Online TestTamil
12th Std Tamil Notes Part 5 Online Test
பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 5)
Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 5).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தொன்று தொட்டு பலர் கூறும் தமிழ் மொழியின் பிரிவுகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
இயல் | |
இசை | |
நாடகம் | |
நாட்டியம் |
Question 2 |
இயற்றமிழ் என்பது கீழ்க்கண்ட எந்த இரு நூல்களின் தொகுதி என பரிதிமாற்கலைஞர் கூறுகிறார்?
வசனமும் செய்யுளும் | |
கவிதையும் உரைநடையும் | |
இலக்கணமும் இலக்கியமும் | |
செய்யுளும் துணைப்பாடமும் |
Question 3 |
செந்தமிழ் நிலத்தை சேர்ந்த எத்தனை குறுநிலங்களும் கொடுந்தமிழ் நாட்டைச் சேர்ந்தன?
பதினொன்று | |
பத்து | |
பன்னிரண்டு | |
பதிமூன்று |
Question 4 |
கீழ்க்கண்டவற்றில் இசைத் தமிழில் அடங்காத வகை எது?
ஆனந்தக் களிப்பு | |
குலவைப்பாடல்கள் | |
கீர்த்தனங்களும் வரிப்பாடல்களும் | |
தெம்பாங்கு |
Question 5 |
முற்காலத்தில் தோன்றிய இசைத்தமிழ் நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
தாளவகையோத்து | |
பெரு நாரை | |
இசை நுணுக்கம் | |
கந்தபுராணக் கீர்த்தனை |
Question 6 |
இடைக்காலத்தில் தோன்றிய இசைத்தமிழ் நூல்களில் கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?
சங்கீத சந்திரிகை | |
பெரியபுராண கீர்த்தனை | |
தேவாரம் | |
பெருங்குருகு |
Question 7 |
இக்காலத்தில் தோன்றிய இசைத்தமிழ் நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
இசை நுணுக்கம் | |
பெரியபுராண கீர்த்தனை | |
சங்கீத சந்திரிகை | |
கந்தபுராணக் கீர்த்தனை |
Question 8 |
இசைத்தமிழ் இன்றி நாடகத்தமிழ் வெளிப்படாது என்பத பரிதிமாற்கலைஞர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த உதாரணத்துடம் ஒப்பிட்டுக் கூறுகிறார்?
காற்று இன்றி பூக்கள் வாடுவது போல | |
ஆடையின்றி நங்கை வெளிவராமல் இருப்பது போல | |
சொற்கள் இன்றி வார்த்தை அமைவது போல | |
தண்ணிரின்றி மீன்கள் வாழ்வது போல |
Question 9 |
நாடகத்தமிழானது கீழ்க்கண்ட எந்த இரு தமிழும் இணைந்து அமைவது என்று ஆசிரியர் கூறுகிறார்?
செந்தமிழ், இசைத்தமிழ் | |
செந்தமிழ், கொடுந்தமிழ் | |
இசைத்தமிழ், இயற்றமிழ் | |
கொடுந்தமிழ், இயற்றமிழ் |
Question 10 |
கையில் நூலெடுத்துப் படித்தற்குரிய அவகாசமில்லாத வேலைக்காரர்களுக்கும் படிக்கத் தெரியாதர்களுக்கும் நல்லறிவு புகட்டும் நோக்கத்தோடு வகுக்கப்பட்ட தமிழ் எது?
இயற்றமிழ் | |
கொடுந்தமிழ் | |
இசைத்தமிழ் | |
நாடகத்தமிழ் |
Question 11 |
கீழ்க்கண்டவற்றில் உலகத்தின் இயல்பினை உள்ளதை உள்ளவாறே புனைந்து காட்டுவது எது?
செந்தமிழ் | |
இசைத்தமிழ் | |
நாடகத்தமிழ் | |
கொடுந்தமிழ் |
Question 12 |
சரியான விடையைக் கூறுக
கீழ்க்கண்டவற்றில் எந்த இரு தமிழானது கேள்வியின்பம் மட்டிலே பயப்பனவாய் நிற்கின்றன?
- இசைத்தமிழ் 2. கொடுத்தமிழ்
- இயற்றமிழ் 3. இயற்றமிழ்
1 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 13 |
கீழ்க்கண்டவற்றில் கேள்வியின்பம் பயப்பதேயன்றிக் காட்சி யின்பமும் உடன்பயக்கும் தமிழ்வகை எது?
கொடுந்தமிழ் | |
நாடகத்தமிழ் | |
இசைத்தமிழ் | |
இலக்கணத்தமிழ் |
Question 14 |
சுதேசாபிமானம் – என்ற வடசொல்லிம் தமிழ் பொருள் யாது?
தாய்மொழிப்பற்று | |
அயல்நாட்டு மொழிப்பற்று | |
அயல்நாட்டுப்பற்று | |
தாய்நாட்டுப்பற்று |
Question 15 |
சுபாஷாபிமானம் – என்ற சொல்லின் தமிழ்ப்பொருள் யாது?
தாய்மொழிப்பற்று | |
அயல்நாட்டு மொழிப்பற்று | |
அயல்நாட்டுப்பற்று | |
தாய்நாட்டுப்பற்று |
Question 16 |
தான் வழங்கும் நாட்டிங்கண் உள்ள மொழிகளுக்கு தலைமையும் அவற்றினும் மிக்க தேதகவுடைமையுமுள்ள மொழியே ……………………. எனப்படும்?
உயர்தனிச் செம்மொழி | |
தனி மொழி | |
உயர் மொழி | |
செம்மொழி |
Question 17 |
தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே ……………………… எனப்படும்?
உயர்தனிச் செம்மொழி | |
தனி மொழி | |
செம்மொழி | |
தமிழ் மொழி |
Question 18 |
திருந்திய பண்புஞ் சீர்திருத்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் யார்?
தேவநேயப்பாவணார் | |
மறைமலையடிகள் | |
கல்யாணசுந்தரனார் | |
பரிதிமாற்கலைஞர் |
Question 19 |
இடர்பட்ட சொன்முடிபகளும் பொருண்முடிபகளும் இன்றி சொல்லயவன் கருதிய பொருளை கேட்பவன் தெள்ளிதினுணர வல்லதாய் பழையன கழிந்தும் புதியன புகுந்தும் திருத்த மெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது என்று கூறியவர் யார்?
வேதாச்சலம் | |
தேவநேயப்பாவாணர் | |
சூரியநாராயண சாஸ்திரி | |
ஆறுமுக நாவலார் |
Question 20 |
அலமாரி, பேனா, கடுதாசி – ஆகிய சொற்களானது கீழ்க்கண்ட எந்த நாட்டின் மொழி சொல்லாகும்?
போர்ச்சுகீசியம் | |
இந்துஸ்தானி | |
பிரெஞ்சு | |
பார்ஸி |
Question 21 |
குல்லா, பஜார் – ஆகிய வார்த்தைகளானது கீழ்க்கண்ட எந்த மொழிச்சொல்லாகும் ?
தெலுங்கு | |
உருது | |
பிரெஞ்சு | |
பார்ஸி |
Question 22 |
எக்கச்சக்கம் – என்ற சொல்லானது கீழ்க்கண்டவற்றில் எந்த மொழி சொல்லாகும்?
ஜப்பானி | |
உருது | |
தெலுங்கு | |
டச்சு |
Question 23 |
பரிதிமாற்கலைஞர் அவர்கள் வடமொழியை கீழ்க்கண்ட யாரிடம் கற்றார்?
இராமச்சந்திர கவிராயர் | |
மீனாட்சி சுந்தரனார் | |
காஞ்சி சபாபதி முதலியார் | |
கோவிந்த சிவன் |
Question 24 |
பரிதிமாற்கலைஞர் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் தமிழை பயின்றார்?
காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியார் | |
மதுரை சபாபதி முதலியார் | |
கோவிந்த சிவன் | |
திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரனார் |
Question 25 |
பரிதிமாற்கலைஞரை ‘திராவிட சாஸ்திரி’ என அழைத்தவர் யார்?
சி.வை.தாமோதரம் பிள்ளை | |
மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை | |
சேதுப்பிள்ளை | |
திரு.வி.க |
Question 26 |
தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி மேற்பட்ட பின்னர் தாய்மொழியாகிய தமிழை அதன் வழிமொழியாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் துளு ஆகிய மொழிகளோடு அடக்கி …………….. என வகைப்படுத்தி இருந்தனர்?
செம்மொழிகள் | |
உயர்தனிச்செம்மொழி | |
உள்நாட்டு மொழிகள் | |
தனி மொழிகள் |
Question 27 |
இனாம் – என்ற சொல்லானது எந்த மொழிச் சொல்லாகும்?
தெலுங்கு | |
உருது | |
பிரெஞ்சு | |
பார்ஸி |
Question 28 |
மனிதன் சமரசத்தை பற்றி பேசுவதிலும் அதை நடையில் கொணர முயல்வதே …………………………. ஆகும்.
பண்புடைமை | |
அறிவுடைமை | |
அன்புடைமை | |
ஒழுக்கமுடைமை |
Question 29 |
திரு.வி.க அவர்கள் கூறய வாழ்விற்கு இடையூறாக அமைந்துள்ள கொடுமைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
நாடு | |
மொழி | |
சமயநெறி | |
செல்வம் |
Question 30 |
எல்லா மொழிகட்கும் அடிப்படை கீழ்க்கண்டவற்றில் எதுவென்று திரு.வி.க அவர்கள் கூறுகிறார்?
ஒலி | |
ஒளி | |
இசை | |
நாடகம் |
Question 31 |
எல்லாக் கொடுமையிலும் தலையாயக் கொடுமையாக கீழ்க்கண்டவற்றில் எதை திரு.வி.க அவர்கள் கூறுகிறார்?
நாடு | |
மொழி | |
சாதி | |
சமயநெறி |
Question 32 |
எச்சபை பொதுவென இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அரு‘டெப்ருஞ்சோதி’ – என்று அருளியச் சுவாமிகள் யார்?
இராமலிங்க அடிகள் | |
இராமச்சந்திர அடிகள் | |
இராமனுஜ அடிகள் | |
இராமநாத அடிகள் |
Question 33 |
சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையுந் தணந்தேன் – என்று பாடியவர் யார்?
தெய்வக்கவி | |
பாவேந்தர் | |
வள்ளலார் | |
புரட்சிக்கவி |
Question 34 |
சிலர் கீழ்க்கண்டவற்றில் எவற்றை முதற்கொண்டு சமரசத்துக்கு கேடு சூழ்வதாக திரு.வி.க அவர்கள் கூறுகிறார்
நாடு | |
மொழி | |
கல்வி | |
சாதி |
Question 35 |
கீழ்க்கண்ட எந்த பெருங்கொலையானது நமது நாட்டில் நீண்டகாலமாக நிகழ்ந்து வருவதாக திரு.வி.க கூறுகிறார்?
நாடுகளில் சமயநெறியை பரப்புவது | |
சாதி மதத்தை வளர்ப்பது | |
குழந்தைகள் திருமணம் | |
பெரியோர் கூறிய அறிவுரைகளை புதைப்பது |
Question 36 |
மேலைநாட்டு அறிஞரான ஜான்ஸனிடத்தில் ‘கவிதை யாது’? என்ற கோள்வியை கேட்டவர் யார்?
பாஸ்வெல் | |
கோலரிட்ஜ் | |
வோர்ட்ஸ்வொர்த் | |
கீட்ஸ் |
Question 37 |
‘கவிதை இது அல்ல, இது அல்ல, என எளிதில் கூறிவிடலாம் ஆனால், இன்னது தான் கவிதை என்று வரையறுத்தல் எளிதல்ல’ – என்று கவிதைக்கு வரையறை கூறியவர் யார்?
கோலரிட்ஜ் | |
ஜான்ஸன் | |
பாஸ்வெல் | |
வோர்ட்ஸ்வொர்த் |
Question 38 |
சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது வசனம் என்றும் சிறந்த சொற்களை சிறந்த முறையில் வைப்பது கவிதை’ – என்று கவிதைக்கு வரையறை வகுத்தவர் யார்?
பாரதியார் | |
கீட்ஸ் | |
வோர்ட்ஸ்வொர்த் | |
கோலரிட்ஜ் |
Question 39 |
ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் கவிதை’ – என்று கவிதைக்கு வரையறை வகுத்தவர் யார்?
கீட்ஸ் | |
கால்டுவெல் | |
வோர்ட்ஸ்வொர்த் | |
கோலரிட்ஜ் |
Question 40 |
முன்பு கிளர்ந்த ஓர் உணர்ச்சிப் பெருக்கை மீண்டும் வரும்போது தான் கவிதை தோன்றுகிறது – என்று கூறியவர் யார்?
வோர்ட்ஸ்வொர்த் | |
பாஸ்வெல் | |
கோலரிட்ஜ் | |
ஜான்ஸன் |
Question 41 |
கால்வாய் இல்லாத இடத்தில் பெய்த ஒளிமழையே கவிதை’ – என்று கவிதைக்கு வரையறை கூறியவர் யார்?
கால்டுவெல் | |
இராபர்ட் பட்டன் | |
கீட்ஸ் | |
கோலரிட்ஜ் |
Question 42 |
கவிதை என்பது ஆற்றலின் சிகரம் என்றும் ஆற்றல் தனது வலப்புயத்தில தலை சாய்த்துப் பாதி உறங்கிக் கொண்டிருக்கும் நிலை’ – என்று கவிதையை வரையறுத்த அறிஞர் யார்
ஜான்ஸன் | |
கீட்ஸ் | |
ஜான் ரஸ்கின் | |
கோலரிட்ஜ் |
Question 43 |
சீரிய உணர்ச்சிக்குரிய காரணங்களை பாவனாசக்தியால் குறிப்பிடுவதே கவிதை’ – என்று கவிதைக்கு வரையறை கூறிய அறிஞர் யார்?
இராபர்ட் பட்டன் | |
கோலரிட்ஜ் | |
கீட்ஸ் | |
ஜான் ரஸ்கின் |
Question 44 |
பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல’ – என்ற பாடலை பாடியவர் யார்?
பவணந்தி | |
கம்பர் | |
கபிலர் | |
பரணர் |
Question 45 |
கவிதையானது அறிவு நெறியினின்று விலகி பைத்திய நெறியில் கூட நிற்கும் என்பதை விள்ளக்குவதற்காக ‘பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவுன் பன்னப் பெறுபவோ?’ – என்று வரிமூலம் கூறியவர் யார்?
பரணர் | |
கபிலர் | |
கம்பர் | |
ஔவையார் |
Question 46 |
சமீபத்தில் கீழ்க்கண்ட எந்த கவிஞர் எல்லா கவிஞர்களும் பைத்தியக்காரர்களே என்று விநோத முடிவுக்கு வந்ததாக பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூறுகிறார்
பாஸ்வெல் | |
இராபர்ட் பட்டன் | |
கீட்ஸ் | |
ஜான் ரஸ்கின் |
Question 47 |
கவிதையின் தலையாய நோக்கமாக கீழ்க்கண்டவற்றில் எதைக் கவிஞர் குறிப்பிடுகிறார்?
ஆன்மாவின் இயல்பு | |
பாவனசக்தியின் இயல்பு | |
செய்யுள் வடிவ அமைத்தல் | |
இன்பம் விளைத்தல் |
Question 48 |
கீழ்க்கண்டவற்றில் எந்த இயல்பை வெளிப்படுத்தும் கவிதைகளே சிறந்த கவிதைகள் என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்?
ஆன்மாவின் இயல்பு | |
உண்மையின் இயல்பு | |
செய்யுளின் இயல்பு | |
இயற்கையின் இயல்பு |
Question 49 |
கவிதை எழுதுவதற்கு உணர்ச்சி இருத்தல் வேண்டும் என்று கூற ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் ஒளி உண்டாகும்’ – என்ற வரிமூலம் கூறிய கவிஞர் யார்?
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
பாரதியார் | |
முடியரசன் |
Question 50 |
கவிதைகுரிய நல்லியல்புகள் பலவற்றை உணர்ந்து செய்யுள் வடிவில் இருக்க வேண்டும் என்பதைக் கூற ‘புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்த புலத்திற்றாகி’ – என்ற பாடலை பாடியவர் யார்?
இளங்கீரனார் | |
பவணந்தி முனிவர் | |
ஒட்டக்கூத்தர் | |
கம்பர் |
Question 51 |
பாரதிதாசனின் கீழ்க்கண்ட எந்த நூலானது ‘வேட்டுவ பெண்கள் விளையாட போவதுண்டு’ – என்று பாடுகிறது?
இளைஞர் இலக்கியம் | |
சஞ்சீவிபர்வத்தின் சாரல் | |
தமிழியக்கம் | |
மானுடம் போற்று |
Question 52 |
ஒளியை நாம் அறிவோம் ஆனால் அது இன்னதென்று சொல்வது எளிதல்ல. இதுபோலவே தான் கவிதையும் – என்று கவிதைக்கு வரையறை தந்த கவிஞர் யார்?
ஜான்ஸன் | |
வோர்ட்ஸ்வொர்த் | |
கீட்ஸ் | |
ஜான் ரஸ்கின் |
Question 53 |
செய்யுள் நெறியில் இயற்றப்படுவதே கவிதை’ என்று கீழ்க்கண்ட எந்த பேரகாரதி கூறுவதாக பேராசிரியர் கூறுகிறார்?
தமிழ் பேரகராதி | |
பிரெஞ்சு பேரகராதி | |
ஆங்கில பேரகராதி | |
இலத்தீன் பேரகராதி |
Question 54 |
முற்காலத்தில் மக்கள் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவி மகிழ்வதற்கும், பிறருக்கும் நன்மை செய்வற்கும் இழ்வாழ்க்கையே வசதியாக இருந்தது என்று கூறம் ‘முயல்வாரு ளெல்லாந் தலை’ – என்ற வரியானது கீழ்க்கண்டவற்றில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
நாலடியார் | |
திருக்குறள் | |
பழமொழி நானூறு | |
புறநானூறு |
Question 55 |
அக்காலத்து மக்களின் சிறந்த கொள்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் தவறானது எது?
யாரோடும் இனிமையாக பேசுதல் | |
நடுவு நிலைமையாக இருத்தல் | |
பிறருக்கு உதவி செய்தல் | |
பிறர் செய்த நன்மையை மறத்தல் |
Question 56 |
மலைப்பக்கங்களில் இருப்பவர்கள் செய்யும் வேலைகளில் தவறானது எது?
தேனெடுப்பது | |
வரகு விளைப்பது | |
தினை விதைப்பது | |
கிழங்கு அகழ்வது |
Question 57 |
காட்டு நிலங்களில் இருப்பவர்கள் செய்யும் வேலைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
வரகு விளைப்பது | |
நிரை மேய்ப்பது | |
உப்பு விளைப்பது | |
பால் கடைவது |
Question 58 |
வயல் இடங்களில் இருப்பவர்களில் செய்யும் வேலைகளில் தவறானது எது?
தினை விதைப்பது | |
உழவு செய்வது | |
நகரமைப்பது | |
ஆட்சி புரிவது |
Question 59 |
முந்நதை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்’ – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கலித்தொகை | |
அகநானூறு | |
நற்றிணை | |
பரிபாடல் |
Question 60 |
கற்றவர்கள் எந்த வேற்றுமையுங் கருதாமல், மதிக்கப்பட்டு வந்தனர் என்று கூறும் ‘பிறப்புஓர் அன்னை உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்’ – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
குறுந்தொகை | |
புறநானூறு | |
பதிற்றுப்பத்து | |
ஐங்குறுநூறு |
Question 61 |
கல்வியறிவின் மாட்சிமைக்கு எந்த காலம் சிறந்த சான்றாக திகழ்கின்றது என்று ஆசிரியர் கூறுகிறார்?
முற்காலம் | |
இடைக்காலம் | |
பிற்காலம் | |
சங்க காலம் |
Question 62 |
. அக்கால மக்கள் கீழ்க்கண்டவற்றில் எவற்றை இழிவாகக் கருதினர்?
கல்வி கற்றல் | |
உதவி செய்தல் | |
இரத்தல் | |
மதவேறுபாடு |
Question 63 |
முற்காலத்து மக்கள் பிறர் பொருளுக்கு மற்றவர்கள் விரும்பமாட்டார்கள் என்று கூறும் ‘உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்’ – என்ற வரியானது இடம்பெற்றுள்ள நூல் எது?
குறுந்தொகை | |
புறநானூறு | |
அகநானூறு | |
பரிபாடல் |
Question 64 |
சிறப்பில் சிதடும் உறுப்பில் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட’ – என்ற வரியானது கீழ்க்கண்ட எந்த வரியில் இடம்பெற்றுள்ளது?
கலித்தொகை | |
புறநானூறு | |
களவழி நாற்பது | |
திணைமாலை ஐம்பது |
Question 65 |
காணார், கேளார், கால்முடப்பட்டோர், பேணா மக்கள், பேசார், பிணியோர்’ – எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
வளையாபதி | |
குண்டலகேசி | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை |
Question 66 |
தான் செல்லும் விசையினார் தனது இடப்பக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் பன்றியைச் சிறுதும் கண்ணெடுத்துப் பாராமல் மருநாள் பெரிய யானையோடு போரிட்டு அதனை வலப்பக்கத்தில் வீழ்த்தி உணவாக கொள்கின்ற ஒரு புலியை போன்ற பெரு முயற்சியுடைய மக்களை அவர்கள் மதித்து பாராட்டினர் – என்ற செய்தியானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
புறநானூறு | |
முதுமொழிக்காஞ்சி |
Question 67 |
உலகம் நாடாகாவது இருக்கட்டும்; காடாகாவது இருக்கட்டும்; எங்கே நல்லவர்களிருக்கின்றார்களோ அங்கே அதுவும் நல்லதாக இருக்கும்’ – என்ற கருத்துகளானது கீழ்க்கண்ட எந்த நூலில் உள்ளது?
புறநானூறு | |
குறுந்தொகை | |
பரிபாடல் | |
கார் நாற்பது |
Question 68 |
நெல்லிக்காய், தான்றிகாய், சுடுகாய் ஆகிய மூன்று சரக்குகள் கொண்டது ………………….. எனப்படும்?
திரிகடுகம் | |
திரிபலை | |
திரிகனிகள் | |
திரிகலை |
Question 69 |
தமிழிசைகளில் உள்ள இசைமுறைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
ஆயபாலை | |
வட்டபாலை | |
திரிகோணபாலை | |
சதுரங்கபாலை |
Question 70 |
கடற்கரையில் இருப்பவர்கள் செய்யும் வேலைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
ஆட்சி அமைப்பது | |
முத்துக்குளிப்பது | |
உப்பு விளைப்பது | |
மரக்கலத்திலேறி வாணிகம் செய்வது |
Question 71 |
மக்கள் நாகரிகமானது மொத்தம் எத்தனை நிலைகள் உடையதாக தேவநேயப்பாவணார் கூறுகிறார்?
இரண்டு நிலைகள் | |
மூன்று நிலைகள் | |
நான்கு நிலைகள் | |
ஐந்து நிலைகள் |
Question 72 |
மக்கள் நாகரிகங்களில் கீழ்க்கண்ட எந்த நிலைகளிலையே தமிழர்க்கு அல்லது தமிழரின் முன்னோர்க்கு ஆத் தொடர்பு இருந்திருப்பதாக கூறப்படுகிறது?
குறிஞ்சி நிலைகள் | |
முல்லை நிலைகள் | |
மருத நிலைகள் | |
நகர நிலைகள் |
Question 73 |
கீழ்க்கண்டவற்றில் எந்த நிலத்திலுள்ள மக்கள் ஆட்டையும் மாட்டையும பெரிவாரியாய் வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்டு வாழ்ந்தனர்?
நகரம் | |
குறிஞ்சி | |
மருதம் | |
முல்லை |
Question 74 |
ஆ என்னும் பெயர் தற்காலத்தில் எந்தப் பாலை குறிப்பதாக ஆசிரியர் கூறுகிறார்
ஆண் பால் | |
பெண் பால் | |
பொது பால் | |
இவற்றில் யாருமில்லை |
Question 75 |
ஆ என்னும் பெயரானது கைரச் சாரியை பெற்று கீழ்க்கண்டவற்றில் எவ்வாறாக நிற்கும்?
ஆன் | |
ஆல் | |
ஆற் | |
ஆள் |
Question 76 |
ஆன் என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைக் குறிக்கிறது?
மான் | |
பசு | |
யானை | |
எருமை |
Question 77 |
மா என்பது விலங்கு பொதுப் பெயராயும் மற்றும் கீழ்க்கண்ட எந்த விலங்கையும் குறிப்பதாக கூறப்படுகிறது?
யானை | |
குதிரை | |
எருமை | |
மான் |
Question 78 |
மக்களுக்கு முல்லை நிலத்திலேயே உழவு தோன்றி கீழ்க்கண்ட எந்த நிலத்தில் சிறப்படைந்ததாக ஆசிரியர் கூறுகிறார்?
பாலை | |
நெய்தல் | |
மருதம் | |
குறிஞ்சி |
Question 79 |
மாடு இருநிலத்தாருக்கும் உதவியதுடன் உழுதிறைத்து உதவும் என்று கூறும் ‘பகடு நடந்த கூழ்’ என்ற வரியானது எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
ஐங்குறுநூறு | |
புறநானூறு | |
நற்றிணை | |
நாலடியார் |
Question 80 |
காளை, விடலை என்னும் பெயர்கள் உவமையாகு பெயராக கீழ்க்கண்ட யாருக்கு வழங்கி வந்ததாக ஆசிரியர் கூறுகிறார்?
மந்திரி, மன்னர் | |
மறவர், குறும்பரசர் | |
புலவர், சிற்றசர் | |
மன்னர், படைத்தலைவர் |
Question 81 |
இளைஞரின் வலிமையை அறிவதற்கு கீழ்க்கண்டவற்றில் எது அளவையாக கொள்ளப்பட்டது?
ஏறுதழுவுதல் | |
மடலேறுதல் | |
ஆதழுவுதல் | |
சூரையாடுதல் |
Question 82 |
கீழ்க்கண்ட எந்த நிலைத்திலுள்ள மக்கள் ஏறுதழுவின இளைஞர்க்கே பெண் கொடுத்து வந்தனர் என்று கூறப்படுகிறது?
குறிஞ்சி | |
நெய்தல் | |
மருதம் | |
முல்லை |
Question 83 |
‘முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகும்’ – என்று வரிப்பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
திருக்குறள் | |
புறநானூறு | |
தொல்காப்பியம் | |
மணிமேகலை |
Question 84 |
முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் வேந்தரும் உலகும்’ – என்னும் அறுவரை வாழ்த்தல் என்று உரைத்தவர் யார்?
பேராசிரியர் | |
நச்சினார்க்கினியார் | |
இளம்பூரனார் | |
வேங்கடசாமி நாட்டார் |
Question 85 |
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’ – என்ற பாடிய புலவர் யார்?
சம்பந்தர் | |
நாவுக்கரசர் | |
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் |
Question 86 |
ஆ – வின் வேறு பெயர் யாது?
சோ | |
மீ | |
மா | |
கோ |
Question 87 |
‘தாவென் கிளவி ஒப்போன் கூற்றே’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
திருக்குறள் | |
தொல்காப்பியம் | |
நாலடியார் | |
நான்மணிக்கடிகை |
Question 88 |
தான் – என்னும் வினைச் சொல்லானது இந்தியில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
கோ | |
தோ | |
தேவ் | |
சோ |
Question 89 |
தா – என்னும் வினைச் சொல்லானது இலத்தீனில் எவ்வாறு வழங்கப்படுகின்றது?
கோ | |
தோ | |
தேவ் | |
சோ |
Question 90 |
கோவ னிரை மீட்டனன்’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம் | |
மணிமேகலை | |
சிலப்பதிகாரம் | |
சீவகசிந்தாமணி |
Question 91 |
கோனார் – என்பது கீழ்க்கண்டவற்றில் எந்த பெயராய்த் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வழங்குகின்றது?
வினைப்பெயர் | |
தனிப்பெயர் | |
குடிப்பெயர் | |
தொழிற்பெயர் |
Question 92 |
கீழ்க்கண்ட எந்த சமயத்தை சேர்ந்த ஆசிரியர் ஆங்கிலத்தில் மேய்ப்பவர் (Shepherd) என அழைக்கப்படுகின்றனர்?
இந்து சமய ஆசிரியர் | |
கிறித்துவ சமய ஆசிரியர் | |
இஸ்லாமிய சமய ஆசிரியர் | |
பௌத்த சமய ஆசிரியர் |
Question 93 |
கோவன் – சிவன் என்ற பொருளாலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
அகநானூறு | |
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை | |
கலித்தொகை |
Question 94 |
ஆமா என்னும் தமிழ்ச் சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைக் குறிக்கிறது?
வீட்டுப்பசு | |
காட்டுப்பூனை | |
காட்டு யானை | |
காட்டுப்பசு |
Question 95 |
ஆமா – என்னும் தமிழ்ச்சொல்லானது வடமொழியில் கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
ஆன்மா | |
ஆத்மா | |
ஆம்மா | |
ஆநமா |
Question 96 |
ஆத்மா – என்னும் வடசொல்லின் பொருள் யாது?
செல் | |
உயிர் | |
உடம்பு | |
உயில் |
Question 97 |
கோ என்னும் குறைச் சொல் அரசனையுந் தந்தையையுங் குறிப்பதாக கூறும் ‘நின்கோ வரினு மிங்கே’ – என்ற வரியானது கீழ்க்கண்ட எந்த நூலில் உள்ளது?
கலித்தொகை | |
பரிபாடல் | |
குறுந்தொகை | |
மணிமேகலை |
Question 98 |
கீழ்க்கண்ட எந்த நீரை சாத்தமுது என்று வைணவர் மரபில் கூறுகின்றனர்?
ஏலக்கா நீர் | |
சோம்பு நீர் | |
மிளகு நீர் | |
கடுகு நீர் |
Question 99 |
திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்று கீழ்க்கண்ட எந்த மரபு கூறுகிறது?
சைவ சமய மரபு | |
சமண மரபு | |
வைணவ மரபு | |
செட்டி நாட்டு மரபு |
Question 100 |
ஆசிரியரை ஐயர் என்றே அழைப்பது கீழ்க்கண்ட எந்த வட்டத்தார் மரபாக கூறப்படுகிறது?
காரைக்குடி நாட்டு மரபு | |
ஆம்பூர் மரபு | |
சீரங்கம் கோவில் மரபு | |
கிருஷ்ணகிரி மரபு |
Question 101 |
அமிழ்தத்தை உப்புச்சாறு என்பது கீழ்க்கண்ட எந்த மரபின் கோவிலாக கூறப்படுகிறது?
தஞ்சை கோவிலின் மரபு | |
மதுரை கோவிலின் மரபு | |
சீரங்கம் கோவில் மரபு | |
வேலூர் கோவிலின் மரபு |
Question 102 |
பொருத்துக:
- அங்கயற்கண்ணி - கட்கநேத்ரி
- எரிசனக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
- வாள்நெடுங்கண்ணி - சொர்ணபுரீச்சுவர்
- செம்பொன்பள்ளியார் - மீனாட்சி
4, 2, 1, 3 | |
1, 3, 4, 2 | |
2, 4, 3, 1 | |
3, 1, 2, 4 |
Question 103 |
. பொருத்துக
- தேன்மொழிப்பாவை - விசாலாட்சி
- பழமலைநாதர் - மதுரவசனி
- நீள்நெடுங்கண்ணி - பஞ்சநதீசுவார்
- ஐயாறப்பர் - விருத்தகிரீச்சுரர்
4, 2, 3, 1 | |
1, 3, 4, 2 | |
2, 4, 1, 3 | |
3, 1, 2, 4 |
Question 104 |
அறநூலான திருக்குறளை ‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்’ – என பாராட்டியவர் யார்?
பரிமேலழகர் | |
இறையனார் | |
தர்மத்தர் | |
இடைக்காடனார் |
Question 105 |
செல்வம் நிலைபேறுடையதன்று அது அழிந்து போகும் தன்மை கொண்டது என்று கருத்தைக் கூறும் ‘அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட’ – என்ற பாடலனாது இடம்பெற்றுள்ள நூல் எது?
நற்றிணை | |
நாலடியார் | |
திருக்குறள் | |
திருவாசகம் |
Question 106 |
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட’ – என்ற வரியில் இடம்பெற்றுள்ள அமர்ந்து என்ற சொல்லின் பொருளின் யாது?
செல்வம் | |
உறவினர்கள் | |
மனைவி | |
மகள்கள் |
Question 107 |
போற்றியே போற்றியே யென்று புதுச்செல்வம் தோன்றியார் கண்ணெலாம்’ – எனத் தொடங்கும் பாடலானது இடம்பெற்றுள்ள நூல் எது?
அறநெறிச்சாரம் | |
நாலடியார் | |
முதுமொழிக்காஞ்சி | |
மதுரைக்காஞ்சி |
Question 108 |
கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ, இரப்பவர்’ – எனத் தொடங்கும் குறள் மூலம் திருவள்ளுவர் கீழ்க்கண்ட எந்தக் கருத்தை கூறுகிறார்?
செல்வம் நிலையற்றது அழிந்து போகும் தன்மையுடையது | |
கீழ்மக்களை தம்பட்டம் என்ற பறைக்கு ஒப்பாக கூறுதல் | |
இரத்தலையும் ஒரு தொழிலாக கருதி செய்வது | |
இல்லையென்று ஒருவர் சொல்லவும், இரப்பவர்க்கு உயிர் போகிறது |
Question 109 |
அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட’ – எனத் தொடங்கும் குறள் மூலம் வள்ளுவர் கீழ்க்கண்ட எந்த கருத்தைக் கூறுகிறார்?
செல்வம் நிலையற்றது அழிந்து போகும் தன்மையுடையது | |
கீழ்மக்களை தம்பட்டம் என்ற பறைக்கு ஒப்பாக கூறுதல் | |
இரத்தலையும் ஒரு தொழிலாக கருதி செய்வது | |
இல்லையென்று ஒருவர் சொல்லவும், இரப்பவர்க்கு உயிர் போகிறது |
Question 110 |
அறநெறிச்சாரம் – என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
இளங்கீரனார் | |
மூன்றையனார் | |
முனைப்பாடியார் | |
விளம்பி நாகனார் |
Question 111 |
உலகம் முன்னேறுகிறது என்றால் கீழ்க்கண்ட எந்த இரண்டும் மாறுதல் அடைகின்றன என்பது கருத்து என்று மு.வ கூறுகிறார்?
மலையும், காடும் | |
நீலமும், நீரும் | |
மக்களும், விலங்கும் | |
வானமும், பூமியும் |
Question 112 |
ஒரு நாட்டை ஆள்வதற்கு தகுதி உடையவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற முயற்சியால் ஏற்பட்டது தான் ……………….. முறை என்று மு.வ கூறுகிறார்?
அரசியல் முறை | |
ஆட்சி முறை | |
தேர்தல் முறை | |
அடிமைகள் முறை |
Question 113 |
முற்காலத்தில் நடந்த தேர்தல் முறைகளை பின்பற்றி முடியும் கோலும் பெற்றிருந்து செல்வாக்கை தற்போது எந்த இரு கருவிகள் பெற்று விட்டதாக மு.வ அவர்கள் தன் உரையில் கூறுகிறார்?
ஆட்சியும் அரசியரும் | |
செல்வாக்கும், கல்வியும் | |
கல்வியும் செல்வமும் | |
செல்வமும் செல்வாக்கும் |
Question 114 |
மக்கள் பழங்காலத்தில் படைகளையும் படைக்கருவிகளையும் கண்டு மயங்கியது போல இன்றைய மக்கள் கீழ்க்கண்ட எந்த இரண்டை கண்டு மயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது?
தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் | |
பத்திரிக்கைக்ளும், மேடைப்பேச்சுகளும் | |
கட்சியும், கட்சி தொண்டர்களையும் | |
செல்வாக்கும், செல்வ நிலையும் |
Question 115 |
மனித வாழ்வில் உண்மையாக அடிப்படையாக கீழ்க்கண்டவற்றில் எந்த இரண்டும் இருப்பதாக மு.வ கூறுகிறார்?
செல்வாக்கு, அதிகாரம் | |
அரசியரும், ஆட்சியும் | |
கல்வி, செல்வம் | |
கூட்டுறவு, உழைப்பு |
Question 116 |
மனித வாழ்வில் உண்மையாக அடிப்படையாக கீழ்க்கண்டவற்றில் எந்த இரண்டும் இருப்பதாக மு.வ கூறுகிறார்
செல்வாக்கு, அதிகாரம் | |
அரசியரும், ஆட்சியும் | |
கல்வி, செல்வம் | |
கூட்டுறவு, உழைப்பு |
Question 117 |
கூட்டுறவுக்கு இடையூறு வந்தால், அதைவெல்ல ………………… வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார்?
அமைதிப்படை | |
அறப்படை | |
போர்ப்படை | |
தரைப்படை |
Question 118 |
பாஸ்போர்ட் – என்ற ஆங்கில சொல்லின் தமிழாக்கம் யாது?
கடவுச்சீட்டு | |
நுழைவுச்சீட்டு | |
காண்புச்சீட்டு | |
பற்றுச்சீட்டு |
Question 119 |
விசா – என்னும் ஆங்கில சொல்லின் தமிழாக்கம் யாது?
நுழைவுத்தாள் | |
நுழைவுபத்திரம் | |
நுழைவுச்சீட்டு | |
நுழைவுஇசைவு |
Question 120 |
விசிட்டிங் கார்டு – என்னும் சொல்லின் தமிழாக்கம் யாது?
ஒப்புச்சீட்டு | |
பற்றிச்சீட்டு | |
காண்புச்சீட்டு | |
கடவுச்சீட்டு |
Question 121 |
புரோட்டோ கால் – என்னும் ஆங்கில சொல்லின் தமிழாக்கம் யாது?
மரபியல் | |
மரபுத்தகவு | |
மரத்தகவியல் | |
மரபினம் |
Question 122 |
கீழ்க்கண்டவற்றில் எக்கலை மற்றும் மிகமிகப் பழங்காலம் முதலே தமிழகத்தில் சிறப்புப் பெற்று விளங்கி இருக்கவில்லை?
கட்டடக்கலை | |
சிற்பக்கலை | |
நாட்டியக்கலை | |
ஓவியக்கலை |
Question 123 |
சில ஆண்டுகளுக்கு முன்பு எந்த நகரில் நடைபெற்ற அகழ்வாய்வில் புத்த விகாரம் ஒன்றும் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் முகத்துவாரக் கட்டடமும் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
கொற்கை | |
பூம்புகார் | |
உறையூர் | |
காவேரி பூம்பட்டினம் |
Question 124 |
கொற்கை மற்று உறையூர் செய்த அகழ்வாய்வில் கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டை சேர்ந்த கட்டடப்பகுதிகள் கிடைத்தன?
கி.பி 11 – 12 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 10 – 11 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 8 – 10 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 13 – 14 ஆம் நூற்றாண்டு |
Question 125 |
அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையால் கங்கை கொண்ட சோழபுரத்தின் பகுதியான உள்கோட்டையில் கீழ்க்கண்ட எந்த மன்னனின் அரண்மனை பகுதி கண்டறியப்பட்டுள்ளது?
முதலாம் கரிகால சோழன் | |
முதலாம் குலோத்துங்க சோழன் | |
முதலாம் இராஜராஜ சோழன் | |
முதாம் இராசேந்திர சோழன் |
Question 126 |
கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டிலிருந்து கோவில்களின் கட்டிடக்கலையை பற்றி நம்மால் கூற முடியும் என்று ஆசிரியர் கூறுகிறார்?
கி.பி 7 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 6 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 8 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு |
Question 127 |
தமிழ்நாட்டில் இன்று காணப்பெறும் மிகப்பழமையான குடைவரைக் கோவில் அமைந்துள்ள இடம் எது?
செஞ்சிக்கோட்டை | |
மலைக்கோட்டை | |
பிள்ளையார்பட்டி | |
குமரக்குன்றம் |
Question 128 |
தமிழ்நாட்டின் மிகப்பழமையான காணப்படும் பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவிலானது கீழ்க்கண்ட யாருடைய படைப்பாகும்?
பாண்டியர் | |
சோழர் | |
சேரர் | |
பல்லவர் |
Question 129 |
பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவிலானது தற்போது தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருவண்ணாமலை | |
வேலூர் | |
கன்னியாகுமரி | |
இராமநாதபுரம் |
Question 130 |
பல்லவர்கள், பாண்டியர்கள், அதியர், முத்தரையர் ஆகியோர் அமைத்த குடைவரைக்கோவில்களின் பணியானது கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டோடு முடிவுற்றது?
) கி.பி 10 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 8 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 9 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 7 ஆம் நூற்றாண்டு |
Question 131 |
தனித்தனி குன்றுகளைச் செதுக்கிக் கோவிலாக்கும் முறையானது கீழ்க்கண்ட எந்த இரு மன்னர்கள் காலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?
பாண்டியர், பல்லவர் | |
சேரர், சோழர் | |
பாண்டியர், சேரர் | |
சோழர், பல்லவர் |
Question 132 |
தனித்தனி குன்றுகளைச் செதுக்கக் கோவிலாக்கும் முறையானது கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டிலேயே நின்றுவிட்டது?
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 7 ஆம் நூற்றாண்டு |
Question 133 |
கற்களை ஒன்றோடு ஒன்றாக அடுக்கி அமைக்கும் கோவில் பணியானது கீழ்க்கண்ட எந்த அரசர்கள் காலந்தொட்டு ஏற்பட்டு இந்நாள் வரை தொடர்ந்து நிலவி வருவதாக ஆசிரியர் கூறுகிறார்?
பல்லவர், சோழர் | |
சேரர், சோழர் | |
பாண்டியர், சேரர் | |
பல்லவர் பாண்டியர் |
Question 134 |
கீழ்க்கண்ட எந்த கோவிலானது பாண்டியர் காலத்து சிறந்த கோவிலானது பாண்டியர் காலத்து சிறந்த கோவிலாக காட்டப்படுகிறது?
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் | |
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் | |
நார்த்தாமலை விசயாலய சோழீச்சுரம் | |
தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் |
Question 135 |
சோழர் காலத்தின் சிறந்த கோவில்களாக கூறப்பட்ட கோவில்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது யாது?
காஞ்சிபுரம் கைலாயநாதர் கோவில் | |
திரிபுவனம் திரிபுவன வீரேச்சுரம் | |
கங்கை கொண்ட சோழீச்சுரம் | |
நார்த்தாமலை திருத்தளிநாதர் |
Question 136 |
யானையின் உருவத்தை செதுக்குவதில் கீழ்க்கண்ட எந்த மன்னர் காலத்து சிற்பிகள் கைத்தேர்ந்தவர்களாக விளங்கியிருக்கின்றனர்?
சேரர் | |
சோழர் | |
பாண்டியர் | |
பல்லவர் |
Question 137 |
கோவில்களில் இராமயணக் காட்சிகளையும், சிவபுராணக் காட்சிகளையும் தேர்ந்தெடுத்து சிறுசிறு புடைப்புச் சிற்பங்களாக செதுக்கியிருப்பத கீழ்க்கண்ட யாருடைய காலத்து சிற்பக்கலைககு சிறந்த எடுத்துக்காட்டுகளாக கூறப்படுகின்றன?
பாண்டியர் | |
சோழர் | |
பல்லவர் | |
களப்பிரர் |
Question 138 |
கடவுளர்களது உருவங்களாயினும் அரச, அரசியர்கள் உருவங்களாயினும் அவற்றில் காணப்பெறும் உருவ அமைப்பு, முகப்பொலிவு, கடவுள் தன்மை, விழியோட்டம், புருவ நெளிவு, கை அசைவு ஆகியவை பல்லவர் காலத்து சிற்பிகளை விட யாருடைய காலத்து சிற்பிகள் ஒருபடி மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது?
சோழர் | |
பல்லவர் | |
சேரர் | |
பாண்டியர் |
Question 139 |
கீழ்க்கண்ட எந்த நாயக்கர் காலத்தில் சிற்பக்கலையிர் மனிதத் தன்மைக்கும் உடற்கூறுகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டன?
தஞ்சை நாயக்கர் | |
செவ்வப்ப நாயக்கர் | |
விசயநகர நாயக்கர் | |
செஞ்சி நாயக்கர் |
Question 140 |
இன்றைக்கு சுமார் எத்தனை ஆண்டுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் செப்புப்படிமக்கலை மிக உன்னத நிலையில் வளர்ச்சி பெற்றிருக்கிறது?
2500 | |
2700 | |
2600 | |
2800 |
Question 141 |
செப்புப்படிமக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறுப்படும் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள செப்புத் திருமேனியானது தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருநெல்வேலி | |
திருச்சிராப்பள்ளி | |
திருப்பாதிரிப்புலியூர் | |
திருவாரூர் |
Question 142 |
பல்லவர் காலத்து செப்புத் திருமேனிகளுக்கு எமுத்துக்காட்டாக கூறப்பட்ட கோவில்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
கூரம் நடராசர் | |
திந்தினேஸ்வரர் கோவில் | |
கொடுமுடி திரிபுராந்தகர் | |
திரிபுரசுந்தரி |
Question 143 |
செப்புத்திருமேனிகளின் பொற்காலம் என யாருடைய காலம் அழைக்கப்படுகிறது?
சேரர் | |
பாண்டியர் | |
சோழர் | |
பல்லவர் |
Question 144 |
கீழ்க்கண்ட யாருடைய காலத்திய செப்புத்திருமேனிகளானது கலை அழகும் கடவுள் தன்மையும் பொருந்தியவையாக கூறப்படுகிறது?
பாண்டியர் | |
சேரர் | |
களப்பிரர் | |
சோழர் |
Question 145 |
செப்புப் படிமக்கலையானது கீழ்க்கண்ட யாருடைய காலத்தில் இருந்து சிறப்பிழந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது?
செவப்ப நாயக்கர் | |
விசயநகர நாயக்கர் | |
மதுரை நாயக்கர் | |
செஞ்சி நாயக்கர் |
Question 146 |
எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
மதுரைக்காஞ்சி | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவகசிந்தாமணி |
Question 147 |
மையறு படிவத்து வானவர் முதவா எவ்வகையுயிர்களும் உவமங் காட்டி’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
மதுரைக்காஞ்சி | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவகசிந்தாமணி |
Question 148 |
ஏறக்குறைய கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஓவியங்கள் காணப்படுகின்றன?
கி.பி 6 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 8 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 9 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 7 ஆம் நூற்றாண்டு |
Question 149 |
கீழ்க்கண்டவற்றில் எந்த கோவில் மண்டபத்தில் காணப்படும் எழிலார்ந்த ஆடல் மகளின் ஓவியமானது மிகச் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது?
மாமண்டூர் குகைக்கோவில் | |
தஞ்சை பெருவுடையார் கோவில் | |
பனமலைக் கோவில் | |
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் |
Question 150 |
மரச்சிற்பக்கலையானது கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டில் இருந்தே காணப்படுகிறது?
கி.பி 12 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 16 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 15 ஆம் நூற்றாண்டு | |
கி.பி 11 ஆம் நூற்றாண்டு |
Question 151 |
தந்தச் சிற்பக்கலையானது கீழ்க்கண்ட யாருடைய காலங்களில் சிறப்புப் பெற்றிருந்தது?
நாயக்கர் காலம் | |
பல்லவர் காலம் | |
முகத்தியர் காலம் | |
களப்பிரர் காலம் |
Question 152 |
கீழ்க்கண்ட எந்த கோவில்களில் தந்தச் சிற்பங்கள் நிரம்ப இருக்கின்றன என்று ஆசிரிய கூறுகிறார்?
குற்றாலத்தில் உள்ள சிவன் கோவில் | |
சிதம்பரத்தில் உள்ள நடராசர் கோவில் | |
மதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோவில் | |
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில் |
Question 153 |
கொள்கை இல்லாத அரசியல், உழைப்பு இல்லாத செல்வம், நேர்மை இல்லாத வணிகம், ஒழுக்கம் இல்லாத கல்வி, மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி, மனித நேயம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு இவை கொடிய பாவங்கள்’ – என்பது கீழ்க்கண்ட யாருடைய கருத்து என்று கூறப்படுகிறது?
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |
இராஜாஜி | |
ஜவர்ஹால் நேரு | |
காந்திஜி |
Question 154 |
கோவில்களில் கோபுரம் அமைத்தல் பணியானது பல்லவர் காலத்தில் தொடங்கி கீழ்க்கண்ட எந்த மன்னர்கள் காலத்தில் மிகவும் உன்னத நிலையை எய்தியாக கூறப்படுகிறது
நாயக்கர் மன்னர்கள் | |
விசயநகர மன்னர்கள் | |
பல்லவ மன்னர்கள் | |
பாண்டிய மன்னர்கள் |
Question 155 |
பால்வண்ணம் பிள்ளை - என்ற கதைநூலின் ஆசிரியர் யார்?
புதுமைப்பித்தன் | |
வல்லிக்கண்ணன் | |
ஜெயகாந்தன் | |
ராஜம் கிருஷ்ணன் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 155 questions to complete.
It is very useful for us