Online TestTamil
11th Tamil Part 6 Online Test – New Book
11th Tamil Iyal 6 Online Test - New Book Unit 6
11th Tamil Iyal 6 Online Test – New Book Unit 6
11th Tamil Questions - Part 6
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு புதுச்சேரியின் எந்த நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது.
17ம் நூற்றாண்டு | |
18ம் நூற்றாண்டு | |
19ம் நூற்றாண்டு | |
20ம் நூற்றாண்டு |
Question 2 |
டைரியம் என்பது _____ மொழி சொல்லின் மூலமான டைஸ் என்ற சொல்லிலிருந்து உருவானது.
ஆங்கிலம் | |
பிரஞ்சு | |
இலத்தீன் | |
போர்ச்சுக்கீசியம் |
Question 3 |
நாட் குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது _____ என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறிப்பேடு .
EPHERIDES | |
EPHEMERS | |
EPHEMERIDES | |
EPHEDIARY |
Question 4 |
EPHEMERIDES என்ற சொல்லின் பொருள்
ஒரு நாளுக்கான முடிவு | |
ஒரு மாதத்திற்கான முடிவு | |
ஒரு வாரத்திற்கான முடிவு | |
ஒரு வருடத்திற்கான முடிவு |
Question 5 |
முகலாய மன்னர்களில் யாருடைய காலத்திலிருந்து நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
அக்பர் | |
பாபர் | |
ஷாஜகான் | |
ஒளரங்கசீப் |
Question 6 |
முகலாய மன்னர்களில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் தடை செய்யப்பட்டது
அக்பர் | |
பாபர் | |
ஷாஜகான் | |
ஒளரங்கசீப் |
Question 7 |
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியை வாஸ்கோடாகாமா கண்டுபிடித்த ஆண்டு
1496 | |
1498 | |
1500 | |
1489 |
Question 8 |
வாஸ்கோடாகாமாவின் நாட்குறிப்புகள் _____ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனந்தரங்கர் | |
துய்ப்ளே | |
ஆல்வாரோ வெல்லோ | |
பிரான்சுவா மர்த்தேன் |
Question 9 |
ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகள் எத்தனை ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
24 | |
25 | |
26 | |
27 |
Question 10 |
ஆனந்தரங்கர் ____ என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
துய்ப்ளே | |
ராபர்ட் கிளைவ் | |
டூமாஸ் | |
அல்போன் சோ டி அல்புகர்க் |
Question 11 |
புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பினை வகித்த கியோம் ஆந்த்ரே எபேர் என்பவரின் தரகராக நியமிக்கப்பட்டவர்
நைனியப்பர் | |
திருவேங்கடம் | |
ஆனந்தரங்கர் | |
பிரான்சுவா மர்த்தேன் |
Question 12 |
ஆனந்தரங்கர் எங்கு எப்போது பிறந்தார்?
பாண்டிச்சேரி, 30. மார்ச்.1709 | |
பெரம்பலூர் , 9. மார்ச்.1730 | |
பெரம்பூர், 30. மார்ச்.1709 | |
பெரம்பலூர், 30. மார்ச்.1709 |
Question 13 |
ஆனந்தரங்கர் யாருடைய உதவியால் பரங்கிப்பேட்டை நெசவுச் சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
துய்ப்ளே | |
பிரான்சுவா மர்த்தேன் | |
கியோம் ஆந்த்ரே | |
அலனுவார் |
Question 14 |
பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளே காலத்தில் ஆனந்தரங்கர் _____ ஆக பணியாற்றினார்.
துஷிபாஷி | |
தலைமை துஷிபாஷி | |
உரைபெயர்ப்பாளர் | |
உதவி உரைபெயர்ப்பாளர் |
Question 15 |
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
10 | |
11 | |
12 | |
13 |
Question 16 |
நாணய அச்சடிப்பு உரிமையை பெற்ற பிரெஞ்சு ஆளுநர்
துய்ப்ளே | |
ராபர்ட் கிளைவ் | |
டூமாஸ் | |
அல்போன் சோ டி அல்புகர்க் |
Question 17 |
ஆனந்தரங்கரின் எந்த தேதியிட்ட நாட் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றதை விளக்குகிறது.
10.09.1736 | |
09.10.1736 | |
03.06.1736 | |
10.09.1763 |
Question 18 |
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஆனந்தரங்கர் | |
சாமுவேல் பெப்பிசு | |
2ம் சார்லஸ் | |
3ம் சார்லஸ் |
Question 19 |
சாமுவேல் பெப்பிசு யாருடைய காலத்து நிகழ்வுகளை நாட் குறிப்பாக பதிவு செய்துள்ளார்
முதலாம் சார்லஸ் | |
இரண்டாம் சார்லஸ் | |
மூன்றாம் சார்லஸ் | |
ஐந்தாம் சார்லஸ் |
Question 20 |
ஆனந்தரங்கர் எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்
06.09.1736 - 06.01.1761 | |
06.09.1736 - 06.09.1763 | |
06.09.1736 – 11.01.1761 | |
06.01.1736 - 11. 09. 1763 |
Question 21 |
"இந்தியாவின் பெப்பிசு" என அழைக்கப்படுபவர் யார்?
ஆனந்தரங்கர் | |
சாமுவேல் பெப்பிசு | |
2ம் சார்லஸ் | |
3ம் சார்லஸ். |
Question 22 |
சாமுவேல் பெப்பிசு குறிப்பிட்டுள்ள இரண்டாம் சார்லஸ் மன்னர் காலத்து நிகழ்வுகளின் காலம்
1636 – 1661 | |
1660 – 1669 | |
1660 – 1666 | |
1666 – 1669 |
Question 23 |
1746 ம் ஆண்டு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்த சென்னையை கைப்பற்றிய பிரெஞ்சுக் கப்பல் தளபதி ____.
துய்ப்ளே | |
ராபர்ட் கிளைவ் | |
டூமாஸ் | |
லெபூர் தொனே |
Question 24 |
1746 ம் ஆண்டு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்த சென்னையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது அவர்களை எதிர்த்து போரிட்டவர்
அன்வாருதீன் | |
துயூப்ளே | |
மகபூஸ்கான் | |
டூமாஸ் |
Question 25 |
கீழ்க்கண்டவற்றுள் ஆங்கிலேயர் தனது நாட்குறிப்பில் குறிப்பிடுவது எவற்றை ?
- ஆம்பூர் போர்
- தஞ்சை கோட்டை முற்றுகை
- இராபர்ட் கிளைவ் படையெடுப்பு
- ஆங்கிலேயரின் புதுச்சேரி முற்றுகை
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
1, 3, 4 சரி | |
2 , 3 சரி |
Question 26 |
லல்லி என்பவர் சென்னைக் கோட்டையை கைப்பற்ற முயன்ற ஆண்டு
1785 | |
1758 | |
1875 | |
1857 |
Question 27 |
லல்லி என்பவர் சென்னைக் கோட்டையை கைப்பற்ற முயன்ற போது அக்கோட்டையின் கவர்னராக இருந்தவர்
துய்ப்ளே | |
மேஸ்தர் பிகட் | |
டூமாஸ் | |
லெபூர் தொனே |
Question 28 |
புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்தவர்
துய்ப்ளே | |
துய்மா | |
டூமாஸ் | |
லெபூர் தொனே |
Question 29 |
புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள்
11.06.1739 | |
19.06.1739 | |
11.06.1793 | |
19.06.1739 |
Question 30 |
கீழ்க்கண்டவற்றுள் ஆனந்த ரங்கர் காலத்தில் வழங்கப்பட்ட தண்டனைகள் எவை?
- 1.மரண தண்டனை 2. காதறுத்தல்
- 3 . சாட்டையடி 4. கிடங்கில் போடுதல்
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
1, 3, 4 சரி | |
2 , 3 சரி |
Question 31 |
"தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன" என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர்
அண்ணா | |
திரு.வி.க | |
உ.வே.சா | |
வ.வே.சு |
Question 32 |
"அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர்" என்று கூறியவர்
அண்ணா | |
திரு.வி.க | |
உ.வே.சா | |
வ.வே.சு |
Question 33 |
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் பெரும் பகுதி எவ்வகையான செய்திகளை விவரிக்கின்றன
போர் செய்திகள் | |
ஆட்சி மாற்றம் | |
வணிக செய்திகள் | |
நீதி வழங்குதல் |
Question 34 |
புதுச்சேரியிலிருந்து _______க்கு சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதாக ஆனந்தரங்கர் குறிப்பிடுகிறார்.
இங்கிலாந்து | |
மணிலா | |
போர்ச்சுக்கல் | |
இலங்கை |
Question 35 |
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைய கப்பல்களுக்கு எத்தனை திங்கள் தேவைப்பட்டன என ஆனந்தரங்கரின் குறிப்பேடு குறிப்பிடுகிறது.
6 | |
7 | |
8 | |
9 |
Question 36 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஆனந்தரங்கரின் குறிப்பேடுகளின் படி எது தவறானது ?
ஒவ்வோர் ஆண்டும் துணிகளுக்காக வர்த்தகரிடமும் தரகரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது . | |
துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. | |
100க்கு 220 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்கு பணத்தை செலுத்தி விடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். | |
வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றை பெற்றுப் பாதுகாத்துள்ளார். |
Question 37 |
புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரஞ்சு வணிகக் கழகம் பெற்ற ஆணையை 10.9.1976 அன்று பல்லக்கில் ஊருக்குள் கொண்டு வந்தவர் யார்?
காசிரங்கர் | |
கனகராயர் | |
அழகப்பன் | |
சண்முகம் |
Question 38 |
எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணையின் பேரில் அறிவிக்கப்பட்ட ஆண்டு
1740 – மே | |
1740 – ஏப்ரல் | |
1739 – மே | |
1739 – ஏப்ரல் |
Question 39 |
கீழ்க்கண்டவற்றுள் ஆனந்தரங்கர் குறிப்பிடாத வராகன்கள் எது / எவை?
- புதுச்சேரிப் பிறை வராகன்
- சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன்
- வட்டவராகன்
- பரங்கிப்பேட்டை வராகன்
- ஆரணி வராகன்
2, 3,5 | |
1, 2,4 | |
2, 3, 4 | |
எதுவுமில்லை |
Question 40 |
பொருத்துக
- 480 காசு i) ஒருவராகன்
- 60 காசு ii) 1 ரூபாய்
- 8 பணம் iii) 1 பணம்
- 24 பணம் iv) ஒரு ரூபாய்
iv iii I ii | |
iii i ii iv | |
ii i iii iv | |
ii i iv iii |
Question 41 |
பொருத்துக
- 1 பொன் i) 1/2 வராகன்
- 1 வராகன் ii) 3 அல்லது 3.2 ரூபாய்
- 1 மோகரி iii) 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
- 1 சக்கரம் iv) 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்கம்
iv iii I ii | |
iii i ii iv | |
i ii iii iv | |
ii i iv iii |
Question 42 |
புதுச்சேரியை பெருங் காற்று சூறையாடியது என ஆனந்தரங்கம் குறிப்பிடும் ஆண்டு
1743 | |
1745 | |
1747 | |
1749 |
Question 43 |
- கூற்று : புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை 1745 ல் தடைபட்டது.
- காரணம் : இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கப்பல் வணிகம் தடைபட்டது.
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 44 |
புதுச்சேரியில் 1745 ஆம் ஆண்டு தடைபட்ட கப்பல்களின் வருகை மீண்டும் தொடங்கியது எப்போது?
06.08.1746 | |
08.06.1746 | |
08.06.1749 | |
06.08.1749 |
Question 44 Explanation:
(Note: லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் வந்தன)
Question 45 |
ஆனந்தரங்கரின் இறுதிக் காலநாட் குறிப்புகள் கீழ்க்கண்ட எவற்றைக் கூறுகின்றன
ஆனந்தரங்கர் நோய்வாய்ப்பட்டது | |
புதுச்சேரியின் வணிகம் | |
ஆங்கிலேயர் புதுச்சேரி மீது நிகழ்த்திய முற்றுகை மற்றும் புதுச்சேரியின் வீழ்ச்சி | |
புதுச்சேரியின் எழுச்சி |
Question 46 |
ஆனந்தரங்கரின் இறுதிக் காலநாட் குறிப்புகளில் ஆங்கிலேயக் கப்பல்கள் புதுச்சேரியை தாக்கி கைப்பற்றியதாக கூறப்படும் ஆண்டு
1670 | |
1760 | |
1765 | |
1770 |
Question 47 |
புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்திய ஆளுநர்
துய்ப்ளே | |
லெறி | |
டூமாஸ் | |
லெபூர் தொனே |
Question 48 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி
- ஆனந்தரங்கன் கோவை - தியாகராய தேசிகர்
- ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் -பிரபஞ்சன்
- வானம் வசப்படும் – புலவரேறு அரிமதி தென்னகன்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
1, 2 சரி | |
3 மட்டும் சரி |
Question 49 |
ஆனந்தரங்கரின் நாட் குறிப்பு முடிவடையும் நாள்
11. 1. 1671 | |
11. 1. 1761 | |
1.11.1671 | |
1.11.1761 |
Question 50 |
தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம்
முதுமொழிமாலை | |
சின்ன சீறா | |
சீறாப்புறாணம் | |
ஹிஜிறத்துக் காண்டம் |
Question 51 |
மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறும் காண்டம்
விவாதத்துக் காண்டம் | |
நுபுவ்வத்துக் காண்டம் | |
ஹிஜிரத்துக் காண்டம் | |
எதுவுமில்லை |
Question 52 |
ஹிஜிறத் என்பது எம்மொழிச் சொல் மற்றும் அதன் பொருள்
இலத்தீன், செலவு | |
அரபு , இடம்பெயர்தல் | |
கிரேக்கம், செலவு | |
இலத்தீன், இடம்பெயர்தல் |
Question 53 |
நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்த மக்கா இன மக்கள்
குறைசி | |
மதீனா | |
குறிஞ்சி | |
முல்லை |
Question 54 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- எய்துதல், நல்கல்
அளித்தல், பெறுதல் | |
அம்பு, பெறுதல் | |
பெறுதல், அளித்தல் | |
அம்பு, நன்மை |
Question 55 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- துன்ன, மண்டிய
உண், நெருங்கிய | |
நெருங்கிய, நிறைந்த | |
நிறைந்த, நெருங்கிய | |
உண், நிறைந்த |
Question 56 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- வரை, வாரணம்
நிறைவு, யானை | |
எல்லை , யானை | |
எல்லை , ஆரவாரம் | |
மலை, யானை |
Question 57 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- பூரணம், காய்ந்த
சிறந்த, சிறந்த | |
நிறைவு, நிறைவு | |
நிறைவு, சிறந்த | |
நெருங்கிய, சிறந்த |
Question 58 |
பொருத்துக
- வதுவை i) அரசன்
- கோன் ii) திருமணம்
- மறுவிலா iii) தெள்ளிய நீரலை
- தெண் டிரை iv) குற்றம் இல்லாத
- விண்டு v) திறந்து
iv iii i ii v | |
iii v ii iv i | |
ii i iv iii v | |
ii i v iii iv |
Question 59 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- விண்டு, தீன்
மூடிய, மார்க்கம் | |
திறந்து, மார்க்கம் | |
திறந்து, உணவு | |
மூடிய, உணவு |
Question 60 |
- " வடவரை பொருவென மலிந்த மேனிலைக்
- கடலென ஒலித்ததா வணத்தின் கம்பலைப்
- புடவியை அளந்தன போன்று வீதிகள்
- இடனற நெருங்கின மாடம் எங்குமே "
- என்னும் பாடல் எந்நகரின் சிறப்பினைக் கூறுகிறது
மக்கா | |
மதீனா | |
மதுரை | |
கும்பகோணம் |
Question 61 |
- "சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால்
- புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால் "
- இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீறாப்புராணம் | |
முதுமொழிமாலை |
Question 62 |
- "ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்
- தீன் எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்"
உமறுப் புலவர் | |
பனு அகமது மரைக்காயர் | |
நபிகள் நாயகம் | |
சீதக்காதி |
Question 63 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த
வினையெச்சங்கள் | |
பெயரெச்சங்கள் | |
வினைத் தொகை | |
பண்புத்தொகை |
Question 64 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- ஐந்தும், தவமும் ஈகையும்
உம்மைத் தொகை, எண்ணும்மை | |
முற்றும்மை, உம்மைத் தொகை | |
முற்றும்மை, எண்ணும்மை | |
எண்ணும்மை, உம்மைத் தொகை |
Question 65 |
இலக்கணக் குறிப்புத் தருக – பொன்நகர்
2ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |
3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |
2ம் வேற்றுமை தொகை | |
3ம் வேற்றுமை தொகை |
Question 66 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
இடன் - ஈற்றுப் போலி | |
பெரும்புகழ் – பண்புத்தொகை | |
உறுபகை - வினைத் தொகை | |
தரும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் |
Question 67 |
பகுபத உறுப்பிலக்கணம் தருக – மலிந்த
மலிந்து + அ | |
மலி +ந்+த் + அ | |
மலி +த்(ந்) + த் + அ | |
மலி + த் + த் ( ந்) + அ |
Question 68 |
பகுபத உறுப்பிலக்கணம் தருக – நெருங்கின
நெருங்கு + (இ) ன் + அ | |
நெருங்கு + அ | |
நெருங்கு + இன | |
நெரு +ங் + இன் + அ |
Question 69 |
" மலிந்த >> மலி +த் ( ந்) + த் + அ "
- இதில் ‘ந் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சந்தி | |
விகாரம் | |
இறந்தகால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை |
Question 70 |
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – அரும்பொருள்
Question 71 |
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – மனையென
Question 72 |
'சீறா’ என்பது _____ என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.
சீறம் | |
சீறத் | |
சீறு | |
சீற் |
Question 73 |
கீழ்க்கண்டவற்றை ஆராய் கரு
- 1 . சீறத் – வாழ்க்கை
- 2 . புராணம் – வரலாறு
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 74 |
சீறாப்புறாணத்தை யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க உமறுப் புலவர் இயற்றினார்.
நபிகள் நாயகம் | |
அபுல் காசிம்மரைக்காயர் | |
பனி அகமது மரைக்காயர் | |
வள்ளல் சீதக்காதி |
Question 75 |
சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள், படலங்கள், பாடல்கள் முறையே __.
2,5027, 92 | |
3,92,5027 | |
2,92,5027 | |
3, 29,5027 |
Question 76 |
சீறாப்புராணத்தின் தொடர்ச்சியான சின்னச் சீறா என்ற நூலை எழுதியவர்
நபிகள் நாயகம் | |
அபுல் காசிம்மரைக்காயர் | |
பனி அகமது மரைக்காயர் | |
வள்ளல் சீதக்காதி |
Question 77 |
உமறுபுலவரை ஆதரித்தவர்கள் யாவர்?
- 1] நபிகள் நாயகம் 2] அபுல் காசிம்மரைக்காயர்
- 3] பனி அகமது மரைக்காயர் 4] வள்ளல் சீதக்காதி
அனைத்தும் சரி | |
1, 2 | |
2 , 4 | |
3, 4 |
Question 78 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர்
- இவர் கடிகைமுத்துப் புலவரின் மாணவர் .
- நபிகள் நாயகத்தின் மீது சீறாப்புராணம் மற்றும் முது மொழி மாலை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1, 3 சரி |
Question 79 |
சீறாப்புராணம் எவ்வகைப் பாடல்களால் ஆனது
ஆசிரியப்பா பாடல் | |
விருத்தப் பாடல் | |
சிந்துப் பாடல் | |
கலிப்பா பாடல் |
Question 80 |
சொல்ல வந்த கருத்தை' உள்ளுறை ‘ வழியாக உரைப்பது _____ பாடல்களின் சிறப்பு.
அகநானூறு | |
புறநானூறு | |
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை |
Question 81 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- சமம், தழலை
சமானம், இலை | |
போர், பறவைகளை ஓட்டும் கருவி | |
சமானம், விலங்குகளை ஓட்டும் கருவி | |
போர், ஒரு வகை மலர் |
Question 82 |
பொருத்துக.
- கொண்மூ i) மேகம்
- விசும்பு ii) வானம்
- அரவம் iii) ஆரவாரம்
- ஆயம் iv) சுற்றம்
iv iii I ii | |
iii i ii iv | |
i ii iii iv | |
ii i iv iii |
Question 83 |
பொருத்துக
- அருஞ்சமம் i) ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வளைஇ ii) ஈற்றுப் போலி
- எறிவாள் iii) வினைத் தொகை
- அறன் iv) சொல்லிசை அளபெடை
- பிழையா v) பண்புத்தொகை
iv iii I ii v | |
iii v ii iv i | |
v iv iii ii i | |
ii i v iii iv |
Question 84 |
- “ பெருங்கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
- இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்,
- போர்ப்பு உறு முரசின் இரங்கி "
- -இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
அகநானூறு | |
புறநானூறு | |
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை |
Question 85 |
- "பொன்னென மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப்
- பொலிந்த ஆயமொடுகாண் தக இயலித்
- தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் "
- இவ்வரிகளை பாடியவர்
கபிலர் | |
பேயனார் | |
வீரை வெளியன் தித்தனார் | |
ஓரம் போகியார் |
Question 86 |
- " அழலேர் செயலை அம் தழை அசைஇயும்,
- குறமகள் காக்கும் ஏனல்
- புறமும் தருதியோ? வாழிய, மழையே!"
- இவ்வரிகள் அமைந்துள்ள பாடலில் இடம்பெற்றுள்ள திணை
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 87 |
அகநானூறு பாடல்களை பாடிய புலவர்கள் எத்தனை பேர்
101 | |
154 | |
145 | |
157 |
Question 88 |
கீழ்க்கண்வற்றுள் அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகள் யாவை?
- களிற்றி யானை நிரை 2. மணிமிடைப் பவளம்
- நித்திலக் கோவை
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 89 |
கீழ்க்கண்டவற்றுள் நெடுந்தொகை நானூறு என அழைக்கப்படும் நூல் எது?
அகநானூறு | |
புறநானூறு | |
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை |
Question 90 |
அகநானூறு பாடல்களில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை கொண்டுள்ள திணை எது?
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
பாலை |
Question 91 |
அகநானூறு பாடல்களில் 40 பாடல்களை கொண்டுள்ள திணைகள் எவை?
- குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை
1, 2, 4 | |
2, 3, 4 | |
1, 2, 3 | |
3, 4, 5 |
Question 92 |
அகநானூற்றில் குறிஞ்சித் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
200 | |
80 | |
40 | |
20 |
Question 93 |
பொருத்துக
- திணை பாடல் வரிசை
- குறிஞ்சி i) 1 , 3, 5, 7, ....
- முல்லை ii) 10, 20, 30, 40 …
- மருதம் iii) 6,16, 26, 36 ...
- நெய்தல் iv) 4, 14,24, 34...
- பாலை v) 2,8,12, 18 …
iv iii I ii v | |
iii v ii iv i | |
v iv iii ii i | |
ii i v iii iv |
Question 94 |
'பிம்பம்' என்னும் சிறுகதையை இயற்றியவர் யார்?
மீரா | |
வைத்தியலிங்கம் | |
ஈரோடு தமிழன்பன் | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் |
Question 95 |
'வானம் வசப்படும் ‘ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் மற்றும் எந்த ஆண்டு ?
பிரபஞ்சன் – 1993 | |
பிரபஞ்சன் – 1995 | |
கல்கி – 1993 | |
கல்கி – 1995 |
Question 96 |
பிரபஞ்சன் குறித்த செய்திகளில் தவறானது எது?
இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். | |
சிறுகதை, புதினம், நாடகம் ,கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். | |
இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்ட்டுள்ளன. | |
இவருடைய வானம் வசப்படும் என்ற கட்டுரை சாகித்திய அகாதெமி விருது பெற்றது. |
Question 96 Explanation:
(Note: வானம் வசப்படும் - வரலாற்றுப் புதினம்)
Question 97 |
"இந்த உலகமே நாடக மேடை ; அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே.ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு. ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு" என்று கூறியவர்
பிரபஞ்சன் | |
வைத்தியலிங்கம் | |
ஷேக்ஸ்பியர் | |
கல்கி |
Question 98 |
கீழ்க்கண்டவற்றுள் செய்யுளின் உறுப்புகள் யாவை?
- எழுத்து 2. அசை 3. சீர் 4. தளை 5. அடி 6. தொடை
அனைத்தும் சரி | |
2, 3,5,6 | |
1, 2, 3, 4 | |
2, 3, 4, 5 |
Question 99 |
பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள் , பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றை வெளிப்படுத்துவது எந்நூல்?
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
பாயிரம் | |
யாப்பருங்கலக்காரிகை |
Question 100 |
யாப்பு என்னும் கடலைக் கடக்க உதவும் நூல் எது?
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
பாயிரம் | |
யாப்பருங்கலக்காரிகை |
Question 101 |
தமிழ்ச் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் ____ஐ அடிப்படையாகக் கொண்டவை.
எழுத்து | |
செய்யுள் | |
இசை | |
பொருள் |
Question 102 |
பொருத்துக
- வெண்பா i) செப்பலோசை
- ஆசிரியப்பா ii) அகவலோசை
- கலிப்பா iii) துள்ளலோசை
- வஞ்சிப்பா iv) தூங்கலோசை
iv iii i ii | |
iii i ii iv | |
i ii iii iv | |
ii i iv iii |
Question 103 |
செய்யுளில் இசையை பிணைப்பவை எவை?
- மோனை 2. எதுகை 3. இயைபு 4. அசை
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1 , 3, 4 |
Question 104 |
செய்யுளில் ___ அடிப்படையில் அடிகள் வரையறை செய்யப்படுகின்றன.
அசை | |
சீர் | |
தளை | |
தொடை |
Question 105 |
பொருத்துக
- குறளடி i) 3 சீர்கள்
- சிந்தடி ii) 2 சீர்கள்
- நேரடி iii) 4 சீர்கள்
- நெடிலடி iv) 6 சீர்கள்
- கழிநெடிலடி v) 5 சீர்கள்
iv iii I ii v | |
ii v ii iv i | |
v iv iii ii i | |
ii i v iii iv |
Question 106 |
கீழ்க்கண்ட ஆசிரியப்பா குறித்த கூற்றுகளில் தவறானது எது?
பா இயற்றுவதற்குரிய எளிய வடிவம் ஆசிரியப்பா | |
அகவல் ஓசை பெற்றதால் இது அகவற்பா என அழைக்கப்படுகிறது. | |
பெரும்பாலும் 3 அசைகளால் அமையும் | |
ஆசிரியப்பாக்களால் ஆன பாடல்களே சங்க காலத் தமிழில் மிகுதியாக உள்ளன. |
Question 107 |
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
- யாப்பில் எழுத்து அசையை அமைக்க உதவும்.
- அசை என்பது மாத்திரை சேர்ந்து வருவதாகும்.
- அசை நேர், நிரை என இரு வகையாக அமையும்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 108 |
பின்வரும் எடுத்துக்காட்டுகளில் நேரசை அல்லாதது எது?
கண் | |
பா | |
கலா | |
பார் |
Question 109 |
பின்வரும் எடுத்துக்காட்டுகளில் நேரசை அல்லாதது எது?
அகம் | |
பார் | |
கலா | |
கலாம் |
Question 110 |
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
- சீர் ஒன்றின் அசைப் பிரிப்பில் தனி மெய்யெழுத்து வந்தாலோ இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்தாலோ அசையாக கணக்கில் கொள்ள வேண்டும்
- ஆல்- நேரசை – இரு மாத்திரை (‘ ல் ' அலகு பெறாது)
- இகழ்ச்சி - நிரையசை - இரு மாத்திரை ('ழ்ச்' அலகு பெறாது)
அனைத்தும் சரி | |
2 ,3 சரி | |
1 , 3 சரி | |
1, 2 சரி |
Question 110 Explanation:
(Note: சீர் ஒன்றின் அசைப் பிரிப்பில் தனி மெய்யெழுத்து வந்தாலோ இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்தாலோ அசையாக கணக்கில் கொள்ளக்கூடாது)
Question 111 |
அசைகள் சேர்ந்து அமைந்தால் ____ பிறக்கும்.
இசை | |
சீர் | |
தளை | |
தொடை |
Question 112 |
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் எது?
இயற்சீர் | |
காய்ச்சீர் | |
கனிச்சீர் | |
வெண்சீர் |
Question 113 |
கீழ்க்கண்டவற்றுள் எவை நேரீற்று ஈரசைச் சீர்களாக வரும்
- தேமா 2. புளிமா 3 . கருவிளம் 4. கூவிளம்
அனைத்தும் | |
1, 2 | |
1 , 3 | |
3, 4 |
Question 114 |
கீழ்க்கண்டவற்றுள் எவை நிரையீற்று ஈரசைச் சீர்களாக வரும்
- தேமா 2. புளிமா 3 . கருவிளம் 4. கூவிளம்
அனைத்தும் | |
1, 2 | |
1 , 3 | |
3, 4 |
Question 115 |
கீழ்க்கண்டவற்றுள் எவை வெண்பாவிற்குரிய நேரீற்று மூவசைச் சீர்கள்?
- தேமாங்காய் 2. புளிமாங்காய்
- கரு விளங்காய் 4. கூவிளங்காய்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
2 , 4 சரி |
Question 116 |
பொருத்துக
- நிரை நிரை i) கூவிளம்
- நேர் நேர் ii) புளிமா
- நேர் நிரை iii) கருவிளம்
- நிரை நேர் iv) தேமா
iv iii i ii | |
iii i ii iv | |
iii iv i ii | |
ii i iv iii |
Question 117 |
பொருத்துக
- நேர் நேர் நேர் i) தேமாங்காய்
- நிரை நேர் நேர் ii) புளிமாங்காய்
- நிரை நிரை நேர் iii) கருவிளங்காய்
- நேர் நிரை நேர் iv) கூவிளங்காய்
iv iii i ii | |
iii i ii iv | |
i ii iii iv | |
ii i iv iii |
Question 118 |
மாமுன் நேர் ஒன்றி வந்தால் ___ தளை எனப்படும்
நேரொன்றாசிரியத்தளை | |
நிரையொன்றாசிரியத்தளை | |
இயற்சீர் வெண்டளை | |
வெண்சீர் வெண்டளை |
Question 119 |
விளமுன் நிரை ஒன்றி வந்தால் ___ தளை எனப்படும்.
நேரொன்றாசிரியத்தளை | |
நிரையொன்றாசிரியத்தளை | |
இயற்சீர் வெண்டளை | |
வெண்சீர் வெண்டளை |
Question 120 |
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?
எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும். | |
ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும் | |
இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும் | |
நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும். |
Question 120 Explanation:
(Note: ஆசிரியத் தளை மிகுந்தும் தளைகள் கலந்தும் காணப்படும்.)
Question 121 |
ஆசிரியப்பாவின் இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.
ஏ, கே, இன், எ | |
ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ | |
ஏ, கே, ஈ, இன், ஐ | |
எ , ஈ, இன் |
Question 122 |
ஆசிரியப்பாவில் இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை பெற்று வருவது ___ எனப்படும் .
நேரிசை ஆசிரியப்பா | |
இணைக்குறள் ஆசிரியப்பா | |
நிலைமண்டில ஆசிரியப்பா | |
அடி மறிமண்டில ஆசிரியப்பா |
Question 123 |
முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் மூன்று சீர்களாகவும் வரும் ஆசிரியப்பா _____.
நேரிசை ஆசிரியப்பா | |
இணைக்குறள் ஆசிரியப்பா | |
நிலைமண்டில ஆசிரியப்பா | |
அடி மறிமண்டில ஆசிரியப்பா |
Question 124 |
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் இனங்கள் யாவை?
- ஆசிரியத்தாழிசை 2. ஆசிரியத் துறை 3. ஆசிரிய விருத்தம்
1, 2, 3 | |
1, 2 | |
2 , 3 | |
1 , 3 |
Question 125 |
பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாமல் அமையும் ஆசிரியப்பா ____ எனப்படும்.
நேரிசை ஆசிரியப்பா | |
இணைக்குறள் ஆசிரியப்பா | |
நிலைமண்டில ஆசிரியப்பா | |
அடி மறிமண்டில ஆசிரியப்பா |
Question 126 |
எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வரும் ஆசிரியப்பா ____ எனப்படும்.
நேரிசை ஆசிரியப்பா | |
இணைக்குறள் ஆசிரியப்பா | |
நிலைமண்டில ஆசிரியப்பா | |
அடி மறிமண்டில ஆசிரியப்பா |
Question 127 |
"தீதெலாம்" என்பதை அசைகளாக எவ்வாறு பிரிக்கலாம்
நிரை நேர் | |
நிரை நிரை | |
நேர் நிரை | |
நேர் நேர் |
Question 128 |
''இன்னல்கள்" என்ற சொல்லின் அசைக்குரிய வாய்ப்பாட்டை எழுதுக.
கருவிளம் | |
தேமாங்காய் | |
கருவிளங்காய் | |
கூவிளங்காய் |
Question 129 |
கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பாடல்களே இன்று பெரு வழக்கில் உள்ளன. | |
ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்று விருத்தம். | |
ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பாடல்களை கையாள்வது எளிது. | |
நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி ‘ கழிநெடிலடி ' எனப்படும்.
(Note: ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி ‘ கழிநெடிலடி ' எனப்படும்.)
|
Question 130 |
சீர் அமைப்பை வைத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளில் தவறானது எது?
ஓரடியுள் அரை அடிக்கு ஒரு விளச்சீரும் இரு மாச்சீர் வருவன | |
ஓரடியுள் அரை அடிக்கு இரு மாச்சீரும் ஒரு காய்ச்சீர் வருவன. | |
ஓரடியுள் நான்கு காய்ச்சீரும் இரு மாச்சீர் வருவனர் | |
ஓரடியுள் நான்கு மாச் சீரும் இரு காய்ச்சீரும் வருவன. |
Question 131 |
- "பச்சைமா மலைபோல் மேனி
- பவளவாய்க் கமலச் செங்கண்
- அச்சுதா அமரர் ஏறே !"
- இவ்வரிகளை பாடியவர்
நம்மாழ்வார் | |
பேயாழ்வார் | |
தொண்டரடிப்பொடி ஆழ்வார் | |
பூதத்தாழ்வார் |
Question 132 |
- "சீறிய நெற்றி எங்கே ?
- சிவந்தநல் இதழ்கள் எங்கே?
- கூரிய விழிகள் எங்கே?
- குறுநகை போன தெங்கே?"
- இவ்வரிகளை இயற்றியவர்
பாரதி | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் | |
மீரா |
Question 133 |
பொருந்தாததைத் தேர்க.
- ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
- ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை , நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்
- ஆனந்தரங்களின் நாட் குறிப்பு 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
- ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன .
1, 2 | |
2 , 3 | |
1 , 3 | |
2 , 4 |
Question 134 |
ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?
மொழிபெயர்ப்பாளர் | |
இந்தியாவின் பெப்பிசு | |
தலைமைத் துவிபாஷி | |
உலக நாட் குறிப்பு இலக்கியத்தின் தந்தை |
Question 135 |
உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு
உரிச்சொல் தொடர், ஈற்றுப் போலி | |
வினைத் தொகை இடவாகுபெயர் | |
வினையெச்சம், வினைத் தொகை | |
பெயரெச்சம், பண்புத்தொகை |
Question 136 |
நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது
காய் முன் நேர் | |
காய் முன் நிரை | |
கனி முன் நிரை | |
மா முன் நேர் |
Question 137 |
யாப்புக்காக ஆக்கப்படும் பொருளில்லாத சொல் _____ எனப்படும்.
சிர் | |
தளை | |
அசை | |
தொடை |
Question 138 |
தமிழில் எல்லாம் உண்டு;தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் என சான்றுகளுடன் எடுத்துச் சொன்னவர்
திரு.வி.க | |
மு.வ | |
டி. கே.சி | |
உ.வே.சா |
Question 139 |
" வட்டித் தொட்டி “ என்னும் அமைப்பு யாருடைய வீட்டில் நடைமுறையில் இருந்தது
திரு.வி.க | |
மு.வ | |
டி. கே.சி | |
உ.வே.சா |
Question 140 |
டி.கே.சிதம்பரநாதர் அவர்கள் வாழ்ந்த காலம்
1881- 1953 | |
1882- 1954 | |
1880 – 1952 | |
1882- 1945 |
Question 141 |
டி.கே.சி குறித்த கூற்றுகளில் தவறானது எது?
டி.கே.சி அவர்களின் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாக கருதப்பட்டன | |
முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். | |
சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் இருந்தார். | |
தமிழ் இசை, தமிழ் இலக்கியம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். |
Question 141 Explanation:
(Note: இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்களை இயற்றியுள்ளார்)
Question 142 |
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார் - விடைக் கேற்ற வினா அமைக்க
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிட எதில் திளைப்பதை டி.கே.சி விரும்பினார் ? | |
டி.கே.சி எதை விரும்பினார் ? | |
தமிழின்பத்தில் திளைப்பதை டி.கே.சி விரும்பினாரா? | |
டி.கே .சி அவர்கள் வழக்கறிஞர் தொழிலை விரும்பினாரா? |
Question 143 |
உலகம் முழுவதும் புத்தக தினமாக யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்
ஷேக்ஸ்பியர்- டிசம்பர் 23 | |
ஷேக்ஸ்பியர்-ஏப்ரல் 23 | |
பிளேட்டோ - ஏப்ரல் 23 | |
பிளேட்டோ - டிசம்பர் 23 |
Question 144 |
- "யாதும் ஊரெனச் சாற்றியதும் – மக்கள்
- யாவரும் கேளிர் என்றதுவும்
- மேதினிக் குரைத்தவர் நம் முன்னோர் – இன்று
- வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?"
- இப்பாடலை பாடியவர் யார்?
கணியன் பூங்குன்றனார் | |
டி. கே.சி | |
பெ.தூரன் | |
உ.வே.சா |
Question 145 |
பொருள் இலக்கணத்தின் வகைகள் யாவை?
- அகப்பொருள்
- முதற் பொருள்
- புறப்பொருள்
- கருப்பொருள்
1, 2 | |
1 , 3 | |
2 , 3 | |
2 , 4 |
Question 146 |
அகப்பொருளின் வகைகள் யாவை?
- 1.அகப்பொருள் 2. முதற் பொருள்
- உரிப்பொருள் 4. கருப்பொருள்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1 ,2 , 3 | |
1, 2 , 4 |
Question 147 |
முதற் பொருளின் வகைகள் யாவை?
- நிலம் 2. காலம் 3. பருவம் 4. பொழுது
1, 2 | |
1 , 3 | |
1,4 | |
2 , 4 |
Question 148 |
பொருத்துக
- Invasion i) மாலுமி
- Back water ii) ஒப்பந்தம்
- Culture iii) பண்பாடு
- Agreement iv) உப்பங்கழி
- Sailor v) படையெடுப்பு
iv iii I ii v | |
iii v ii iv i | |
v iv iii ii i | |
ii i v iii iv |
Question 149 |
“ மறைக்கப்பட்ட இந்தியா" என்னும் நூலை எழுதியவர் யார்?
பிரபஞ்சன் | |
எஸ்.இராமகிருஷ்ணன் | |
கல்கி | |
டி.கே.எஸ் |
Question 150 |
- "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
- கை கொல்லும் காழ்த்த இடத்து "
- இக்குறளில் பயின்று வரும் அணி
பொருள்பின் வரும்நிலை அணி | |
பிறிது மொழிதல் அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 151 |
- " இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
- பார்தாக்கப் பக்கு விடும்”
- இக்குறளில் பயின்று வரும் அணி
உருவக அணி | |
பிறிது மொழிதல் அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 152 |
- " நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
- வாய்நாடி வாய்ப்பச் செயல் “
- இக்குறளில் பயின்று வரும் அணி
சொற்பொருள்பின் வரும்நிலை அணி | |
பிறிது மொழிதல் அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 153 |
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து _____ நினை.
முகக்குறிப்பை அறிந்தவரை | |
எண்ணியதை எண்ணியவரை | |
மறதியால் கெட்டவர்களை | |
சொல்லேர் உழவரை |
Question 154 |
இலக்கணக் குறிப்புத் தருக – கெடுக, குறிப்புணர்வார்
வினையெச்சம், வினையெச்சம் | |
தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் | |
வியங்கோல் வினை முற்று, வினையாலணையும் பெயர் | |
வியங்கோல் வினை முற்று, வினையெச்சம் |
Question 155 |
ஆறு பெரும் பொழுதுகளையும் கொண்ட திணைகள் எவை?
- குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை
1, 2 | |
2 , 3 | |
3, 4 | |
4, 1 |
Question 156 |
சுரமும் சுரம் சார்ந்த நிலமும் கொண்ட திணை எது?
முல்லை | |
மருதம் | |
நெய்தல் | |
பாலை |
Question 157 |
பொருத்துக
- திணை உரிப்பொருள்
- குறிஞ்சி i) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
- முல்லை ii) புணர்தலும் புணர்தல் நிமித்தம்
- மருதம் iii) ஊடலும் உடல் நிமித்தமும்
- நெய்தல் iv) பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
- பாலை v) இரங்கலும் இரங்கல் நிமித்தம்
iv iii I ii v | |
iii v ii iv i | |
ii i iii v iv | |
i ii iii iv v |
Question 158 |
தவறான இணையை தேர்ந்தெடு
குறிஞ்சி - கூதிர் , முன் பனி | |
முல்லை - முன் பனி | |
மருதம் - ஆறு பெரும்பொழுது | |
பாலை - இளவேனில், முதுவேனில் |
Question 159 |
பொருத்துக
- திணை தெய்வம்
- குறிஞ்சி i) சேயோன்
- முல்லை ii) மாயோன்
- மருதம் iii) வேந்தன்
- நெய்தல் iv) வருணன்
- பாலை v) கொற்றவை
iv iii i ii v | |
iii v ii iv i | |
v iv iii ii i | |
i ii iii iv v |
Question 160 |
எயினர், எயிற்றியர் ,மறவர், மறத்தியர் ஆகிய மக்களை கொண்ட திணை_______.
முல்லை | |
மருதம் | |
நெய்தல் | |
பாலை |
Question 161 |
நாரை, மகன்றில் ஆகிய பறவைகள் காணப்படும் திணை___.
முல்லை | |
மருதம் | |
நெய்தல் | |
பாலை |
Question 162 |
சிங்கம், புலி, கரடி, யானை ஆகிய விலங்குகளை கொண்ட திணை ___.
முல்லை | |
மருதம் | |
நெய்தல் | |
குறிஞ்சி |
Question 163 |
பொருத்துக
- திணை ஊர்
- குறிஞ்சி i) பாடி
- முல்லை ii) சிறுகுடி
- மருதம் iii) பேரூர்
- நெய்தல் iv) பாக்கம்
- பாலை v) குறும்பு
iv iii i ii v | |
iii v ii iv i | |
v iv iii ii i | |
ii i iii iv v |
Question 164 |
குறுஞ்சுனை, கானாறு ஆகியவற்றை நீர் நிலைகளாக கொண்ட திணை
முல்லை | |
மருதம் | |
நெய்தல் | |
குறிஞ்சி |
Question 165 |
கீழ்க்கண்டவற்றுள் பாலை திணைக்குரிய பூ எது?
காந்தள் | |
பிடவம் | |
மராம் பூ | |
ஞாழல் |
Question 166 |
கீழ்க்கண்டவற்றுள் முல்லை திணைக்குரிய உணவு எது?
தினை | |
முதிரை | |
செந்நெல் | |
மூங்கிலரிசி |
Question 167 |
உழிஞை, ஓமை ஆகியவை எந்த திணைக்குரிய மரங்கள் ?
முல்லை | |
மருதம் | |
நெய்தல் | |
பாலை |
Question 168 |
பொருத்துக
- திணை பறை
- குறிஞ்சி i) துடி
- முல்லை ii) நாவாய்ப் பம்பை
- மருதம் iii) மணமுழவு
- நெய்தல் iv) ஏறுகோட்பறை
- பாலை v) தொண்டகப்பறை
iv iii i ii v | |
iii v ii iv i | |
v iv iii ii i | |
v iv iii ii i |
Question 169 |
பொருத்துக
- திணை பண்
- குறிஞ்சி i) குறிஞ்சிப் பண்
- முல்லை ii) சாதாரிப் பண்
- மருதம் iii) மருதப் பண்
- நெய்தல் iv) செவ்வழிப் பண்
- பாலை v) பஞ்சுரப் பண்
i ii iii iv v | |
iii v ii iv i | |
i iv iii ii v | |
ii i iii iv v |
Question 170 |
சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல் போன்றவை எவ்வகை நிலத்திற்குரிய தொழில்
முல்லை | |
மருதம் | |
நெய்தல் | |
குறிஞ்சி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 170 questions to complete.