.
திருக்குறளின் சான்றோர் பலர்.)
| Question 32 | 
ஒவ்வொரு மனிதனையும் சான்றோன் ஆக்குதல் ____ ன் நோக்கம்
| தாய்  | |
| தந்தை  | |
| சமூகம்  | |
| கல்வி | 
Question 32 Explanation: 
 (விளக்கம்: ஒவ்வொரு தாயும் தம் மகன் சான்றோன் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். தன் பிள்ளையைச் சான்றோன் ஆக்குதல் ஒவ்வொரு தந்தைக்கும் கடனாகும்.)
| Question 33 | 
" தமிழ்ச் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தருவது” என்று யார் யாரிடம் கூறினார்?
| கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரிடம் கூறியது | |
| பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் கூறியது | |
| கோப்பெருஞ்சோழனின் அமைச்சர் பிசிராந்தையாரிடம் கூறியது | |
| கோப்பெருஞ்சோழனுக்கு அவரது அமைச்சர் கூறியது | 
Question 33 Explanation: 
 (விளக்கம்: புறநானூறு 191 வது பாடல்)
| Question 34 | 
____ நாட்டுச் சிந்தனையாளர்கள் ஏறத்தாழத் தமிழ்ப் புலவர்களைப் போல அதே காலத்தில் ஒன்றே உலகம் என்ற கொள்கையைப் பாராட்டி வந்தனர்
| சீனா  | |
| ஜப்பான் | |
| உரோம  | |
| ரஷ்ய | 
| Question 35 | 
பின்வருவனவற்றுள் ஸ்டாயிக்வாதிகள் கற்பித்தவை எவை?
- உலகில் ஒற்றுமை உண்டு
- மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர்
- எல்லா உயிர்களும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன
| அனைத்தும் சரி 		 | |
| 1, 2 சரி | |
| 2, 3 சரி 	 | |
| 1, 3 சரி | 
| Question 36 | 
ஒன்றே உலகம் என்ற மனப்பான்மையும் கொள்கையும் முதன் முதல் மேலை நாட்டில் யாரால் போற்றப்பட்டது?
| உரோமானியர்கள்  | |
| கிரேக்கர்கள் | |
| ஸ்டாயிக்வாதிகள்  | |
| சீனர்கள் | 
| Question 37 | 
"எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்" என்று கூறியவர் யார்?
| கோர்டன்  | |
| தெறன்ஸ் | |
| ஆல்பர்ட் சுவைட்சர்  | |
| செனக்கா | 
| Question 38 | 
" நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" என்று கூறியவர் யார்?
| மார்க்ஸ் அரேலியஸ்  | |
| தெறன்ஸ் | |
| ஆல்பர்ட் சுவைட்சர்  | |
| செனக்கா | 
| Question 39 | 
மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் எது?
| சிலப்பதிகாரம்  | |
| மணிமேகலை | |
| தொல்காப்பியம்  | |
| திருக்குறள் | 
| Question 40 | 
திருவள்ளுவரை "உலகப் புலவர் " என்று போற்றியவர் யார்?
| கால்டுவெல்  | |
| வீரமாமுனிவர் | |
| ஜி.யு.போப் 	 | |
| திரு.வி.க | 
| Question 41 | 
மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று கருதுவதோடு உயிர்கள் அனைத்தையும் மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று கருதும் பண்பு_______கும் ஸ்டாயிக்வாதிகளுக்கும் பொதுவான ஒரு தன்மை.
| சிலப்பதிகாரம்  | |
| மணிமேகலை | |
| தொல்காப்பியம்  | |
| திருக்குறள் | 
| Question 42 | 
யார், எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய பான்மையில் தம் நூலை யாத்துள்ளார்?
| மார்க்ஸ் அரேலியஸ்  | |
| கால்டுவெல் | |
| தொல்காப்பியர்  | |
| வள்ளுவர் | 
| Question 43 | 
"உள்ளற்க உள்ளம் சிறுகுவ", " உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” என்று கூறியவர் யார்?
| அகத்தியர்  | |
| தொல்காப்பியர் | |
| இளங்கோவடிகள்  | |
| திருவள்ளுவர் | 
| Question 44 | 
"உள்ளற்க உள்ளம் சிறுகுவ", " உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” ஆகியவை முறையே எத்தனையாவது  குறள்?
| 596, 798 		 | |
| 595, 897 | |
| 798, 596 	 | |
| 897, 595 | 
| Question 45 | 
தனிநாயகம் அடிகள், எங்குள்ள பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவை  ஆற்றினார்?
| லண்டன்  | |
| கனடா | |
| சிங்கப்பூர்  | |
| இலங்கை | 
Question 45 Explanation: 
 (விளக்கம்: இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.)
| Question 46 | 
தனிநாயகம் அடிகள் தொடங்கி இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் எது?
| தமிழ்நாடு  | |
| தமிழர் நாகரிகம் | |
| தமிழ்ப் பண்பாடு 		 | |
| தமிழர் பண்பாடு | 
| Question 47 | 
கீழ்க்கண்டவற்றுள் தனிநாயகம் அடிகள் எவை தொடங்க காரணமாக இருந்தார்?
- அகில உலகத் தமிழாய்வு மன்றம்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- இந்திய தமிழாய்வு மன்றம்
| அனைத்தும்  | |
| 1, 2 	 | |
| 1, 3  | |
| 2, 3 | 
| Question 48 | 
தனிநாயகம் அடிகள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
- தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.
- அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.
- தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுக்கத் தமிழின் புகழைப் பரப்பினார்.
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி | 
| Question 49 | 
“ பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
| மல்லர்  | |
| மணக்குடவர் | |
| பரிப்பெருமாள்  | |
| பரிதி | 
| Question 50 | 
உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது தவறானது?
| 1995 – தஞ்சாவூர் | |
| 1966 – கோலாலம்பூர் | |
| 1968 – சென்னை | |
| 1987 – மொரீசியசு | 
Question 50 Explanation: 
 (விளக்கம்: 1989 – மொரீசியசு)
| Question 51 | 
உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது சரியானது?
| 1960 – பாரீசு	 | |
| 1974 – மதுரை | |
| 1981 – யாழ்பாணம் | |
| 1987 – கோலாலம்பூர் | 
Question 51 Explanation: 
 (விளக்கம்:
1970 – பாரீசு
1974 – யாழ்பாணம்
1981 – மதுரை)
| Question 52 | 
கீழ்க்கண்டவற்றுள் உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்ற நாடுகள் எவை?
- 1.மலேசியா 2. இந்தியா 3. பிரான்சு
- இலங்கை 5. மலேசியா 6. மொரீசியஸ்
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2, 4, 6 சரி  | |
| 1, 2, 3, 5 சரி  | |
| 2, 3, 4, 5 சரி | 
| Question 53 | 
2010ல் செம்மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?
| சென்னை  | |
| மதுரை  | |
| தஞ்சாவூர்  | |
| கோவை | 
| Question 54 | 
____ன் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள் ஆகும்.
| உரைநடைக் கவிதை  | |
| ஹைக்கூ  | |
| வசனக் கவிதை 	 | |
| செய்யுள்கள் | 
| Question 55 | 
புதுக்கவிதையின் வரலாறு ____ ஆண்டுகளை எட்டுகிறது.
| 50  | |
| 100  | |
| 150  | |
| 200 | 
| Question 56 | 
புதுக்கவிதைகள்  ______ஐ வலியுறுத்துவனவாக இருக்கின்றன.
| ஈகை  | |
| கருணை  | |
| மனிதநேயம்  | |
| ஆளுமை | 
| Question 57 | 
- “சைக்கிளில் வந்த
- தக்காளிக் கூடை சரிந்து
- முக்கால் சிவப்பில் உருண்டது
- அனைத்துத் திசைகளிலும் பழங்கள்”
- என்ற வரிகளை இயற்றியவர் யார்?
| அமுதோன்  | |
| நா.முத்துக்குமார்  | |
| கவிஞர் பாஷோ 			 | |
| கல்யாண்ஜி | 
Question 57 Explanation: 
 (விளக்கம்: இவ்வரிகள் அக்கறை என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.)
| Question 58 | 
- இலக்கணக் குறிப்புத் தருக.
- உருண்டது, போனது
| ஒன்றன்பால் வினைமுற்றுகள் | |
| பலவின்பால் வினைமுற்றுகள் | |
| தன்மை பன்மை வினைமுற்றுகள் | |
| முன்னிலை பன்மை வினைமுற்றுகள் | 
Question 58 Explanation: 
 (விளக்கம்: ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் – து, று
உருண்டது, போனது ஆகியவை 'து' என்னும் விகுதியை கொண்டு முடிவதால் இவை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் ஆகும். 
| Question 59 | 
இலக்கணக் குறிப்புத் தருக – சரிந்து
| பெயரெச்சம் | |
| வினையெச்சம் | |
| தொழிற்பெயர் | |
| வினைத்தொகை  | 
Question 59 Explanation: 
 (விளக்கம்: வினையெச்சம் என்பது ஒரு வினை முற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். இச்சொற்கள் உ, இ என முடிவு பெறும்
சரிந்து என்பது ' உ’ என்று முடிவுறுவதால் வினையெச்சம் ஆகும்)
| Question 60 | 
இலக்கணக் குறிப்புத் தருக – அனைவரும்
| எண்ணும்மை | |
| உம்மைத் தொகை | |
| பண்புத்தொகை | |
| முற்றும்மை | 
| Question 61 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – சரிந்து
| சரிந்த+உ	 | |
| சரி+த்(ந்)+உ | |
| சரி+த்(ந்)+த்+உ | |
| சரி+ந்+து | 
| Question 62 | 
" சரிந்து >> சரி+த்(ந்) +த்+உ" இதில் ‘உ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்.
| பெயரெச்சவிகுதி | |
| வினையெச்சவிகுதி | |
| தொழிற்பெயர் விகுதி | |
| ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | 
Question 62 Explanation: 
 (விளக்கம்: வினையெச்சவிகுதிகள் - உ, இ
சரி - பகுதி, த் – சந்தி(ந் ஆனது விகாரம்), த் - இறந்த கால இடைநிலை, உ - வினையெச்சவிகுதி)
| Question 63 | 
- “பழங்களை விடவும்
- நசுங்கிப் போனது
- அடுத்த மனிதர்கள்
- மீதான அக்கறை”
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
| பழங்கள் | |
| அக்கறை | |
| மனிதாபிமானம் | |
| இறக்கம் | 
| Question 64 | 
கவிஞர் கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?
| கல்யாணபெருமாள்  | |
| கல்யாணசுந்தரம் | |
| கல்யாண் | |
| கல்யாணராமன் | 
| Question 65 | 
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி எது/எவை இயற்றுவதில் ஈடுபட்டுள்ளார்.
- சிறுகதை 2. கவிதை 3. கட்டுரை
- நாவல் 5. உரைநடை
| அனைத்தும் சரி  | |
| 1, 2, 3  | |
| 2, 3, 4	  | |
| 1, 2, 3, 4 | 
| Question 66 | 
கல்யாணசுந்தரம் அவர்கள் _____ என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறார்.
| வாணிதாசன்  | |
| கல்யாண்ஜி  | |
| வண்ணதாசன்  | |
| கல்யாண் | 
| Question 67 | 
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்களின் கவிதை நூல்கள் எவை?
- 1.புலரி 2. மணல் உள்ள ஆறு 3. முன்பின்
- ஆதி 5. அந்நியமற்ற நதி
| அனைத்தும் சரி  | |
| 1, 2, 3 சரி  | |
| 2, 4, 5 சரி 		 | |
| 1, 3, 5 சரி | 
| Question 68 | 
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பு எது?
| சில இறகுகள் சில பறவைகள் | |
| கலைக்க முடியாத ஒப்பனைகள் | |
| அகமும் புறமும்	 | |
| உயரப் பறத்தல் | 
| Question 69 | 
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ____ என்ற பெயரில் வெளியானது.
| சில இறகுகள் சில பறவைகள் | |
| கலைக்க முடியாத ஒப்பனைகள் | |
| அகமும் புறமும் | |
| உயரப் பறத்தல் | 
| Question 70 | 
கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய சிறுகதை நூல்கள் எவை?
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- உயரப் பறத்தல்
- ஒளியிலே தெரிவது
| அனைத்தும் சரி 		 | |
| 1, 2, 3 சரி  | |
| 2, 4, 5 சரி 	 | |
| 1, 3, 5 சரி | 
| Question 71 | 
கல்யாண்ஜி அவர்கள் ____ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார்.
| கலைக்க முடியாத ஒப்பனைகள் | |
| தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் | |
| உயரப் பறத்தல் | |
| ஒரு சிறு இசை | 
| Question 72 | 
கல்யாண்ஜி அவர்கள் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார்?
| 2015  | |
| 2016  | |
| 2017  | |
| 2018 | 
| Question 73 | 
- "இந்தக் காட்டில்
- எந்த மூங்கில்
- புல்லாங்குழல்?"
- என்ற வரிகளை இயற்றியவர் யார்?
| அமுதோன்  | |
| நா.முத்துக்குமார்  | |
| கவிஞர் பாஷோ  | |
| கல்யாண்ஜி
 | 
| Question 74 | 
- "பிம்பங்களற்ற தனிமையில்
- ஒன்றிலொன்று முகம் பார்த்தன
- சலூன் கண்ணாடிகள் "
- இவ்வரிகள் யாருடையது?
| அமுதோன்  | |
| நா.முத்துக்குமார்  | |
| கவிஞர் பாஷோ  | |
| கல்யாண்ஜி | 
| Question 75 | 
- "வெட்டுக்கிளியின் சப்தத்தில்
- மலையின் மெளனம்
- ஒரு கணம் அசைந்து திரும்புகிறது”
- என்ற வரிகளை இயற்றியவர் யார்?
| அமுதோன்  | |
| நா.முத்துக்குமார்  | |
| கவிஞர் பாஷோ  | |
| கல்யாண்ஜி | 
| Question 76 | 
குறுந்தொகை என்பது எவ்வகை இலக்கிய நூல்?
| அற இலக்கியம் | |
| புற இலக்கியம் | |
| அக இலக்கியம்	 | |
| நீதி இலக்கியம் | 
Question 76 Explanation: 
 (விளக்கம்: குறுந்தொகைப் பாடல்கள் யாவும் இயற்கைக் காட்சிகள் மூலம் நாட்டு வளத்தைப் படம் பிடித்துக் காட்டுவன.)
| Question 77 | 
குறுந்தொகை____ என்னும் அடைமொழிக் கொண்டு அழைக்கப்படுகிறது.
| ஓங்கு  | |
| நல்  | |
| நல்ல  | |
| நன்மை | 
| Question 78 | 
உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் ____ வழியாகத் தொடங்கினார்.
| உரைநடைக் கவிதை 		 | |
| பத்திரிக்கைகள்  | |
| வசனக் கவிதை 	 | |
| செய்யுள்கள் | 
| Question 79 | 
- "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
- பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
- மென்சினை யாஅம் பொளிக்கும்
- அன்பின – தோழி அவர் சென்ற ஆறே”
- இப்பாடல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
| நற்றிணை  | |
| குறுந்தொகை | |
| அகநானூறு  | |
| புறநானூறு | 
Question 79 Explanation: 
 (விளக்கம்: இப்பாடலில் இறைச்சி அமைந்துள்ளது)
| Question 80 | 
- "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
- பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
- மென்சினை யாஅம் பொளிக்கும்
- அன்பின – தோழி அவர் சென்ற ஆறே”
- இப்பாடலை இயற்றியவர் யார்?
| குறிஞ்சி கபிலர்  | |
| ஓதலாந்தையார் | |
| பாலை பாடிய பெருங்கடுங்கோ  | |
| ஓரம்போகியார் | 
| Question 81 | 
- "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
- பிடிபசி களைஇய பெருங்கை வேழம்...."
- என்னும் குறுந்தொகை பாடல் எந்த திணையை சார்ந்தது?
| குறிஞ்சி  | |
| முல்லை | |
| மருதம்  | |
| பாலை | 
Question 81 Explanation: 
 (துறை: தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.)
| Question 82 | 
"நசை பெரிது உடையர் "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| வழங்குதல்  | |
| தொந்தரவு | |
| கடுஞ்சொல்  | |
| விருப்பம் | 
| Question 83 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- நல்கல், பொளிக்கும்
| விருப்பம், அளிக்கும் | |
| அன்பு, அளிக்கும் | |
| வழங்குதல், உரிக்கும் | |
| அன்பு, உரிக்கும் | 
| Question 84 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- பிடி, வேழம்
| ஆண் யானை, பெண் யானை | |
| பெண் யானை, ஆண் யானை | |
| ஆண் குரங்கு, பெண் குரங்கு | |
| பெண் குரங்கு, ஆண் குரங்கு | 
| Question 85 | 
" மென்சினை யாஅம் பொளிக்கும்”
இதில் ‘யா’ என்பதன் பொருள்
| ஒரு வகை யானை | |
| ஒரு வகை மரம் | |
| ஒரு வகை குரங்கு | |
| ஒரு வகை மலர் | 
| Question 86 | 
‘யா’ என்பது எவ்வகை நிலத்தில் வளரும் மரம்?
| குறிஞ்சி  | |
| முல்லை | |
| மருதம்  | |
| பாலை | 
| Question 87 | 
"தோழி அவர் சென்ற ஆறே!” இவ்வடிகளில் குறிப்பிடப்படும் 'ஆறு' என்பதன் பொருள்
| எண்  | |
| நதி  | |
| வழி  | |
| நிரை | 
| Question 88 | 
இலக்கணக் குறிப்புத் தருக – களைஇய
| இன்னிசை அளபெடை | |
| செய்யுளிசை அளபெடை | |
| சொல்லிசை அளபெடை | |
| வினையெச்சம் | 
Question 88 Explanation: 
 (விளக்கம்: ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும். மேலும் இது ‘ இ’ என்னும் எழுத்தை பெற்று வரும்.
களைஇய – இ என்னும் எழுத்தை பெற்று வந்துள்ளது.)
| Question 89 | 
இலக்கணக் குறிப்புத் தருக – பெருங்கை, மென்சினை
| வினைத்தொகை | |
| பண்புத்தொகை | |
| உவமைத்தொகை | |
| உம்மைத்தொகை | 
Question 89 Explanation: 
 (விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்.
பெருமை + கை, மென்மை+ சினை)
| Question 90 | 
இலக்கணக் குறிப்புத் தருக – பொளிக்கும்
| உம்மைத்தொகை | |
| எண்ணும்மை | |
| செய்யும் என்னும் வினைமுற்று | |
| செய்யும் என்னும் வினையெச்சம் | 
Question 90 Explanation: 
 (விளக்கம்: பொளிக்கும் என வந்து வினைமுற்றை குறிக்கிறது.)
| Question 91 | 
இலக்கணக் குறிப்புத் தருக – பிடிபசி
| 2ம் வேற்றுமைத்தொகை | |
| 6 ம் வேற்றுமைத்தொகை  | |
| 4 ம் வேற்றுமைத்தொகை | |
| 7 ம் வேற்றுமைத்தொகை | 
Question 91 Explanation: 
 (விளக்கம்: 6ம் வேற்றுமை உருபு – அது
பிடிபடி - பிடியினது  பசி என 6ம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால் இது 6 ம் வேற்றுமைத்தொகை எனப்படும்.)
| Question 92 | 
இலக்கணக் குறிப்புத் தருக – அன்பின
| ஒன்றன்பால் வினைமுற்று | |
| பலவின்பால் உயர்திணை வினைமுற்று | |
| பலவின்பால் அஃறிணை வினைமுற்று | |
| தன்மை பன்மை வினைமுற்று | 
Question 92 Explanation: 
 (விளக்கம்: படர்க்கைப் பன்மை வினைமுற்று அ, ஆ, வ
அன்பின – ‘அ’ என்ற விகுதி கொண்டு அஃறிணையை குறிக்கிறது)
| Question 93 | 
இலக்கணக் குறிப்புத் தருக – நல்கலும் நல்குவர்
| உம்மைத்தொகை | |
| எண்ணும்மை | |
| செய்யும் என்னும் வினைமுற்று | |
| எச்ச உம்மை | 
Question 93 Explanation: 
 (விளக்கம்: சொல்லின் இடையில் 'உம்' இணைந்த அனைத்துச் சொல்மீதும் முற்றுவினை இணைந்து உம்மைப் பொருள் முற்றுப்பெறுவது எச்ச உம்மை ஆகும்.)
| Question 94 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – உடையர்
| உடை+யர் | |
| உடை+ய்+ஆர் | |
| உடை+ய்+அர் | |
| உடைய+ அர் | 
| Question 95 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பொளிக்கும்
| பொளி+க்+கும் | |
| பொளி+க்+உம் | |
| பொளி +க்+க்+கும்	 | |
| பொளி+க்+க்+உம் | 
| Question 96 | 
"உடையர் >>> உடை+ய்+அர்" இதில் ‘அர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
| பலர்பால் வினைமுற்று விகுதி | |
| வினையெச்ச விகுதி | |
| தன்மை பன்மை வினைமுற்று | 
Question 96 Explanation: 
 (விளக்கம்: பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர்,ப, மார்
உடை – பகுதி, ய் - சந்தி (உடம்படு மெய்) )
| Question 97 | 
"பொளிக்கும் >> பொளி+க்+க்+உம்" இதில் 'உம்' எனபதன் பகுபத உறுப்பிலக்கணம்
| வினையெச்சவிகுதி | |
| தொழிற்பெயர் விகுதி | |
| வினைமுற்று விகுதி | |
| வியங்கோள் வினைமுற்று விகுதி | 
Question 97 Explanation: 
 (விளக்கம்: பொளி - பகுதி, க் - சந்தி, க் - எதிர்கால இடைநிலை)
| Question 98 | 
குறுந்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?
| எட்டுத்தொகை  | |
| பத்துப் பாட்டு | |
| ஐம்பெருங்காப்பியம்  | |
| ஐஞ்சிறுங்காப்பியம் | 
Question 98 Explanation: 
 (விளக்கம்: இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது.)
| Question 99 | 
குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்கள் உள்ளன?
| 400  | |
| 401  | |
| 402  | |
| 403 | 
| Question 100 | 
குறுந்தொகையில் உள்ள பாடல்களின் அடி எல்லை எவ்வளவு?
| 9-12 அடி | |
| 4-8 அடி	 | |
| 3-6 அடி | |
| 4-12 அடி | 
| Question 101 | 
குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
| உ.வே.சா  | |
| ஞானப்பிரகாசம் | |
| செளரிப் பெருமாள் அரங்கனார் | |
| ஆறுமுக நாவலர் | 
| Question 102 | 
பாலை பாடிய பெருங்கடுங்கோ கீழ்க்கண்ட எந்த மரபைச் சேர்ந்தவர்?
| சேர மரபு 		 | |
| சோழ மரபு | |
| பாண்டிய மரபு 		 | |
| பல்லவர் மரபு | 
| Question 103 | 
பெருங்கடுங்கோ என்பவர் _____ நூலில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப்படுகிறார்.
| நற்றிணை  | |
| குறுந்தொகை | |
| ஐங்குறுநூறு  | |
| கலித்தொகை | 
| Question 104 | 
- "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
- பிடிபசி களைஇய பெருங்கை வேழம்...."
- என்பது குறுந்தொகையில் எத்தனையாவது பாடல்?
| 27  | |
| 28  | |
| 37  | |
| 38 | 
| Question 105 | 
சு.சமுத்திரம் அவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
| இராமநாதபுரம்-திப்பணம்பட்டி | |
| தூத்துக்குடி- திப்பணம்பட்டி | |
| திருநெல்வேலி – திப்பணம்பட்டி | |
| விருதுநகர் – திப்பணம்பட்டி | 
| Question 106 | 
சு.சமுத்திரம் அவர்கள் _____க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
| 200  | |
| 300  | |
| 400  | |
| 350 | 
| Question 107 | 
கீழ்க்கண்டவற்றுள் சு.சமுத்திரம் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் எவை?
- 1.வாடாமல்லி 2. பாலைப் புறா 3. மண்சுமை
- தலைப்பாகை 5. காகித உறவு
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2, 5 சரி  | |
| 2, 3, 5 சரி 	 | |
| 2, 3, 4 சரி | 
| Question 108 | 
கீழ்க்கண்டவற்றுள் சு.சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் எது?
| வாடாமல்லி  | |
| குற்றம் பார்க்கில்  | |
| மண்சுமை  | |
| வேரில் பழுத்த பலா | 
| Question 109 | 
கீழ்க்கண்டவற்றுள் சு.சமுத்திரம் அவர்களின் தமிழக அரசின் பரிசை  பெற்ற சிறுகதைத் தொகுதி எது?
| வாடாமல்லி  | |
| குற்றம் பார்க்கில்  | |
| மண்சுமை  | |
| வேரில் பழுத்த பலா | 
| Question 110 | 
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
- செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும்.
- சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது 'அணி’ இலக்கண இயல்பாகும்.
| அனைத்தும் சரி 		 | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி | |
| இரண்டும் தவறு. | 
| Question 111 | 
அணிகளில் இன்றியமையாதது _____ அணி ஆகும்.
| உருவக அணி 	 | |
| உவமை அணி  | |
| எடுத்துக்காட்டுவமையணி 	 | |
| பின்வருநிலையணி | 
| Question 112 | 
"மலர்ப்பாதம்” இத்தொடர் குறித்த செய்திகளில் எது தவறானது?
- இத்தொடரில் மலருக்கு பாதம் உவமையாக கூறப்படுகிறது.
- பாதம் – உவமேயம்
- மலர் – உவமை
- போன்ற – உவமஉருபு
| அனைத்தும் சரி 	 | |
| 1, 4 சரி  | |
| 2, 4 சரி 	 | |
| 2, 3, 4 சரி | 
Question 112 Explanation: 
 (விளக்கம்: இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாக கூறப்படுகிறது.)
| Question 113 | 
- " இனிய உளவாக இன்னாத கூறல்
- கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
- என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி?
| உருவக அணி 	 | |
| உவமை அணி  | |
| எடுத்துக்காட்டுவமையணி 	 | |
| பின்வருநிலையணி | 
| Question 114 | 
உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக் கூறும் தன்மை ____ எனப்படும்.
| உவமை  | |
| உருவகம் | |
| உவம உருபு  | |
| உவமேயம் | 
| Question 115 | 
உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது ____அணி ஆகும்.
| உருவக அணி 		 | |
| உவமை அணி  | |
| எடுத்துக்காட்டுவமையணி 	 | |
| பின்வருநிலையணி | 
| Question 116 | 
- "இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
- வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
- அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் என்றதோர்
- பைங்கூழ் சிறுகாலைச் செய்"
- இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
| உருவக அணி 		 | |
| உவமை அணி  | |
| எடுத்துக்காட்டுவமையணி 	 | |
| பின்வருநிலையணி | 
Question 116 Explanation: 
 (விளக்கம்: இப்பாடலில், இன்சொல் - நிலமாகவும், வன்சொல் - களையாகவும், வாய்மை - எருவாகவும், அன்பு - நீராகவும், அறம் -கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.)
| Question 117 | 
பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?
| 2 | |
| 3 | |
| 4 | |
| 5 | 
Question 117 Explanation: 
 (விளக்கம்: வகைகள்
சொற்பின்வருநிலையணி
பொருள்பின்வருநிலையணி
சொற்பொருள்பின்வருநிலையணி)
| Question 118 | 
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதலே ____ அணியாகும்.
| உருவக அணி  | |
| உவமை அணி  | |
| எடுத்துக்காட்டுவமையணி 	 | |
| பின்வருநிலையணி | 
| Question 119 | 
முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது _____அணியாகும்.
| சொற்பின்வருநிலையணி	 | |
| பொருள்பின்வருநிலையணி | |
| சொற்பொருள்பின்வருநிலையணி	 | |
| எடுத்துக்காட்டுவமையணி | 
| Question 120 | 
- "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
- துப்பாய தூஉம் மழை"
- என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி
| சொற்பின்வருநிலையணி	 | |
| பொருள்பின்வருநிலையணி | |
| சொற்பொருள்பின்வருநிலையணி	 | |
| எடுத்துக்காட்டுவமையணி | 
Question 120 Explanation: 
 (விளக்கம்: இக்குறளில் 'துப்பு' என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.
துப்பார்க்கு – உண்பவர்க்கு
துப்பு - நல்ல, நன்மை
துப்பு - உணவு)
| Question 121 | 
செய்யுளில் முன்வந்த பொருளே பின்னர்ப் பல இடங்களிலும் வருவது _____அணியாகும்.
| சொற்பின்வருநிலையணி | |
| பொருள்பின்வருநிலையணி | |
| சொற்பொருள்பின்வருநிலையணி | |
| எடுத்துக்காட்டுவமையணி | 
| Question 122 | 
- "அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
- நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ்
- விண்டன கொன்றை விரிந்த கருவிளை
- கொண்டன காந்தள் குலை"
- இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
| எடுத்துக்காட்டுவமையணி | |
| உவமையணி | |
| உருவக அணி		 | |
| பொருள் பின்வரு நிலையணி | 
Question 122 Explanation: 
 (விளக்கம்: இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.)
| Question 123 | 
- "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
- மாடல்ல மற்றை யவை”
- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
| எடுத்துக்காட்டுவமையணி | |
| உவமையணி | |
| உருவக அணி			 | |
| பொருள் பின்வரு நிலையணி | 
Question 123 Explanation: 
 (விளக்கம்: இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.)
| Question 124 | 
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது _____அணி.
| சொற்பின்வருநிலையணி | |
| பொருள்பின்வருநிலையணி | |
| சொற்பொருள்பின்வருநிலையணி | |
| எடுத்துக்காட்டுவமையணி | 
| Question 125 | 
- " எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
- பொய்யா விளக்கே விளக்கு”
- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
| சொற்பின்வருநிலையணி | |
| பொருள்பின்வருநிலையணி | |
| சொற்பொருள்பின்வருநிலையணி | |
| எடுத்துக்காட்டுவமையணி | 
Question 125 Explanation: 
 (விளக்கம்: இக்குறட்பாவில் 'விளக்கு' என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.)
| Question 126 | 
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் _____ அணி ஆகும்.
| எடுத்துக்காட்டுவமையணி | |
| உவமையணி | |
| உருவக அணி	 | |
| வஞ்சப்புகழ்ச்சியணி | 
| Question 127 | 
- "தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
- மேவன செய்தொழுக லான்"
- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
| எடுத்துக்காட்டுவமையணி | |
| உவமையணி | |
| உருவக அணி	 | |
| வஞ்சப்புகழ்ச்சியணி | 
Question 127 Explanation: 
 (விளக்கம்: கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது.)
| Question 128 | 
- "பாரி பாரி என்றுபல ஏத்தி,
- ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
- பாரி ஒருவனும் அல்லன்;
- மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே”
- இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
| எடுத்துக்காட்டுவமையணி | |
| உவமையணி | |
| உருவக அணி		 | |
| வஞ்சப்புகழ்ச்சியணி | 
Question 128 Explanation: 
 (விளக்கம்: இப்பாடல் பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.)
| Question 129 | 
- கீழ்காணும் குறட்பாவில் அமைந்த அணி வகையை கண்டறி.
- “ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
- ஆழி எனப்படு வார்"
| எடுத்துக்காட்டுவமையணி | |
| உவமையணி | |
| ஏகதேச உருவக அணி	 | |
| வஞ்சப்புகழ்ச்சியணி | 
Question 129 Explanation: 
 (விளக்கம்: இக்குறளில் சான்றாண்மைப் பண்பினைக் கரை என உருவகித்த ஆசிரியர் சான்றோரைக் கடல் என உருவகம் செய்யாமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணி ஆகும்.)
| Question 130 | 
- "தீயவை தீய பயத்தலால் தீயவை
- தீயினும் அஞ்சப்படும்”
- இக்குறளில் பயின்று வந்துள்ள அணி
| எடுத்துக்காட்டுவமையணி | |
| உவமையணி | |
| உருவக அணி	 | |
| சொற்பொருள் பின்வருநிலையணி	 | 
Question 130 Explanation: 
 (விளக்கம்: தீய என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளது.)
| Question 131 | 
- கீழ்க்காணும் புதுக்கவிதையில் அமைந்த அணியினை எழுதுகள்
- "மண்ணரசி மடக்காமலேயே
- பிடித்துக் கொண்டிருக்கும்
- பச்சைக் குடைகள் “
| எடுத்துக்காட்டுவமையணி | |
| உவமையணி | |
| உருவக அணி | |
| சொற்பொருள் பின்வருநிலையணி | 
Question 131 Explanation: 
 (விளக்கம்: மண்ணை அரசியாகவும் மரங்களைக் குடையாகவும் உருவகம் செய்திருப்பதால் இது உருவக அணி ஆகும்.)
| Question 132 | 
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
| கொம்பு  | |
| மலையுச்சி | |
| சங்கு  | |
| மேடு | 
| Question 133 | 
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை
| நிலையற்ற வாழ்க்கை | |
| பிறருக்காக வாழ்தல் | |
| இம்மை மறுமை	 | |
| ஒன்றே உலகம் | 
| Question 134 | 
இலக்கணக் குறிப்புத் தருக – பெருங்கை வேழம்
| இலக்கணக் குறிப்புத் தருக – பெருங்கை வேழம் | |
| 2ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |
| 7ம் வேற்றுமைத் தொகை | |
| 7ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | 
Question 134 Explanation: 
 (விளக்கம்: 2ம் வேற்றுமை உருபு – ஐ
பெருங்கை வேழம் -பெருங்கையை உடைய வேழம் என 2ம் வேற்றுமை உருபும் உடைய என்ற சொல்லும் மறைந்து வந்துள்ளதால் இது
| Question 135 | 
‘யா’ மரத்தின் பட்டையை உரித்தது எது?
| ஆண் யானை 	 | |
| பெண் யானை | |
| தலைவன் | |
| தோழி | 
| Question 136 | 
‘பாஞ்சாலி சபதம்' என்னும் நூலை இயற்றியவர் யார்?
| பாரதியார்  | |
| பாரதிதாசன் | |
| திரு.வி.க 		 | |
| மீனாட்சி சுந்தரனார் | 
| Question 137 | 
ஐந்தாம் வேதம் என அழைக்கப்படும் நூல் எது?
| இராமாயணம்  | |
| மகாபாரதம் | |
| சிலப்பதிகாரம்  | |
| நன்னூல் | 
| Question 138 | 
_____ நூற்றாண்டில் கம்பரின் இராமாயணம் இலக்கியம் என தகுதி பெற்றதோடு ஆய்வுக்குரிய பெருநூலாகவும் கருதப்பட்டது.
| 18  | |
| 19 | |
| 20  | |
| 21 | 
| Question 139 | 
இலக்கிய நோக்கில் கம்பர் நூல், எவ்வாறு காவியம் எனச் சிறக்கிறது? என்பதை யார் விரிவாக ஆராய்கிறார்?
| சுப்பிரமணிய சிவா  | |
| ஞானி | |
| வ.சுப.மாணிக்கம்  | |
| அ.பாண்டுரங்கன் | 
| Question 140 | 
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக
- அடடா என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது.
| அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது. | |
| அடடா!’ என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது. | |
| ‘அடடா’ என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது. | |
| அடடா!’ என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில், குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது. | 
| Question 141 | 
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக
- பிள்ளைத்தமிழ் நூல்கள் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன
| பிள்ளைத்தமிழ் நூல்கள் "முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன ". | |
| பிள்ளைத்தமிழ் நூல்கள் ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன '. | |
| பிள்ளைத்தமிழ் நூல்கள், 'முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், முதலியன’. | |
| பிள்ளைத்தமிழ் நூல்கள், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன. | 
| Question 142 | 
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக
- ஆசிரியர் மாணவர்களிடம் மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று என்று கூறினார்
| ஆசிரியர் மாணவர்களிடம் "மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று " என்று கூறினார். | |
| ஆசிரியர் மாணவர்களிடம், "மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று " என்று கூறினார். | |
| ஆசிரியர் மாணவர்களிடம், "மாணவர்களே, கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று" என்று கூறினார். | |
| ஆசிரியர் மாணவர்களிடம், 'மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று ‘ என்று கூறினார். | 
| Question 143 | 
- ''வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்
- சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
- ஒண்பாவிற்கு உயர்கம்பன்"
- என்ற வரிகளை இயற்றியவர் யார்?
| திரு.வி.க  | |
| மீனாட்சி சுந்தரனார்  | |
| கால்டுவெல்  | |
| பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் | 
| Question 144 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- நளவெண்பா – கம்பன்
- கலிங்கத்துப்பரணி - சயங்கொண்டார்
- விருத்தம் என்னும் ஒண்பா – புகழேந்திப் புலவர்
| அனைத்தும் சரி 			 | |
| 1, 3 சரி | |
| 2 மட்டும் சரி 	 | |
| 1, 2 சரி | 
Question 144 Explanation: 
 (விளக்கம்: 
நளவெண்பா – புகழேந்திப் புலவர்
விருத்தம் என்னும் ஒண்பா – கம்பன்)
| Question 145 | 
தவறான இணையைத் தேர்ந்தெடு
- ஒட்டக்கூத்தர் - கோவை, உலா, அந்தாதி
- கலம்பகம் - இரட்டைப் புலவர்கள்
- வசை – காளமேகப்புலவர்
| 1, 2 தவறு  | |
| 2 , 3 தவறு | |
| 1, 3 தவறு  | |
| எதுவுமில்லை | 
| Question 146 | 
- " எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
- தம்முயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
| கம்பர்  | |
| கபிலர் | |
| வள்ளலார்  | |
| இளங்கோவடிகள் | 
| Question 147 | 
பொருத்துக
- குரிசில் i) அச்சு
- நயம் ii) மேன்மை
- இருசு iii) தலைவன்
- தலையளி iv) செலுத்துதல்
- உய்த்தல் v) கருணை
| i 	ii 	iii 	iv 	v | |
| iii 	i 	ii 	iv 	v | |
| v 	iv 	iii 	ii 	i | |
| iii 	ii 	i 	v 	iv | 
| Question 148 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- மனிதம் – Humane
- ஆளுமை – Personality
- பண்பாட்டுக் கழகம் - Cultural Academy
| அனைத்தும் சரி 		 | |
| 1, 2 சரி  | |
| 1, 3 சரி 	 | |
| 2 , 3 சரி | 
| Question 149 | 
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- வசனகவிதை – Simile
- உவமையணி – Metaphor
- உருவக அணி – Free verse
| அனைத்தும் தவறு 	 | |
| 1, 2 தவறு  | |
| 1 , 3 தவறு 	 | |
| 2, 3 தவறு | 
Question 149 Explanation: 
 (விளக்கம்:
வசனகவிதை –  Free verse
உவமையணி –  Simile
உருவக அணி – Metaphor)
| Question 150 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- சிற்பியின் மகள் - பூவண்ணன்
- அப்பா சிறுவனாக இருந்த போது - அலெக்சாந்தர் ரஸ்கின் .
| அனைத்தும் சரி 		 | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி  | |
| இரண்டும் தவறு | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 150 questions to complete.