Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTamil

11th Tamil Part 5 Online Test – New Book

11th Tamil Iyal 5 Online Test - New Book Unit 5

11th Tamil Iyal 5 Online Test – New Book Unit 5

11th Tamil Questions - Part 5

Congratulations - you have completed 11th Tamil Questions - Part 5. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கூற்று   : கல்வி என்பதன் பொருள் 'கலலுதல்‘.
  • காரணம் : அது கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள திறன்களை தோண்டி வெளிக்கொண்டு வருவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
கூற்று காரணம் இரண்டும் சரி
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 2
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வதை எவ்வாறு குறிப்பிடுகிறது.
A
காலிற்பிரிவு
B
கலத்திற்பிரிவு
C
ஓதல் பிரிவு
D
கல்விப்பிரிவு
Question 3
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு _____ தோன்றும் எனக் கூறுகிறது.
A
நகை
B
செல்வம்
C
வியப்பு
D
பெருமிதம்
Question 4
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலக்கணங்களை கூறும் நூல்கள்
  1. நன்னூல்
  2.  திருக்குறள்
  3. தொல்காப்பியம்
  4.  ஆத்திச்சூடி
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1 , 3
D
1 , 4
Question 5
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்
A
புறநானூறு – 188
B
புறநானூறு – 183
C
அகநானூறு – 188
D
அகநானூறு – 183
Question 6
பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதை புறநானூற்றில் பாடியவர்
A
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
B
ஒளவையார்
C
ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன்
D
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Question 7
"சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது" என்ற கருத்தை கூறியவர்
A
திரு.வி.க
B
அண்ணா
C
ராஜாஜி
D
மா. இராசமாணிக்கனார்
Question 8
கீழ்க்கண்டவற்றுள் தமிழகத்தில் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் கற்பித்தல் பணியை செய்த அமைப்புகள் எது / எவை?
  • 1.அறங்கூர் அவையம்                      2. சமணப்பள்ளி
  • 3 . பெளத்தப்பள்ளி                 4. மன்றம்
A
அனைத்தும் சரி
B
1 , 3 சரி
C
1 , 3, 4 சரி
D
2 , 3, 4 சரி
Question 9
பலர் கூடி விவாதிக்கும் பாங்குடைய அமைப்பு ___
A
மன்றம்
B
அறங்கூர் அவையம்
C
சங்கம்
D
சமணப் பள்ளி
Question 10
சங்க காலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பிரிவினராக இருந்தனர்
A
2
B
3
C
4
D
5
Question 11
சங்க காலத்தில் கற்ற மாணவர்களை எவ்வாறு வகைப்படுத்தினர்
  • 1.சிறுவன்                                           2. மாணவன்
  • 3.கேட்போன் 4. வாசிப்போன்
A
அனைத்தும் சரி
B
2, 3, 4 சரி
C
1, 2, 3 சரி
D
2 , 3 சரி
Question 12
கல்வி கற்பிக்கப்படும் இடங்களை 'ஓதும் பள்ளி ‘ என்று கூறும் நூல்
A
பெரிய திருமொழி
B
திவாகர நிகண்டு
C
சீவக சிந்தாமணி
D
மணிமேகலை
Question 13
சரியான இணையை தேர்ந்தெடு.
  1. பள்ளி - திவாகர நிகண்டு
  2. கல்லூரி - சீவக சிந்தாமணி
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 14
பின்வருவனவற்றுள் ஏட்டுக்கற்றைகளின் பெயர்களில் அல்லாதது
A
ஏடு
B
சுவடு
C
பொத்தகம்
D
பனுவல்
Question 15
பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு
  1. உட்பொருளை குறிப்பவை– ஏடு, சுவடி, பொத்தம்
  2. ஓலைக்கற்றையை குறிப்பவை- பனுவல், நூல்
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 16
கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய 4 கொடைகளும் _____ சமயத்தின் தலையாய அறங்களாகும்
A
வைணவம்
B
சமணம்
C
பெளத்தம்
D
சைவம்
Question 17
சமணத்தை சேர்ந்த திகம்பரத் துறவிகள் மாணவர்களுக்கு கல்வியை எங்கு போதித்தனர்
A
சமணக் கோவில்கள்
B
மலைக்குகைகள்
C
பள்ளிக் கட்டிடங்கள்
D
மடங்கள்
Question 18
  • கூற்று       :   பள்ளி என்பதன் பொருள் படுக்கை
  • காரணம் : படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப்படலாயிற்று.
A
கூற்று காரணம் இரண்டும் சரி
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 19
_____ என்னும் சொல் சமண பௌத்த சமயங்களின் கொடை ஆகும்.
A
கல்வி
B
மலை
C
பள்ளி
D
ஆசிரியர்
Question 20
சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி கூறும் கல்வெட்டுகள் எங்குள்ளன.
A
பழனி மலை, கழுகுமலை
B
திருச்சி மலைக்கோட்டை ,வேலூர்
C
திருச்சி மலைக்கோட்டை ,கழுகுமலை
D
திருச்சி மலைக்கோட்டை, பழனி மலை
Question 21
எழுத்தும் ,இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர்
A
ஆசிரியர்
B
கணக்காயர்
C
குரவர்
D
சான்றோர்
Question 22
சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ___ ஆவர்.
A
ஆசிரியர்
B
கணக்காயர்
C
குரவர்
D
சான்றோர்
Question 23
ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர் ___.
A
ஆசிரியர்
B
கணக்காயர்
C
குரவர்
D
சான்றோர்
Question 24
கலைகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை___ எனப்பட்டன.
A
பள்ளிகள்
B
மன்றம்
C
சான்றோர் அவை
D
சபை
Question 25
கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தவை ___ ஆகும்.
A
பள்ளிகள்
B
மன்றம்
C
சான்றோர் அவை
D
சபை
Question 26
____ என்பது செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது.
A
பள்ளிகள்
B
மன்றம்
C
சான்றோர் அவை
D
சபை
Question 27
____ என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.
A
தென்காசி அருகிலுள்ள வேடல்
B
வந்தவாசி அருகிலுள்ள வேடல்
C
வந்தவாசி அருகிலுள்ள விளாப்பாக்கம்
D
தென்காசி அருகிலுள்ள விளாப்பாக்கம்
Question 28
விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவியவர்
A
சமணக் குரவர்கள்
B
பட்டினிக்குரத்தி
C
திகம்பரர்
D
மகாவீரர்
Question 29
பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் ___ என அழைக்கப்பட்டன .
A
பெண்கள் மடங்கள்
B
பெண்கள் சபை
C
பெண்கள் மடாலயங்கள்
D
பெண் பள்ளிகள்
Question 30
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. பட்டிமண்டபம் என்ற கலைவடிவம் சமயத்துறையிலிருந்து தோன்றியது.
  2. இது சமயக் கருத்துகளை விவாதிக்கும் இடமென நீலகேசி கூறுகிறது.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 31
" ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் " என்று கூறும் நூல்.
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
நீலகேசி
D
குண்டலகேசி
Question 32
காஞ்சிபுரத்திலுள்ள பெளத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றிய வெளிநாட்டுப் பயணி
A
மெகஸ்தனிஸ் - சீன பயணி
B
மெகஸ்தனிஸ் - இத்தாலிய பயணி
C
யுவான் சுவாங் – இத்தாலிய பயணி
D
யுவான் சுவாங் – சீனப் பயணி
Question 33
தமிழக திண்ணை பள்ளி முறையை ஸ்காட்லாந்தில் அறிமுகம் செய்தவர்
A
ஜான் கூட்டன்பர்க்
B
ஹென்ரி ஆடம்ஸ்
C
ரெவரெண்ட் பெல்
D
தாமஸ் மன்றோ
Question 34
தமிழக திண்ணை பள்ளி முறையை ஸ்காட்லாந்தில் எவ்வாறு அழைத்தனர்
  • 1 . மெட்ராஸ் காலேஜ்                                2. மெட்ராஸ் சிஸ்டம்
  1. பெல் சிஸ்டம் 4. மானிடரி சிஸ்டம்
A
அனைத்தும் சரி
B
2 , 3 சரி
C
2, 3, 4 சரி
D
1 , 2, 3 சரி
Question 35
போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதுணையாக இருந்த கல்வி முறை
A
குருகுலக் கல்விமுறை
B
திண்ணைப் பள்ளிக் கல்விமுறை
C
உயர்நிலைக் கல்விமுறை
D
மரபுவழிக் கல்வி முறைகள்
Question 36
குருகுலக் கல்விமுறை கீழ்க்கண்ட எவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது
  • 1 . செய்து கற்றல்                                 2. வாழ்ந்து கற்றல்
  1. எளிமையாக வாழ்தல் 4. பகிர்ந்து கற்றல்
A
அனைத்தும் சரி
B
1, 2,4 சரி
C
1 ,2 , 3 சரி
D
2, 3, 4 சரி
Question 37
மாணவர்கள் ஆசிரியர்களை அணுகி அவருடன் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு தேவைப்படும் பணிகளை செய்து கல்வி கற்கும் முறை
A
குருகுலக் கல்விமுறை
B
திண்ணைப் பள்ளிக் கல்விமுறை
C
உயர்நிலைக் கல்விமுறை
D
மரபுவழிக் கல்வி முறைகள்
Question 38
திண்ணைப் பள்ளிகள் எக்காலக்கட்டத்தில் கிராமங்களில் அதிக அளவில் இருந்தன.
A
17ம் நூற்றாண்டு
B
18ம் நூற்றாண்டு
C
19ம் நூற்றாண்டு
D
20 ம் நூற்றாண்டு
Question 39
ஆங்கிலேயரால் நாட்டுக் கல்வி என அழைக்கப்பட்ட கல்வி அமைப்புகள் எவை?
  • 1.திண்ணைப் பள்ளிகள்       2. பாடசாலைகள்
  1.  மக்தாபுகள் 4. மதரஸாக்கள்
A
அனைத்தும் சரி
B
1, 2
C
1, 2, 3
D
1, 2,4
Question 40
திண்ணைப் பள்ளிக் கல்வி முறை குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
இவை தெற்றிப் பள்ளிகள் எனவும் அழைக்கப்பட்டன.
B
இப்பள்ளிகள் ஒரே மாதிரியான வரன்முறையுடன் செயல்பட்டன.
C
இவற்றின் பாடத்திட்டம், பள்ளி நேரம், பயிற்றுவிக்கும் முறை ஆகியன ஆசிரியரின் விருப்பப் படியே அமைந்திருந்தன.
Question 41
தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன
A
12,894
B
14,298
C
14,892
D
12, 498
Question 42
கீழ்க்கண்டவர்களும் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர்
A
உ.வே.சா
B
மீனாட்சி சுந்தரனார்
C
மீரா
D
கல்யாணசுந்தரனார்
Question 43
மீனாட்சி சுந்தரனாரிடம் தமிழ் தாத்தா உ.வே.சா பாடம் பயின்ற முறை
A
குருகுலக் கல்விமுறை
B
திண்ணைப் பள்ளிக் கல்விமுறை
C
உயர்நிலைக் கல்விமுறை
D
பாடசாலை முறை
Question 44
  • " கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
  • மூத்தோரை இல்லா அவைக்களணும் – பத்துண்ணும்
  • - - - - - - - - - -
  • நன்மை பயத்தல் இல்"
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
மணிமேகலை
B
நாலடியார்
C
திரிகடுகம்
D
புறநானூறு
Question 45
சென்னை ஆளுநர் தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பொதுக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1826
B
1835
C
1854
D
1857
Question 46
சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு
A
1826
B
1835
C
1854
D
1857
Question 47
பொதுக் கல்வி துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்ட ஆண்டு
A
1826
B
1835
C
1854
D
1857
Question 48
சென்னைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
A
1826
B
1835
C
1854
D
1857
Question 49
1794ல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், எப்போது கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது
A
1826
B
1835
C
1859
D
1857
Question 50
தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1826
B
1910
C
1854
D
1857
Question 51
பள்ளியிறுதி வகுப்பு – மாநில அளவிலான பொக்த் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டு
A
1826
B
1835
C
1911
D
1857
Question 52
1453 ம் ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
A
ஜான் கூட்டன்பர்க் – இங்கிலாந்து
B
ஜான் கூட்டன் ப்ர்க் – ஜெர்மனி
C
தாமஸ் மன்றோ – இங்கிலாந்து
D
தாமஸ் மன்றோ – ஜெர்மனி
Question 53
டச்சுக் காரர்களின் சமயப் பரப்பு சங்கம் தமிழகத்தில் முதன்முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு
A
1706
B
1835
C
1854
D
1857
Question 54
டச்சுக்காரர்கள் முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை அச்சடித்த இடம்
A
காரைக்கால்
B
தரங்கம்பாடி
C
நாகப்பட்டினம்
D
சென்னை
Question 55
இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி
A
சமஸ்கிருதம்
B
ஆங்கிலம்
C
தமிழ்
D
பாரசீகம்
Question 56
கீழ்க்கண்டவற்றுள் டச்சுக்காரர்கள் தமிழகத்தில் கல்விப் பணியில் ஈடுபட்ட போது செய்தவைகளில் சரியானது எது?
  1. அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி புத்தகங்களை அச்சடித்தனர்
  2. அறப்பள்ளிகளை நிறுவினர்.
  3. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் நிறுவினர்.
A
அனைத்தும் சரி
B
1 , 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 57
எந்த ஆண்டின் சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.
A
1813
B
1833
C
1853
D
1856
Question 58
இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத் தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A
இந்தியவாதிகள்
B
தெற்கத்தியவாதிகள்
C
கீழைத்தேயவாதிகள்
D
மேற்கத்தியவாதிகள்
Question 59
மேற்கத்திய பாணிக் கல்வி முறையான ஆங்கில வழிக் கல்வி முறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என்று கூறியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
A
இந்தியவாதிகள்
B
தெற்கத்தியவாதிகள்
C
கீழைத்தேயவாதிகள்
D
மேற்கத்தியவாதிகள்
Question 60
"ஆசிரியர்களால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால், ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது" என்று கூறியவர்
A
தாமஸ் மன்றோ
B
மெக்காலே
C
ஹென்றி ஆடம்ஸ்
D
சுர்லஸ்வுட்
Question 61
கீழைத்தேயவாதிகள், மேற்கத்தியவாதிகளின் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு மற்றும் ஆண்டு
A
சார்லஸ் வுட் குழு – 1853
B
சார்லஸ் வுட் குழு – 1854
C
மெக்காலே குழு – 1834
D
மெக்காலே குழு – 1835
Question 62
தற்கால கல்வியும்  தேர்வு முறையும் எந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டவை
A
சார்லஸ் வுட் குழு – 1853
B
சார்லஸ் வுட் குழு – 1854
C
மெக்காலே குழு – 1834
D
மெக்காலே குழு – 1835
Question 63
இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என அழைக்கப்படுவது எந்த கல்விக் குழுவின் அறிக்கை
A
மெக்காலே கல்விக் குழு
B
ஹண்டர் கல்விக் குழு
C
சார்லஸ் வுட் கல்விக் குழு
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 64
சீருடைமுறை, தாய் மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது எந்த கல்விக் குழு
A
மெக்காலே கல்விக் குழு – 1835
B
ஹண்டர் கல்விக் குழு - 1882
C
சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854
D
ஹண்டர் கல்விக் குழு – 1854
Question 65
புதிய பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை தனியாருக்கு வழங்கப் பரிந்துரைத்த கல்விக் குழு
A
மெக்காலே கல்விக் குழு – 1835
B
ஹண்டர் கல்விக் குழு - 1882
C
சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854
D
ஹண்டர் கல்விக் குழு – 1854
Question 66
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த 19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் எழுதப் படிக்க தெரிந்தவரின் எண்ணிக்கை
A
10%
B
12%
C
15%
D
18%
Question 67
14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுப்பு
A
14
B
24
C
54
D
45
Question 68
  • "தாய் மொழியிலே பயின்று
  • யாதும் உளரென
  • உலகின் உறவாகவே
  • விரும்புகிறேன் நான் "
  • என்று பாடியவர்
A
திரு.வி.க
B
அண்ணா
C
இரா.மீனாட்சி
D
வரதராசனார்
Question 69
  • "இங்கே, ஐம்பதாண்டு வேம்பு
  • கோடையில் கொட்டும் பூக்களை
  • எண்ணச் சொல்கிறார்கள்"
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
A
பள்ளிக்கூடம்
B
பிள்ளைக்கூடம்
C
சிறகுகள்
D
நற்றிணை
Question 70
  • “ சொந்தமொழி கற்பிக்கும்
  • இந்தப் பள்ளிக்கூடம்
  • மிகவும் பிடித்துப் போய்விட்டது"
  • இவ்வரிகள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட கவிதையில் உள்ளது
A
நெருஞ்சி
B
சுடு பூக்கள்
C
கொடி விளக்கு
D
மறுபயணம்
Question 71
இரா.மீனாட்சி அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் அல்லாதது எது?
A
நெருஞ்சி முள்
B
சுடு பூக்கள்
C
கொடி விளக்கு
D
மறுபயணம்
Question 72
இரா.மீனாட்சி குறித்த கூற்றுகளில் எது தவறானது.
A
தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்.
B
1980 முதல் எழுதத் தொடங்கி பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்
C
ஆசிரிய பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.
D
இவர் சுடுபூக்கள், தீபாவளிப் பகல், மறுபயணம், உதயநகரிலிருந்து, வாசனைப்புல் போன்ற கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார் .
Question 73
  • " பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
  • விரி கதிர்ப் பொற்கலத்து ஒருவகை ஏந்திப்
  • புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
  • உண்என்று"
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
ஐங்குறுநூறு
B
புறநானூறு
C
நற்றிணை
D
குறுந்தொகை
Question 74
  • "ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
  • அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்க் தனள் கொல்"
  • இவ்வரிகளை பாடியவர்
A
பேயனார்
B
கபிலர்
C
ஓரம்போகியார்
D
போதனார்
Question 75
  • "அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
  • பரீஇ மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி "
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடலில் அமைந்துள்ள திணை மற்றும் துறை
A
முல்லை, கணவனின் நிலை உரைத்தல்
B
மருதம் , தந்தையின் நிலை உரைத்தல்
C
பாலை, மகள் நிலை உரைத்தல்
D
மருதம், தன் நிலை உரைத்தல்
Question 76
‘மகள் நிலை உரைத்தல்’ என்னும் துறை வேறு எவ்வாறு அழைக்கப் படுகிறது.
A
மகள்மருட்சி
B
மனைமருட்சி
C
மனைமகள் மருட்சி
D
செவிலித்தாய் மருட்சி
Question 77
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • வறன், கொழுஞ்சோறு
A
செல்வம், பெருஞ்செல்வம்
B
வறுமை, பெருஞ்செல்வம்
C
செல்வம், போர் வீரர்களுக்கு அளிக்கும் விருந்து
D
வறுமை, போர் வீரர்களுக்கு அளிக்கும் விருந்து
Question 78
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • பிரசம், மதுகை
A
தேன், பெருமிதம்
B
பெருமிதம், தேன்
C
இனிப்பு, கடுஞ்சொல்
D
கடுஞ்சொல், இனிப்பு
Question 79
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  1. புடைத்தல் – கோல் கொண்டு ஓச்சுதல்
  2. கொழுநன் குடி – கணவனுடைய வீடு
  3. உள்ளாள் – நினையாள்
A
அனைத்தும் சரி
B
1 , 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 80
இலக்கணக் குறிப்புத் தருக
  • வெண்சுவை, தீம்பால்
A
வினைதொகைகள்
B
தொழிற்பெயர்கள்
C
பண்புத்தொகைகள்
D
வினையெச்சங்கள்
Question 81
இலக்கணக் குறிப்புத் தருக
  • விரிகதிர், ஒழுகுநீர்
A
வினைதொகைகள்
B
தொழிற்பெயர்கள்
C
பண்புத்தொகைகள்
D
வினையெச்சங்கள்
Question 82
இலக்கணக் குறிப்புத் தருக
  • பந்தர், கொண்ட
A
தொழிற்பெயர், பெயரெச்சம்
B
ஈற்றுப் போலி, பெயரெச்சம்
C
வினையெச்சம், பெயரெச்சம்
D
பெயரெச்சம், வினையெச்சம்
Question 83
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மெலிந்து
A
மெலி +த்(ந்) + த் + உ
B
மெலி + த் + த்(ந்) + உ
C
மெலிந்து+உ
D
மெலிந்+த்+உ
Question 84
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மறுத்து
A
மறு+த் + உ
B
மறுத்+து
C
மறு + த் + த் + உ
D
மறு+த்+து
Question 85
"மெலிந்து >> மெலி + த்(ந்) +த் + உ"
  • இதில் 'உ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
பெயரெச்சவிகுதி
B
வினையெச்சவிகுதி
C
தொழில் பெயர் விகுதி
D
வினை முற்று விகுதி
Question 86
"சிறுமை + கோல்>>சிறுகோல் " இதில் வந்துள்ள புணர்ச்சி விதி
A
இனமிகல்
B
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்
C
ஈறு போதல்
D
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்.
Question 87
"பொன் + சிலம்பு பொற்சிலம்பு"
  • இதில் வந்துள்ள புணர்ச்சி விதி
A
இனமிகல்
B
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்
C
ணன வல்லினம் வர ட ற வும்
D
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்
Question 88
எட்டுத்தொகை நூல்களுள் 'நல்ல திணை’ என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடைய நூல்
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
ஐங்குறுநூறு
D
புறநானூறு
Question 89
நற்றிணையில் அமைந்துள்ள மொத்த பாடல்கள் மற்றும் அவற்றின் அடிவரையறை
A
401, 3 - 12 அடி
B
401, 9-12 அடி
C
400, 3-12 அடி
D
400 , 9-12 அடி
Question 90
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையை தொகுப்பித்தவர்
A
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
B
கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
C
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
D
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
Question 91
நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்
A
கபிலர்
B
பேயனார்
C
போதனார்
D
பெருந்தேவனார்
Question 92
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்படும் நூல்
A
குறுந்தொகை
B
புறநானூறு
C
நற்றிணை
D
அகநானூறு
Question 93
சங்க காலப் புலவரான போதனார் நற்றிணையில் எத்தனையாவது பாடலை பாடியுள்ளார்
A
110
B
112
C
120
D
100
Question 94
நற்றிணையில் பேதனாரின் பாடல் எத்தனை அடிகளை கொண்டதாக அமைந்துள்ளது.
A
12
B
13
C
14
D
15
Question 95
இலக்கணக் குறிப்புத் தருக .
  • பொற்கலம், பொற்சிலம்பு
A
7 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்
B
3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்
C
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்
D
6 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்
Question 96
தொல்காப்பியம் கீழ்க்கண்ட எவற்றிற்கு இலக்கணம் வகுத்துக் கூறுகிறது.
  • 1.எழுத்து                     2. சொல்              3. பொருள்                     4. வாழ்வு
A
அனைத்தும் சரி
B
1 , 2, 3 சரி
C
1 , 3, 4 சரி
D
2 , 3, 4 சரி
Question 97
சரியான இணையை தேர்ந்தெடு
  1. இகக்கும் – குற்றம்
  2.      இழுக்கு – குற்றம்
  3. வினாயவை – கேட்டவை
A
அனைத்தும் சரி
B
1 , 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 98
  • "ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்
  • பெருக நூலிற் பிழைபா டிலனே “
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
நற்றினை
D
புறநானூறு
Question 99
இலக்கணக் குறிப்புத் தருக .
  • அறிதல், கேட்டல்
A
தொழிற்பெயர், வினையெச்சம்
B
வினையெச்சம், வினை முற்று
C
தொழிற்பெயர், தொழிற்பெயர்
D
வினையெச்சம், வினையெச்சம்
Question 100
இலக்கணக் குறிப்புத் தருக – நனிஇகக்கும்
A
வினை முற்று
B
வினையெச்சம்
C
வினைத்தொகை
D
உரிச்சொற்றொடர்
Question 101
பகுபத உறுப்புகளாக பிரிக்க – விடுத்தல்
A
விடு+த் +த் + அல்
B
விடு +த் + அல்
C
விடு+த் + தல்
D
விடுத்து + அல்
Question 102
"விடு +த் + தல்" என்பதில் 'தல்’ என்பதின் பகுபத உறுப்பிலக்கணம்
A
பெயரெச்சவிகுதி
B
வினையெச்சவிகுதி
C
தொழில் பெயர் விகுதி
D
வினை முற்று விகுதி
Question 103
பகுபத உறுப்புகளாக பிரிக்க – அறிந்து
A
அறிந்+து
B
அறிந்+த் + உ
C
அறி +த்(ந்) + த் + உ
D
அறி+த் + த்(ந்) + உ
Question 104
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – இழுக்கின்றி
Question 105
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – முறையறிந்து
Question 106
தொல்காப்பியம் முதன் முதலில் பதிக்கப்பட்ட ஆண்டு
A
1947
B
1847
C
1874
D
1974
Question 107
கீழ்க்கண்டவற்றில் தொல்காப்பிய அதிகாரங்களில் அல்லாதது எது?
A
எழுத்து
B
சொல்
C
பொருள்
D
யாப்பு
Question 108
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?
A
9
B
18
C
27
D
36
Question 109
கீழ்க்கண்டவற்றில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பழமையான உரையாசிரியர்களுள் அல்லாதவர் யார்?
  • 1.இளம்பூரணர்                              2. நச்சினார்க்கினியர்
  • 3 . கல்லாடனார்                                    4. பேராசிரியர்
A
அனைத்தும் சரி
B
1, 2
C
1 , 3
D
1,2,4
Question 110
  • " முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும் “
  • இவ்வரிகள் யாருடைய சிறப்பை கூறுகிறது.
A
ஆசிரியரின் சிறப்பு
B
மாணவரின் சிறப்பு
C
பெற்றோரின் சிறப்பு
D
கடவுளின் சிறப்பு
Question 111
  • " வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல்
  • பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் “
  • என்னும் தொல்காப்பியப் பாடல் யாருடைய உரை விளக்கத்தில் இடம்பெற்றுள்ளது
A
இளம்பூரணர்
B
நச்சினார்க்கினியர்
C
கல்லாடனார்
D
பேராசிரியர்
Question 112
நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல்
A
நன்னூல்
B
பாயிரம்
C
தொல்காப்பியம்
D
நிகண்டு
Question 113
பாரதியார் எப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
A
தஞ்சை உயர்நிலைப் பள்ளி
B
எட்டயபுர சேதுபதி உயர்நிலைப்பள்ளி
C
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி
D
மெட்ராஸ் உயர்நிலைப்பள்ளி
Question 114
சுதேசமித்ரன் இதழில் பாரதி ஏற்றுக் கொண்ட பொறுப்பு
A
எழுத்தாளர்
B
உதவி ஆசிரியர்
C
ஆசிரியர்
D
எதுவுமில்லை
Question 115
கீழ்க்கண்டவற்றில் பாரதி  பணியாற்றிய இதழ்கள் யாவை?
  • 1.சக்ரவர்த்தினி                2. பாலபாரதி              3. விஜயா
  1. சூர்யோதயம் 5 . கர்மயோகி
A
அனைத்தும் சரி
B
1 , 2, 3 சரி
C
2 , 3, 5 சரி
D
1 , 3, 4 சரி
Question 116
கீழ்க்கண்டவறறுள் பாரதி தம் படைப்புகளை வெளியிட்ட இதழ்கள் எவை?
  1. கலைமகள்                       2. தேசபக்தன்                        3 . கதாரத்னாகரம்
  • 4 . ஞான பானு                5 . காமன்வீல்
A
அனைத்தும் சரி
B
1 , 2, 5 சரி
C
1, 3, 5 சரி
D
1 , 3, 4, 5 சரி
Question 117
தன் பெயரையும் தன்னையும் முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் " தான் " என்ற ஒன்றை ஒழித்தவர்
A
பாரதிதாசன்
B
பாரதி
C
அண்ணா
D
திரு.வி.க
Question 118
தமிழ் இதழியல் துறையில் முதன்முதலாக கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் _____
A
பாரதிதாசன்
B
பாரதி
C
அண்ணா
D
திரு.வி.க
Question 119
கீழ்க்கண்டவற்றுள் பாரதியின் புனைப்பெயர்களில் அல்லாதது எது?
  • 1.சாவித்திரி                         2. வேதாந்தி                3 . நித்திய தீரர்
  • 4 . காசி                                    5. செல்லம்மா
A
அனைத்தும் சரி
B
1 , 2, 5 சரி
C
1, 3, 5 சரி
D
1 , 3, 4, 5 சரி
Question 120
பாரதி,தமிழில் ____ என்ற பெயரில் கருத்துப் படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்.
A
சித்திரம்
B
சித்திராவளி
C
கருத்துப்பட இதழ்
D
சித்திரா இதழ்
Question 121
தமிழ் இதழ்களில்  கருத்துப்படங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை பாரதிக்கு ஏறபடுத்திய இதழ்கள்
  •  1.லண்டன் பஞ்ச்                                    2 .இந்தி பஞ்ச்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 122
கீழ்க்கண்டவற்றுள் பாரதி கருத்துப் படங்களை வெளியிட்ட இதழ்கள் எவை?
  • 1.இந்தியா      2. விஜயா          3. சித்திராவளி                     4 . கர்மயோகி
A
அனைத்தும் சரி
B
1 , 2 சரி
C
1 , 2, 3 சரி
D
2 , 3, 4 சரி
Question 123
கீழ்கண்டவற்றுள் பாரதியிடம் துணையாசிரியர்களாக பணியாற்றியவர்கள் யார்?
  • 1.பி.பி.சுப்பையா              2. ஹரிஹரர்                         3. என்.நாகசாமி
  1. வ.ராமசாமி 5. கனகசுப்பையா
A
அனைத்தும் சரி
B
1 , 2, 3, 4 சரி
C
1, 2,3, 5 சரி
D
1 , 3, 4, 5 சரி
Question 124
தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாக குறித்தவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதி
C
அண்ணா
D
திரு.வி.க
Question 125
பாரதி பெண்களுக்காக தமது _____ என்னும் இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்
A
சக்ரவர்த்தினி
B
பாலபாரதி
C
விஜயா
D
சூர்யோதயம்
Question 126
  • "பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்
  • ஒண்மை யுறஓங்கும் உலகு “
  • இக்குறள் வெண்பாவை எழுதியவர்
A
திருவள்ளுவர்
B
திரு.வி.க
C
பாரதி
D
பாரதிதாசன்
Question 127
பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ்
A
சக்ரவர்த்தினி
B
இந்தியா
C
விஜயா
D
சூர்யோதயம்
Question 128
இந்தியா என்பது எவ்வகையான இதழ் ?
A
மாத இதழ்
B
நாளிதழ்
C
வார இதழ்
D
வருட இதழ்
Question 129
  • கூற்று : பாரதி இந்தியா இதழை சிவப்பு வண்ணத் தாளில் வெளியிட்டார்.
  • காரணம் : சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று எண்ணினார்.
A
கூற்று காரணம் இரண்டும் சரி
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 130
பாரதி இறந்து போவதற்கு முதல் நாள் இரவில் யாரைப் பற்றிய வியாசம் எழுத வேண்டும் என கூறினார்?
A
காந்தி
B
அமானுல்லா கான்
C
சிதம்பரனார்
D
கால்டுவெல்
Question 131
பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே இறந்தார் என கூறுவது
A
பாரதியப் பற்றி நண்பர்கள் - ரா.அ.பத்மநாபன்
B
பாரதியப் பற்றி நண்பர்கள் – பார்த்திபன்
C
பாரதியப் பற்றி இதழாளர்கள் - ரா.அ.பத்மநாபன்
D
பாரதியப் பற்றி இதழாளர்கள் – பார்த்திபன்
Question 132
பாரதி தம் மனைவி செல்லம்மாவை எந்தெந்த புனைப்பெயர்களில் குறிப்பிட்டுள்ளார்.
  1. கண்ணம்மா         2. சரஸ்வதி    3. வள்ளி
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2 , 3 சரி
Question 133
பாரதி குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு பாரதியே முன்னோடி.
B
தலைப்பிடலை 'மகுடமிடல்’ என்று பாரதி கூறினார்
C
சக்ரவர்த்தினி போன்ற இதழ்களில் 1906-1907 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பையும் பாரதி கலந்து பயன்படுத்தினார்.
D
பாரதி தம் நண்பர்கள் பெயரையும் அவர்கள் கூடிப் பேசும் இடங்களையும் புனைப்பெயரில்
Question 134
உவமை கீழ்க்கண்ட எவற்றின் அடிப்படையில் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர்
  • 1.வினை                      2. பயன்                3. வடிவம்                      4. உரு
A
அனைத்தும் சரி
B
1, 2,4 சரி
C
1 ,2 , 3சரி
D
2, 3, 4 சரி
Question 135
"வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் " இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளது
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
பாயிரம்
D
திருவாசகம்
Question 136
"கண்ணன் புலி போலப் பாய்ந்தான்" இத்தொடரில் அமைந்துள்ள உவமை, உவமேயம் முறையே ____ ,____
A
கண்ணன், புலி
B
புலி, கண்ணன்
C
புலி, போல
D
புலி, பாய்ந்தான்
Question 137
ஒன்றை விளக்கவும் தெளிவுபடுத்தவும் அழகுபடுத்தவும் ___ எளியதும் தொன்மை மிக்கதாகவும் உள்ளது.
A
உவமை
B
உவமேயம்
C
உவம உருபு
D
பகுதி
Question 138
சங்கப்பாடல்களில் பெரும்பாலும் ___அணி இடம் பெறுகிறது.
A
எடுத்துக்காட்டுவமையணி
B
பிறிது மொழிதல் அணி
C
உவமை அணி
D
சொல் பின்வரு நிலையணி
Question 139
  • "ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்
  • நீர்த்துறை படியும் பெருங் களிறு போல
  • _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
  • இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே”
  • இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
தொல்காப்பியம்
B
புறநானூறு
C
நன்னூல்
D
அகநானூறு
Question 140
  • ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்
  • நீர்த்துறை படியும் பெருங் களிறு போல
  • _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
  • இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே”
  • இப்பாடல் யாரால் யாருக்காகப் பாடப்பட்டது.
A
ஒளவையாரால் பாரிக்கு
B
ஒளவையாரால் அதியமானுக்கு
C
கபிலரால் பாரிக்கு
D
கபிலரால் அதியமானுக்கு
Question 141
  • "கண்ணீரை நீ துடைத்தபோது
  • நட்சத்திரங்கள்  துடைக்கப்பட்ட
  • வானம் போல் உன் முகம்
  • இருண்டு போயிருந்தது "
  • -இவ்வரிகள் இடம் பெற்றுள்ள கவிதை
A
மெளன மயக்கங்கள்
B
மயக்கங்கள்
C
வெளிச்சம்
D
பிள்ளைக்கூடம்
Question 142
  • "அவர்கள் மூளையில் விதையைப் போல்
  • தூவப்பட வேண்டிய அறிவு
  • ஆணியைப் போல அறையப்படுகின்றது "
  • இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
A
வினை உவமை
B
பயன் உவமை
C
மெய் உவமை
D
உரு உவமை
Question 143
  • " வறண்ட வாழ்வு துளிர்க்க
  • மழை போல் வந்தாய் நீ "
  • இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
A
வினை உவமை
B
பயன் உவமை
C
மெய் உவமை
D
உரு உவமை
Question 144
  • "சுருக்கிய குடையைப் போலத்
  • தோன்றும் அசோக மரம்"
  • இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
A
வினை உவமை
B
பயன் உவமை
C
மெய் உவமை
D
உரு உவமை
Question 145
  • "சோடிய விளக்காய் மாலை நேரச் சூரியனின்
  • மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது "
  • இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
A
வினை உவமை
B
பயன் உவமை
C
மெய் உவமை
D
உரு உவமை
Question 146
ஒப்பீட்டுச்செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் போது அது _____ எனப்படுகிறது
A
உவமை
B
உவமேயம்
C
உவம உருபு
D
உருவகம்
Question 147
உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது ______.
A
உவமை
B
உவமேயம்
C
உவம உருபு
D
உருவகம்
Question 148
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
A
உருவகத் தொடரில் உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக அமையும்.
B
உவமையின் செறிவார்ந்த வடிவமே உருவகம்
C
உவமையை விட உருவகம் ஆழமானது
D
உருவகத்தில் உவமானமும் உவமேயமும் ஒன்றே என்ற உணர்வு கிடைக்கிறது.
Question 149
தீ போல் சினம் என்பதை சினத்தீ என்று கூறியவர்
A
பாரதிதாசன்
B
பாரதி
C
கம்பர்
D
இளங்கோவடிகள்
Question 150
  • "வானக் கருமை கொல்லோ?
  • பட்டுக் கருநீலப் புடவை
  • பதித்த நல்வயிரம்
  • நட்ட நடுநிசியில் – தெரியும்
  • நட்சத்திரங்களடி …."
  • என்று பாடியவர்
A
பாரதிதாசன்
B
பாரதி
C
கம்பர்
D
இளங்கோவடிகள்
Question 151
"எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி " இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.
A
வினை உருவகம்
B
பயன் உருவகம்
C
வடிவ உருவகம்
D
உரு உருவகம்
Question 152
"ஆகாசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ ... " இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.
A
வினை உருவகம்
B
பயன் உருவகம்
C
வடிவ உருவகம்
D
உரு உருவகம்
Question 153
"நீல வயலின் நட்சத்திர மணிகள் … "
  • இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.
A
வினை உருவகம்
B
பயன் உருவகம்
C
வடிவ உருவகம்
D
உரு உருவகம்
Question 154
“ மலைக் கிழவியின் நரைத்த கூந்தல்..."
  • இதில் எவ்வகை உருவகம் இடம்பெற்றுள்ளது.
A
வினை உருவகம்
B
பயன் உருவகம்
C
வடிவ உருவகம்
D
உரு உருவகம்
Question 155
கவிஞர் தான் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை ____ என்பர்.
A
உள்ளுறை உவமம்
B
உவமேயம்
C
உவம உருபு
D
உருவகம்
Question 156
அன்பிற்கு ஆட்படும் தலைவன் தலைவியரின் எண்ணங்களைச் சொற்களால் வெளிப்படுத்தாமல் நாகரிகமாக மறைத்துக் கூறுவதற்காக அமைத்துக் கொள்ளும் வடிவமாக பயன்படுவது
A
உள்ளுறை உவமம்
B
உவமேயம்
C
உவம உருபு
D
உருவகம்
Question 157
உள்ளுறை குறித்த செய்திகளில் தவறானது எது?
  1. வினை, பயன் போன்ற அடிப்படைகளில் தோன்றும்
  2. குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும்
C
2 மட்டும் சரி
D
இரணடும் தவறு.
Question 158
இலக்கியங்களில் காணப்படும் கருப்பொருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகளாக மட்டும் நின்றுவிடாமல், பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களின் உள்ளத்தெழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் அமைவது ____ ஆகும்.
A
உள்ளுறை உவமம்
B
உவமேயம்
C
உவம உருபு
D
உருவகம்
Question 159
  • "ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
  • குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை
  • தூங்கு தோல் துதிய வள்ளுகிர் கதுவலின்
  • பாம்பு மதன் அழியும் பானாட் கங்குல் "
  • இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்
A
புறநானூறு – ஒளவை
B
அகநானூறு -கோப்பெருங் கிழார்
C
அகநானூறு -பெருங்குன்றூர் கிழார்
D
புறநானூறு -பெருங்குன்றூர்கிழார்.
Question 160
இறைச்சி குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
உள்ளுறை போன்றே இறைச்சியும் அகப்பாடலில் வரும் உத்தி ஆகும்
B
இது குறிப்புப் பொருளில் வரும்
C
இறுத்தல் என்றால் தாங்குதல் என்று பொருள்
D
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும்.
Question 161
  • " நடைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்
  • பிடிபசி களை இய பெருங்கை வேழம்"
  • _ இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 162
கீழ்க்கண் கூற்றுகளில் கூற்றுகளில் தவறானது எது?
A
உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை .
B
உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை .
C
உள்ளுறை உவமம் கவிதை பொருளோடு சேர்ந்து காணப்படுகிறது.
D
இறைச்சி பொருள் கவிதை பொருளின் அகத்தே உவமேயமாய் நிற்கும்
Question 163
  • “ நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
  • அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
  • அம்ம நாணுதும் நும்மொடு நகையே "
  • _ இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 164
  • " ஒட்டுப்போடாத ஆகாயம் போல –
  • இந்த உலகமும் ஒன்றேதான் "
  • இக் கவிதைகளில் பயின்று வருவது
A
உவமை
B
உருவகம்
C
உள்ளுறை
D
இறைச்சி
Question 165
கீழ்க்கண்வற்றுள் "இறைச்சி " பற்றிய கூற்றைத் தேர்க
A
குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்
B
ஒப்பீட்டுச்செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்
C
வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும்.
D
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள்
Question 166
ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ____.
A
நூல்
B
ஓலை
C
எழுத்தாணி
D
தாள்
Question 167
ஜி.யு.போப் அவர்கள் தென்னிந்தியாவுக்கு வந்த ஆண்டு
A
1835
B
1836
C
1839
D
1832
Question 168
ஜி.யு.போப் அவர்கள் முதன் முதலில் தமிழ் சொற்பொழிவாற்றிய இடம்
A
தஞ்சாவூர்
B
சாந்தோம்
C
கொடைக்கானல்
D
மதுரை
Question 169
ஜி.யு.போப் அவர்கள் மொழிப்பெயர்த்த நூல்கள்
  1. திருக்குறள்
  2. திருவாசக ஆங்கில மொழிப்பெயர்ப்புகள்
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 170
ஜி.யு.போப் அவர்கள் வாழ்ந்த காலம்
A
1820-1890
B
1820-1908
C
1809-1890
D
1809-1908
Question 171
இலக்கணக் குறிப்புத் தருக – பிறந்தார்
A
வினைத்தொகை
B
வினையெச்சம்
C
வினையாலணையும் பெயர்
D
பெயரெச்சம்
Question 172
பொருத்துக.
  • தொல்காப்பியம்                     i) சங்க நூல்
  • திருக்குறள்                                   ii) பக்தி நூல்
  • புறநானூறு                                   iii) அற நூல்
  • திருவாசகம்                                iv) இலக்கண நூல்
A
iv iii I ii
B
iii i ii iv
C
ii i iii iv
D
ii i iv iii
Question 173
" மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதை பொறுத்துத்தான் இருக்கிறது" என்று கூறியவர்
A
கால்டுவெல்
B
ஜி. யு.போப்
C
விவேகானந்தர்
D
திரு.வி.க
Question 174
  • "மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
  • மாதர் அறிவைக் கெடுத்தார். "
  • இவ்வரிகளை பாடியவர்
A
பாரதி
B
பாரதிதாசன்
C
ஜி.யு.போப்
D
கால்டுவெல்
Question 175
பொருத்துக
  • உள்கட்டமைப்பு                                  i) Infrastructure
  • செம்மொழி                                              ii) classical language
  • மூதாதையர்                                            iii) ancestor
  • மதிப்புக் கல்வி                                     iv) value education
  • மன ஆற்றல்                                           v) mental abilities
A
i ii iii iv v
B
iii i v iv ii
C
ii v iii iv i
D
ii i iv iii v
Question 176
"இந்தியாவில் இருந்த வழிமுறையே இங்கிலாந்தில் அனைவருக்கும் கல்வியைக் கொண்டு வர வழிகாட்டி இருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது." என்று கூறியவர்
A
கால்டுவெல்
B
கால்டுவெல்
C
தரம் பால்
D
திரு.வி.க
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 176 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!