Online TestTnpsc Exam
தென்னிந்திய அரசுகள் Online Test 6th Social Science Lesson 18 Questions in Tamil
தென்னிந்திய அரசுகள் Online Test 6th Social Science Lesson 18 Questions in Tamil
Congratulations - you have completed தென்னிந்திய அரசுகள் Online Test 6th Social Science Lesson 18 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு பல்லவ அரசர்கள் ஆண்ட சமகாலத்தில் வடக்கே ஆட்சிபுரிந்தவர்
அசோகர் | |
அக்பர் | |
சமுத்திரகுப்தர் | |
ஹர்ஷர் |
Question 1 Explanation:
(குறிப்பு: பல்லவர்களின் ஆட்சிப்பகுதி சோழ, பாண்டிய அரசுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. சோழர்களும், பாண்டியர்களும் அப்போது தங்கள் பகுதிசார் ஆற்றுச்சமவெளிப் பகுதிகளில் ஆட்சி செய்யும் அரச வம்சங்களாக உருவாகிக் கொண்டிருந்தனர்.)
Question 2 |
_________ பல்லவ அரசின் மையப் பகுதியாக இருந்தது.
மதுரை | |
தஞ்சாவூர் | |
திருவனந்தபுரம் | |
தொண்டை மண்டலம் |
Question 2 Explanation:
(குறிப்பு: இப்பெரிய அரசியல் பிராந்தியம் தமிழ்நாட்டின் வட பகுதிகளையும் அருகே அமைந்திருந்த ஆந்திர மாவட்டங்ககையும் கொண்டிருந்தது.)
Question 3 |
காஞ்சிபுரத்திலிருந்து பிற்காலப் பல்லவர்கள் தங்கள் அரசாட்சியை _________ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்தனர்.
5, 6 | |
6, 7 | |
7, 8 | |
6, 8 |
Question 3 Explanation:
(குறிப்பு: சீன, ரோமாபுரி வணிகர்கள் காஞ்சிபுரத்தை நன்கு அறிந்திருந்தனர்.)
Question 4 |
தொடக்ககாலப் பல்லவ அரசர்கள் _________ன் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர்.
சாளுக்கியர்கள் | |
சாதவாகனர்கள் | |
சந்தேலர்கள் | |
குஷாணர்கள் |
Question 4 Explanation:
(குறிப்பு: பல்லவர்களின் வரலாற்றை அறிய கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், அயலவர் குறிப்புகள் ஆகியவை சான்றுகளாக அமைந்துள்ளன.)
Question 5 |
__________ களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார்.
இரண்டாம் சிம்மவர்மன் | |
சிம்ம விஷ்ணு | |
மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் |
Question 5 Explanation:
(குறிப்பு: சிம்மவிஷ்ணு, இரண்டாம் சிம்மவர்மனின் மகன் ஆவார். கி.பி (பொ.ஆ.மு) 550 வாக்கில் களப்பிரர்களை அழித்தார்.)
Question 6 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- சிம்ம விஷ்ணுவை அடுத்து அவருடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன் மிகத் திறமை வாய்ந்த அரசராக விளங்கினார்.
- முதலாம் மகேந்திரவர்மனை அடுத்து அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
- கடைசி பல்லவ மன்னர் அபராஜிதன் ஆவார்.
அனைத்தும் | |
2, 3 | |
1, 3 | |
3 மட்டும் |
Question 6 Explanation:
(குறிப்பு: இரண்டாம் நரசிம்மவர்மன் அதாவது ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஏனைய முக்கிய அரசர்கள் ஆவர்.)
Question 7 |
- கூற்று 1: முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி, சிறுத்தொண்டர் என பிரபலமாக அறியப்பட்டார்.
- கூற்று 2: பரஞ்சோதி வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 7 Explanation:
(குறிப்பு: பரஞ்சோதி வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தி அதன் வெற்றிக்கு பின்னர் மனமாற்றம் பெற்று சிவபக்தராக மாறினார் என பெரிய புராணம் கூறுகிறது.)
Question 8 |
சைவத் துறவி அப்பரால் சைவத்தை தழுவிய பல்லவ அரசர்
இரண்டாம் சிம்மவர்மன் | |
சிம்ம விஷ்ணு | |
மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் |
Question 8 Explanation:
(குறிப்பு: மகேந்திரவர்மன் தொடக்கக் காலத்தில் சமண சமயத்தை பின்பற்றினார்.)
Question 9 |
மகேந்திரவர்மன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
திராவிட கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தார். | |
மத்தவிலாச பிரகசனம் உட்பட சில நாடகங்களை தெலுங்கில் எழுதியுள்ளார். | |
மத்தவிலாச பிரகசனம் பெளத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. | |
இவரது ஆட்சிக் காலத்தில் வாதாபியைத் தலைநகராக கொண்ட மேலை சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன. |
Question 9 Explanation:
(குறிப்பு: மகேந்திரவர்மன் அறிமுகம் செய்த புதிய கட்டடக்கலை பாணி ‘மகேந்திரபாணி’ எனக் குறிப்பிடப்படுகின்றது.)
Question 10 |
சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றி தீக்கிரையாக்கியவர்
இரண்டாம் சிம்மவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் |
Question 10 Explanation:
(குறிப்பு: இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மனை வெற்றி கொண்டு நாட்டின் வடக்கில் பெரும் பகுதியை (வெங்கி) கைப்பற்றியதாக தெரிகிறது. அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் இதற்கு பழிவாங்கும் வகையில் இரண்டாம் புலிகேசியை கொன்று வாதாபியை தீக்கிரையாக்கினார்.)
Question 11 |
சீன நாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்ற மற்றும் சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பி வைத்த பல்லவ அரசர்
இரண்டாம் சிம்மவர்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் | |
மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் |
Question 11 Explanation:
(குறிப்பு: இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார்.)
Question 12 |
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் __________.
இரண்டாம் சிம்மவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 12 Explanation:
(குறிப்பு: ராஜசிம்மன் காலத்தில் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இல்லாததால் அவரால் கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது.)
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் சிம்ம விஷ்ணுவுக்கு வழங்கும் சிறப்பு பட்டம் எது?
குணபாரன் | |
ராஜசிம்மன் | |
மாமல்லன் | |
அவனிசிம்மர் |
Question 14 |
முதலாம் மகேந்திரவர்மனுக்கு வழங்கும் பட்டங்களில் தவறானது எது?
சங்கீரணஜதி | |
குணபாரன் | |
வாதாபி கொண்டான் | |
விசித்திரசித்தன் |
Question 14 Explanation:
(குறிப்பு: மத்தவிலாசன், சித்திரகாரப் புலி ஆகியவை மகேந்திரவர்மனுக்கு வழங்கும் இதர பட்டங்கள் ஆகும்.)
Question 15 |
மாமல்லன், வாதாபி கொண்டான் என அழைக்கப்படும் பல்லவ அரசர்
இரண்டாம் சிம்மவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் |
Question 16 |
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு
1982 | |
1983 | |
1984 | |
1986 |
Question 16 Explanation:
(குறிப்பு: மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனையக் கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக் கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.)
Question 17 |
பல்லவர் கால கட்டடக்கலையின் வகைகளில் சரியான இணை எது?
- பாறைக் குடைவரைக் கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி
- ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
- கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன்பாணி, நந்திவர்மன் பாணி
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 18 |
மகேந்திரவர்மன் பாணியில் அமைந்துள்ள குகைக் கோவில்களில் தவறானது எது?
மாமண்டூர் | |
தளவானூர் | |
வல்லம் | |
வராகர் மண்டபம் |
Question 18 Explanation:
(குறிப்பு: மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள் மகேந்திரவர்மன் பாணியில் அமைந்துள்ளன.)
Question 19 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
மாமல்லபுரத்திலுள்ள பஞ்ச பாண்டவர் ரதங்கள் ஐந்தும் ஐந்து வகையான கோவில் கட்டடபாணியை உணர்த்துகின்றன. | |
பஞ்ச பாண்டவர் ரதத்தின் ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டதால் ஒற்றைக் கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன. | |
பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகின் பெரிய, செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் இரண்டாவது இடத்திலுள்ளது. | |
மகிஷாசுரமர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை மாமல்லன் பாணியில் கட்டியுள்ள பிரபலமான மண்டபங்களாகும். |
Question 19 Explanation:
(குறிப்பு: பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகின் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியதாகும்.)
Question 20 |
ராஜசிம்மன் பாணி குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
- காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- இக்கோவில்கள் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும்.
- கைலாசநாதர் கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
அனைத்தும் | |
2 மட்டும் | |
1, 3 | |
1 மட்டும் |
Question 20 Explanation:
(குறிப்பு: ராஜசிம்மன் எனவும் அறியப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார்.)
Question 21 |
காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் கீழ்க்கண்ட எந்த பாணியில் கட்டப்பட்டது?
மகேந்திரவர்மன் பாணி | |
மாமல்லன் பாணி | |
ராஜசிம்மன் பாணி | |
நந்திவர்மன் பாணி |
Question 21 Explanation:
(குறிப்பு: பல்லவ கோவில் கட்டடக் கலையின் இறுதிக்கட்டம் பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.)
Question 22 |
- கூற்று 1: பல்லவ அரசர்கள் பெளத்த, சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தனர்.
- கூற்று 2: பல்லவர்கள் காலத்தில் பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆழ்வார்களும் நாயன்மார்களும் புதிய வடிவிலான சைவம், வைணவம் ஆகியவற்றைப் போதித்தனர்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 22 Explanation:
(குறிப்பு: சைவம், வைணவத்தை சில பல்லவ அரசர்கள் ஆதரித்தனர். அப்பரும், மாணிக்கவாசகரும் சைவ அடியார்களாகவும், நம்மாழ்வாரும், ஆண்டாளும் வைணவ அடியார்களாகவும் விளங்கினர்.)
Question 23 |
- கூற்று 1: பக்தி மார்க்கத்தை போதிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்லவர் கால சைவ, வைணவ இயக்கங்கள் சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கு முன்னுரிமை வழங்கியது.
- கூற்று 2: சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 23 Explanation:
(குறிப்பு: பல்லவர் காலத்தில் சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.)
Question 24 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
நியாயபாஷ்யா - வாத்ஸ்யாயர் | |
தசகுமார சரிதம் – தண்டின் | |
கிரதார்ஜுனியம் – சிம்மவிஷ்ணு | |
பாரத வெண்பா – பெருந்தேவனார் |
Question 24 Explanation:
(குறிப்பு: பாரவி என்பவர் கிரதார்ஜுனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.)
Question 25 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
நியாயபாஷ்யா நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார். | |
தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது. | |
சமஸ்கிருத அறிஞரான தண்டின் முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். | |
சமஸ்கிருத அறிஞரான பாரவி மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்தார். |
Question 25 Explanation:
(குறிப்பு: சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார்.)
Question 26 |
மகாபாரதத்தை, பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்த பெருந்தேவனாரை ஆதரித்தவர்
சிம்ம விஷ்ணு | |
மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 26 Explanation:
(குறிப்பு: நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும்.)
Question 27 |
புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்?
சிம்ம விஷ்ணு | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 27 Explanation:
(குறிப்பு: குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படும் இசை குறித்த கல்வெட்டுக்கள் இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.)
Question 28 |
சாளுக்கியர்களின் எல்லைகளில் சரியானதை தேர்ந்தெடு.
- வடக்கு - ஹர்ஷரின் பேரரசு
- தெற்கு - பல்லவ நாடு
- கிழக்கு – கலிங்கம்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 28 Explanation:
(குறிப்பு: சாளுக்கியர்களின் தலைநகர் வாதாபி (பதாமி). சாளுக்கியர்களில் மூன்று வெவ்வேறு வம்சங்கள் இருந்தன.
வாதாபிச் சாளுக்கியர்கள்
வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்)
கல்யாணி சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)
Question 29 |
முதலாம் புலிகேசி_________ ஆண்டு வாதாபி மலைக்கோட்டையைக் கைப்பற்றி அதனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பினார்.
கி.பி 435 | |
கி.பி 545 | |
கி.பி 543 | |
கி.பி 554 |
Question 29 Explanation:
(குறிப்பு: முதலாம் புலிகேசி, பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் ஒரு குறுநில மன்னராக இருந்தார்.)
Question 30 |
அய்கோல் கல்வெட்டை எழுதிய ரவிகீர்த்தி யாருடைய அவைக்களப் புலவர்?
முதலாம் புலிகேசி | |
இரண்டாம் புலிகேசி | |
முதலாம் விக்கிரமாதித்தன் | |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
Question 30 Explanation:
(குறிப்பு: அய்கோல் கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.)
Question 31 |
அய்கோல் கல்வெட்டு அமைந்துள்ள மாநிலம் _________.
மஹாராஷ்டிரா | |
ஆந்திரா | |
தெலுங்கானா | |
கர்நாடகா |
Question 31 Explanation:
(குறிப்பு: அய்கோல் கல்வெட்டு அய்கோலிலுள்ள ( பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது.)
Question 32 |
கொங்கணக் கடற்கரை பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அரசர்
இரண்டாம் கீர்த்திவர்மன் | |
முதலாம் கீர்த்திவர்மன் | |
முதலாம் விக்கிரமாதித்தன் | |
முதலாம் சோமேஸ்வரர் |
Question 32 Explanation:
(குறிப்பு: முதலாம் கீர்த்திவர்மன், முதலாம் புலிகேசியின் மகனாவார்.)
Question 33 |
பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூதுக் குழுவை அனுப்பி வைத்தார்?
முதலாம் புலிகேசி | |
இரண்டாம் புலிகேசி | |
முதலாம் விக்கிரமாதித்தன் | |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
Question 33 Explanation:
(குறிப்பு: இரண்டாம் புலிகேசி சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமைபெற்ற அரசராவார். குஜராத், மாளவம் ஆகியவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் புலிகேசி வெற்றி பெற்றார்.)
Question 34 |
வட இந்திய அரசர் ஹர்ஷருக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே _________ எல்லையாக வரையறை செய்யப்பட்டது.
கோதாவரி | |
கிருஷ்ணா | |
நர்மதை | |
தபதி |
Question 34 Explanation:
(குறிப்பு: இரண்டாம் புலிகேசி ஹர்ஷருக்கு அடிபணிய மறுத்தார்.)
Question 35 |
_________ காலப்பகுதியில் இரண்டாம் புலிகேசி வெங்கி அரசைக் கைப்பற்றினார்.
கி.பி 524 | |
கி.பி 642 | |
கி.பி 624 | |
கி.பி 674 |
Question 35 Explanation:
(குறிப்பு: இரண்டாம் புலிகேசி தனது சகோதரர் விஷ்ணுவர்த்தனருக்கு வெங்கியை வழங்கினார். விஷ்ணுவர்த்தனர் முதல் கீழைச் சாளுக்கிய அரசரானார்.)
Question 36 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் வாதாபிச் சாளுக்கியரின் வழித் தோன்றல்கள் ஆவர். | |
இரண்டாம் தைலப்பர் என்பவர் கி.பி 873 இல் மாளவ அரசர் பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார். | |
முதலாம் தைலப்பருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது. | |
முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார். |
Question 36 Explanation:
(குறிப்பு: இரண்டாம் தைலப்பர் என்பவர் கி.பி 973 இல் மாளவ அரசர் பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார். இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டுவந்தார்.)
Question 37 |
பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் _________ன் காலத்தில் வடக்கே நர்மதை ஆற்றுக்கும், தெற்கே காவேரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் வந்தது.
இரண்டாம் புலிகேசி | |
முதலாம் சோமேஸ்வரன் | |
ஆறாம் விக்கிரமாதித்யர் | |
இரண்டாம் தைலப்பர் |
Question 37 Explanation:
(குறிப்பு: ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தென்னிந்தியாவிலிருந்த இரண்டு பேரரசுகளான மேலைச் சாளுக்கியர்களும் தஞ்சாவூர்ச் சோழர்களும் வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாக போரிட்டுக் கொண்டனர்.)
Question 38 |
வெசாரா பாணியிலான கோவில் விமானங்களை கட்டும் முறை யாருடைய காலத்தில் வளர்ச்சி பெற்றது?
பல்லவர்கள் | |
ராஷ்டிரக் கூடர்கள் | |
சாளுக்கியர்கள் | |
சந்தேலர்கள் |
Question 38 Explanation:
(குறிப்பு: வெசாரா பாணி தென் இந்திய (திராவிட) மற்றும் வடஇந்திய (நாகாரா) கட்டடப்பாணிகளின் கலப்பு ஆகும்.)
Question 39 |
சாளுக்கியர்களின் கட்டுமானக் கோயில்கள் காணப்படும் இடங்களில் தவறானது எது?
அய்கோல் | |
வாதாபி | |
பட்டடக்கல் | |
பகலி |
Question 39 Explanation:
(குறிப்பு: சாளுக்கியர்கள் சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டிடங்களைக் கட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினர். அவர்கள் கட்டுமானத்திற்கு மிருதுவான மணற்கற்களைப் பயன்படுத்தினர்.)
Question 40 |
வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த _______ என்பவரால் கட்டப்பட்டது.
இரண்டாம் புலிகேசி | |
மங்களேசன் | |
ஆறாம் விக்கிரமாதித்யர் | |
இரண்டாம் தைலப்பர் |
Question 40 Explanation:
(குறிப்பு: இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய அய்கோல் கல்வெட்டு வாதாபியில் உள்ளது.)
Question 41 |
- கூற்று 1: வாதாபி மற்றும் அய்கோலிலுள்ள விஷ்ணுகோவில்கள், பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லிலுள்ள விருபாக்ஷா கோவில் ஆகியன சாளுக்கியர் காலத்திய கற்களால் கட்டப்பட்ட கோவில்களாகும்.
- கூற்று 2: சாளுக்கியரின் குகைக் கோவில்கள் அஜந்தா, எல்லோரா நாசிக் ஆகிய இடங்களில் உள்ளன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 42 |
கீழ்க்கண்டவற்றுள் மேலைசாளுக்கியரின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்கும் கோயில்கள் எவை?
- லக்கண்டி – காசி விஸ்வேஸ்வரர் கோவில்
- குருவெட்டி - மல்லிகார்ஜூனா கோவில்
- பகலி - கள்ளேஸ்வரர் கோவில்
- இட்டகி - மகாதேவா கோவில்
அனைத்தும் | |
1, 2, 4 | |
2, 3 | |
1, 3, 4 |
Question 43 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- ஓவியங்களில் சாளுக்கியர் வாகடகர் பாணியைப் பின்பற்றினர்.
- அஜந்தா குகைகளில் காணப்படும் சில சுவரோவியங்கள் சாளுக்கியர் காலத்தை சேர்ந்தவை.
- பாரசீக தூதுக்குழுவை முதலாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1 மட்டும் தவறு | |
2, 3 தவறு | |
3 மட்டும் தவறு | |
2 மட்டும் தவறு |
Question 43 Explanation:
(குறிப்பு: பாரசீக தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.)
Question 44 |
பட்டடக் கல்லிலுள்ள விருப்பாக்ஷா கோவிலும் சங்கமேஸ்வரா கோவிலும் _________ பாணியிலும், பாப்பநாதர் கோவில்__________ பாணியிலும் அமைந்துள்ளன.
நாகரா பாணி, திராவிட பாணி | |
திராவிட பாணி, நாகரா பாணி | |
ராஜசிம்மண் பாணி, திராவிட பாணி | |
திராவிட பாணி, ராஜசிம்மன் பாணி |
Question 44 Explanation:
(குறிப்பு: விருபாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணியில் காஞ்சிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.)
Question 45 |
பட்டடக்கல் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
பட்டடக்கல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியச் சின்னம் ஆகும். | |
பட்டடக்கல் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். | |
இங்கு 10 கோவில்கள் உள்ளன. | |
இங்குள்ள கோவில்களில் நான்கு திராவிட பாணியிலும் ஆறு வடஇந்திய பாணியான நாகாரா பாணியிலும் கட்டப்பட்டுள்ளன. |
Question 45 Explanation:
(குறிப்பு: இங்குள்ள கோவில்களில் ஆறு தென்னிந்திய திராவிட பாணியிலும் நான்கு வடஇந்திய பாணியான நாகாரா பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.)
Question 46 |
ராஷ்டிரக் கூடர்கள் தக்காணத்தையும், தூரத் தெற்குப் பகுதிகளையும், கங்கை சமவெளிப்பகுதிகளையும் எந்தக் காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தனர்?
6 - 8 நூற்றாண்டு | |
8 - 10 நூற்றாண்டு | |
7 – 9 நூற்றாண்டு | |
6 - 9 நூற்றாண்டு |
Question 46 Explanation:
(குறிப்பு: ராஷ்டிரக் கூடர்கள் பிறப்பால் கன்னடர்களாவர். அவர்களின் தாய்மொழி கன்னடம் ஆகும்.)
Question 47 |
எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
தந்திதுர்க்கர் | |
முதலாம் கிருஷ்ணர் | |
அமோகவர்ஷர் | |
இரண்டாம் கிருஷ்ணர் |
Question 47 Explanation:
(குறிப்பு: முதலாம் கிருஷ்ணர் தந்தி துர்க்கரை அடுத்துப் பதவி ஏற்றார். அவர் ராஷ்டிரகூடர் ஆட்சியை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தினார்.)
Question 48 |
மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கிய ராஷ்டிரக்கூட அரசர்
தந்திதுர்க்கர் | |
முதலாம் கிருஷ்ணர் | |
அமோகவர்ஷர் | |
இரண்டாம் கிருஷ்ணர் |
Question 48 Explanation:
(குறிப்பு: அமோகவர்க்ஷர், ராஷ்டிரகூட அரசர்களில் தலைசிறந்த அரசர் ஆவார். புரோச் அவர்களின் துறைமுகமானது.)
Question 49 |
அமோகவர்ஷர் ___________ எனும் சமணத்துறவியால் சமண மதத்திற்கு மாற்றப்பட்டார்.
பார்சவநாதர் | |
அப்பர் | |
ஜினசேனா | |
ரிஷபதேவர் |
Question 49 Explanation:
(குறிப்பு: அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணர் அரசரானார்.)
Question 50 |
இரண்டாம் கிருஷ்ணர் __________ ஆண்டு பராந்தகச் சோழனால் வல்லம் போர்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
கி.பி 816 | |
கி.பி. 864 | |
கி.பி 912 | |
கி.பி 916 |
Question 50 Explanation:
(குறிப்பு: வல்லம் என்பது தற்போதைய வேலூர் மாவட்டத்திலுள்ள திருவல்லம் ஆகும்.)
Question 51 |
ராஷ்டிரக்கூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசர்
மூன்றாம் கிருஷ்ணர் | |
முதலாம் கிருஷ்ணர் | |
அமோகவர்ஷர் | |
இரண்டாம் கிருஷ்ணர் |
Question 51 Explanation:
(குறிப்பு: மூன்றாம் கிருஷ்ணர் சோழர்களைத் தக்கோலம்(தற்போதைய வேலூர் மாவட்டத்திலுள்ளது) போர்க்களத்தில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.)
Question 52 |
- கூற்று 1: இரண்டாம் கிருஷ்ணர் இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலைக் கட்டினார்.
- கூற்று 2: நாட்டை சரியான முறையில் வைத்திருந்த கடைசி அரசர் மூன்றாம் கோவிந்தனார்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 52 Explanation:
(குறிப்பு: மூன்றாம் கிருஷ்ணர் இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலைக் கட்டினார்.)
Question 53 |
________ என்பவரால் இயற்றப்பட்ட கவிராஜ மார்க்கம் கன்னட மொழியின் முதல் கவிதை நூலாகும்.
ஆதிகவி பம்பா | |
ஸ்ரீபொன்னா | |
ரன்னா | |
அமோகவர்ஷர் |
Question 53 Explanation:
(குறிப்பு: ராஷ்டிரக் கூடர்களின் அரசவைப் புலவர்கள் கன்னட மொழியில் சிறந்த நூல்களை எழுதினர்.)
Question 54 |
- கூற்று 1: ராஷ்டிரக் கூடர்களின் காலத்தில் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்படுபவர்கள் ஆதிகவி பம்பா, ஸ்ரீபொன்னா, ரன்னா ஆகியோராவர்.
- கூற்று 2: ஆதிகவி பம்பா அவரது நூற்களான ஆதிபுராணம், விக்கிரமார்ஜூன விஜயம் ஆகியவற்றிற்காகப் பெரும் புகழ்பெற்றவர்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 54 Explanation:
(குறிப்பு: விக்கிரமார்ஜூன விஜயம் மஹாபாரதத்தின் மீள் தருகையாகும். இதில் தன்னை ஆதரித்த சாளுக்கிய அரிகேசரியை அர்சுனனின் பாத்திரத்தில் பொருத்தி பம்பா எழுதியுள்ளார்.)
Question 55 |
முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை சித்திரிக்கும் நூல்
கவிராஜமார்க்கம் | |
ஆதிபுராணம் | |
தசகுமார சரிதம் | |
நியாய பாஷ்யா |
Question 56 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
எல்லோராவின் குன்றுப்பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. | |
கைலாசநாதர் கோவில் 90000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது. | |
கைலாசநாதர் கோவிலின் விமானத்தின் உயரம் 90 அடிகளாகும். | |
கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது. |
Question 56 Explanation:
(குறிப்பு: கைலாசநாதர் கோவில் 60000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது.)
Question 57 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
எலிபெண்டா தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி. | |
எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். | |
இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற டச்சுக்காரர்கள், இதற்கு எலிபெண்டா தீவு என பெயரிட்டனர். | |
பட்டடக் கல்லிலுள்ள சமண நாராயணர் கோவிலும் காசி விஸ்வேஸ்வரர் கோவிலும் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டவை. |
Question 57 Explanation:
(குறிப்பு: இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துகீசியர்கள், இதற்கு எலிபெண்டா தீவு என பெயரிட்டனர்.)
Question 58 |
சீனாவின் தாங் அரச வம்சத்தினரால் கட்டப்பட்டலேஷன் புத்தர் சிலையின் உயரம்
52 மீட்டர் | |
62 மீட்டர் | |
67 மீட்டர் | |
71 மீட்டர் |
Question 59 |
- கூற்று 1: கி.பி 641 - 647 காலப்பகுதியில் பல்லவர்கள் தக்காணத்தைச் சூறையாடி வாதாபியை கைப்பற்றினர்.
- கூற்று 2: கி.பி 655 இல் சாளுக்கியர் அதனை மீட்டனர்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 59 Explanation:
(குறிப்பு: முதலாம் விக்கிரமாதித்தனும் அவருக்குப் பின் வந்த இரண்டாம் விக்கிரமாதித்தனும் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினர்.)
Question 60 |
ராஷ்டிரகூட அரச வம்சத்தை நிறுவியவர் __________.
முதலாம் புலிகேசி | |
தந்தி துர்க்கா | |
முதலாம் விக்கிரமாதித்தன் | |
இரண்டாம் கீர்த்திவர்மன் |
Question 60 Explanation:
(குறிப்பு:தந்திதுர்க்கா இரண்டாம் கீர்த்திவர்மனை போரில் தோற்கடித்தார்.)
Question 61 |
கீழ்க்கண்டவற்றுள் பல்லவ ஆட்சி குறித்து அரிய உதவும் சான்று____________
மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு
| |
இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு
| |
காசக்குடிச் செப்பேடு
| |
மேற்கண்ட அனைத்தும் |
Question 62 |
பல்லவர் காலத்தைப் பற்றி அறிய உதவும் இலக்கியச் சான்று___________
மத்தவிலாசப் பிரகசனம்
| |
அவந்தி சுந்தரி கதை
| |
கலிங்கத்துப்பரணி
| |
மேற்கண்ட அனைத்தும்
|
Question 62 Explanation:
விளக்கம்: மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக்கலம்பகம் ஆகியவை பல்லவர் காலத்தைப் பற்றி அறிய உதவும் இலக்கிய சான்றுகளாகும்.
Question 63 |
பொருத்துக:
A) சிம்மவிஷ்ணு - 1. கி.பி. 695 - 722
B) மகேந்திரவர்மன் - 2. கி.பி. 630 - 668
C) முதலாம் நரசிம்மவர்மன் - 3. கி.பி. 600 - 630
D) இரண்டாம் நரசிம்மவர்மன் - 4. கி.பி. 550
A-1, B-2, C-3, D-4
| |
A-2, B-1, C-4, D-3
| |
A-3, B-2, C-4, D-1
| |
A-4, B-3, C-2, D-1 |
Question 63 Explanation:
விளக்கம்:
A) சிம்மவிஷ்ணு - 1. கி.பி. 550
B) மகேந்திரவர்மன் - 2. கி.பி. 600 - 630
C) முதலாம் நரசிம்மவர்மன் - 3. கி.பி. 630 - 668
D) இரண்டாம் நரசிம்மவர்மன் - 4. கி.பி. 695 - 722
Question 64 |
மத்தவிலாசப்பிரகசனம் என்னும் சமஸ்கிருத சொல்லின் பொருள்____________
குடிகாரர்களின் வீழ்ச்சி
| |
குடிகாரர்களின் எழுச்சி
| |
குடிகாரர்களின் கூட்டம்
| |
குடிகாரர்களின் மகிழ்ச்சி |
Question 64 Explanation:
விளக்கம்: மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் முதலாம் மகேந்திரவர்மன் எழுதியுள்ளார்.
Question 65 |
பொருத்துக:
A) வாதாபி குகைக் கல்வெட்டு - 1. மங்களேசன்
B) கைலாசநாதர் கோவில் கல்வெட்டு - 2. பட்டடக்கல்
C) விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு - 3. காஞ்சி
D) அய்கோல் கல்வெட்டு - 4. இரண்டாம் புலிகேசி
1 3 2 4
| |
2 1 4 3
| |
3 2 4 1
| |
4 3 2 1
|
Question 65 Explanation:
விளக்கம்:
A) வாதாபி குகைக் கல்வெட்டு - 1. மங்களேசன்
B) கைலாசநாதர் கோவில் கல்வெட்டு - 2. காஞ்சி
C) விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு - 3. பட்டடக்கல்
D) அய்கோல் கல்வெட்டு - 4. இரண்டாம் புலிகேசி
Question 66 |
பாக்தாத் என்பது___________பேரரசின் மகத்தான நகரமாகும்.
கிருத்துவம்
| |
சீன
| |
எகிப்து
| |
இஸ்லாமிய |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 66 questions to complete.