Online TestTnpsc Exam
தமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions
தமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions i
Congratulations - you have completed தமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions i.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத்துறவிகள் சமணத்தின்_________ உறுதிமொழிகளைக் கடுமையாகப் பின்பற்றினர்.
2 | |
3 | |
4 | |
5 |
Question 1 Explanation:
(குறிப்பு: மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன.)
Question 2 |
மகாவீரர் இயற்கை எய்திய பின்னர், சமண அறிஞர்கள் __________ல் ஒரு பேரவையைக் கூட்டித் தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
கயா | |
வைஷாலி | |
பாடலிபுத்திரம் | |
ஆக்ரா |
Question 2 Explanation:
(குறிப்பு: மகாவீரர் இயற்கை எய்திய (நிர்வாணா) இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், சமண அறிஞர்கள் பாடலிபுத்திரத்தில் பேரவையை கூட்டினர். இது தொடர்பாக கூட்டப்பட்ட முதல் சமணப் பேரவைக்கூட்டம் இதுவேயாகும்.)
Question 3 |
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சமண சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியாக __________ல் கூட்டப்பட்ட சமணப் பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது.
வைஷாலி | |
வல்லபி | |
ஆக்ரா | |
பாடலிபுத்திரம் |
Question 3 Explanation:
(குறிப்பு: பாடலிபுத்திரத்தில் கூடிய முதல் கூட்டம் சட்ட விதிகளை வரையறுப்பதில் ஒருமித்தக் கருத்து எட்ட முடியாமல் போனதால் தோல்வியில் முடிந்தது.)
Question 4 |
பிகநிதயா எனப்படும் பழமையான பௌத்த சமய நூல் கி.மு ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட _______தத்துவ, சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது.
52 | |
62 | |
65 | |
67 |
Question 4 Explanation:
(குறிப்பு: இப்பலவகைப்பட்ட பிரிவுகளில் ஆசீவகம் மட்டுமே இடைக்காலத்தின் பிற்பகுதிவரை செயல்பாட்டில் இருந்தது. சமணமும் பௌத்தமும் நவீன காலம் வரையிலும் தொடர்ந்து செழிப்படைந்தன.)
Question 5 |
__________ ஆண்டு சமண ஆச்சாரியார்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்துவது என முடிவு செய்தனர்.
கி.பி 250 | |
கி.பி 300 | |
கி.பி 400 | |
கி.பி 500 |
Question 5 Explanation:
(குறிப்பு: கடந்த காலம், நிகழ்காலம் ஆகிய காலப்பகுதிகளைச் சேர்ந்த பல அறிஞர்களால் தொகுக்கப்பட்ட ஒட்டுமொத்த சமண இலக்கியங்களையும் மனனம் செய்வது மிகச்சிரமமானது என்பதை உணர்ந்தனர்.)
Question 6 |
சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகளில் சரியானதை தேர்ந்தெடு.
- எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது - அகிம்சை
- உண்மை – சத்யா
- திருடாமை – அசெளர்யா
- திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா
- பணம், பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா
அனைத்தும் | |
1, 2, 4 | |
1, 2, 3, 4 | |
2, 3, 5 |
Question 7 |
- கூற்று 1: திகம்பரர் சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத் தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக்கொண்டனர்.
- கூற்று 2: ஆகம சூத்திரங்களின் உள்ளடக்கம், கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றிலும் இரு பிரிவினரும் ஒத்து காணப்பட்டனர்.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 7 Explanation:
(குறிப்பு: ஆகம சூத்திரங்களின் உள்ளடக்கம், கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றில் இரு பிரிவினரும் வேறுபட்டு காணப்பட்டனர்.)
Question 8 |
சமண இலக்கியங்கள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 8 Explanation:
(குறிப்பு: இருபிரிவுகள்
ஆகம சூத்திரங்கள்
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்)
Question 9 |
மகாவீரரின் நேரடி போதனைகளைக் கொண்டுள்ள ஆகம சூத்திரங்கள் எத்தனை நூல்களைக் கொண்டுள்ளன?
10 | |
11 | |
12 | |
13 |
Question 9 Explanation:
(குறிப்பு: 12 நூல்களும் மகாவீரரின் நேரடிச் சீடர்களால் தொகுக்கப்பட்டவையாகும்.)
Question 10 |
- கூற்று 1: ஆகம சூத்திரங்கள் அர்த்த மகதி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.
- கூற்று 2: 12ஆவது ஆகம சூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 11 |
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் மொத்தம் எத்தனை நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன?
64 | |
74 | |
84 | |
94 |
Question 11 Explanation:
(குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட நூல்களுள் 41 சூத்திரங்கள், 12 உரைகள், ஒரு மாபெரும் உரை (மகா பாஷ்யா) ஆகியன இடம்பெற்றுள்ளன.)
Question 12 |
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் கீழ்க்கண்ட எந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளன?
- தமிழ்
- ஆங்கிலம்
- இந்தி
- ஜெர்மன்
- ராஜஸ்தானி
அனைத்தும் | |
2, 3, 5 | |
3, 4, 5 | |
1, 3, 4 |
Question 12 Explanation:
(குறிப்பு: ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் பிராகிருதம், சமஸ்கிருதம், பண்டைய மராத்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, இந்தி, கன்னடம், தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.)
Question 13 |
__________ என்பன ஆகமங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள், தனிநபர்களால் எழுதப்பட்டு துறவிகளாலும் அறிஞர்களாலும் தொகுக்கப்பட்ட நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
ஆகம சூத்திரங்கள் | |
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் | |
சமண புராணங்கள் | |
மகாவீரர் போதனைகள் |
Question 14 |
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் உள்ள 41 சூத்திரங்களில் கீழ்க்கண்ட எவை அடங்கும்?
- 11 அங்கங்கள்
- 12 உப அங்கங்கள்
- 5 சேடாக்கள்
- 5 மூலங்கள்
- கல்பசூத்ரா
1, 3, 5 | |
1, 2, 4, 5 | |
1, 2, 4 | |
அனைத்தும் |
Question 14 Explanation:
(குறிப்பு: 41 சூத்திரங்களும் எட்டு பல்வகைப்பட்ட நூல்களைக் கொண்டுள்ளது.)
Question 15 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
அங்கங்கள் - திகம்பரர்களால் பின்பற்றப்படும் நூல்கள் | |
உப அங்கங்கள் – நெறிமுறைக் குறிப்பேடுகள் | |
சேடாக்கள் - துறவிகளுக்கான நடத்தை விதிகள் | |
மூலங்கள் - சமணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் |
Question 15 Explanation:
(குறிப்பு: அங்கங்கள் - சுவேதாம்பரர்களால் பின்பற்றப்படும் நூல்கள்)
Question 16 |
பஞ்சதந்திரம் நூலில் பெருமளவில் __________ன் தாக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.
பெளத்தம் | |
சமணம் | |
சைவம் | |
வைணவம் |
Question 16 Explanation:
(குறிப்பு: இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய இந்திய பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட சில சமண நூல்களும் உள்ளன.)
Question 17 |
சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக் கொண்ட கல்பசூத்ராவின் ஜைன சரிதா என்னும் நூலை இயற்றியவர்
சந்திரகுப்த மெளரியர் | |
பார்சவநாதர் | |
மகாவீரர் | |
பத்ரபாகு |
Question 17 Explanation:
(குறிப்பு: சமண சமயத்தை நிறுவியவரும் முதல் தீர்த்தங்கரருமான பார்சவநாதர், கடைசியும் 24வது தீர்த்தங்கரருமான மகாவீரர் ஆகியோரின் வரலாறுகள் இதில் இடம்பெற்றுள்ளன.)
Question 18 |
பத்ரபாகு, சந்திரகுப்த மெளரியரோடு __________க்கு புலம்பெயர்ந்து பின் அங்கேயே குடியமர்ந்தார்.
அகமது நகர் | |
மாளவம் | |
மைசூர் | |
மதுரை |
Question 18 Explanation:
(குறிப்பு: ஏறத்தாழ கி.மு. 296 ல் பத்ரபாகு மைசூருக்கு குடியமர்ந்தார்.)
Question 19 |
__________ நூற்றாண்டில் சமணத்தில் பெரும்பிளவு ஏற்பட்டு திகம்பரர், சுவேதாம்பரர் என இருபெரும் பிரிவுகள் தோன்றின.
கி.பி முதலாம் | |
கி.பி இரண்டாம் | |
கி.பி மூன்றாம் | |
கி.பி நான்காம் |
Question 20 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
தமிழ் மொழியில் எழுதப்பட்ட காப்பிய நூலான சீவகசிந்தாமணி ஒரு சமண நூலாகும். | |
சீவக சிந்தாமணி சங்க இலக்கிய மரபில் திருத்தக்கத்தேவர் என்பவரால் இயற்றப்பட்டது. | |
தன் சொந்த முயற்சியால் மேநிலையை அடைந்த சமயப்பற்றுடைய, இறுதியில் துறவுபூண்ட ஒரு அரசனின் வாழ்க்கையை வர்ணிப்பதாகும். | |
தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் நூலான நாலடியார் சைவத் துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும். |
Question 20 Explanation:
(குறிப்பு: தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் நூலான நாலடியார் சமணத் துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.)
Question 21 |
- கூற்று 1: சமண சமயத்தை சேர்ந்த தமிழர்கள் திகம்பரர் பிரிவைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர்.
- கூற்று 2: களப்பிரர்கள் சமண சமயத்தை ஆதரிக்கவில்லை.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 21 Explanation:
(குறிப்பு: களப்பிரர்கள் சமண சமயத்தின் ஆதரவாளர்களாய் இருந்ததாக நம்பப்படுகிறது.)
Question 22 |
சமணர்கள் கர்நாடகாவிலிருந்து இடம்பெயர்ந்த இடங்களில் சரியானதை தேர்ந்தெடு.
- கொங்குப்பகுதி - சேலம், ஈரோடு, கோயம்புத்தூர்
- காவேரி கழிமுகப்பகுதி – திருச்சி
- புதுக்கோட்டை – சித்தன்னவாசல்
- பாண்டிய நாடு - மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி
1, 3, 4 | |
3, 4 | |
2, 3, 4 | |
அனைத்தும் |
Question 22 Explanation:
(குறிப்பு: மேற்கண்ட இடங்களுக்கு சமணர்கள் இடம்பெயர்ந்ததற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.)
Question 23 |
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து __________ உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
60 மீட்டர் | |
70 மீட்டர் | |
75 மீட்டர் | |
80 மீட்டர் |
Question 23 Explanation:
(குறிப்பு: பெரும்பாறையின் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு கோயிலும் உள்ளன.)
Question 24 |
சித்தன்னவாசல் குகையின் தரையில் _________ சமணப்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
12 | |
14 | |
15 | |
17 |
Question 24 Explanation:
(குறிப்பு: வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல் துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்களாக இருந்துள்ளதாய் நம்பப்படுகிறது.)
Question 25 |
சித்தன்னவாசலில் உள்ள கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில்__________ நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் - பிராமிக் கல்வெட்டு உள்ளது,
கி.பி. 2 | |
கி.பி. 3 | |
கி.மு. 3 | |
கி.மு. 2 |
Question 25 Explanation:
(குறிப்பு: கி.பி.எட்டாம் நூற்றாண்டு, அதற்கு பின்னரான காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. அவைகளில் துறவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.)
Question 26 |
அறிவர் கோவில் எனும் பெயருடைய சித்தன்னவாசல் குகைக் கோவில் ___________நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.
கி.மு 2 | |
கி.மு 7 | |
கி.பி 2 | |
கி.பி 7 |
Question 26 Explanation:
(குறிப்பு: முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவிலின் முன் பகுதியில் அர்த்தமண்டபமும் பின் பகுதியில் கருவறையும் உள்ளன.)
Question 27 |
அறிவர் கோவில் எனும் பெயருடைய சித்தன்னவாசல் குகைக் கோவில் குன்றின் _________ பகுதியில் அமைந்துள்ளது.
கிழக்கு | |
மேற்கு | |
வடக்கு | |
தெற்கு |
Question 27 Explanation:
(குறிப்பு: இக்கோவிலின் முகப்பு எளிமையானதாக கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்களைக் கொண்டுள்ளது.)
Question 28 |
நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகிற்கும் அடுத்த உலகத்திற்குமிடையே பாதை அமைப்போரே ___________ ஆவர்.
திகம்பரர்கள் | |
சுவேதாம்பரர்கள் | |
தீர்த்தங்கரர்கள் | |
சமணர்கள் |
Question 29 |
சித்தன்னவாசல் குகைக் கோவில் __________ ஆண்டு மத்திய அரசின் தொல்லியல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
1952 | |
1953 | |
1956 | |
1958 |
Question 29 Explanation:
(குறிப்பு: 1958 ற்கு பின்னர் இக்கோவிலைச் சுற்றி வேலி அமைக்கவும், பார்வையாளர்களின் வருகையை முறைப்படுத்தவும் இருபது ஆண்டுகளாயின.)
Question 30 |
அறிவர் கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள்_________ சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன.
எல்லோரா | |
அஜந்தா | |
திருவெறுங்காடு | |
திருச்சி மலைக்கோவில் |
Question 30 Explanation:
(குறிப்பு: இக்கோவிலின் கருவறைக்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள மண்டபத்தின் இடப்புறச்சுவரில் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் வலப்புறச்சுவரில் ஆச்சாரியார்களின் புடைப்புச்சிற்பங்களும் உள்ளன.)
Question 31 |
சீனப் பயணி யுவான் சுவாங் __________ நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.
கி.பி 6 | |
கி.பி 7 | |
கி.பி 8 | |
கி.பி 9 |
Question 31 Explanation:
(குறிப்பு: பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் சமண சமயம் செழித்தோங்கியது. யுவான் சுவாங், காஞ்சிபுரத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெளத்தர்களும் சமணர்களும் இருந்ததாக தனது பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.)
Question 32 |
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் ________ சமயத்தை பின்பற்றினார்.
பெளத்தம் | |
சைவம் | |
வைணவம் | |
சமணம் |
Question 32 Explanation:
(குறிப்பு: பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர்.)
Question 33 |
காஞ்சியில் உள்ள சமணக் கோயில்களின் எண்ணிக்கை_________.
2 | |
3 | |
4 | |
5 |
Question 33 Explanation:
(குறிப்பு: ஒன்று திருப்பத்திக் குன்றத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் மற்றொன்று சந்திரபிரபா எனும் பெயரைக் கொண்டிருந்த தீர்த்தங்கரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்திரபிரபா கோவிலாகும்.)
Question 34 |
யாருடைய ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் சமணக் கோவிலில் சங்கீத மண்டபம் கட்டப்பட்டு கோவில் விரிவுபடுத்தப்பட்டது?
பல்லவர் காலம் | |
விஜயநகர காலம் | |
களப்பிரர்கள் காலம் | |
பாண்டியர்கள் காலம் |
Question 34 Explanation:
(குறிப்பு: விஜயநகர ஆட்சியின் போது (1387) புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடரான இருகப்பா என்பவரும் விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சரும் சேர்ந்து இக்கோவிலில் சங்கீத மண்டபம் கட்டினர்.)
Question 35 |
- கூற்று 1: விஜயநகர ஆட்சியின்போது காஞ்சியில் உள்ள சமணக் கோயில்களில் அழகுமிக்க சுவரோவியங்கள் வரையப்பட்டன.
- கூற்று 2: கோவில்களிலுள்ள சுவரோவியங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 35 Explanation:
(குறிப்பு: திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரிலோக்கியநாத கோவிலின் ஓவியங்களின் மீது புதுப்பித்தல் பணியின்போது வர்ணங்கள் பூசப்பட்டுவிட்டதால் பாழாகிவிட்டன.)
Question 36 |
- கூற்று 1: திரிலோக்கியநாத கோவிலின், திரிகூட பஸ்தி எனப்படும் இரண்டாவது கருவறையினுள் ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
- கூற்று 2: இக்கல்வெட்டுகளில் கோவிலின் வளர்ச்சி குறித்த செய்திகளும், நூற்றாண்டுகளின் போக்கில் இக்கோவிலுக்குக் கொடையளித்த பலரைப்பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 36 Explanation:
(குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பருத்திக்குன்றம் தவிர மாநிலத்தின் வேறு பல கிராமங்களிலும் சமண சமயம் குறித்தத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.)
Question 37 |
2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை __________ ஆகும்.
53,359 | |
63,529 | |
73,569 | |
83,359 |
Question 37 Explanation:
(குறிப்பு: மொத்த மக்கள் தொகையில் சமணர்களின் எண்ணிக்கை 0.12 விழுக்காடாகும்.)
Question 38 |
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் கழுகுமலையிலுள்ள சமணர் கோவில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?
கி.பி 7 | |
கி.பி 8 | |
கி.பி 9 | |
கி.பி 10 |
Question 38 Explanation:
(குறிப்பு: இக்கோவில் தமிழ்நாட்டில் சமணம் புத்துயிர் பெற்றதைக் குறிக்கின்றது.)
Question 39 |
கழுகுமலை குகைக் கோவில் எந்த அரசனால் உருவாக்கப்பட்டது?
பராந்தகச் சோழன் | |
பாண்டியன் நெடுஞ்செழியன் | |
பராந்தக நெடுஞ்சடையன் | |
சேரன் செங்குட்டுவன் |
Question 39 Explanation:
(குறிப்பு: இக்கோவிலில் பஞ்சவர் படுக்கை என்றழைக்கப்பட்ட பாறையில் செதுக்கி மெருகேற்றப்பட்ட கற்படுக்கைகள் உள்ளன.)
Question 40 |
வேலூர் மாவட்டத்தில் ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள குகைகளின் உள்ளே ________ நூற்றாண்டைச் சேர்ந்த சமணத்துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கி.பி 4 | |
கி.பி 5 | |
கி.பி 6 | |
கி.பி 7 |
Question 40 Explanation:
(குறிப்பு: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா லத்தேரியிலுள்ள பைரவ மலையில் இப்படுக்கைகள் காணப்படுகின்றன.)
Question 41 |
- கூற்று 1: பைரவ மலையில் உள்ள மூன்று குகைகளில் இரண்டில் மட்டுமே கற்படுக்கைகள் உள்ளன.
- கூற்று 2: மூன்று குகைகளில் ஒன்றில் நான்கு படுக்கைகளும் மற்றொன்றில் ஒரு படுக்கையும் உள்ளன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 41 Explanation:
(குறிப்பு: ஏனைய பகுதிகளில் காணப்படும் கற்படுக்கைகளில் உள்ள தலையணைப் பகுதி இங்குள்ள கற்படுக்கைகளில் காணப்படவில்லை.)
Question 42 |
திருமலை சமணக் கோவில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது?
திருச்சி | |
காஞ்சிபுரம் | |
திருவண்ணாமலை | |
மதுரை |
Question 42 Explanation:
(குறிப்பு: திருமலை சமணக்கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரின் அருகே அமைந்துள்ள ஒரு குகை வளாகத்தில் அமைந்துள்ளன.)
Question 43 |
____________ நூற்றாண்டைச் சேர்ந்த திருமலை சமணக் கோவில் வளாகத்தில் மூன்று சமணக் குகைகளும், இரண்டு சமணக் கோவில்களும் நேமிநாதருடைய சிலையும் உள்ளன.
கி.பி 8 | |
கி.பி 9 | |
கி.பி 10 | |
கி.பி 12 |
Question 43 Explanation:
(குறிப்பு: நேமிநாதர் என்பவர் 22வது தீர்த்தங்கரர் ஆவார்.)
Question 44 |
திருமலை சமணக் கோவிலில் உள்ள நேமிநாதர் சிலையின் உயரம்
12 மீட்டர் | |
14 மீட்டர் | |
15 மீட்டர் | |
16 மீட்டர் |
Question 44 Explanation:
(குறிப்பு: நேமிநாதரின் இச்சிலையே தமிழ்நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்றது.)
Question 45 |
மதுரையிலும் அதைச் சுற்றிலும் உள்ள குகைகள், சமண கற்படுக்கைகள், கல்வெட்டுகள் மற்றும் சிலைகளின் எண்ணிக்கை முறையே
34, 200, 60, 100 | |
26, 200, 50, 100 | |
26, 100, 60,100 | |
26, 200, 60, 100 |
Question 46 |
கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள குன்றுகள் மதுரை நகருக்கு மேற்கே __________ கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.
8 | |
9 | |
10 | |
12 |
Question 46 Explanation:
(குறிப்பு: கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள குன்றுகள் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன.)
Question 47 |
கீழக்குயில்குடி கிராமக் குன்றுகளில் சிற்பங்கள் யாருடைய காலத்தை சேர்ந்தவையாகும்.
பராந்தகச் சோழன் | |
பாண்டியன் நெடுஞ்செழியன் | |
பராந்தக நெடுஞ்சடையன் | |
பராந்தக வீரநாராயணன் |
Question 47 Explanation:
(குறிப்பு: இங்குள்ள சிற்பங்கள் கி.பி 860 முதல் 900 வரை ஆண்ட பாண்டிய அரசன் பராந்தக வீரநாராயணின் காலத்தவை ஆகும்.)
Question 48 |
கீழக்குயில்குடி கிராமக் குன்றுகளில் எத்தனை சிற்பங்கள் உள்ளன?
5 | |
6 | |
8 | |
9 |
Question 48 Explanation:
(குறிப்பு: ரிஷபநாதர் அல்லது ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி ஆகியோரின் சிற்பங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.)
Question 49 |
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
- சமண மடாலயங்களும் கோவில்களும் கல்வி கற்றுக்கொடுக்கும் மையங்களாகவும் சேவை செய்துள்ளன.
- சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்றுத்தரப்பட்டது.
- பள்ளி என்பது சமணர்களின் கல்வி மையங்களாகும்.
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி | |
அனைத்தும் சரி |
Question 49 Explanation:
(குறிப்பு: சமணர்கள் தங்கள் கோட்பாடுகளைப் பரப்புரை செய்ததோடு, வெகு மக்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதில் தாங்கள் ஆற்றல்மிக்கத் தொடர்பு சாதனங்கள் என்பதையும் நிரூபணம் செய்தனர்.)
Question 50 |
- கூற்று 1: பைரவ மலை என்பது குக்கரப் பள்ளி என்னும் சிறு கிராமத்தின் அருகே அமைந்துள்ளது.
- கூற்று 2: சமண சமயத்தில் பெண்கள் துறவறம் பூண அனுமதிக்கப்படவில்லை.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 50 Explanation:
(குறிப்பு: சமண சமயத்தில் பெண்களும் துறவறம் பூன அனுமதிக்கப்பட்டனர். இது பெண்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதற்கு உக்கமளித்தது.)
Question 51 |
சித்தார்த்த சாக்கிய முனி கெளதமர் என்பது யாருடைய உண்மையான பெயர்
மகாவீரர் | |
நேமிநாதர் | |
பார்சவநாதர் | |
புத்தர் |
Question 51 Explanation:
(குறிப்பு: சித்தார்த்த சாக்கிய முனி கெளதமர் என்பதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் "கௌதமர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர், மேலும் அவர் முழுநிறைவு எனும் இலக்கை எட்டியவர்" என பொருள்படும்.)
Question 52 |
- கூற்று 1: கெளதம புத்தர் மகாவீரரின் சமகாலத்தவர் ஆவார்.
- கூற்று 2: சமணக் கல்வி நிலையங்களில் நூலகங்கள் காணப்படவில்லை.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி |
Question 52 Explanation:
(குறிப்பு: சமணக் கல்வி நிலையங்கள் அவற்றோடு இணைக்கப்பட்ட நூலகங்களைக் கொண்டிருந்தன.)
Question 53 |
புத்தரின் தந்தையார் இன்றைய _________க்கு அருகேயுள்ள ஒரு பகுதியில் சாக்கிய இனக்குழுவின் தலைவராக ஆட்சிசெய்து வந்தார்.
வங்காளம் | |
பூடான் | |
நேபாளம் | |
டெல்லி |
Question 54 |
- கூற்று: புத்தர் பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என தெரிந்து கொண்டார்.
- காரணம்: துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே வீடுபேறு எனப்படும் முக்தியை அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் தவறு |
Question 54 Explanation:
(குறிப்பு: துறவு வாழ்க்கை மேற்கொண்ட பின்னரும் கெளதமரால் எங்கிருந்தும் உண்மைக்கான பொருளை உணரமுடியவில்லை.)
Question 55 |
புத்தருடைய அரச வாழ்வுக்கும் துறவு வாழ்வுக்கும் இடைப்பட்ட வழி எத்தனை வகை வழிகளை அடித்தளமாகக் கொண்டது?
6 | |
7 | |
8 | |
9 |
Question 55 Explanation:
(குறிப்பு: புத்தர் அரச வாழ்வு (மிகை ஆர்வமும் இன்ப நுகர்வும்) துறவு வாழ்வு (தன்னடக்க நிலையை எய்துதல்) ஆகிய இரண்டுமே தவறு என உறுதிபடக் கூறினார்.)
Question 56 |
புத்தருடைய எண்வகை வழிகளில் தவறான தேர்ந்தெடு.
- நல்ல எண்ணங்கள்
- நல்ல குறிக்கோள்கள்
- அன்பான பேச்சு
- நன்னடத்தை
- தீது செய்யா வாழ்க்கை
- நல்ல முயற்சி
- நல்ல அறிவு
- நல்ல தியானம்
3, 6 தவறு | |
2, 3, 5 தவறு | |
3 மட்டும் தவறு | |
எதுவுமில்லை |
Question 56 Explanation:
(குறிப்பு: புத்தர் கடவுளின் புகழைக் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அன்பின் வலிமையைக் கற்றுக் கொடுத்தார்.)
Question 57 |
புத்தர் தனது போதனைகளை __________மொழியில் பரப்புரை செய்தார்.
பாலி | |
சமஸ்கிருதம் | |
பிராகிருதம் | |
தெலுங்கு |
Question 57 Explanation:
(குறிப்பு: புத்தர் அனைத்து மனிதர்களும் ‘சமமான உரிமைகளுடன்’ பிறக்கின்றனர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.)
Question 58 |
கீழ்க்கண்டவற்றுள் புத்தர் கூறிய பேருண்மைகள் எவை?
- வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
- ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்.
- ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப்பெறலாம்.
1, 2, 4 | |
2, 3 | |
3, 4 | |
அனைத்தும் |
Question 58 Explanation:
(குறிப்பு: புத்தர் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது செய்திகளைத் தொலைதூரப் பகுதிகளில் பரப்பினார்.)
Question 59 |
புத்தருடைய போதனைகள் எப்போது எழுதப்பட்டன?
கி.மு 60 | |
கி.மு.70 | |
கி.பி 70 | |
கி.மு 80 |
Question 59 Explanation:
(குறிப்பு: புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.)
Question 60 |
புத்தருடைய போதனைகள் ________ மொழியில் எழுதப்பட்டன.
பாலி | |
சமஸ்கிருதம் | |
பிராகிருதம் | |
தெலுங்கு |
Question 60 Explanation:
(குறிப்பு: பாலி மொழியில் எழுதப்பட்ட திரிபிடகா எனும் பெளத்தப் பொதுவிதிகள் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளன.)
Question 61 |
கீழ்க்கண்டவற்றுள் திரிபீடகங்கள் எவை?
- வினய பீடகா
- சுத்த பீடகா
- புத்தபீடகா
- அபிதம்ம பீடகா
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 61 Explanation:
(குறிப்பு: திரிபீடகங்கள், மூன்று கூடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.)
Question 62 |
_________ல் பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
சுத்த பீடகா | |
வினய பீடகா | |
அபிதம்ம பீடகா | |
புத்தபீடகா |
Question 62 Explanation:
(குறிப்பு: தூய்மையான நடத்தையைப் பெற இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.)
Question 63 |
விவாதங்களைச் சான்றுகளாகக் கொண்டு பெளத்தத்தின் மூலக்கோட்பாடுகளைக் கூறுபவை
சுத்த பீடகா | |
வினய பீடகா | |
அபிதம்ம பீடகா | |
ஜாதங்கள் |
Question 64 |
பெளத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளைக் கூறும் நூல்
திரிபீடகா | |
புத்தவம்சா | |
ஜாதகங்கள் | |
மிலிந்தபன்கா |
Question 65 |
கெளதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படுகிற 24 புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் எடுத்துரைக்கும் நூல்
மிலிந்த பன்கா | |
விசுத்திமக்கா | |
புத்தவம்சா | |
திரிபீடகா |
Question 65 Explanation:
(குறிப்பு: புத்தவம்சா கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ள மரபுவழிக் கதையாகும். பொதுவிதிகள், கோட்பாடுகள் குறித்து விளக்கும் நூல்களைத் தவிர பாலி மொழியில் எழுதப்பட்ட நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது.)
Question 66 |
மிலிந்தபன்கா என்பது கிரேக்க-பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த பிட்சுவான _________ என்பவருக்குமிடையே பெளத்தத்தின் சில அம்சங்கள் குறித்து நடைபெற்ற உரையாடலைக் கொண்டுள்ளது.
மிகிரகுலர் | |
அர்ஜூன்தேவ் | |
நாகசேனர் | |
பார்சவநாதர் |
Question 66 Explanation:
(குறிப்பு: மிலிந்த பன்கா என்பது மிலிந்தாவின் கேள்விகள் எனப் பொருள். இதன் மூலம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.)
Question 67 |
நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு ஆகியன குறித்து விளக்குபவை
சுத்த பீடகா | |
வினய பீடகா | |
அபிதம்ம பீடகா | |
புத்தபீடகா |
Question 68 |
- கூற்று 1: மகாவம்சம் இலங்கை உட்பட இந்தியத் துணைக்கண்டத்தின் அரச குலங்களைப் பற்றி கூறுகிறது.
- கூற்று 2: தீபவம்சம் புத்தருடைய போதனைகளையும் அவற்றைப் பரப்பியோர் இலங்கைக்கு வருகை புரிந்ததைப் பற்றியும் பேசுகிறது.
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் தவறு |
Question 68 Explanation:
(குறிப்பு: மகாவம்சம், தீபவம்சம் என்பவை இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றுத் தொகுப்புகள் ஆகும்.)
Question 69 |
கீழ்க்கண்டவர்களுள் முதல் பௌத்த உரையாசிரியர் யார்?
புத்தகோசா | |
அர்ஜூன்தேவ் | |
நாகசேனர் | |
பார்சவநாதர் |
Question 69 Explanation:
(குறிப்பு: புத்தகோசாவால் எழுதப்பட்ட விசுத்திமக்கா பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு நூலாகும்.)
Question 70 |
மகாயான பௌத்தத்தின் எழுச்சியைத் தொடர்ந்து பௌத்த சமயத்துள் _________மொழி முக்கிய இடத்தை வகிக்கக் தொடங்கியது.
பாலி | |
பிராகிருதம் | |
சமஸ்கிருதம் | |
தமிழ் |
Question 70 Explanation:
(குறிப்பு: இருந்தபோதிலும் ஒரு சில சமஸ்கிருத நூல்கள் ஹீனயானப் பிரிவினராலும் படைக்கப்பட்டன.)
Question 71 |
__________ என்பவரால் எழுதப்பட்ட புத்தசரிதா சமஸ்கிருதத்தில் இதிகாச பாணியில் எழுதப்பட்ட நூலாகும்.
புத்தகோசா | |
அஸ்வகோஷர் | |
நாகசேனர் | |
பார்சவநாதர் |
Question 71 Explanation:
(குறிப்பு: இந்நூல் கெளதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை இயம்புகிறது.)
Question 72 |
தமிழகத்தில் பௌத்தமானது ___________யைச் சேர்ந்த சமயப் பரப்பாளர்களால் பரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.
நேபாளம் | |
பூடான் | |
கர்நாடகா | |
இலங்கை |
Question 72 Explanation:
(குறிப்பு: இதற்குச் சான்றாக மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள் பாண்டிய நாட்டில் உள்ளன. இவை பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது.)
Question 73 |
___________ நூற்றாண்டில் சீனப் பயணியான யுவான்சுவாங் தென்னிந்தியா வந்த போது பெளத்தம் ஏறத்தாழ சரிவுற்ற நிலையிலிருந்தது.
கி.பி 4 | |
கி.பி 5 | |
கி.பி 6 | |
கி.பி 7 |
Question 73 Explanation:
(குறிப்பு: தமிழகத்தில் பெளத்தம் சந்தித்த சவால்கள் குறித்த சான்றுகளைச் சைவ நாயன்மார்களின் தேவாரம் பாடல்களும் வைணவ ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் முன்வைக்கின்றன.)
Question 74 |
வீரசோழியம் என்பது __________நூற்றாண்டில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் பௌத்தர் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலாகும்.
கி.பி 7 | |
கி.பி 8 | |
கி.பி 10 | |
கி.பி 11 |
Question 74 Explanation:
(குறிப்பு: பெளத்தம் முற்றிலுமாக மறைந்து போனது என்ற கருத்தை வீரசோழியம் நூல் பொய்யாக்குகிறது.)
Question 75 |
____________ல் கிடைத்துள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் செப்புச் சிலைகள் பின் வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன.
திருநெல்வேலி | |
ராமநாதபுரம் | |
நாகப்பட்டினம் | |
கன்னியாகுமரி |
Question 75 Explanation:
(குறிப்பு: சேலம் மாவட்டம் தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் இக்கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கின்றன.)
Question 76 |
பல்லவர் காலம் முதலாகவே சைவ, வைணவச் சமயங்களின் சவால்களை எதிர்கொண்ட பெளத்தம் __________ல் மட்டும் விதிவிலக்காகத் திகழ்ந்தது.
மதுரை | |
ராமநாதபுரம் | |
நாகப்பட்டினம் | |
கன்னியாகுமரி |
Question 76 Explanation:
(குறிப்பு: நாகப்பட்டினத்தில் பெளத்தத்தை சோழ அரசர்கள் ஆதரித்தனர். அரசியல் காரணங்களுக்காக இவ்வாதரவு அளிக்கப்பட்டது.)
Question 77 |
நாகப்பட்டினத்தில் ____________அரசரால் கட்டப்பட்ட சூடாமணி விகாரைக்கு ராஜராஜ சோழன் ஆதரவளித்தார்.
பாண்டியர் | |
சேரர் | |
ஸ்ரீவிஜயா | |
சாளுக்கியர் |
Question 77 Explanation:
(குறிப்பு: பிற்காலத்தில் இந்த விகாரை அழிவுக்குள்ளாயிற்று.)
Question 78 |
கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனரால் எழுதப்பட்ட மணிமேகலை முற்றிலுமாக __________ ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் காப்பியமாகும்.
சமணம் | |
பெளத்தம் | |
சைவம் | |
வைணவம் |
Question 78 Explanation:
(குறிப்பு: சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் இருந்த பெளத்த சமயம் தொடர்பான சொற்களை சீத்தலைச்சாத்தனார் தமிழில் மொழியாக்கம் செய்து பௌத்தத்தை இம்மண் சார்ந்ததாக ஆக்கினார்.)
Question 79 |
வஜ்ரபோதி எனும் பௌத்தத் துறவி தாந்ரீகச் சடங்குகளில் திறன் பெற்று விளங்கினார் என்றும், பல்லவ அரச சபையை அலங்கரித்த அவர் பின்னர் சீனம் சென்றுவிட்டதாகவும் _________ காலத்து சான்று கூறுகிறது.
மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்ம பல்லவன் | |
இரண்டாம் நரசிம்ம பல்லவன் | |
இராஜராஜ சோழன் |
Question 79 Explanation:
(குறிப்பு: பெளத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயமென மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம் எனும் நூல் எடுத்துரைக்கிறது.)
Question 80 |
- கூற்று 1: கல்விப்புலத்தில் பெளத்த சங்கங்களும் விகாரைகளும் கல்விக்கான இல்லங்களாகத் தொண்டு செய்தன.
- கூற்று 2: நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த பௌத்த விகாரைகளாகும்.
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் தவறு |
Question 80 Explanation:
(குறிப்பு: உலகின் பலபகுதிகளிலிருந்து மாணவர்கள் பௌத்தவிகாரைகளுக்கு வந்தனர்.)
Question 81 |
__________ நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பெளத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது,
இலங்கை, சீனா | |
சீனா, மியான்மர் | |
திபெத், மியான்மர் | |
சீனா, திபெத் |
Question 81 Explanation:
(குறிப்பு: பெளத்தத்தின் போதனைகளைப் பரப்புவதற்கு இந்த மாணவர்கள் செயல்திறன் மிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.)
Question 82 |
விகாரா என்பது __________மொழிச் சொல்.
ஆங்கிலம் | |
பிராகிருதம் | |
சமஸ்கிருதம் | |
பாலி |
Question 82 Explanation:
(குறிப்பு: விகாரா என்பதற்கு வாழ்விடம் அல்லது இல்லம் என்று பொருள்.)
Question 83 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- பணம்படைத்த, சாமானிய பௌத்தர்களால் வழங்கப்பட்ட கொடைகளின் மூலம் விகாரங்கள் கல்வி மையங்களாக மாற்றம் பெற்றன.
- அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
- விகாரைகள் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கியதோடு, புனித நூல்களின் கருவூலச் சேகரங்களாகவும் திகழ்ந்தன.
1 மட்டும் சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி | |
அனைத்தும் |
Question 83 Explanation:
(குறிப்பு: நாளந்தாவைப் போன்றே பல விகாரைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.)
Question 84 |
தமிழகத்தில் இந்தியத் தொல்லியல் துறை செய்த அகழாய்வுகளில் _______க்கும் மேற்பட்ட ஆய்விடங்களில் நூற்றுக்கணக்கான கல்சிற்பங்களும் செப்புச்சிலைகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
95 | |
115 | |
125 | |
134 |
Question 84 Explanation:
(குறிப்பு: இந்தியத் தொல்லியல் துறையால் காவிரிப்பூம்பட்டினத்தில் அகழாய்வு செய்து ஒரு பௌத்த விகாரையும் ஒரு கோவிலும் கண்டறியப்பட்டது.)
Question 85 |
திருநாட்டியட்டாங்குடி கிராமத்தின் ஒரு வயலில் கிணறு வெட்டும் போது __________ மீட்டர் உயரமுடைய, பத்மாசன கோலத்திலுள்ள புத்தரின் சிலை கிடைத்தது.
1.02 மீட்டர் | |
1.03 மீட்டர் | |
1.04 மீட்டர் | |
1.05 மீட்டர் |
Question 85 Explanation:
(குறிப்பு: திருநாட்டியட்டாங்குடி என்னும் கிராமம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
Question 86 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
ஆசீவகர்கள் வினைப்பயன், மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர். | |
ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலிபுத்தா ஆவார். | |
ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தை கடைபிடிக்கவில்லை. | |
ஆசீவகத்திற்கு இலக்கியங்கள் இல்லாது போனாலும் கோசலரின் தத்துவங்கள் ஏனைய மதங்களில் ஜீவித்திருக்கின்றன. |
Question 86 Explanation:
(குறிப்பு: ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தை கடைபிடிக்கவில்லை.)
Question 87 |
எத்தனை ஆண்டு காலங்கள் கோசலா மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார்?
3 | |
4 | |
5 | |
6 |
Question 87 Explanation:
(குறிப்பு: ஆறு ஆண்டுகளுக்குப் பின் இருவரும் பிரிந்தனர்.)
Question 88 |
__________ பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது.
முகலாயர் | |
மெளரியர் | |
மராத்தியர் | |
சாளுக்கியர் |
Question 88 Explanation:
(குறிப்பு: மெளரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆசீவர்களை ஆதரித்தனர்.)
Question 89 |
- கூற்று 1: வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்குமுறையைச் சந்திக்க நேர்ந்தது.
- கூற்று 2: பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் தவறு |
Question 90 |
கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், பாலாற்றின் பகுதிகளில் ஆசீவகம் எந்த நூற்றாண்டு வரை செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது?
12 | |
13 | |
14 | |
15 |
Question 90 Explanation:
(குறிப்பு: பாலாற்றின் பகுதிகள் - வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை. இறுதியில் ஆசீவகர்கள் வைணவத்தால் ஈர்த்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.)
Question 91 |
பொருத்துக.
- கல்ப சூத்ரா i) திருத்தக்கதேவர்
- சீவகசிந்தாமணி ii) மதுரை
- நேமிநாதர் iii) நாகசேனர்
- மிலிந்தபன்கா iv) பத்ரபாகு
- கீழக்குயில்குடி v) 22வது தீர்த்தங்கரர்
ii i v iii iv | |
iii i v iv ii | |
v iv iii ii i | |
iv i v iii ii |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 91 questions to complete.